இராம. வயிரவன்
சிங்கப்பூரில் கணிப்பொறித் துறைப் பணியிலிருக்கும் இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் 2007-2009 ஆண்டுகளுக்கான செயலவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவருடைய சிறுகதைகள் மற்றும் கவிதைகள் இந்திய, சிங்கப்பூர் மற்றும் மலேசிய தமிழ் இதழ்களிலும், இணைய இதழ்களிலும் நிறைய வெளியாகி இருக்கிறது. இவருடைய சிறுகதைகளில் மூன்று சிறுகதைகள் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் பரிசைப் பெற்றிருக்கிறது. பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் போன்றவற்றில் பங்கேற்றிருக்கும் இவர் சிங்கப்பூர் வானொலியான ஒலி 96.8 நடத்தியுள்ள கவியரங்கத்தில் பல முறை பங்கேற்றிருக்கிறார்.
கதை - சிறுகதை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.