* 1991-ஆம் வருடம் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தனி நாடாக உருவான ரஷ்யா, உலகின் மிகப் பெரிய நிலப்பரப்பை கொண்ட நாடாகும். இந்த உலகில் இருக்கும் 10-ல் ஒரு பங்கு இடத்தை ரஷ்யா வைத்துள்ளது.
* ரசிய நாட்டின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக ரஷ்ய மொழி இருந்தாலும், நாடு முழுவதும் 27 வெவ்வேறு மொழிகளைப் பேசக்கூடிய மக்கள் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள்.
* உலகிற்கு முதன் முதலில் வோட்காவை அறிமுகப்படுத்திய நாடு ரஷ்யா ஆகும். இந்த மதுபானம் 14-ஆம் நூற்றாண்டில் இருந்தே மக்களிடம் புழக்கத்தில் இருந்தது என்றும் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, இது மற்ற நாடுகளுக்குப் பரவியது என்றும் வரலாறுகள் குறிப்பிடுகின்றன.
* இந்த உலகில் அதிக மதுக்களை உட்கொள்ளும் தரவரிசையில் ரசியாவிற்கு 4-வது இடம் எனலாம். ரசியாவில் வசிக்கும் ஒரு சாதாரணக் குடிமகன் ஆண்டுக்கு 18 லிட்டர் ஆல்கஹால் எடுத்துக் கொள்கிறார். இது பரிந்துரைக்கப்பட்டதை விட 2 மடங்கு அதிகம். இதன் காரணமாகவே ஆண்டுக்குக் கிட்டதட்ட 40 ஆயிரம் ரஷ்யர்கள் மதுபானம் உட்கொள்வதால் உயிரிழக்கின்றனர்.
* ரசியாவில் 15 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். ரசியாவில் வசிக்கும் ஆண்களைவிட பெண்கள் அதிகம் எனலாம். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், 1 கோடி பெண்கள் அங்கு அதிகமாக உள்ளனர். ரசியாவில் ஆண்களுக்குப் பற்றக்குறை இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுவது, இரண்டாம் உலகப் போரின் போது ரசியப் படைகளைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்கள் கொல்லப்பட்டதுதான்.
* உலகில் முதல் முறையாக 1957-ஆம் ஆண்டு, உலகின் முதல் செயற்கைக் கோளை பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தியது. அது மட்டுமல்லாமல், 1961 ஆம் ஆண்டு யூரி காகரின் என்ற நபரை முதல் முறையாக விண்வெளிக்கு அனுப்பிச் சாதனை படைத்தது. நிலவை முதல் முறையாகப் படமெடுத்தது ரஷ்யாதான்.
* ரசியாவில் இருக்கக் கூடிய ஆண்கள், பெண்களுக்கு ஒரு போதும் ரோஜாப் பூக்களைக் கொடுப்பதில்லை. இது அந்த நாட்டில் துரதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. அந்நாட்டில், ரோஜாக்கள் இறுதி சடங்குகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.