சொல்லாத காதல் கதை!

மகள் லாவண்யாவை
தினமும் இரவில்
கதைச் சொல்லித்தூங்க
வைக்க வழக்கப் படுத்தியது
நான் தான்.
என் கதையின் நாயகி
எப்போதுமே
நிர்மலா தான்.
அது குறித்து எதுவுமே
இன்றுவரை கேட்டதில்லை
லாவண்யா.
நிர்மலா
என் கல்லூரி காதலி
என்பதை
உங்களுக்கு நான்
தெரிவிக்கும் முன்பே
இதை
மதுமிதா அறிவாள்.
நிர்மலாவின்
நெருங்கிய தோழி
மதுமிதா.
மதுமிதா தான்
லாவண்யாவின் அம்மா
என்பதால்
என் மனைவி மதுமிதா
என்பதில்
உங்களுக்குச் சிறிதும்
ஐய்யம் எழாது.
நிர்மலாவின் கதையை
பாதி கூட
கடந்திருக்க மாட்டேன்.
அதற்குள் உறங்கிப்போவாள்
லாவண்யா.
இப்படியே
பல ஆண்டுகள் உருண்டோடிய
நிலையில் தான்
லாவண்யா
தினேஷின் கதை சொல்லி
என்னைத் தூங்கவைக்க
முற்பட்டாள்.
அவளைப் போலத்தான்
நானும்
பாதி கதையைக் கூட
சொல்லியிருக்க மாட்டாள்
அதற்குள்
உறங்கிடுவேன் நான்.
தினேஷ்
லாவண்யா கதையின்
நாயகன் ஏன் என்பது
எனக்கு
விளங்காமல் போனாலும்
உங்களுக்கு நிச்சயம்
விளங்கியிருக்கும்.
லாவண்யாவிற்கு
நிரஞ்சனை மாப்பிள்ளை
பார்க்க போன போதுதான்
நிர்மலாவின் கதையின்
முடிவையும்
தினேஷின் காதலின்
முடிவையும்
நிரஞ்சன் சொல்லாமலேயே
நாங்களிருவருமே
புரிந்து கொண்ட நிலையில்
ஏமாளியாய் நிற்கிறான்
நிரஞ்சன்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.