இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

அப்பாவின் ரேடியோ

மலையாளம்: டீபு காட்டூர்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்

“அவசியம் இல்லாத பழய சாமானுங்கள ஒன்னும் புது வீட்டுக்கு எடுத்துட்டுப் போக வேணாம்” மகனுடைய கருத்து. பெரிய அட்டைப் பெட்டிகளில் கட்டி வைத்த சாமான்களை அவன் ஒவ்வொன்றாக எடுத்துத் தரம் பிரிக்க ஆரம்பித்தான்.

“புதுச வைக்கறதுக்கே இடம் போதாது. அப்புறம்தானே பழசு?”. அவனுடைய கருத்தை மனைவி ஆதரித்தாள்.

புது மனை புகு விழா முடிந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தன என்றாலும் புது வீட்டில் அடுக்கி வைப்பதும் பிறகு அதை மாற்றி வைப்பதும் தொடர்ந்து கொண்டேயிருந்தது. “அப்பா. இந்த பழய ரேடியோ எதுக்கு? புராண காலத்து சாமான்?”. “அது அப்பாவோட கடந்த காலத்துப் பொக்கிஷம்”

மனைவி சிரித்துக் கொண்டே தொடர்ந்தாள். “அத அப்பாவோட அறையில வச்சுடு”. “சரிதான்”. கடந்த காலத்தின் நினைவுகளாக அதன் நறுமணம் என் மனதிற்குள் வியாபித்தது. லேசான குளிர் அடிக்கும் காலைப் பொழுதில் வானொலியில் பக்திப் பாடல்கள் முடியும்போது அப்பா எண்ணைக் குப்பியைத் திறப்பார்.

அடுத்தாற்போல வரும் வேளாண் செய்திகளின் ஆரம்ப இசைக்குத் தாளம் பிடிப்பது போலத்தான் அப்பா எண்ணையைத் தலையில் தடவுவார். சாணம் மெழுகிய தரையில் பாயில் படுத்துக்கொண்டிருக்கும் என்னால் அதைத் தெளிவாகப் பார்க்கமுடியும். பெரிய பாயை விரித்து அதற்கும் மேல் ஒரு கெட்டிப் பாயை விரித்துதான் நாங்கள் படுத்துக்கொள்வோம்.

வீட்டில் இருந்த ஒரே ஒரு இருக்கையான கயிற்றுக் கட்டிலில் அப்பா இருப்பார். உயரத்தில் வைக்கப்பட்டிருந்த ரேடியோவில் இருந்து வரும் சான்றோர் செய்தியை கேட்டபடிதான் சில நாட்களில் நான் கண் விழிப்பேன். சில சமயங்களில் பக்தி பாடல்களைக் கேட்டபடி எழுந்திருப்பது உண்டு. இருந்தாலும் எழுந்திருக்க மனது வராமல் இன்னும் கொஞ்சநேரம் கண்களை மூடிக்கொண்டு பாயில் சுருண்டு படுத்துக் கொண்டிருப்பேன். அப்போது ஒரு நறுமணம் அறை முழுவதும் நிறைந்து காணப்படும். ரேடியோ நிகழ்ச்சிகளின் நேரத்தை அனுசரித்துதான் அப்பாவுடைய அன்றாட வேலைகள் இருக்கும்.


மாநில செய்திகள் வாசிக்கும் போது காபியை குடித்துவிட்டுக் கையில் துணிப் பையில் வைக்கப்பட்டிருக்கும் அடுக்கு கேரியரில் பகல் சாப்பாட்டுடன் அப்பா வீட்டை விட்டு கிளம்புவார். பஸ் ஸ்டாப்புக்குப் போக பத்து நிமிடம் நடக்கவேண்டும். ஏழு பத்திற்கு வரும் பஸ்ஸைப் பிடித்தால்தான் பட்டணத்தில் இருக்கும் கயிறு தொழிற்சாலைக்கு எட்டு மணிக்குப் போய்ச்சேரமுடியும்.

முனிசிபாலிட்டியில் சங்கு ஊதும்போது கயிறு தொழிற்சாலையின் கேட் மூடப்படும். அதனால் சாப்பாடு தயாராக தாமதமானாலும் ரேடியோவில் செய்திகளுக்கு அடுத்த நிகழ்ச்சி முடியும்போது அப்பா படியிறங்கியிருப்பார். மழைக்காலத்தில் ஈரமான விறகுகளும் நனைந்து போன ஓலைகளுமாக எரிய மறுக்கும் அடுப்பில் தீயை மூட்டி கலங்கிய கண்ணும் சிவந்து போன முகமுமாக அம்மா பகல் சாப்பாட்டை தயாரித்து தருவார்.

அப்போது நடந்து போகும் அப்பாவை ஓடிப் போய் ஹெல்த் சென்ட்டர் வளைவில் பிடித்து நிறுத்தி சாப்பாட்டுப் பையைத் தருவேன். ஹெல்த் செண்ட்டரில் இருந்து கிடைக்கும் சத்து மாவையும், உப்புமாவையும் சாப்பிட்டுத்தான் வேகமாக நடந்து போகும் அப்பாவை நான் ஓடிப் போய் பிடிக்கிறேன் என்று அம்மா சொல்வதுண்டு.

ஒவ்வொரு நாளும் சாயங்கால நேரத்திலும் ரேடியோ கேட்கப் பக்கத்து வீட்டு மனோகரன் மாமாவும் அவுசேப் மாமாவும் சரியான நேரத்துக்கு வந்து விடுவார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் அதிகமாக வருவார்கள். சனிக்கிழமை இரவு எட்டு மணிக்கு அரை மணி நேர நாடகம் ஒலிபரப்பாகும்.

நாடகத்தில் நடித்தவர்களும் கதை எழுதியவர்களும் நெருங்கிய சொந்தக்காரர்கள் போலக் கருதப்பட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்பதே காலுக்கு தொடர் நாடகம். ஒரு நாடகத்தை முழுவதும் தொடர்ந்து கேட்டுமுடிக்க நான்கைந்து ஞாயிற்றுக் கிழமைகள் ஆகும். அதனால் சனிக் கிழமை நாடகத்தைதான் எல்லோருக்கும் பிடிக்கும்.

இரவில் ராந்தல் வெளிச்சத்தில் சில நாட்கள் அப்பாவும் அவுசேப் மாமாவும் சர்ச்சை செய்துகொண்டிருப்பதைக் கேட்கமுடியும். மூன்று பாட்டரிகள் உள்ள ரேடியோ அரிதாக வேலைநிறுத்தம் செய்யும். ரேடியோ பாடவில்லை என்றால் அப்பாவுக்கும் உடம்பும் மனதும் சரியில்லாமல் போய்விடும்.

முதலில் உடம்பு சரியில்லாமல் போவது ரேடியோவுக்கா இல்லை அப்பாவுக்கா என்பதை புரிந்து கொள்ளமுடியாது. எப்படி என்றாலும் ஒரு ஆளுடைய நோய் இன்னொருவரையும் பாதிக்கும் என்பது நிச்சயம். ரேடியோ இல்லை என்றால் அப்பா யாரோடும் பேசமாட்டார். அதிகக் கோபம் வரும்.

இரண்டு நாட்களுக்குக் கூடுதலாக ரேடியோவுக்கு பாடாமல் இருக்கமுடியாது. அப்பாவும் அதற்கு அனுமதிப்பதில்லை. உடம்பு சரியில்லை என்றாலும் பட்டணத்தில் இருக்கும் ரேடியோவை பழுது பார்க்கும் கடை வைத்திருந்த சுரேஷ் அண்ணனை அப்பா கூட்டிக்கொண்டு வருவார்.


நாங்கள் ஸ்கூலுக்குப் போகும் வழியில்தான் அந்த அண்ணனுடைய வீடு இருந்தது. ரேடியோ ரிப்பேர் செய்யும் ஆள் என்ற நிலையில் எனக்கு அந்த ஆளை நான் அதிகமாக மதித்தேன். வெளிப்பக்கம் இருந்த ஸ்க்ரூவை கழற்றி பேட்டரிகளை வெளியில் எடுத்து ஸ்ப்ரிங்கையும் பேட்டரியின் வெளியிலும் படர்ந்திருக்கும் துருவை ப்ளேடால் சுரண்டி அகற்றி ரேடியோவை அந்த ஆள் மறுபடியும் பாடவைப்பதை ஆச்சரியத்தோடு நான் பார்த்துக் கொண்டிருப்பேன்.

சில சமயங்களில் பேட்டரி கசிந்து வெளியில் வந்தாலும் ரேடியோ பாடாது. மேலிருந்து ஒரு குட்டிக் குழந்தையை எடுப்பது போலதான் அப்பா எப்போதும் ரேடியோவை கீழே இறக்குவார். கூடுதல் பாதுகாப்புக்காக ரேடியோவை பத்திரமாக எடுக்க ஒரு கம்பியும் கொடுக்கப்பட்டிருக்கும். ரேடியோவின் சத்தம் குறைந்து பாட்டில் ஒரு நடுக்கம் ஏற்படும்போது ஒரு நொவீனோ பேட்டரியை வாங்கி ஸ்ப்ரிங்கோடு இருக்கும் பகுதியிலும் அப்போது மிகவும் மேலாக இருக்கும் பேட்டரியையும் எடுத்து மாற்றி ரேடியோவை பாடவைப்பார். அப்பாவைத் தவிர வீட்டில் வேறு யாருக்கும் ரேடியோவைத் தொட அனுமதி இல்லை.

இல்லாவிட்டாலும் தரையில் இருந்து அப்பாவுக்கு மட்டும்தான் ரேடியோ ஸ்விட்ச் எட்டும். மழைக்காலமாகும்போது மேற்பகுதியில் வேயப்பட்டிருக்கும் ஓலைக் கூரையில் இருக்கும் விரிசல்கள் வழியாக தண்ணீர் சொட்டு சொட்டாக வீட்டிற்குள் விழும். ஆகாயக் கீறல்கள் திறப்பது போன்ற துவாரங்களை துணிக் கடை பிளாஸ்டிக் கவர்களையும் ஆஸ்பத்திரியில் இருந்து கிடைத்த எக்ஸ் ரே பிலிம்களையும் சொருகி வைத்து அப்பா அந்த ஓட்டைகளை மூடுவார்.

சில இரவுகளில் நாங்கள் படுத்துக் கிடக்கும் பாயில் மழைத் தண்ணீர் விழும்போது சமையலறையில் இருந்து அம்மா பாத்திரங்களை எடுத்துவந்து நிரப்பி வைப்பார். எல்லா வருடங்களிலும் சரியான நேரத்தில் கூரையில் புதிய ஓலைகளை மாற்றுவது இல்லை. அதனால்தான் கூரையில் ஓட்டைகள்.

அப்பாவுக்கு கம்பெனியில் இருந்து போனஸ் கிடைக்கும்போது மட்டும்தான் ஓலைகளை மாற்றும் வேலை நடக்கும். ஓலை மாற்றுவது என்பது எங்களுக்கு ஒரு திருவிழா. ஐந்து அண்ணன்களும் அப்போது வேலை செய்வார்கள். முதலில் இரண்டு பேர் ஊர்ந்து ஊர்ந்து கூரை மேல் ஏறுவார்கள். கீழே இருப்பது போல இரண்டு கால்கலையும் வைத்துக்கொண்டு மேல் கூரையில் கட்டுகளை அரிவாளால் வெட்டுவார்கள். பழைய ஓலைகள்தான் முதலில் கீழே விழும்.

ஒட்டிப் பிடித்திருக்கும் ஓலைகளில் கீழே இருப்பது போன வருஷத்திலும் அதற்கும்மேல் இருப்பது அதற்கும் முந்தைய வருஷத்திலும் போடப்பட்டவை. மிகவும் பழையதாகப் போன ஓலைகளை மாற்றி, கடந்த வருஷத்து ஓலைகளை அப்பா தனி கவனத்துடன் வைப்பார். பழைய ஓலைகளோடு சேர்த்து அவற்றைதான் இந்த முறை கட்டவேண்டும்.


பழைய ஓலைகளை ஒன்றுசேர்த்து கட்டி வைத்து எரித்து பச்சை ஓலைகளை அந்த நெருப்பில் இட்டு வாட்டி எடுப்பது இன்னொருவனுடைய வேலை. ஓலைத் துண்டுகளை கட்டுகளாக கட்டி துடைப்பம் போன்ற வடிவத்தில் மாற்றுவார்கள். ஓலைகள் முழுவதும் மாற்றி முடித்தவுடன் வீடு முழுவதும் ஒரே வெளிச்சமாக இருக்கும். மேலே இருக்கும் துணிமணிகளில் அழுக்கு படியாமல் இருப்பதற்காக பாய் விரித்துப் போடப்பட்டிருக்கும். பெரிய மரப்பெட்டியிலும் துணிமணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். கூரை வேலை எல்லாம் முடித்து இறங்கும்போது மணி பத்தாகிவிடும். கஞ்சியைக் குடித்துவிட்டுதான் மீதி வேலை.

புதுக்கூரை போடும் வேலை ஞாயிற்றுக் கிழமைகளில்தான் நடக்கும். ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ரேடியோவில் நிகழ்ச்சிகள் இருந்து கொண்டேயிருக்கும். பதினோரு மணிக்கு குழந்தைகள் உலகம் நிகழ்ச்சியில் ரேடியோ மாமாவிடம் கேள்வி கேட்கும் பகுதி ஒலிபரப்பாகும். எத்தனையெத்தனையோ சந்தேகங்களுக்கு அப்போது பதில் கிடைக்கும்.

கூரை போடும் போது மூன்று பேர் மேல் கூரையில் இருப்பார்கள். ஓலை எடுத்துக் கொடுக்க இரண்டு பேர் கீழே இருப்பார்கள். கூரை வேலை முடிந்தால் அப்பா முதலில் செய்வது ரேடியோவை அதற்குரிய இடத்தில் பத்திரப்படுத்தி வைப்பதுதான். கான்க்ரீட் வீட்டுக்கு குடும்பம் மாறியபோதும், இணைய தள வசதி வந்த பிறகும் கூட எங்களுடனேயே வந்தது ரேடியோ மட்டும்தான்.

அப்பா இறந்து போன நாள் அன்றுதான் ரேடியோ கடைசியாக பாடியது. சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு ரேடியோவை பாடவைக்க முயற்சி செய்த போதும் அது அசைந்து கொடுக்கவேயில்லை. அதைச் சரி செய்ய மனது வரவில்லை. அப்பா இல்லாத வீட்டில் பாடாத ரேடியோ என் கடந்த காலத்தின் குரல்தானே?

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p87.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License