இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

அவளில் நான்…!

மலையாளம்: ரஜினி சேது

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்

காலம் பொறுக்கி வைத்திருக்கும் முதுமையென்னும் துணை. தலைமுடியை விட முகத்தில் லேசாக அது தெரிகிறது என்று உற்றுப் நோக்கி நிலைக்கண்ணாடி வந்தனாவைப் பார்த்து எப்போதும் கோபப்படுவது உண்டு. காலம் தன் முகத்தோடு காட்டிய பாரபட்சத்தை நினைத்து அவளும் லேசாகக் கோபப்படுவது உண்டு.

அடுப்பில் விறகுக்கட்டையை விட்டு விலகிச் சென்று பல்லைக் காட்டிச் சிரித்த புகையை வந்தனா கை விரலால் சிறிய சுழல்களாக்கி சிந்தனையில் மூழ்கினாள். புகையின் சுழலில் இறங்கி அம்மிணி அக்கா புகை ஊதி தனக்குக் கொடுத்த கஞ்சியின் ஞாபகம் அவளுக்கு வந்தது. ஸ்கூலின் கஞ்சி காய்ச்சும் அறையில் கொதிக்கும் கஞ்சியின் மீது மூடி வைத்திருக்கும் தட்டை நீக்கி, கழுத்தில் பெருகிய வியர்வையை அக்கா தன் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொள்ளும் நாட்களை நினைத்துப் பார்த்தாள் அவள்.

அப்போது அங்கு வரும் அம்மா “மகளே, அடுப்புலேர்ந்து பாத்திரத்த எடுத்து கஞ்சிய ஊத்தி வை” என்று சொல்லும் அன்பு ஒழுகும் குரலை ஞாபகப்படுத்திக் கொண்டாள். சீறியும் அடங்கியும் எரியும் விராட்டியின் நெருப்பை விறகுகளோடுச் சேர்த்து அடுப்பில் தள்ளி வைத்த நாட்கள். அது போல தீக்கணல்களில் வெந்து உருகும் பெண் ஜென்மமாக தானும் மாறிவிட்டோமா?

தேய்மானங்கள் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. ஷியாமின் கோபமான பேச்சுகள். பிடிவாதங்கள். வங்கி ஊழியனான ஷியாம் கிருஷ்னா வந்தனாவின் கணவன். ஒன்றாம் வகுப்பில் படிக்கும் மீனு கிருஷ்ணா அவர்களுடைய ஒரே மகள். திடீரென்று உள் அறையில் இருந்து ஓங்கி ஒலித்த ஒரு குரல். “வந்தனா!”

பொறுமை இழந்து பாய்ந்து வந்த அந்தக் குரலைக் கேட்டு பாத்திரத்தில் பரிமாற இருந்த புட்டு தட்டுக்குள் தெறித்து விழுந்தது. அடுக்களை ஆட்டத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு அரங்கிற்குள் ஓடினாள் அவள். இஸ்திரிப் பெட்டியோடு யுத்தம் அறிவித்து நெளிவு சுளிவுகளோடு இருந்த பேண்ட்டையும் ஷர்ட்டையும் இஸ்திரி போட்டு மடித்து படுக்கையின் மீது எடுத்து வைத்தாள்.

பாலிஷ் செய்து பளபளப்பாக்கிய ஷூவையும், கூடவே சாக்ஸையும் லிவ்விங் ரூமில் இருந்த குட்டி டீபாய் மீது வைத்தாள். தயாராக வைத்திருந்த பகல் சாப்பாட்டையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து வைக்கப் பையோடு சமையலறையை நோக்கி மறுபடியும் ஓடினாள். செய்து வைத்திருந்த புட்டையும் அதற்குத் தொட்டுக் கொள்ளத் தயார் செய்திருந்த ஐட்டத்தையும் இன்னொரு தட்டில் பொரித்த பப்படமுமாக சாப்பாட்டு மேசையை நோக்கி ஓடினாள்.

அப்போது மீனு ஸ்கர்ட்டின் இடுப்புப் பகுதி சுளிவுகளில் கஷ்டப்பட்டு பெல்ட்டை மாட்டியபடி அறையில் இருந்து வெளியே வந்தாள். அவள் ஓடிச் சென்று மீனுவின் பெல்ட்டின் கண் பகுதியில் கம்பியை சொருகிவிட மீனு கேட்டாள். “என்ன அம்மா? இன்னும் நீ டிரஸ் மாத்தலயா? இன்னிக்குதானே அப்பா அம்மாவோட சேந்து அருங்காட்சியகத்த சுத்திப் பாக்க வரச் சொல்லியிருக்காங்க. இல்லயா? நீங்க ரெண்டு பேரும் கூட வரணும். அம்மா. நீ அத மறந்து போயிட்ட. அப்பா. நீ எப்பவோ குளிச்சிட்ட. ஓடி வா”டிரஸையும் எடுத்துக்கொண்டு அவள் பாத்ரூமுக்கு ஓடும் போது ஷியாமுக்கு கொண்டு போவதற்கு வைத்திருந்த லஞ்ச் கேரியரை கொடுக்க மறந்து போனதை நினைத்து சங்கடப்பட்டாள்.


“மறதியின் திலகம்” ஷியாம் அவளுக்கு சூட்டியிருந்த பட்டப் பெயர் அப்போது அவள் நினைவுக்கு வந்தது. பொறுமையில்லாமல் அடிக்கப்படும் காரின் ஹாரன் சத்தத்தைக் கேட்டு அவசர அவசரமாகக் கேட்டின் கதவை இழுத்து மூடிவிட்டு காரில் ஏறினால். அப்போது ஷையாமின் முகம் இறுக்கமாக இருந்தது.

விருப்பப்பட்ட புத்தகங்களையும் வார இதழ்களையும் ஆசை ஆசையாக எடுத்துக் கையில் வைக்கும்போது, அருகில் நடந்து வந்த ஷியாமின் உதட்டில் ஒரு உணர்வு ஒளிந்திருந்தது. அப்போது அவளுடைய மனதின் ஆழத்தில் பரிகாசத்தின் கூர் முனைகள் குத்திக் கிழித்தன.

இரத்தம் உறைந்தது போல வந்தனாவுக்குத் தோன்றியது.

அருங்காட்சியகத்தில் இருந்து வரும்போது ஷியாம் கேட்டான். “மியூசியம் எப்படி இருந்துச்சு? பிடிச்சிருந்ததா?”. “கடந்த காலத்த மந்திரம் போல ஜெபிக்கற இங்க இருக்கற ஒவ்வொன்னும் சரித்திரத்துல ஒரு மெல்லிய பாலம் கட்டறது போல இருந்துச்சு இல்லைங்கலா?”

வந்தனா மீனுவுடைய கையைப் பிடித்து இறங்கியபடியே சொன்னாள்.

“ஹோ! இலக்கியமாக்கும்… கதையையும் கவிதையையும் ஒன்னும் எழுதித் தொலைக்காதே! அதத் தாங்கறதுக்கு எனக்கு இதுக்கு மேல தெம்பு இல்ல” குத்திக் கிழித்த வார்த்தைகளுக்கு அகம்படியாக கை கூப்பி வெடித்துச் சிதறிய சிரிப்போடு இருந்த ஷியாமுக்கு முன்னால் வந்தனா நிசப்தமானாள்.

புடவையின் முந்தானையை எடுத்து இடுப்பில் சுற்றிக் கீழே பார்த்தபடி படிகளில் இறங்கி முன்னோக்கி நடந்தாள். காரின் கண்ணாடிப் படலம் போல ஒட்டிக் கொண்டிருந்த மௌனத்தை உடைத்துக் கொண்டு மீனுவுடைய குரல் உயர்ந்தது. “அம்மா. நாம் அந்த மியூசியத்துல பாத்த பேசற கிளிய வாங்கினா என்ன?”

“வேணாம் மகளே. நமக்கு எதுக்கு பேசற கிளி? அம்மா கிளி இல்லயா வீட்டுல?” ஷியாம் காரை ஓட்டியபடி புன்சிரிப்போடு வந்தனாவைக் கிண்டல் செய்தான்.

“அம்மா என்ன கிளியம்மாவா?”. மீனு ஷியாமிடம் பரிதவித்தபடிகேட்டாள். எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்கும்படி பேசி நடந்துகொள்ளும் ஒரு கிளிதான் தான் என்று வந்தனாவுக்குத் தோன்றியது.

கார் ஓட்டுவதில் கவனமாக இருந்த ஷியாமிடம் ஒரு புத்தகக் கடைக்கு முன்னால் கொஞ்ச நேரம் நிறுத்தச் சொல்லி வந்தனான் லேசான தயக்கத்தோடு கேட்டாள்.


“என்ன? புதுசா இருக்கு? வழக்கத்துக்கு மாறா ஒரு புத்தகக் கடைய நோக்கி ஒரு யாத்திரை? வீட்டுல இருக்கற நியூஸ் பேப்பருங்களயே இன்னும் படிச்சு முடிச்சபாடில்ல. இப்போ ஒரு வாசிப்புக்காரி புதுசா முளச்சு வந்திருக்கறாரு!”கிண்டல் செய்தான் என்றாலும் ஷியாம் ஒரு புத்தகக் கடைக்கு முன்னால் வண்டியை நிறுத்தினான். அது வந்தனாவின் மனதில் பதட்டத்தை ஏற்படுத்தியது. காரில் இருந்து அவசரமாக ஓடி இறங்கி புத்தகக் கடையில் கிளிப் செய்து வைத்திருந்த வாரப் பத்திரிகையைப் பிரித்து ஆவலோடு பக்கங்களைப் புரட்டிப் பார்த்தாள்.

சூரிய காயத்ரியுடைய “அவளில் நான்” என்ற கதையின் ஊடே வந்தனாவின் விரல்கள் மெல்ல ஓடின. கண்களில் ஆனந்தப் பரவசத்தின் நீரோட்டம் உண்டானது. “என்ன இவ்வளவு சந்தோஷம்?” காருக்குள் ஏறிய வந்தனாவை ஷியாம் கேட்டான். “இதுல என்னோட தோழியோட ஒரு கதை வந்திருக்கு. சூரிய காயத்ரியோடது”

உள்ளுக்குள் புன்னகையின் மணிகள் ஒலித்தன. வந்தனா கிளியைப் போலப் பேசினாள். அவள் சொன்னது அவளுக்கே கேட்காத சத்தத்தில் அவள் பேசினாள்.

“நீ அந்த வாரப் பத்திரிகைய நினைச்சு கனவு கண்டுகிட்டிருக்கியா?” ஷியாமுடைய குரலைக் கேட்டதும் அவள் அந்த வார இதழை நெஞ்சோடு சேர்த்து வைத்துக்கொண்டு காரில் இருந்து இறங்கினாள்.

அடுத்த நாள் இரவு. மீனு தூங்கிய பிறகு ஷியாமின் விரல்கள் வந்தனாவின் மேனியைத் தழுவின. ஒரு ஜென்மத்தின் ஆயுள் உள்ள வருடலோடு அவன் அவளுடைய தலையை தடவிவிட்டான். வந்தனா இரவின் நிசப்தத்தில் ஊர்ந்து வரும் நீல நாகத்திற்காக தன்னுடைய உடலைப் பக்குவப்படுத்தினாள்.

வழக்கத்துக்கு மாறாக ஷியாம் அவளைத் தன் மார்பில் கிடத்திக் கொண்டான். அவளுடைய கன்னங்களிலும் உதடுகளிலும் சூடு பகிர்ந்தான்.

“வந்தனா. சாரி. இந்த நாகரீகம் இல்லாத பயலோட பாரம் உனக்குக் கஷ்டமாயிடுச்சா?” அவள் சட்டென்று அவனை விட்டு விலகினாள். தாலியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு சொன்னாள்.

“ஒருபோதும் இல்ல. நீங்க என்ன இப்படியெல்லாம் பேசறீங்க?”

“நீ பறக்க அடங்காத ஆசையோட காத்துக்கிட்டு இருந்த ஆகாயத்துக்குப் பறக்க உனக்கு நான் ஒரு இறகைக் கூட அன்பளிப்பா தந்தது இல்ல. இல்ல இல்ல. அதப் பத்தி நான் யோசிக்கவே இல்ல. அதுதான் உண்மை. சுயநலத்தோட இருக்கற வெறும் ஒரு புருஷனா இருந்தேன் நான். சாரி வந்தனா”

இருண்ட இரவின் வட்டட்துக்குள் பளபளக்கும் ஷியாமின் கண்களைப் பார்த்து நம்பமுடியாமல் அவள் அவனுடைய மார்பின் மீது சாய்ந்து அணைத்து கட்டிக்கொண்டாள். “என்ன ஆச்சு உங்களுக்கு?”


“ஒன்னுமில்ல. உன்னோட தோழி சூரிய காயத்ரியோட கதை. இன்னிக்கு நான் அத வாசிச்சேன். உண்மையில அந்தக் கதையில மைதிலி நீயும் ஜிதேந்திரா நாந்தான்னும் எனக்குத் தோணிச்சு. மனசுக்குள்ள ஆழத்துல இறங்கற ஏதோ ஒரு மந்திர சக்தி அவங்களோட எழுத்துகளுக்கு இருக்கு. நம்பளோட சேர்ந்து நின்னு நம்பள்ல ஒரு ஆளா கதை சொல்ற அவங்களோட பாங்கு. நதி மாதிரி ஓடற எழுத்துங்க. புருஷங்கறவன் வீட்ட உருக்கி பொண்ணோட உடம்ப அடிமைப்படுதறவன்ல இல்ல. எவன் ஒருத்தன் பொண்ணோட இதயத்த அன்பால அடிமைப்படுத்தறவந்தான் உண்மையான ஆம்பள! அவந்தான் முதுகெலும்புஇருக்கற புருஷன்” சூரிய காயத்ரியோட கதையில நாயகனான ஜிதேந்திரங்கிட்ட கதாநாயகி மைதிலி சொன்ன வார்த்தைகள் ஷியாமின் நெஞ்சில் அன்பு கீதம் பாடியது.

வந்தனா அன்போடு ஷியாமின் மார்பில் இடைவெளிவிட்டு வளர்ந்திருந்த உரோமங்களில் விரல்களை ஓடவிட்டு புன்னகைத்தாள். “அப்பறம் பேங்க்ல எல்லாரும் சூரிய காயத்ரியோட ஆராதகருங்களாக்கும். முக்கியமான சர்ச்சை செஞ்ச விஷயம் என்ன தெரியுமா? இந்த வாரத்துல பிரசுரமான இந்த கதைதான் அது. அப்படிதான் கேஷியர் சாரிகாவோட கையில இருந்த இந்தப் பத்திரிகைய நான் வாங்கி படிச்சேன். ஆனா… ஒருத்தருக்குக் கூட எழுத்தாளரப் பத்தி ஒன்னுமே தெரியல. ஒரு போட்டோ கூட இல்ல. வார இதழ நடத்தறவங்களுக்கே தெரியாது போல இருக்கு. எப்பவாச்சும்தான் நல்ல கதைங்க அதுல வருது”

வந்தனா படுக்கையை விட்டு எழுந்தாள். ஷியாமின் தலைமுடியை வருடிவிட்டாள். “உன்னோட தோழிதானே சூரிய காயதிரி? அவள உனக்குத் தெரியும்னு நான் யாருகிட்டயும் சொல்லல. அதுல ஒரு சங்கதி இருக்கு. காலையில சொல்றேன்” வந்தனா ஷியாமின் கையின் மீது படுத்துக்கொண்டு அமைதியாக தூங்கினாள்.

உப்பு நீரில் நனையாமல், ஆலாபனை சொல்லி தாலாட்டு பாடாமல் அவள் தூங்க தலையணை அருகிலேயே காவலாக இருந்தது. கிருஷ்ணா ஆடிட்டோரியம். கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆடிட்டோரியத்தில் வங்கி ஊழியர்களின் மன மகிழ் மன்றத்தின் ஆண்டு விழா நடக்கிறது. செயலாளரான ஷியாம் மேடையில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தான்.

கரு நீல பட்டுப் புடவை. மயில் பச்சை ப்ளவுஸ். அணிந்துகொண்டு அழகியான வந்தனா. மீனுவை மடியில் உட்கார வைத்துக் கொண்டிருந்தாள்.

அரங்கின் முதல் வரிசையில் அவள் இருந்தாள். “வந்தனா. அவ இதுவரைக்கும் வரல தெரியுமா? இதோ நிகழ்ச்சிங்க ஆரம்பிக்கப் போகுது. கார அனுப்பறேன்னு சொன்னேன் இல்லயா?”. ஷியாம் வந்தனாவுக்கு அருகில் வந்து குரல் தாழ்த்தி சொன்னான். “அவ வருவா. ஒருநாளைக்கும் அவ என்னை ஏமாத்தமாட்டா. அவளுக்கு என்னையும் எனக்கு அவளயும் நல்லாத் தெரியும்”

“நீ என்ன சொல்ற? இதோ இப்ப நிகழ்ச்சிங்க ஆரம்பிச்சுடும்”

“ஷியாம். அவள மேடைக்கு அழைக்கறப்ப அவ வந்திருப்பா”


“ஓ! அவ வந்துட்டா இல்லயா? நீ என்ன கிண்டல் செய்யற இல்லயா? அப்படிதானே? சரி. சரி. நடக்கட்டும். உன்னோட காரியம் ரொம்ப நல்லா இருக்கு. இன்னிக்கு பந்து உன்னோட கோர்ட்டுல இருக்கு இல்லயா?”. ஷியாம் மேடையை நோக்கி ஓடினான். சிறிது நேரத்தில் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கான அறிவிப்பு முழங்கியது.

“இன்னிக்கு நம்பளோட ஆண்டு விழாவ ஆரம்பிச்சு வைக்கறவங்களும் முக்கிய விருந்தாளி. குறஞ்ச காலத்துலயே வாசிக்கறவங்களோட இதயத்துல தன்னோட பச்சையான எழுத்துங்களோட சக்தியால கொடி கட்டிப் பறக்கற ஸ்ரீமதி சூரிய காயத்ரிய மேடைக்கு அழைக்கறோம்”

அரங்கம் முழுவதும் அமைதி! யாரும் மேடைக்கு வரவில்லை. ஷியாமின் பலவீனமான கண்கள் சுழன்று வந்தனாவின் மீது பதிந்தன. வந்தனா மீனுவை மடியில் இருந்து இறக்கி நாற்காலியில் உட்காரவைத்துவிட்டு தோள் பையில் இருந்து ஒரு பேப்பரை எடுத்துக் கொண்டு லேசான பதட்டத்தோடு நழுவிக்கொண்டிருந்த தைரியத்தைப் பிடித்து நிறுத்தி ஷியாமின் முகத்தைப் பார்க்காமல் மேடையில் இருந்த போடியத்தில் மைக்கின் முன்னால் போய் நின்றாள்.

நடுங்கும் கரங்களால் பேப்பரை எடுத்தாள். மெல்லிய குரலில் வாசித்தாள்.

“அவளில் நாந்தான் சூரிய காயத்ரி! அவளில் பிறவியெடுத்த பொண்ணுதான் சூரிய காயத்ரி! அது நாந்தான்! அவளில் நாந்தான் சூரிய காயத்ரி!”

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p98.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License