எதிர்காலம் எங்களுடையது என்போம்!
வரும்காலம் வசந்தகாலம்
எதிர்காலம் எங்களுடையது என்போம்!
எண்ணத்தில் ஏற்றம்கொண்டோம்
எட்டாத உலகினையும் எட்டிப்பிடிப்போம் !
பாருக்குள்ளே பட்டம் ஏற்போம்
பாமரனுக்குச் சொல்லிக் கொடுப்போம் !
இலட்சிய இளைஞர்கள் நாங்கள்
நெஞ்சினில் விவேகம் கொண்டோம் !
இந்திய மாணவர்களின் முதல்வராய்
தேசத்தின் துடிப்பாய்ப் பிறந்தோம் !
காந்தியக் கொள்கை ஏற்றோம்.
கலாம் அறிவைப் பெறுகின்றோம்!
பெரியாரின் செயல்களைக் கண்டோம்
புவிக்குள் பகுத்தறிவாளராய்ப் புகுந்துள்ளோம்!
கோடானு கோடிமரங்கள் நடுவோம்
நீரின் மேலாண்மையை உயர்த்துவோம்!
இயற்கையால் இவ்வுலகை நிலைநிறுத்துவோம்
புதியதொரு தேசத்தை மீட்டெடுப்போம் !
மின்னாற்றல் வளம் கண்டோம்
குக்கிராமங்களிலும் பேரொளியைத் தருவோம் !
மானிடத் தத்துவங்களை உணர்ந்தோம்.
புதிய தலைமுறையாகச் சரித்திரம் படைப்போம் !
பிறப்பு என்பது ஒருமுறை என அறிந்தோம்
இறப்பு சொல்லும் பலதலைமுறையெனக் கண்டோம் !
தோல்வி என்பதைப் பலமுறை உணர்ந்தோம்
வெற்றி என்பதைத் தேடித் தொடர்ந்து செல்கிறோம்!
உம்முடைய போதனையை ஏற்றோம்
உயிர்த்தெழும் ஆற்றல் பெற்றோம் !
- சி. இரகு, திருச்சி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.