குறுங்கவிதைகள்
தீமை நினைக்காத
தியாக உள்ளம்
அன்னை !
*****
காணிக்கை கேட்காத
கடவுள்
அம்மா !
*****
வசமான வாய்ப்பின்
பெயரோ
அதிர்ஷ்டம் !
*****
அமரருக்கு மட்டுமல்ல
வாழ்பவருக்கும் தேவை
அடக்கம் !
*****
அன்று அதிகாரத்தால்
இன்று அன்பால்
அலுவலக இயக்கம் !
*****
அஞ்சுவான்
தன் நிழல் கண்டும்
கோழை !
*****
கற்பிக்கப்பட்ட
கற்பனை
தலை விதி !
*****
தந்தை கணவன்
பெயர் இணைப்பு
ஆணாதிக்க அங்கீகாரம் !
*****
முன்னேற்றத்தின்
பகைவன்
ஓய்வு !
*****
நல வழி காட்டும்
தீய வழி தடுக்கும்
மனசாட்சி !
*****
உடலுக்குத்தான்
எண்ணத்திற்கு என்றுமில்லை
முதுமை !
*****
சாவதற்கு யோசிக்கும்
நேரத்தில்
வாழ வழி தேடு !
*****
ஒரே ஒரு முறைதான்
இன்னொரு முறை இல்லை
வாழ்வாங்கு வாழு !
*****
வா வாழ் வாகை
மூன்றும் அடக்கம்
வாழ்க்கை !
*****
சிரித்துக் கொண்டே இரு
கலங்காதே கற்பிக்கும்
மலர்கள் !
*****
ஒரு நாள் வாழ்க்கை
ஓயாத புன்னகை
மலர்கள்!
- கவிஞர் இரா.இரவி, மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.