காத்திருப்போம்...!
தோகைமயிலின் குஞ்சுகளும்
தோற்றத்தில்
கோழிக்குஞ்சுகள் போலிருக்கும்...
வேறுபாடு தெரிவதில்லை
பாய்தோடும்
பரியின் குட்டிக்கும்,
பொதி சுமக்கும்
கழுதையின் குட்டிக்கும்...
வளர்ந்த பின்தான்
வருகின்றன பேதங்கள் -
அழகாய், அல்லதாய்...
ஆனாலும்
ஆபத்தானவன் மனிதன்,
பிள்ளையாயிருக்கையில் வராத
கள்ளமெல்லாம்
வந்துவிடுகிறது வளர்ந்ததும்...
தமக்குள்ளே
பேதங்கள் காட்டித்
தன்னினத்தையே அழிக்கும்
ஒரே மிருகம் -
மனிதன்தான்...
மாறுவானா,
மாறவேண்டும்...
காத்திருப்போம்...!
- செண்பக ஜெகதீசன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.