பறவை என்றால் அது `கீச் கீச்'என்று சத்தம் போடும் அல்லது கத்தும். ஆனால் நாய் மாதிரி குரைக்குமா...? அப்படியொரு பறவையும் இருக்கிறது. அந்தப் பறவையின் பெயர் ஆன்ட்பிட்டா. வாத்து இனத்தைச் சேர்ந்த இந்தப் பறவை நாய் மாதிரி குரைக்கிறது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் 1998-ம் ஆண்டுதான் இந்தப் பறவை இருப்பதேக் கண்டுபிடிக்கப்பட்டது. பறவையின ஆராய்ச்சியாளர் ராபர்ட் எஸ். ரிக்லே, ஈகுவடார் நாட்டின் ஆன்டிஸ் மலைத் தொடரில் இந்தப் பறவை இருப்பதைக் கண்டறிந்தார். இப்போது இந்த இனப் பறவைகள் மொத்தம் 30 எனும் அளவிலேயே இருக்கின்றன.
குரைப்பது என்கிற போது இன்னொரு தகவலும் உண்டு. நாய்கள் குரைக்கும் எனபது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் குரைக்காத நாய்களும் இருக்கின்றன. பாசென்ஜி, ஸ்மாலிஷ் இன நாய்கள் குரைப்பதில்லை. இதே போல் ஆப்பிரிக்காக் கண்டத்தில் இருக்கும் காட்டு நாய்களும் குரைப்பதில்லை.