இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

பாபுவைச் சந்தித்து...!

மலையாளம்: எஸ். ஆர். லால்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்

நகரத்தில்தான் இப்போது இருக்கிறான் என்ற விவரத்தைத் தவிர, அவன் எங்கே இருக்கிறான் என்று துல்லியமாகத் தெரியவில்லை. கிரிமினல்கள் வாழும் இடமான அந்தக் காலனிக்கு உள்ளேதான் இருக்கிறான் என்று பிறகு இன்னும் கொஞ்சம் விவரம் கிடைத்தது. போன் நம்பர் உண்டு. அது வழியாகத்தான் செய்ய வேண்டியதைச் சொல்லிக் காரியத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிறிது நாட்களாகவே அவனைக் கண்டுபிடிப்பது என்பது அந்த ஆளுடைய வாழ்வின் அன்றாடச் செயல்களில் ஒன்றாக இருந்தது. அதனால் அவனைப் பற்றிக் கேட்பது எதையும் அந்த ஆள் மனதில் அடுக்கி வைத்தான். சாக்கடை வாய்க்காலாக ஓடும் இடத்துக்கு அருகில்தான் இருந்தது அந்தக் காலனி. முன்பு அந்த வழியாகப் போகும் போது மூக்கைப் பொத்திக் கொண்டுதான் போவான்.

வழியில் எருமைகளும் பசுக்களும் நாய்களும் அலைந்து திரிந்து நடந்துகொண்டிருந்தன. ஈக்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. “வெளுத்த பாபுவோடவீடு எது?”. கடைத் திண்ணையில் உட்கார்ந்திருந்த ஒரு ஆளிடம் அவன் கேட்டான். அந்த ஆள் ஆதரவோடு எழுந்திருந்து பரிவோடு கூடவே வந்து வீட்டைக் காட்டித் தந்தான்.

பாபு யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தான். பொறுமையோடு கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. வெளியில் ஒரு ஆளின் வருகையை உணர்ந்து கொண்டபோது பாபு வீட்டுக்கு வெளியில் தலையை நீட்டினான். வெளுத்த உடம்பு. உடல் பருமனான சிறிய வயதுக்காரன்.


“பாபுதானே?”

“இல்ல”

பட்டென்று என்ன சொல்வது என்று தெரியாமல் வந்தவன் குழம்பினான்.

“எனக்கு உங்களப் பாக்கவேண்டிய வேல இருக்கு”

“நீங்க ஆளு மாறி வந்திருக்கீங்க”. அவன் உள்ளே போக முயற்சி செய்தான்.

“பாபுங்கற ஆளு…”

“சொன்னேன் இல்லயா? என்னோட பேரு வேறொன்னு”

அவனுக்குக் கோபம் வந்தது. அதை வந்தவன் கவனித்தான்.

வந்தவன் அவனை பட்டென்று அப்படி விட்டுவிடத் தயாராக இல்லை. விநாடி வித்தியாசத்தில்தான் பார்க்க முடியாமல் இருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வந்தவன் வீட்டுக்குள் நுழைந்தான்.

”நான் உங்களத்தான் பாக்கணும்”

“இங்க யாரையும் வர அனுமதிக்கறது இல்ல. வேல கொடுக்கறவங்களோட பாதுகாப்புக்குதான் அப்படி செய்யறோம்”

விடுவது போல இல்லை என்பதை உணர்ந்து பாபு சொன்னான்.”இந்த விஷயத்துல நீங்க எனக்கு உதவ நிறைய இருக்கு. அதனாலதான் உங்கள நேராப் பாக்க வந்தேன்”

“அதனால உங்களுக்கு பெரிய லாபம் ஒன்னும் இல்ல. எல்லாத்துக்கும் துல்லியமான ரேட் இருக்கு. அது குறையவும் குறையாது. எல்லா இடத்துலயும் பணத்த எறியணும். இல்லாட்டா ஜெயில் இடிஞ்சாலும் தப்பிக்கமுடியாது. சொல்லுங்க. சீக்கிரமா சொல்லுங்க. எனக்கு கொஞ்சம் அவசரவேல இருக்கு” பாபு பொறுமை இழந்தான்.

வந்தவன் மேசைக்கு அந்தப் பக்கம் இருந்தான். “சிட்டி ப்ளாட்டுலதான் இருக்கேன்”


அவன் விவரிக்க ஆரம்பித்தான். “அஞ்சாவது ப்ளோர். அந்தக் கட்டிடத்துல பதினைஞ்சு ப்ளோருங்க இருக்கு. எப்பவும் லிஃப்ட் வேல செய்யறது இல்ல. பெரிய குப்பைத் தொட்டி அதோட ஒரு பக்கத்துலதான் இருக்கு. வெளியில வாட்டர் டேங்க் இருக்கு. ப்ளாட்டக் கண்டுபிடிக்கறதுக்கு உள்ள அடையாளம் இது. அஞ்சாவது ப்ளோரில் 62 ஆவது அறை. அந்த ஆளு தனியாத்தான் இருக்கான். சாயங்கால நேரம்தான் சரியான நேரம். அந்த சமயத்துல கடலை நோக்கி திறக்கும் பெரிய ஜன்னலுக்குப் பக்கத்துல இருந்து புத்தகம் வாசிப்பான். 61ல் ராத்திரி பத்து மணியானாத்தான் ஆளுங்க வருவாங்க”

பாபு காகிதத்தில் சிட்டி ப்ளாட்டுக்கு போகும் சாலை, குப்பைத்தொட்டி, வாட்டர் டேங்க்கின் படங்களை வரைந்தான். வந்தவன் அதை உணர்ச்சி எதுவுமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

பாபு சொன்னான். “வர்றவங்க கிட்ட கேக்கக்கூடாத கேள்வி. இந்த அளவுக்கு உங்களோட வயசுல ஒரு ஆளு என்னை அணுகறது இதுதான் முத தடவை. அதுவும் ஒரு ஆளைக் கொல்ல. வயசு அதிகமாக அதிகமாக பக்குவமும் சகிப்புத்தன்மையும் அதிகமாகும். அப்படிதானே சார்?”

“நிம்மதி இல்ல பாபு. நிறய யோசிச்சேன். அத நானே செஞ்சுடலாம். ஆனா… துணிச்சல் போதாது”

“கேட்டதுக்காக மன்னிச்சுக்கங்க” பாபு பரிவோடு சொன்னான்.

அந்த உணர்ச்சி அவனுடைய உடம்புக்குக் கொஞ்சம் கூட பொருத்தமில்லாததாகத் தோன்றியது. வந்தவன் பாபுவிடம் யாசித்தான். சொன்ன தொகையை பையில் இருந்து எடுத்து பாபுவுக்கு நேராக நீட்டினான்.

“காரியத்த ,செஞ்சு முடிக்காம அட்வான்ஸா காசு வாங்கறது இல்ல சார்”

“பரவாயில்ல. எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு”

“போன் நம்பர் கொடுங்க. வேல முடிஞ்சா நான் உங்களக் கூப்பிடறேன்”


“எப்படியிருந்தாலும் நான் அப்ப இங்க இருக்கமாட்டேன்”

“அப்ப பாக்கலாம் சார்” பாபு அவனுடைய கையைப் பிடித்துக் குலுக்கினான்.

“அப்ப இனிம நாம ஒருத்தர ஒருத்தரு பாக்கப் போறதே இல்ல இல்லயா?”

வந்தவன் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

“இன்னொரு தடவ… நீங்கதானே அந்த வெளுத்த பாபு?”

வந்தவனுக்கு அதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது.

“நான் அப்படி ஒரு பேரயும் நிலையா வச்சுக்கறது இல்ல”

அவன் பதில் சொன்னான்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p89.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License