ஏன் செய்யவில்லை?
இந்தப் பக்கம் யாரும் போக வேண்டாம்
இங்கு பயம் இருக்கிறது
இந்தப் பக்கமாகத்தான் அடிக்கடி
தோல்வி வந்து தலைசாய்த்துப் படுத்துறங்கும்
இந்த வழியில் விரக்தியும் வேதனையும்
வீடு கட்டி வாழ்கிறது
இது பாதாளம்
பழைய வரலாறு
யாரும் இதை தேர்வு செய்வதில்லை
இதைப் பற்றிக் கேள்விபட்டபோதே
இந்தப் பாதையைக் காணாமல் கூட
நடுங்கியவர்கள் உண்டு
வேண்டாம், திரும்பிப் போய் விடு
மீண்டும் மீண்டும் சத்தம் போடுகிறீர்களே
ஒருமுறையாவது, வாருங்கள்
இதை வெல்லுங்கள்
உங்களால் முடியுமென்று தோள்தட்டி
நம்பிக்கையளித்ததுண்டா ?
- வாசகன் வெங்கடேசன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.