இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

நினைவுகளின் வழியே…!

மலையாளம்: நீலிமா ஜே. பி.

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்

திருவனந்தபுரத்தில் ஒரு ப்ளாட். காலை மணி எட்டரை. அங்கே குறும்புகள் செய்தபடி ஓடி விளையாடும் இரண்டு பெண் குழந்தைகள். சமையலறையில் குழந்தைகளுக்கான சாப்பாட்டை பார்வதி எடுத்துக் கொண்டிருந்தாள். அதற்கு நடுவில் அவர்கள் போட சாக்ஸுகளைத் தயார்படுத்தினாள்.

சாப்பாட்டு மேசையில் டிபனை கொண்டுவந்து வைத்தாள். இதற்கு இடையில் குளித்து முடித்து டிரஸ் செய்துகொண்டிருந்த சுரேஷ் பார்வதியிடம் கேட்டான். “நீ எப்ப போற?”. “என்ன? என்ன சொன்னீங்க?. ஏய் குட்டிகளா. கொஞ்சம் பேசாம அமைதியா இருங்க. என்ன? என்ன சொன்னீங்க சுரேஷ்?”

“என்ன சுரேஷ்?”

“நீ எப்ப போறன்னு கேட்டேன்”

“எங்க?”

“ஓ. இப்ப அப்படி ஆயிடுச்சா கத?. நீ தானே இன்னிக்கு நீ படிச்ச பழைய ஸ்கூலுக்குப் போகப்போறேன்னு சொல்லியிருந்த?”

“ஓ. சரிதான். நான் அத மறந்துபோயிட்டேன். பத்தரை ஆறப்ப கிளம்பறேன். அந்தக் கீதாவும் ப்ரியாவும் வரேன்னு சொல்லியிருக்காங்க. ஆனா எனக்கு இதுல ஒன்னும் பெரிசா ஆர்வம் இல்ல. இல்லாட்டாலும் முன்னால படிச்ச இந்த ஸ்கூலுக்குப் போய் என்னத்த எடுக்கப்போறேன் நான்? சும்மா பொழுது போகாத அதுக செய்யற வெட்டி வேலைங்க”. “ஹாங். போகட்டும் விடு. உன்னோட தோழிங்க கூப்பிட்டதுதானே? உனக்கும் ஒரு ரிலீஃப் கிடச்சாப்ப்ல இருக்கும். சும்மா போயிட்டு வா என்னோட டியர். சரி நீ எப்படிப் போகப்போற?”

“சரியான நேரத்துக்கு அவங்க கார்ல வந்துடறதா சொல்லியிருக்காங்க”

அப்படின்னா… நீ கார எடுத்துட்டுப் போ”. “அப்ப நீங்க”. “நான் எப்படியாச்சும் போறேன். இன்னிக்கு சாயங்காலம் நான் குழந்தைங்களயும் கூட்டிகிட்டு அங்க வரேன்”

“ஹும்”. குழந்தைகளைப் பஸ் ஸ்டாப்பில் கொண்டு போய் இறக்கிவிட்டுவிட்டு அவள் வந்தபோது சுரேஷ் கிளம்பிக் கொண்டிருந்தான்.

“கிளம்பிட்டீங்களா? சாப்பாட்ட எடுத்துக்கிட்டீங்களா”. “எடுத்தாச்சு. கவனமா போகணும்”. “சரி”. சுரேஷ் போவதை பால்கனியில் இருந்து அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

உடனே போனை எடுத்து கீதாவைக் கூப்பிட்டாள். “ஹலோ. நீ எங்க இருக்க”

“யெஸ் பாரு. வீட்டுல”. “என்ன வீட்டுலயா? நீ இன்னமும் கிளம்பலயா? நீதானே என்னை போன் செஞ்சு கூப்பிட்ட. நாம படிச்ச ஸ்கூலுக்குப் போகலாம்னு”

“ஆமாம். ஆனா… என் பையனோட மார்க் ரிப்போர்ட் இன்னிக்குதான் கொடுக்கறாங்க.

அவன் பயந்து போயிருக்கான். அவன் இந்த விஷயத்த நேத்து ராத்திரிதான் சொன்னான்”


“அப்ப நீ வரலயா?”

“இன்னிக்கு இந்த வேல அவசியமானதா ஆயிடுச்சேடி. சரி. ப்ரியா இருக்கா இல்ல? அவதான் அவசியமாப் போகணும்னு சொன்னா. அவ வரா இல்லயா? நீங்க போயிட்டு வாஞ்க. போட்டோ எடுக்க மறந்துடாதீங்க”

“சரி சரி. போயிட்டு வந்துட்டு நான் உன்னைக் கூப்பிடறேன்”

போனை வைத்துவிட்டு “ஆமா. இவளும் போட்டோவும்” என்று தன் மனதுக்குள் பார்வதி நினைத்துக்கொண்டாள். “சரி. நேரமாயிடுச்சு. இனிம டிரஸ் செஞ்சுட்டு ப்ரியாவக் கூப்பிடலாம்”. அவள் அறைக்குள் போய் ஆடை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தாள்.

கார் சாவியை எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டினாள். “இவ என்ன போன எடுக்கவேயில்ல? ஒருசமயம் கார் ஓட்டிகிட்டு வராளா இருக்கும்”

படிகளில் இறங்கி பார்வதி காரில் ஏறினாள். சிறிது நேரம் கழித்து போன் அழைத்தது. பார்த்தபோது ப்ரியா. காரை ஓரமாக நிறுத்திவிட்டு போனை எடுத்தாள்.

“ஏய். நீ வந்துட்டியா?”

“ஓ. அத ஏன் கேக்கற? என் புருஷன் ரவியோட குடும்பத்துக்காரங்க திடீர்னு வீட்டுக்கு வந்துட்டாங்க. வசமா மாட்டிக்கிட்டேன். கிளம்ப முடியல. என்ன செய்யறது? நீ இப்ப எங்க போய்ச் சேந்திருக்க?”

“இதோ நான் இப்பப் போய்ச்சேந்துடுவேன்”

“அப்ப நீ ஒரு காரியம் செய். நீ முதல்ல போ. நான் எவ்வளவு லேட்டானாலும் மத்தியானத்துக்குள்ள அங்க வந்துடுவேன்”

“உருதியாத்தான் சொல்றியா?”

“நிச்சயமா”

“ம்”


பார்வதி ஸ்கூலுக்கு முன்னால் போய் காரின் வேகத்தைக் குறைத்தாள். கேட்டுக்கு வெளியில் நின்றாள். ஸ்கூலில் ஒரு சத்தமும் இல்லை.

ஒரே அமைதி. ஹாரனை அடித்துப் பார்த்தாள். பதினேழு பதினெட்டு வயது இருக்கும் ஒரு பையன் வந்து கேட்டைத் திறந்துவிட்டான். உள்ளே நுழைந்தவுடன் ஏதோ ஒரு அதிசய சக்தி அவளை இழுப்பது போலத் தோன்றியது. காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவள் நடந்து அந்தப் பையனுக்கு அருகில் சென்றாள்.

“இன்னிக்கு ஸ்கூல் லீவா?”

“ஹெட் மாஸ்ட்டர் பாஸ்கரன் மாஸ்டர் செத்துப் போயிட்டாரு. ஸ்கூல் அதுக்காக லீவு. அதோ அந்தப் போட்டோவ்ல இருக்கறதுதான் மாஸ்ட்டர்”

பார்வதி அந்த நோட்டீஸைப் பார்த்தாள்.

“அப்பாவோட கையப் பிடிச்சு முத தடவையா ஸ்கூலோட படிங்கள்ல ஏறி நுழைஞ்சப்ப “மக நல்லா வரட்டும்”னு சொல்லி ஆசீர்வாதம் செஞ்ச மாஸ்டர்.

வளர்ந்தபோது பாக்கரன் மாஸ்ட்டர்னு பட்டப் பேரச் சொல்லிக் கூப்பிட்ட அதே மாஸ்ட்டர். முத தடவையா அப்பாவோட கையப் பிடிச்சு ஸ்கூலுக்கு வந்தது… ஸ்டாஃப் ரூமுல வச்சு மாஸ்ட்டர் ஆசீர்வாதம் செஞ்சது… நானும் என்னோட தோழிங்களும் “பாக்கரன் மாஸ்ட்டரே”ன்னு சொல்லி ஓடறது…” அவளுடைய திரைச்சீலை மனதில் படம் போல ஓடின.

அவள் நடந்து மத்தியான சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு கையைக் கழுவும் இடத்தை அடைந்தாள். அங்கே ஒரு பிளாஸ்டிக் பாட்டில் கீழே கிடப்பதைப் பார்த்தாள். அதை எடுத்து ஒரு படியில் பத்திரமாக வைத்தாள்.

அப்போது மெல்ல மெல்ல… மெல்ல… அவளுடைய நினைவுகள் கடந்த காலத்தை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தன.

கையைக் கழுவிக்கொண்டு பாட்டிலில் தண்ணீரைப் பிடித்துக்கொண்டு ஓடும் பார்வதி. அந்த தண்ணீர் அடுத்த கிளாஸில் படித்த ரமேஷ் மீது விழுந்தது. பாட்டிலைக் கீழே போட்டுவிட்டு அழுது கொண்டு ஓடும் பார்வதி. அதை அவன் பார்த்துக் கொண்டு நின்றான். பிறகு எப்போதும் அதே இடத்தில் அவன் பார்வதிக்காக காத்துக்கொண்டு நிற்க ஆரம்பித்தான்.

பார்க்கும்போது அவன் சிரிப்பான். ஆரம்பத்தில் அவளுக்கு பயமாக இருந்தது. நாட்கள் போகப் போக அவளும் சிரிக்க ஆரம்பித்தாள்.

திடீரென்று அடுத்த இரண்டு நாட்கள் கழித்து பார்வதியைக் காணவில்லை.

ரமேஷ் அவளுடைய தோழிகளிடம் விசாரித்தபோது அவர்கள் ஒரு கள்ளச் சிரிப்போடு “அவ இனிம ஒரு வாரம் கழிச்சுதான் வருவா” என்று சொன்னார்கள்.

பார்வதி நிகழ்காலத்துக்குத் திரும்பி வந்தாள். அந்த பிளாஸ்ட்டிக் பாட்டிலை அங்கே வைத்துவிட்டு திரும்பி நடந்தாள். அவள் அப்புறம் ஸ்கூலுக்கு வந்தது முழுப் பாவாடையில்தான். பாவாடை கட்டிக்கொண்டு வந்த அந்த நாட்கள்… நடந்து நடந்து பார்வதி வகுப்பறைகளுக்குச் செல்லும் வழியைப் பார்த்தாள்.

அந்த வழியின் ஒரு ஓரத்தில் ரமேஷும் பதினான்கு வயது பார்வதியும் மட்டும். அப்போது ரமேஷ் ஒரு முத்தம் கேட்க பார்வதி அவன் கன்னத்தில் ஒரு முத்தம் தந்தாள். உடனே அவன் அவளைக் கட்டிப்பிடித்தான். விளையாட்டு ஆசிரியர் அதைப் பார்த்துக் கொண்டே வந்துவிட்டார்.


ஞாபகங்கள் தூரத்திற்கு அகன்று செல்வது போல அவளுக்குத் தோன்றியது. அப்பாவின் வசவுகளும் வார்த்தைகளும் அவள் காதுகளில் வந்து முழங்கின. “என்ன ஒரு அகங்காரம் இவளுக்கு? அடிக்கக்கூடாது.

அடிச்சுக்கொல்லணும் இவள. அப்பவாச்சும் அவமானம் தீரும் இல்ல?

எதுக்கும் வக்கில்லாத அந்தப் பய ரமேஷ்.

ச்சீ! நினைச்சுப் பாக்கவே அசிங்கமா இருக்கு” அம்மாவும் அதையே திருப்பிச் சொன்னாள்.

“இனிம இவ இங்க படிக்கவேணாம். திருவனந்தபுரத்துக்கு அனுப்பிடலாம். அங்க போய் படிக்கட்டும். அதுதான் ஒரே வழி. விடியறதுக்கு முன்னாலயே இந்த ஜந்துவ அங்க கொண்டுபோய் தள்ளிடுவேன் நான்”

வீட்டில் ஜன்னல் கம்பிகளில் முகத்தை வைத்துக்கொண்டு பார்வதி தொலைதூரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் காதுகளில் அப்பா சொன்ன வார்த்தைகள் வந்து விழுந்தன.

அவளுடைய நினைவுகள் கடந்த காலத்தை நோக்கி பாய்ந்தன. ஸ்கூல் வகுப்பறையில் ஜன்னல் கம்பிகளில் முகத்தை வைத்து பார்த்துக் கொண்டிருந்த அவளை யாரோ தட்டுவது போலத் தோன்றியது.

திரும்பிப் பார்த்தாள். சுரேஷ். புன்னகை செய்தாள்.

“இது என்னடா இது? எந்த உலகத்தில இருக்க நீ? நேரம் என்னன்னு தெரியுமா? யாரும் வரல இல்லயா? ஹ ஹ ஹா! உன்னைக் கூப்பிட்டுட்டு நீ போன்ல கிடைக்கலைன்னு ப்ரியா என்னைக் கூப்பிட்டாள்ல்”. அவள் திரும்பி நடந்தாள்.


சுரேஷ் பார்க்காத வகையில் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

சுரேஷ் மறுபடியும் அவளிடம் “கார் சாவியக் கொடு. நான் ஓட்டறேண்”என்றான்.

அப்போது ஸ்கூலில் ஓடி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளும் காரில் வந்து ஏறிக்கொண்டார்கள். “இதுதான் அம்மா படிச்ச ஸ்கூலா?”

“ம்”

“அம்மா. அக்காவுக்கு ப்ரோக்ரஸ் கார்டு கிடைச்சுடுச்சு. கணக்குல மார்க் குறைஞ்சிருக்கு”

பார்வதி நிகழ்கால சம்பவங்களுக்கு நடந்து வந்துகொண்டிருந்தாள். “இல்ல அம்மா. கணக்குல மட்டும் பி க்ரேடு கிடைச்சிருக்கு”

சுரேஷ் எல்லாம் தெரிந்தும் தெரியாத மாதிரி காரை ஓட்டினான்.

“ஆமாமாம். மீதி எல்லாத்திலயும் நூத்துக்கு நூத்து பத்தாக்கும்” சுரேஷ் சொன்னான்.

காருக்குள் இருந்து கூட்டமாக சிரிப்பொலி உயர்ந்தது. கார் மெல்ல வெளியில் வந்து ஓடத் தொடங்கியது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p92.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License