இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Tidbits
குறுந்தகவல்

பசுமை பட்டாசு எப்போது வரும்?


பட்டாசு என்பது சிறிய அளவில் கொண்டாட்டங்களை அறிவிக்கும் பொருட்டு வெடிக்கப்படும் வெடிகளாகும். இவை ஒளி தருவதை விட, பெரும் ஒலியை உண்டாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன. வெடிப்பொருளை காகிதச் சுருள்களில் சுற்றித் திரியுடன் இவை தயாரிக்கப்படுகின்றன. எத்தனை அழுத்தமாக இவை சுற்றப்பட்டுள்ளதோ, அதற்கேற்ப கூடுதலாக ஒலி எழுப்பும். பட்டாசுகளும் மத்தாப்புகளும் முதலில் சீனாவில் தோன்றியிருக்கின்றன. இந்தியாவில் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழில் தமிழ்நாட்டின் சிவகாசி நகரில் அதிக அளவில் இருக்கிறது.

பட்டாசின் கதை

சீனாவில் சமையலின் போது பயன்பட்ட உப்பு (பொட்டாசியம் நைட்ரேட் சேர்மம்) நெருப்பில் தவறி விழுந்துள்ளது. அப்போது எழுந்த திடீர் தீச்சுவாளைதான் பட்டாசிற்கு தேவையான கரித்தூளை கண்டறிய உதவியது. துவக்கத்தில் தீச்சுவாளையை உருவாக்கக் கரியும் கந்தகமும் பயன்பட்டது. இந்த கலவையை மூங்கில் குழாயில் அடைத்து வைத்து பட்டாசாகப் பயன்படுத்தினர். இந்த தற்செயலான கண்டு பிடிப்பு 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நிகழ்ந்துள்ளது. நன்கு வெடிக்கும் பட்டாசுகள் சாங் பேரரசர் காலத்தில் (960-1279) லிடியான் என்னும் துறவியினால் உருவாக்கப்பட்டது. இவர் லியு யாங் நகரின் அருகில் வாழ்ந்து வந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மூங்கிலில் கரித்தூள் அடைத்த இந்த பட்டாசுகள் தீய சக்திகளை அப்புறப்படுத்த வெடிக்கப்பட்டன. இந்தப் பழங்கால பட்டாசில் சத்தம் மட்டுமே வந்தது. சீனாவில் பட்டாசு குறித்த ஆவணம் 7ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. பட்டாசு என்பதைக் குறிப்பிடும் பயர் ஒர்க் என்பதன் மூலம் சப்பானிய சொல்லான ஹனாபி என்பது. இதன் பொருள் நெருப்பு மலர் ஆகும். உலகில் மிகுதியாக பட்டாசு தயாரிக்கும் நாடு சீனா உலக பட்டாசுகளில் 90 விழுக்காடு சீனாவில் தயாரிக்கப்படுகிறது. ஸ்பெயினிலும் பட்டாசு தயாரிப்பில் அதிகமானவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.

சீனர்கள் மூங்கில்களையும், மரத்துண்டுகளையும், வெடி மருந்தையும் கொண்டு வானில் சீறிப்பாய்ந்து சென்று வெடித்த வாணங்களை உருவாக்கினர். 1279ல் சீனாவில் ஊடுருவிய மங்கோலியர்கள் இந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டனர். சீனாவுக்கு வந்து சென்ற ஆராய்ச்சியாளர்கள் இதை அறிந்து கொண்டு தங்கள் நாடுகளில் பரப்பினார்கள். 7ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் ராக்கெட்டுகளைச் சீன அம்புகள் என்றே குறிப்பிட்டுள்ளனர். 1240ஆம் ஆண்டில் அரேபியர்கள் வெடிமருந்துகள் குறித்து அறிய முயன்றுள்ளனர். ஹசன் அல் ரம்மா என்பவர் சீனர்களிடமிருந்து வெடிமருந்துகள் பற்றிய தொழில் நுட்பத்தை அறிந்துகொண்டு பட்டாசுகள் குறித்து எழுதியுள்ளார். இத்தாலிய பயனி மார்கோகோலோ இந்தத் தொழில் நுட்பத்தை ஐரோப்பாவுக்கு கொண்டு சென்றார் என்றும், சிலுவைப் போர்களைத் தொடர்ந்து 1300களில் ஐரோப்பாவில் பட்டாசுகள் அறிமுகமாயின என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1400-களில் இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் பட்டாசு உற்பத்தி துவங்கியது. பிரெஞ்சுப் பொறியியளாளரான அமேதி பிரென்சுவாஃபிரெசியர் எழுதிய டிரீட்ஸ் ஆன் ஃபயர் ஒர்க்ஸ் என்னும் புத்தகம் 1706 இல் வெளியிடப்பட்டது. அதன்பின் பட்டாசு தயாரிப்பவர்கள் இந்தப் புத்தகத்தைப் பின்பற்றியேத் தயாரித்தனர். தற்போது நாம் பயன்படுத்தும் வண்ணமயமான பட்டாசுகள் தயாரிப்பு 1830ல் துவங்கியது. பல வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி, இத்தாலியர்கள் வண்ணமயமான பட்டாசுகளை தயாரித்தனர். ஏப்ரல் 18 ஐ பட்டாசு கண்டுபிடிக்கப்பட்ட நாளாகச் சீனாவில் கொண்டாடுகின்றனர். 1922இல் கல்கத்தாவில் சப்பானை சேர்ந்த சிலர் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இந்தியாவிலேயே கல்கத்தாவில் மட்டுமே தீப்பெட்டி தயாரிப்பு தொழில் நடைபெற்று வந்தது. அப்போது சிவகாசியிலிருந்து பி. ஐயன், ஏ. சண்முகம் ஆகியோர் தீப்பெட்டித் தொழிலை கற்றுக்கொள்ள கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் இவர்கள் சிவகாசி திரும்பி 1928ல் தீப்பெட்டித் தொழிற்சாலையை உருவாக்கினர். அதன் பின்னரே சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தொடங்கியது. தற்போது, இந்தியாவில் 90 விழுக்காடு பட்டாசு தயாரிப்பு சிவகாசியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.



உச்ச நீதிமன்றம் தடை

தீபாவளியின் போது வெடிக்கப்படும் பட்டாசுகளினால், அதிகப்படியான சத்தங்கள் மற்றும் காற்றில் மாசு ஏற்படுகிறது என்றும், எனவே, பட்டாசு உற்பத்திக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த இந்திய உச்சநீதிமன்றம் இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனையை தடை செய்யமுடியாது என்று தெரிவித்ததுடன், தீபாவளியின்போது இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்றும், அதிகப்படியான சத்தம் மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளின் தயாரிப்பு மற்றும் விற்பனைக்குத் தடை விதித்ததுடன், குறைவாக மாசுபடுத்தும் மேம்படுத்தப்பட்ட புதிய வகை பட்டாசுகளாக, 'பசுமை பட்டாசு'களை மட்டுமே இனிமேல் தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது. அதேபோல், தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யாமல் காவல்துறையினர் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது. (2018)

பசுமை பட்டாசு

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் செயல்பட்டு வரும் தேசியச் சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) பசுமை பட்டாசு தயாரிப்புத் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து கண்டுபிடித்திருக்கிறது. இந்தப் பசுமை பட்டாசுகள், சாதாரண பட்டாசுகளைப் போல இருந்தாலும், வெடிக்கும்போது சப்தம் எழுப்பும், ஆனால் வெளியிடும் மாசு குறைவாக இருக்கும். தற்போதுள்ள பட்டாசுகளுடன் ஒப்பிட்டால், பசுமை பட்டாசுகள் 40 முதல் 50 % குறைவான நச்சு வாயுவை வெளியிடும். இந்தப் பட்டாசுகள் முழுமையான பாதுகாப்பானது என்றோ, பாதிப்பை ஏற்படுத்தாது என்றோ சொல்ல முடியாது என்று இந்நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சாதனா தெரிவித்திருக்கிறார். இந்தப் பசுமை பட்டாசுகள் நான்கு வகையாக உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

1. தண்ணீரை உருவாக்கும் பட்டாசுகள்

இந்த வகை பசுமை பட்டாசுகள் வெடித்த பிறகு கரியாக மாறாமல் நீர்த்துளிகளாக உருமாறிவிடும். அதில் சல்ஃபர் மற்றும் நைட்ரஜன் வாயுக்கள் கரைந்துவிடும். இந்த வகை பட்டாசுக்கு 'வாட்டர் ரிலீசர்' என்று இந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. மாசைக் குறைக்கும் முக்கியமான காரணியாகத் தண்ணீர் கருதப்படுகிறது.

2. கந்தக மற்றும் நைட்ரஜன் வாயுக்களைக் குறைவாக வெளியிடுகிறவை

இந்த வகைப் பசுமைப் பட்டாசுகளுக்கு ஸ்டார் (STAR) பசுமை பட்டாசு என்று இந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. அதாவது Safe Thermite Cracker என்பதன் சுருக்கமாக STAR என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகை பட்டாசில், ஆக்சிஜனேற்றம் செய்யும் திறன் கொண்ட பொருட்கள் (Oxidizing Agent) பயன்படுத்தப்படுகிறது. இந்த வகைப் பசுமைப் பட்டாசுகளை வெடிக்கும் போது, கந்தகம் மற்றும் நைட்ரஜன் குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்குச் சிறப்பு வகை வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.



3. அலுமினியம் குறைவாக பயன்படுத்தப்படுகிறவை

சாதாரண பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது, இந்த வகைப் பட்டாசில் 50 முதல் 60 சதவிகிதத்திற்கும் குறைவான அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதற்கு SAFAL (Safe Minimal Aluminum) என்ற பெயரிடப்பட்டுள்ளது.

4. அரோமா பட்டாசு

இந்த வகைப் பட்டாசுகளை வெடிக்கும்போது, தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் குறைவாக வெளியாவதோடு, நறுமணமும் வெளியாகும்.

தற்போதைய நிலையில், இந்தப் பசுமை பட்டாசுகள் குறித்த செய்முறை விளக்கங்களையும், பட்டாசுகளின் தரம் மற்றும் மாசு குறைவு போன்ற அம்சங்களையும் அரசிடம் நிரூபித்துச் சான்றிதழ் வாங்க வேண்டும். அதன் பிறகே, சந்தை விற்பனைக்கு அனுமதிக்க முடியும் என்பதால், இந்தப் பசுமை பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு, அடுத்த ஆண்டில் சந்தைக்கு வருமா?

(பசுமை பட்டாசு தகவல்: பிபிசி தமிழ் 26-10-2018)

தொகுப்பு: சித்ரா பலவேசம், திருநெல்வேலி.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tidbits/p204.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License
<