கைகேயி இராமனை 14 ஆண்டுகள் வனவாசம் போக வேண்டும் என்று கூறுகிறாள், அதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?
தற்போது இருந்து வரும் கலியுகத்தில் தந்தையும், மகனும் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் 12 ஆண்டுகள் பிரிந்திருந்தால் 12 ஆண்டுகள் கழிந்த பின்பு தந்தை, மகன் என்கிற உறவு முறிந்து விடும் என்கிறது இந்து மத சாஸ்திரம். இந்தக் கருத்து துவாபர யுகத்தில் 13 ஆண்டுகளாகவும், திரேதாயுகத்தில் 14 ஆண்டுகளாகவும், கிருத யுகத்தில் 15 ஆண்டுகளாகவும் இருந்தன.
இராமாயணம் நடந்த காலம் திரேதா யுகம் என்பதால், தசரதனும், இராமனும் 14 ஆண்டுகள் சந்திக்காமல் இருந்தால் தந்தை, மகன் உறவு இல்லாமல் போய்விடும். இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் கழித்து வந்தால், இராமனுக்கு அரசாளும் பட்டம் கிடைக்காது, பரதனே அரசாள்வான் என்ற உள்நோக்கத்துடன்தான் கைகேயி அந்த வரத்தைக் கேட்டாள்.