அசோகா அல்வா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கார்ன் பிளவர் மாவு – 1/2 கப்
2. சக்கரை – 1 & 1/2 கப்
3. முந்திரிப்பருப்புன் - 10 எண்ணம்
4. உலர் திராட்சை - 10 எண்ணம்
5. பாதாம் பருப்பு - 4 எண்ணம்
6. பிஸ்தா பருப்பு - 2 எண்ணம்
7. ஏலக்காய் – 1 எண்ணம்
8. நெய் – 1/4 கப்
செய்முறை:
1. கார்ன் பிளவர் ஒன்றரை கப் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
2. அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, பிசுக்கு பதம் வரும் வரை கொதிக்கவிடவும்.
3. அதில் கரைத்த மாவை ஊற்றி, கை விடாமல் கிளறவும்.
4. மாவு வெந்து, சிறிது கட்டியாவது போலத் தெரியும், ஆனால் பின்பு ஒரேச் சீராக வெந்து பளபளப்பாகும்.
5. இந்த நிலையில், முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, உலர்திராட்சை மற்றும் ஏலக்காய் சேர்த்துக் கிளறவும்.
6. நெய்யை ஒரு சமயத்தில் ஒரு ஒரு தேக்கரண்டி யாக 1/4 கப் நெய்யயும் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும்.
7. அடியில் சிறிது வெள்ளை பூத்தாற்போல் வரும் பொழுது நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆற விடவும்.
8. ஆறிய பின், துண்டுகளாகப் போட்டுப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.