மார்கழிக் கோலங்கள் - 24
பூகோளமே கொண்டாடும் பூக்கோலம் மார்கழி
மனதின் தூறலோடு மழையின் சாரல் பிரசவிக்கும் காலம்
இறைமை பூரணம் கொள்ளும் இயற்கையின் தோரணம்
வண்டுகளின் ரீங்காரம் வசந்தத்தின் வருகையை பறைசாற்றும்
வாசல்கள் ஆயிரம் கதைகளோடு உற்சாகம் கொள்ளும்
அதிகாலை பனியில் குளிரோடு ஓவியம் குதூகல காவியம்
பண்டிகை தினங்களில் பளபளக்கும் தார்சாலை
பண்பாட்டை பறைசாற்றும் பூஞ்சோலை கோலங்கள்
புள்ளிகள் கோடுகள் ஆகும் கோடுகள் கோலங்கள் ஆகும்
கோலங்கள் ஜாலங்கள் செய்யும் ஒவ்வொரு நாளும்
தேசத்தை காதலித்த பெண்கள் விடுதலை நாளில்
நேசத்தை வண்ணமயமான ரங்கோலியிலே காட்டுவது
எப்போது தொடங்கியிருக்கும்
இப்போது எல்லாம் அன்பின் பூசணி
அப்பாட்மண்டில் பூக்கத் துடிக்கிறது சாணம் இன்றி
வளைவுகளில் வாழ்க்கை சூட்சுமம் சொல்லித் தருவாள் அம்மா
வளைந்து வளைந்து கோலம் பழகுவாள் அக்கா
எதிர் வீட்டு நிர்மலாவின் கோலத்தை மிதிக்காமல் கடந்து போகும்
லாவகத்தை காதல் என்றா நினைப்பது
சொத்து சண்டை வருவதற்கு முன்பு அத்தை
போட்ட மாக்கோலம் அடுத்த தெரு வரைக்கும் அழகு சேர்க்கும்
திருமணமான புதிதில் கைலியோடு நான் பழகிய
ஜிவாராசிகளின் பசியை சிந்தித்து பச்சரியில்
கோலமிட்டவள்தான் ஆறுநாளாய் காணமல் யரோ
ஒரு கூட்டத்தால்அலங்கோலமானால் வழக்கம் போல...
- யாழ் எஸ் ராகவன், இராயப்பன்பட்டி.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.