இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

சமத்துவம்

மலையாளம்: டெரின் லாரன்ஸ்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்

“குட் மார்னிங் டீச்சர்”

“குட் மார்னிங் டியர்” ஸ்டாஃப் ரூமுக்குப் போகும் வழியில் என்னைப் பார்த்து வணக்கம் சொல்வதற்காக நின்று கொண்டிருந்த அவளுடைய வலது கன்னத்தில் கருத்துப் போன காயம் இருப்பதை நான் கவனித்தேன்.

“கன்னத்துல என்ன காயம்?”

“சமத்துவம்” அவள் பதில் சொன்னாள்.

“சமத்துவமா?” நான் ஆச்சரியப்பட்டேன்.

“ஹாங். சமத்துவம்” அவள் அதே வார்த்தையைத் திரும்பச் சொன்னாள்.

“டீச்சரும் கொஞ்சம் ஜாக்கிரதயா இருக்கணும். அப்பா உங்களப் பாக்கவரேன்னு சொல்லியிருக்காரு”

“அப்படியா? அப்பாவ நான் ஒன்னும் வரச்சொல்லிக் கூப்பிடலயே?”

“டீச்சர் நீங்க பசங்கள தப்பான வழி காட்டறீங்கன்னு சொல்லி அதப் பத்திக் கேக்கறதுக்குதான்”

“யாரு வராங்க?”

“என்னோட அப்பாதான்”

“என்னடா? விவரமாச் சொல்லு”

“அடுத்த வாரம் மாமாவோட மகளுக்குக் கல்யாணம். அப்பாக்கு முன்னால இருந்தே அம்மாவோட வீட்டுக்காரங்களப் பிடிக்காது. பாக்கவும் கூடாது. ஒரு விஷயத்துலயும் அம்மா வீட்டுக்காரங்களுக்கு உதவி செய்யமாட்டாரு. ஒத்துழைக்கவும் மாட்டாரு”


“உன்னோட வீட்டு விஷயங்கள எதுக்காக நீ எங்கிட்ட சொல்ற?” நான் கேட்டேன்.

விஷயத்த விவரமாச் சொல்றப்ப டீச்சருக்குப் புரியும்”

அவள் என்னுடைய கையைப் பிடித்துக் கொண்டு சொன்னாள். “அம்மாவோட வீட்டுக்கு எதுக்குப் போனானாலும் தொட்டதுக்கும் துடச்சதுக்கும் எல்லாம் அப்பா சண்ட போடுவாரு” எதுவும் செய்ய இயலாதவளாக அவள் சொன்னாள்.

“அம்மா ஒன்னும் சொல்லமாட்டாங்களா?” நான் கேட்டேன்.

“ஓ! சொல்லிட்டாப் போதும். வீட்டுக்காரங்களோட அஞ்சு தலமுறை முன்னால இருந்த அம்மா வீட்டுக்காரங்களயும் சேத்து வச்சு அப்பா திட்டுவாரு” அதைச் சொல்லும் போது அவளுடைய கண்களில் இருந்து தீப்பொறி பறந்தது.

“கல்யாணத்துக்குப் பத்திரிக வைக்க மாமாவும் மாமியும் வந்தப்பவே அப்பா அவங்களுக்கு முகம் கொடுக்கல. அம்மாவ சங்கடப்படுத்தாம இருக்க அவங்க வேற எதயும் சொல்லல”. அவளுடைய வார்த்தைகளில் விரக்தி நிரம்பி வழிந்தது.

“நாம கல்யாணத்துக்குப் போகவேணாமான்னு அம்மா கேட்டதும் அப்பாவுக்கு ஆவேசம் வந்துடுச்சு. வழக்கம் போல ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பிச்சுட்டாரு”

அவளுடைய கண்களில் பீதி படர்வதை நான் கவனித்தேன்.

“நாங்க போகணும்” பட்டென்று நான் அதைச் சொன்னேன். சொன்னது மட்டும்தான் எனக்கு ஞாபகத்துல இருக்கு டீச்சர். மூஞ்சியப் பாத்து ஒரே ஒரு அடிதான்! கண்ணுல பூச்சிங்க பறக்க ஆரம்பிச்சது”

“நீ கொஞ்சம் பேசாம இருந்திருக்கக்கூடாதா?”

“இது நல்ல கதை”. அவள் தாடையில் கை வைத்துக்கொண்டு சொன்னாள்.

“அப்ப சமத்துவம் என்ன ஆகறது?”

“சமத்துவமா?” நான் கேள்விக் குறியாக நின்றேன்.

“ஹாங். போன வாரம் ஓரியண்ட்டேஷன் க்ளாஸ்” எனக்கு விஷயம் புரிந்தது.


“பெண்ணும் ஆணும் சமமானவங்கதான். கூட இருப்பவங்க நம்மள மாதிரி தனிப்பட்ட ஆளுமை உள்ளவங்கதான். நம்மளோட விருப்பு வெறுப்புங்கள அடுத்தவங்க மேல திணிக்கக்கூடாது. வீடு ஜனநாயகத்தோட முதல் பள்ளிக்கூடமாகணும். இதயெல்லாம் டீச்சர்தானே சொன்னீங்க?” ஆவேசத்தோடு சமத்துவத்தைப் பற்றி அவள் என் முன்னால் திரும்பிச் சொல்லிக் காட்டிய போது ஒரு ப்ரத்யேக பளபளப்பு அந்தக் கண்களில் ஒளிர்வதை நான் பார்த்தேன்.

“அப்பறம்?” எனக்கும் ஆவேசம் பிறந்தது.

“அப்பா வரலைன்னா என்ன? நாங்க போவோம்”

“பேசாதடி” ஒரு இடி முழக்கம் மாதிரி அப்பா அலறினாரு. நானும் விடறதா இல்ல டீச்சர்.

“என்ன? நாங்க அடிமைங்களா?” பதிலுக்கு நானும் கேட்டேன்”

“நிலைமை மோசமா போகுதே கடவுளே!”

என்னையும் அறியாமல் நான் தலையில் கை வைத்தேன். “பொம்பளக் கோழி கூவுதாக்கும்? பொம்பளைங்க ஆளுற வீடா இது? வலிமையானவனோட வீட்டுல பொம்பளைங்கதான் பொறுத்துப் போக வேணும். வாயத் திறக்கக்கூடாது. நாலு சுவருங்களுக்கு அப்பால பொம்பளைங்களோட சத்தம் கேக்கக்கூடாது”

அவள் அந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் புலம்பிக் கொண்டேயிருந்தாள்.

“சமத்துவம் அபத்தமாப் போச்சா?”

“இது நல்ல கூத்து” அவள் பரிகாசத்தோடு என்னைப் பார்த்தாள்.

“டீச்சரே இப்படிச் சொல்லலாமா? வேணுமா இது உங்களுக்கு?” அர்த்தத்தைப் புரிந்துகொண்டு நான் தலையை ஆட்டினேன்.

“பொண்னுங்களுக்குப் படிப்புச் சொல்லித்தர்றது அபத்தமாப் போச்சேன்னு சொல்லலாமா? அடிச்சு நொறுக்கினப்பறமும் கூட அம்மா ஒரு வார்த்தை கூட திருப்பிச்சொல்லல தெரியுமா? அப்பா என்னோட படிப்ப நிறுத்திடுவேன்னு மிரட்டினாரு”

“என்னது? படிப்ப நிறுத்திடுவாரா?” எனக்குப் பயம் ஏற்பட்டது.

“போலீஸ்ல புகாரு கொடுப்பேன்னு நானும் சொன்னேன். அப்பா அப்படி ஒரு பதில கொஞ்சம் கூட எங்கிட்ட இருந்து எதிர்பார்க்கல.

“நீயென்ன அந்த அளவுக்குப் போயிட்டியா?”. அவருக்கு என் மேல இருத கோபம் அம்மாவுக்கு நேராத் திரும்பிடுச்சு.


“அம்மாவத் தொடக்கூடாது. நான் கேஸ் கொடுப்பேன். நானும் விடல டீச்சர்.

குழந்தைஞ்கள தப்பான வழியில நடத்தறவங்க. குடும்ப அமைதிய தகக்கறவங்க”

அவளுடைய அப்பா சொன்ன வார்த்தைகளை அதே போல அவள் என்னிடம் திரும்பச் சொன்னாள்.

“அடோய். உனக்கு என்ன தோணுது?” நான் அவளிடம் கேட்டேன்.

“அப்பாவோட சரிகளுக்கு அவரே சுயமா முடிவு செய்யலாம்னா அம்மாக்கும் அது போல ஏன் செய்யக்கூடாது?

அவனவனோட காரியம் மாதிரியே கூட இருக்கற மத்த ஆளுங்க செய்யறப்ப தப்பாகறது ஏன்? கேள்வி கேக்கறவங்கள நிசப்தமாக்கறவங்க சர்வாதிகாரிங்க. அப்பதான் புரட்சிங்க வெடிச்சுச் சிதறறது. உலக சரித்திரத்துல ஒரு புரட்சியும் ஒரே ஒரு ராத்திரியில ஜெயிச்சது இல்ல. அதுக்கு நிறய நாள் நீண்டு நிக்கற போராட்டங்க வேணும்”

சிவந்து வீங்கிப் போன கன்னத்தைத் தடவிக் கொண்டு அவள் சொன்னாள். உறுதியாக காலடிகளை எடுத்து வைத்து அவள் வகுப்பு அறைக்குப் போகும் அவளுக்குள் ஒரு புரட்சிக்காரி ஒளிந்திருப்பதை நான் பார்த்தேன். சரித்திரமும் சமூக அறிவியலும் அரசியல் அறிவியலும் எல்லாம் சாத்தியமான தளத்தில் செயல்பட சமத்துவம் தூண்டுதலாக அமைந்ததை நான் மகிழ்வுடன் நினைத்துப் பார்த்தேன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p93.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License