தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்றபோது, மதுரை மண்டலத்தை நிர்வகித்த விசுவநாத நாயக்கர். விஜயநகரப் பேரரசின் படை மானிய முறையில் அமைந்த நாயங்கர நிர்வாக முறையைத் தழுவிப் பாளையப்பட்டு எனும் புதிய முறையை ஏற்படுத்தினார்.
"பாலாமு” என்கிற தெலுங்கு மொழிச் சொல்லிலிருந்து பாளையம் என்ற சொல் உருவானது. பாலாமு என்றால் படை முகாம் என்று பொருள்படும். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இப்பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன் பாளையக்காரர் எனப்பட்டார்.
பாளையக்காரர்கள் தங்களுடைய நிர்வாகத்துக்குள் அடங்கிய பகுதியில் ஓரளவு சுயமான அதிகாரத்துடன் கூடிய ஆட்சியதிகாரம் உடையவ்ர்களாகச் செயல்பட்டனர். பாளையப்பட்டுகளுக்கெனத் தனியான நிர்வாக அமைப்பும் இருந்தது. இந்த அமைப்பிலே பாளையக்காரர்களின் கீழ் அமைச்சராகவும், படைத் தளபதியாகவும் செயற்படக்கூடிய “தளவாய்” ஒருவரும், பாளையப்பட்டுக்கு மேலுள்ள அரசு தொடர்பான விடயங்களைக் கவனித்துக் கொள்ள “தானாபதி” என்பவரும் இருந்தனர்.
1. அம்மையநாயக்கனூர்
2. அத்திப்பட்டி
3. அழகாபுரி
4. ஆய்க்குடி
5. ஆற்றங்கரை
6. இளசை
7. இரசக்கயனூர்
8. இலக்கயனூர்
9. இடையக் கோட்டை
10. இராமகரி
11. உதயப்பனூர்
12. ஊற்றுமலை
13. ஊர்க்காடு
14. எட்டையாபுரம்
15. எழுமலை
16. ஏழாயிரம் பண்ணை
17. கடலூர்
18. கல்போது
19. கன்னிவாடி
20. கம்பம்
21. கண்டமநாயக்கனூர்
22. கவுண்டன்பட்டி
23. கடம்பூர்
24. காமநாயக்கனூர்
25. காடல்குடி
26. காசையுர்
27. குமார வாடி
28. குளத்தூர்
29. குருவிகுளம்
30. கூடலூர்
31. கொல்லப்பட்டி
32. கொல்லங்கொண்டம்
33. கோலார் பட்டி
34. கோட்டையூர்
35. கோம்பை
36. சந்தையுர்
37. சக்கந்தி
38. சமுத்தூர்
39. சேத்தூர்
40. சிவகிரி
41. சிங்கம்பட்டி
42. சுரண்டை
43. சொக்கம்பட்டி
44. தலைவன்கோட்டை
45. தேவாரம்
46. தொட்டப்பநாயக்கனூர்
47. தோகைமலை
48. தும்பிச்சிநாயக்கனூர்
49. படமாத்தூர்
50. பாஞ்சாலங்குறிச்சி
51. பாவாலி
52. பெரியகுளம்
53. போடிநாயக்கனூர்
54. ரோசல்பட்டி
55. வடகரை
56. வாராப்பூர்
57. விருப்பாட்சி
58. வெள்ளிக்குன்றம்
59. விரமலை
60. நத்தம்
61. நடுவக்குறிச்சி
62. நாகலாபுரம்
63. நிலக்கோட்டை
64. நெற்கட்டும் செவல்
65. மணியாச்சி
66. மருங்காபுரி
67. மன்னார்கோட்டை
68. மலைப்பட்டி
69. மருதவானையுர்
70. முதுவார்பட்டி
71. முல்லையுர்
72. மேல்மாந்தை