இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

சிவப்புப் பலா

மலையாளம்: காரூர் நீலகண்ட பிள்ளை

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்

கொச்சு ராமன் சொன்னான். “இந்தப் பயலுங்கள எல்லாம் சுட்டுத்தள்ளணும்” தூ என்று துப்பியபடி சொன்னான்.

“நல்ல புகையிலய வாங்காம கண்டத வாங்கிட்டு அப்பறம் கடைக்காரனை எதுக்காகக் குத்தம் சொல்லணும்?”. சமையலறை வாசலில் வாழைத்தண்டை ஆய்ந்துகொண்டிருந்த கார்த்திகாயினி சொன்னாள்.

“ஆமாமாம். பழைய புகையிலய வித்துக் காசு சம்பாதிக்கறவன சாகற மட்டும் கொல்லணும்” கொச்சு ராமன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பக்கத்துத் தோட்டத்தில் இருந்த பலா மரத்தின் மேல் ஒருவன் ஏறுவதைப் பார்த்தான். வேலியைத் தொட்டபடிதான் மரம் இருந்தது. பழம் பறிப்பவன் மரத்தின் மேல் நிற்கிறான். அவனுடைய தோழன் கீழே நின்று கொண்டிருந்தான்.

தோட்டத்தைத் தாண்டி கொச்சு ராமனுடைய முற்றத்தை ஆக்கிரமித்து நின்று கொண்டிருந்தது பலாவின் நிழல். அது அவனுக்கு நேராக வந்து கொஞ்சுவது போல இருந்தது. மரத்தின் மேல் ஏறியவன் கீழே இறங்கிக் கொண்டிருந்தான்.

அவனுடைய நண்பன் சொன்னான். “அந்தக் கிளயப் பிடிச்சுகிட்டு அந்தப் பக்கம் போ. அடுத்த வீட்டுத் தோட்டத்துக்கு போயிடலாம்” உடனே கொச்சு ராமன் “இங்க யாரும் ஏறிக் குதிச்சு நுழைய வேணாம்” என்றான். “நாம அப்பறம் வரலாம்டா”

“எப்பறமும் வரவேணாம். என்னோட தோட்டத்துக்குள்ள நுழைய நான் யாரயும் விடமாட்டேன்” கொச்சு ராமன் வெளியில் வந்தான்.

“அப்படின்னா அந்தப் பழத்த வேலிக்கு இந்தப் பக்கமாக் கொஞ்சம் எடுத்துத் தாங்க”

“நானா? ஏண்டா நான் உன்னோட வேலக்காரனாடா ? இத உன்னோட அப்பா கிட்டப் போய்ச்சொல்லு”

“சின்னப் பசங்களோட எதுக்காக சண்டைக்குப் போறீங்க?” சொல்லிக் கொண்டே கார்த்திகாயினி இருந்த இடத்தை விட்டு எழுந்து முற்றத்திற்கு வந்தாள்.

“நான் எடுத்துத் தரேன் பசங்களா” அவள் பழத்தைத் தூக்கி எடுக்க முயன்றாள். ஆனால் அது அசைந்து கொடுக்கவில்லை.


“இத ஒரு கை பிடிங்க”. அவள் புருஷனிடம் சொன்னாள்.

“பிடிச்சு தரமாட்டேன். உனக்கு ஒரு உதை தரேன். இதோ வரேன்”

“இத எடுத்து அந்தப் பக்கம் கொடுத்துட்டு ஒரு அடி இல்ல ரெண்டு அடி வேணும்னாலும் கொடுங்க” பிறகும் அவள் பலாப் பழத்தைத் தூக்க முயன்றாள். வேலிக்கு அந்தப் பக்கம் எதுவும் செய்ய முடியாமல் உற்சாகம் இழந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த பையன்களிடம் இரண்டு குழந்தைகளின் தாயான கார்த்திகாயினி சொன்னாள்.

“அவரு சும்மா சொல்றாருடா. நீங்க வந்து எடுத்துகிட்டுப் போங்கடா” சொல்லிவிட்டு அவள் சமையலறைக்குப் போனாள்.

பையன்கள் இரண்டு பேரும் சேர்ந்து படியேறி பழத்துக்கு அருகில் வந்தார்கள். அவர்கள் பிடித்துத் தூக்கிய போதும் அதை எடுக்க முடியவில்லை.

“அக்கா. அந்த வெட்டுக் கத்திய கொஞ்சம் தர்றீங்களா?

இத வெட்டிதான் எடுக்கணும்”அவள் கத்தியை எடுத்துத் தந்தாள்.

பையன்கள் பழத்தை வெட்டினார்கள். நான்கைந்து பழங்களையும் கத்தியையும் எடுத்துக் கொண்டு ஒருவன் அவளுக்கு அருகில் போனான் என்ன சொல்வதென்று அவனும் கார்த்திகாயினியும் யோசிக்கும்போது கொச்சு ராமன் அங்கே வந்தான்.

“எடுத்துட்டுப் போடா. நீயும் உன்னோட உபசரிப்பும்!”

“வேணாம்ப்பா. நீ எடுத்துகிட்டுப் போயிடு” அவள் புருஷனுக்கு ஆதரவாகப் பேசினாள்.


அவன் அவனுடன் வந்தவனிடம் சொன்னான். “வாடா. நாம இந்த சுளைங்கள எல்லாம் கொண்டு போய் வச்சுட்டு அப்பறம் வந்து இத எடுத்துகிட்டுப் போலாம்”

கொடுக்க வந்த சுளைகளை வைத்துவிட்டு பையன்கள் போனார்கள்.

பழத்தின் ஒரு பகுதி அந்தத் திண்ணையின் மீது இருந்தது. தங்க நிறத்தின் பளபளத்த அந்த பழச்சுளைகள் புன்னகை செய்வதைப் பார்த்து மகன் நிதானமாக சென்று அவற்றை தலை வருடி விட ஆரம்பித்தான்.

ஒரு சுளையை மட்டும் பிரித்து எடுக்க அவன் பாடுபட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய செயலைப் பார்த்து கோபம் பொங்கிக் கொண்டு வந்த கொச்சு ராமன் அவனை பிடித்து இழுத்து தள்ளிவிட்டான். அவனுடைய தொடையில் ஓங்கி ஒரு அடி விட்டான.

பழத்தை எடுத்து வேலிக்கு அப்பால் தூக்கியெறிந்தான்.

“நான் யாரயும் இத திங்கவிடமாட்டேன். அந்த அளவுப் பாடுபட்டிருக்கேன் நான்” கொச்சு ராமன் சொன்னது உண்மைதான். அவன் அந்த மரத்தை வளர்த்து ஆளாக்க பாடுபட்டான். சிறிய வயதில் இருந்தே அவன் ஒரு நல்ல தோட்டக்காரன். செடி கொடி மரங்களை வெறுமனே அவன் நேசிக்கவில்லை.

கடவுளாக ஆராதனை செய்தான். ஊரில் இருக்கும் மற்ற பலா மரங்கள் எல்லாம் காய்ப்பதற்கு முன்பே அவனுடைய பலா காய்க்க ஆரம்பிக்கும். எல்லா இடத்திலும் காய்ப்பது நின்றுபோய்விட்டாலும் அவனுடைய அந்த சிவப்பு பலாவில் மட்டும் காய்கள் இருந்து கொண்டேயிருக்கும்.

அவனுக்கு வேறு வேலைகள் இருந்ததனால்தான் அவன் அந்த மரத்தைப் பற்றி அவன் ஒரு புத்தகமாக எழுதவில்லை என்று ஊரில் பேசிக் கொள்வார்கள். கயிற்றை அவிழ்த்துக் கொண்டு ஓடிப்போன ஒரு காளையைத் தேடிக்கொண்டு போன போது அவன் ஒரு வீட்டிற்குப் போனான்.

சகிக்கமுடியாத பசியும் தாகமும் அவனுக்கு ஏற்பட்டது. அந்த வீட்டில் இருந்தவர்கள் அவனுக்குக் குடிக்க கொஞ்சம் மோரையும் சாப்பிட கொஞ்சம் பலாப்பழச் சுளைகளையும் கொடுத்தார்கள். அந்தச் சுளைகளில் இருந்த கொட்டைகளை எடுத்துக்கொண்டு வந்து மண்ணில் ஊன்றி வைத்து அவன் தோட்டத்தில் பல இடங்களிலும் நட்டு வளர்த்தான்.

நல்ல முறையில் கவனித்து வளர்த்தான் என்றாலும் இரண்டு மூன்று வருடங்களில் ஒரே ஒரு செடியைத்த் தவிர மற்றவை எல்லாம் வளரவில்லை. மிச்சம் இருந்த ஒன்றை அவன் கண்ணின் மணி போல பாதுகாத்து வளர்த்தான். பலா மரம் காய்க்க ஆரம்பித்தது.

அது காய்க்க ஆரம்பித்து நான்கு வருடங்களான போது அவனுடைய வீட்டில் பாகப் பிரிவினை நடந்தது. இரண்டு பனை மரங்கள். ஒரு முந்திரி மரம். அவனுக்கு விருப்பமான அந்த சிவப்பு பலா. இதெல்லாம் இருக்கும் முப்பது செண்ட் இடம் அவனுக்குக் கிடைத்தது.

பலா கிடைத்தபோது அவனுக்கு மன நிம்மதி ஏற்பட்டது. பங்கு கிடைத்தவர்களில் சிலர் அதை விற்று குடும்பம் நடத்தினார்கள். பக்கத்து வீட்டில் இருந்த பப்பு வைத்தியன் சிகிச்சையில் கொடி கட்டிப் பறந்த காலம் அது. கொச்சு ராமன் கிழக்குப் பகுதியில் இருந்த இடத்தை வைத்தியனுக்கு விற்றான்.

பிரிவினை நடந்து முடிந்தபோது வைத்தியனுக்குத் தெரிந்தது அந்த சிவப்பு பலா தன் பகுதிக்குள் வந்துவிட்டது என்று. கொச்சு ராமனுக்கு இடி விழுந்தது போலானது. நிலத்தைப் பிரித்ததைப் பொருட்படுத்தாமல் கொச்சு ராமன் தன்னிச்சையாக அளவெடுத்தான். பலாவை தன் பக்கம் வரும்படி வேலி கட்டினான்.


வைத்தியன் மீண்டும் ஆளை விட்டு அளந்து மரம் தன் தோட்டத்திற்குள் இருப்பதாகக் காட்டினான். போட்டி என்று வந்தால் வைத்தியனிடம் மல்லு கட்ட கொச்சு ராமனால் முடியாது.

போலீஸ்காரர்களின் உதவியோடு பலா மரத்தை கொச்சு ராமனுடைய நிலத்தில் இருந்து வெளியில் ஆக்கி வேலி கட்டினார்கள்.

கொச்சு ராமனுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது.

“என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்” கொச்சு ராமன் சொன்னான்.

நடந்ததை வைத்தியனுடைய மனைவி கார்த்திகாயினிடம் விவரமாக சொன்னாள்.

அவள் எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டாள். மத்தியானத்துக்கு அப்புறம் கொச்சு ராமன் எங்கேயோ போவதை வைத்தியன் மனைவி பார்த்தாள்.

கார்த்திகாயினியை போய்ப்பார்க்களாம் என்று நினைத்து வைத்தியனுடைய மனைவி பலா மரம் இருந்த வேலிக்குப் பக்கத்தில் போனாள்.

மரத்துக்குப் பக்கத்தில் மண் படிந்து அந்த பழம் கிடந்தது.

அவள் நிறைய நேரம் அங்கேயே மன சங்கடத்தோடு நின்று கொண்டிருந்தாள்.

அந்த காட்சியில் இருந்து பல சம்பவங்களும் மனதிற்குள் இருந்து பொங்கி எழும்பி வந்தன. அந்தப் பலாவுக்கும் கொச்சு ராமனுக்கும் இடையில் நீண்டகாலமாக சொந்தம் இருந்தது. கடைசியில் அவள் பலா மரத்துக்கு அருகில் போய் “கார்த்திகாயினி” என்று சத்தம் போட்டுக் கூப்பிட்டாள்.

கார்த்திகாயினிக்கு காதில் விழவில்லை. அவள் மறுபடியும் கூப்பிட்டாள். மூன்று பனங்காய்களை கட்டிவைத்து கயிற்றால் இழுத்துக் கொண்டு வந்த மகன் “அம்மா. இங்க ஒருத்தரு உன்னைக் கூப்பிடறாங்க”என்று சொன்னான். அவள் வெளியில் வந்து பார்த்தாள்.

இரண்டு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

எதற்காக அவளை அழைத்தோம் என்பதே அவளுக்கு மறந்து போனது.

“அம்மா. அப்பா பலூன் வாங்கிட்டு வர போயிருக்காரா?”

“டேய். அந்தப் பக்கம் போய் விளையாடுடா”

“பலூன் வேணுமா?. வாங்கித் தரேன்”

வைத்தியனுடைய மனைவி சொன்னாள். “வேணாம். அப்பா வாங்கித் தருவாரு. இன்னிக்கு அப்பா வாங்கித் தரலைன்னா அப்பா என்னை அடிச்ச மாதிரி நான் என்னோட தங்கச்சிய உதைப்பேன்”

“எதுக்காக அடிச்சாரு?” வைத்தியனுடைய மனைவி கேட்டாள்.

“இந்தப் பலாப் பழத்தோட கொஞ்சம் சுளைங்கள அந்தப் பையனுங்க இங்கயே வச்சுட்டுப் போயிட்டாங்க. அத எடுக்கப் பாத்தப்ப ஒரு அடி! இன்னும் அடிச்ச வடுவே மாறல. அஞ்சு விரலும் நல்லாப் பதிஞ்சுடுச்சு”

அடிபட்ட இடத்தை அவன் காட்டிவிட்டு கையால் மூடிக் கொண்டு சொன்னான். இல்லாத புற்களை இருப்பதாக கார்த்திகாயினி காட்டினாள். அவள் அப்போது கத்திரிக்காய்ச் செடியைச் சுற்றியிருந்த புற்களைப் பறிப்பது போல நடித்தாள்.

முடிவில் நடுங்கிய உதடுகளோடு தரையில் இருந்து கண்களை எடுக்காமல் கேட்டாள்.

“எதுக்காகக் கூப்பிட்டீங்க?” வைத்தியனுடைய மனைவியால் அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கார்த்திகாயினி அவளை நேருக்கு நேராகப் பார்த்த போது கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்தோடியது.

அடுத்த நாள் காலை. இரண்டு வேலைக்காரர்கள் வந்து பலா மரத்தைச் சுற்றியிருந்த வேலியை கழற்றி மாற்றினார்கள். மரத்தை கொச்சு ராமனின் தோட்டத்திற்குள் வைத்து வேலி கட்டினார்கள். வேலை முடிந்தபோது வைத்தியனும் அவனுடைய மனைவியும் அங்கே வந்து சொன்னார்கள்.

“இனிம இந்தப் பலா மரம் உங்களோடதுதான் சரியா?”

வைத்தியனுடைய இந்த நல்ல மனதை ஊர்க்காரர்கள் புகழ்ந்தார்கள்.

ஆனால் பலா மரம் கிடைத்ததில் கொச்சு ராமனுக்கு ஒரு சந்தோஷமும் ஏற்படவில்லை. அவனுடைய முகத்தில் ஒரு உணர்ச்சியும் இல்லை. பலாவின் இலைகளில் சிவப்பு நிறம் படர ஆரம்பித்தது. இலைகள் கணக்கில்லாமல் உதிர ஆரம்பித்தன. இதைப் பார்க்க எல்லோரும் வந்து கூடினார்கள். ஒரு இலை விடாமல் எல்லா இலைகளும் பழுத்தன. இடைவேளை இல்லாமல் இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன.

பெரிய சத்தத்தோடு காய்கள் கீழே விழுந்தன. எல்லாம் முடிந்தது!


ஒரு ஒற்றை இலை கூட இல்லை. காய்ந்து போன கிளைகள் ஒடிந்த குச்சிகள் போல ஒடிந்து விழுந்தன. கொச்சு ராமனுக்கு எப்போதும் மௌனம்.

“வைத்தியன் நல்ல மனசோடு கொடுக்கல” சிலர் சொன்னார்கள்.

கொச்சு ராமனிடம் சிலர் அனுதாபம் காட்டினார்கள்.

“இந்தப் பலா மரத்த உங்களுக்குக் கொடுக்கற மட்டும் உண்ணாவிரதம் இருக்கப் போறதா வைத்தியனோட மனைவி பயமுறுத்தினாங்களாம். அதனாலதான் அந்த ஆள் இப்படிச் செஞ்சானாம். அவனுக்கு உங்களோட இருக்கற பகை தீரல. அவனுக்கு மந்திர தந்திரம் எல்லாம் தெரியும்” வேறு சிலர் சொன்னார்கள்.

கொச்சு ராமன் சொன்னான். “இதச் செஞ்சது அந்த ஆள் இல்ல. அவரு எனக்கு மரத்தக் கொடுக்கற அன்ன்னிக்கு முத நா ராத்திரி அந்தக் காரியம் நடந்துச்சு. அத செஞ்சது யாருன்னு எனக்குத் தெரியும்”

அவனுடைய குரல் தழுதழுத்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p94.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License