வீராப்புப் பேச்சுக்காரி
வம்பு பேசி சண்டைக்கு இழுத்திடுவாளிவள்
வீராப்புப் பேச்சுக்காரி சின்ன வயசுப்பெண்இவள்
இவள் பேச்சினில் ஊரேப் பயந்திடச் செய்திடுவாள்
கண்டிப்புப் பேச்சினிலும் கருணைக் கொண்டவளிவள்
மாமன் பெத்த ஒரே குலக்கொழுந்தா வளிவள்
மகிழம்பூ மேனி வாசம் கொண்டவளிவள்
செங்கரும்பு நிறத்தழகியானவளே இவள்
செல்லக்குட்டி வீராப்புப் பேசுவதில் வல்லவளிவள்
கண்களில் கோபக்கனல் தெறித்திடச்செய்வாளிவள்
குளிர்த்தென்றல் இவளது மனசில் வீசிடவேச் செய்யும்
நியாயம் கேட்பதில் வல்லவளிவள் நல்லவளிவள்
நலிந்தோருக்கு உதவிகள் பல முன் நின்றுசெய்வா ளிவள்
நம்பி வந்தவர்களை நயமுடன் என்றுமே உபசரிப்பாள்
நயமிகுப் பேச்சினாலே பிறரைப் பேச்சில் வென்றிடு வாள்
மனசிலே பட்டத்தைத் தடையின்றிக் கொட்டிடுவாளிவள்
ஊருக்குள் நியாயத்தராசு என்ற பெயருடையாள்
- ஆர். எஸ். பாலகுமார், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.