என்னைக் கேட்டால்...?
என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன்?
என்னுள் விளையும்
எண்ணங்கள் என்பேன்!
என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன்?
விண்ணில் தோன்றும்
விந்தைகள் என்பேன்!
என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன்?
கற்றுக் கொண்ட
பாடங்கள் என்பேன்!
என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன்?
என்னுள் என்னைத்
தொலைத்தேன் என்பேன்!
என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன்?
என்னை எரித்த
எண்ணெய் என்பேன்!
என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன்?
காலில் தைத்த முட்கள்
பயணத்தின் துணை என்பேன்
என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன்?
கவியரசரின் முன்னே
கால் தூசு என்பேன்!
என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன்?
அன்பு மனங்களின் பாசம்
என் எழுத்தின் வாசம் என்பேன்!
என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன்?
என்னை அறிந்திடும்
தேடலின் பாதை என்பேன்!
என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன்?
எல்லாம் தமிழினுள்
ஐக்கியம் என்பேன்!
- சக்தி சக்திதாசன், லண்டன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.