* உலகின் மிகப் பெரிய பல்லி இனமான கோமோடோ பல்லி, மனிதனைப் போல் இரு மடங்கு பெரியவை.
* பச்சோந்தியின் நாக்கு அதன் உடலின் நீளத்தைப் போல் இருமடங்கு பெரியது.
* இரு தடவை சுதந்திரம் பெற்ற நாடு சைப்ரஸ்.
* காந்தியடிகள் இரு கைகளாலும் எழுதும் ஆற்றல் படைத்தவர்.
* லியானர்டோ டாவின்சி இரு கைகளாலும் வரையும் ஆற்றல் மிக்கவர்.
* மிகப் பெரிய கண் வங்கி உள்ள நாடு இலங்கை.
* நத்தைக்கு அதன் கொம்பில் கண் உள்ளது.
* உடலில் ரத்த ஓட்டம் இல்லாத பகுதி கண்ணின் கருவிழி.
* இரண்டு கண்களில் இரண்டு வெவ்வேறு காட்சிகளைக் காணும் ஒரே உயிரினம் ஓணான்.
* விலாங்கு மீன் நாயைவிட பல மடங்கு மோப்ப சக்தி கொண்டது.
* பாலைவிட தேன் ஆறு மடங்கு அதிக சத்துள்ளது.
* கட்டைவிரல் நகத்தைவிட நடுவிரல் நகமே வேகமாக வளர்கிறது.
* மனிதர்களுக்கு குளிர்காலத்தை விட கோடைக்காலத்தில் ஞாபக சக்தி அதிகமாக இருக்கும்.
* இமயமலையைவிட வயதில் மூத்த மலை சென்னையில் உள்ள பரங்கி மலை.
* ஒட்டகத்தை விட எலிகளே அதிக நாள்கள் நீரில்லாமல் உயிர் வாழ்பவை.
* மனிதனின் பார்வையை விட ஆந்தையின் பார்வைத் திறன் 82 மடங்கு அதிகம்.
* சாகும்வரை 24 மணி நேரமும் கரையான்கள் வேலை செய்கின்றன.
* ஈ, உணவின் மீது நடந்து கால்கள் மூலமே ருசியை உணர்கிறது.
* எவரெஸ்ட் சிகரத்தின் பழைய பெயர் சோமோலெங்மா. 1863 முதல் எவரெஸ்ட் என்ற பெயர் வந்தது.
* பிரபஞ்சம் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.
* சூரியன் 5 ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றியது.
* இந்தியாவில் 7092 இரயில் நிலையங்கள் உள்ளன.
* இந்தியாவிலேயே கல்கத்தாவில்மட்டும் சுரங்க ரயில் இயக்கப்படுகிறது.
* சென்னை நகரின் பரப்பளவு 231 ச.கி.மீ.
* ஆசியாக் கண்டத்தின் மிகப்பழமையான பத்திரிக்கை மும்பை சமாச்சார்.
* இந்தியாவில் முதல் நினைவு நாணயம் நேருஜிக்கு 1964ல் வெளியிடப்பட்டது.
* டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை இளவயதில் எடுத்தவர் டெண்டுல்கர்.
* ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற கதாப்பாத்திரம் தோன்றி121 ஆண்டுகள் ஆகின்றன.
* உலகின் முதல் கருத்தடை மாத்திரையின் பெயர் ஈனோவிட்.
* உலகிலேயே மிக அதிகமாக சைக்கிள் ஓட்டுபவர்கள் சீனர்கள்.
* உலகிலேயே மிகச்சிறிய குரங்கு இனத்தின் பெயர் ‘அலொசிபஸ்டிரிகொடிஸ்’. எண்பது கிராம் எடையுள்ள இந்த குரங்கினம் மடகாஸ்கர் பகுதியில் காணப்படுகிறது.
* உலகில் மின்னல் தாக்கி அதிகம் இறக்கும் மக்கள் அமெரிக்கர்கள்.
* இறக்கையில்லாத பூச்சிகளுக்கு ஆப்டாஸ் பூச்சிகள் என்று பெயர்.
* தமிழ் தேசிய மொழியாக உள்ள நாடுகள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்.
* மாணவர்களுக்கு இரு கைகளாலும் எழுதப் பயிற்சி தரும் நாடு ஜப்பான்.
* இரு துறைகளில் நோபல் பரிசு பெற்ற ஒரே விஞ்ஞானி மேடம் கியூரிதான்.
* கிளி தன் அலகுகளில் மேல் அலகை மட்டுமே அசைக்கமுடியும்.
* ஆக்டோபஸ் தலையில்தான் இதயம், வயிறு, கல்லீரல், சிறுநீரகம் போன்ற எல்லா முக்கிய உறுப்புகளும் உள்ளன.
* அழிக்கும் ரப்பர் கெட்டியானால் மண்ணெண்ணெயில் 2 நாட்கள் ஊறப்போட்டு சிறிது உலர்த்தினால் மெதுவாகி நன்றாக அழிக்கும்.
* உலகில் சுமார் 2700 மொழிகள் பேசப்படுகின்றன. ஸ்பெயின் நாட்டின் வடமேற்கிலும் பிரான்ஸ் நாட்டின் தென் மேற்கிலும் பேசப்படும் பேஸ்கியூ (Basque) என்ற மொழியே கடினமான மொழி என்று மொழி வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
* இந்திய அஞ்சல் துறையின் "ஒட்டக அஞ்சல்' அலுவலகம் ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்படுகிறது.
* உலகின் பெரிய கடல் ஏரி காஸ்பியன் கடல்.
* ஐ.நா சபையின் முதல் செயலர் டிபிக்யூலி.
* இந்து பல்கலைக்கழகத்தை அமைத்தவர் மாண்டவ் சிங் மாளவியா.
* புலியே தாக்க பயப்படும் விலங்கு, காட்டு எருமை.
* வாலில்லாத பூனைகளின் பெயர் மாங்க்ஸ் (Manx)
* ராட்ஷச பாண்டாவின் முக்கிய உணவு மூங்கில் கிளைகள்
* முள்ளம்பன்றி விரும்பி சாப்பிடும் உணவு உதிர்ந்த மான் கொம்புகள்
* உலகின் மக பெரிய கங்காரு, சிவப்பு கங்காரு
* எதிரிகள் பயமுறுத்தும் போது மயங்கிவிழும் விலங்கு, அப்போசம் எனும் ஒரு வகையான எலி
* ட்ரே என்னும் கூண்டுகளில் வாழ்பவை அணீல்கள்
* மிகக் குறைவான ஆயுட்காலத்தை உடையது ஈ
* மிக மெதுவாக இயங்கும் பாலூட்டி, தேவாங்கு
* எலும்புக் கூடு இல்லாத விலங்கு ஜெல்லி மீன்
* பூனையின் கண்பார்வை மனிதனை விட எட்டு மடங்கு கூர்மையானது.
* ஒட்டகம் 1 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாகக் கண்டுபிடித்துவிடும்.
* கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.
* நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை தூக்கம் கொள்ள முடியும்.
* மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்.
* இரு தேசிய கொடிகளைக் கொண்ட நாடு ஆப்கானிஸ்தான்.
* யானையின் முன்னிருக்கும் இரு கோரைப் பற்களே தந்தங்களாகும்.
* நெருப்புக் கோழிக்கு இரு விரல்கள் மட்டுமே இருக்கும்.
* சுறா மீன்களுக்கு இரு கருப்பைகள் உள்ளன.