இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

வீட்டுக்கான சில ஜோதிடக் குறிப்புகள்


*நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களின் சக்திகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் வாஸ்து சாஸ்திரம் காலம், நாடு, மதத்திற்கு அப்பாற்பட்டது.

*தென்மேற்கு (கன்னிமூலை) உயர்ந்தும், ஈசான்யம் தாழ்ந்தும் இருக்க வேண்டும் என்பது வாஸ்துவின் அடிப்படை விதியாகும்.

*மேற்குத் திசை உயரமாகவும், கிழக்குத் திசை பள்ளமாகவும், இருந்தால் செல்வந்தராக்கிவிடும்.

*அதிகமான சக்தியைப் பெற ஈசானியம் தாழ்ந்திருக்க வேண்டும். ஈசானியம் வளர்ந்திருக்க வேண்டும்.

*அதிகமான உயிர்ச்சக்தி பெற தென்மேற்கு (கன்னி மூலை) உயந்திருக்க வேண்டும்.

*தெற்கு உயரமாகவும், வடக்கு பள்ளமாகவும், இருந்தால் செல்வ வளர்ச்சியைக் கொடுக்கும்.

*மனைகளில் சதுர வடிவம் கொண்டவை கோயில்களுக்கு ஏற்றவை, செவ்வகம், மற்ற வடிவ மனைகள் இதர வகையான கட்டிடங்களுக்கு ஏற்றவை.

*மனையின் ஈசானிய மூலை தவிர, மற்ற மூலைகள் வளர்ச்சியடையக் கூடாது. கன்னிமூலை மட்டத்திற்கு இருப்பது சரியான அமைப்பாகும்.

*கிழக்கு மேடாகவும், மேற்கு பள்ளமாகவும் இருந்தால் ஏழையாக்கிவிடும், தரித்திரம் ஏற்படும்.

*வடக்கு மேடாகவும், தெற்கு பள்ளமாகவும் இருந்தால், வீட்டுத் தலைவனுக்கு மிகத் தீயதைக் கொடுக்கும். கண்டங்கள் ஏற்படும்.

*ஈசான்யம் உயரமாகவும், கன்னி மூலை பள்ளமாகவும் இருந்தால் பல துயரங்களில் ஆழ்த்திவிடும். சந்ததிகளுக்குக் கண்டங்கள் உண்டாகும்.

*அக்னி மூலை மேடாகவும், வாயு மூலை பள்ளமாகவும் இருந்தால், நல்லவை நடக்கும். பெண்களுக்கு ஆரோக்கியம் ஏற்படும்.

*வாயு மூலை மேடாகவும், அக்னி மூலை பள்ளமாகவும் இருந்தால், அவ்வீட்டில் தீ விபத்து, திருட்டு போன்றவை ஏற்படும்.

*கன்னி மூலை உயரமாகவும், ஈசான்யம் பள்ளமாகவும் இருந்தால், மிக்க செல்வ வளர்ச்சியும், புகழும் உண்டாகும். ஆரோக்கியம் கூடும்.

*கிழக்கும், ஈசான்யமும் உயரமாகவும், மேற்கும், தென் மேற்கும் பள்ளமாகவும் இருந்தால், சந்ததி விருத்தி கிடையாது. இருந்தாலும் நோய்களில் ஆழ்த்திவிடும்.

*மழைத் தண்ணீர் மனையிலிருந்து ஈசானியம், தெற்கு அக்கினேயம், மேற்கு வாயுவியம் வழியாக வெளியேற வேண்டும்.

*தெற்குப் பார்த்த மனைகள் வியாபார ஸ்தலங்களுக்கு ஏற்றவை.



*தொழிலுக்கு முக்கியமானது கிழக்குத் திசை. எனவே, கிழக்கில் காலியிடம் இருந்தால், நாம் செய்யும் தொழில் வியாபாரம் நல்ல முறையில் இருக்கும். கிழக்கினை அடைத்து விடக்கூடாது.

*மனையின் வடக்கு, கிழக்குப் பக்க சுற்றுச் சுவர்கள் உயரம் குறைவாக இருக்க வேண்டும்.

*கட்டிடத்தின் தெற்கு, மேற்குப் பக்கம் குறைந்த காலி இடமும், வடக்கு கிழக்குப் பக்கம் அதிக காலி இடமும் விட வேண்டும். இது தான் நல்ல ஸ்தான பலம் கொண்ட அமைப்பாகும்.

*கிணறு, நிலத்தடித் தண்ணீர்த் தொட்டி மனையின் ஈசானிய பாகத்தில் இருக்க வேண்டும்.

*வீட்டின் ஈசான்ய மூலை (வடகிழக்கு) ஈரமாக எப்போதும் இருக்க வேண்டும். கிணறு, போர், தொட்டி போன்றவை ஈசான்யத்தில் அமைக்க வேண்டும். அதில் தண்ணீர் சிறிதளவாவது இருக்க வேண்டும். அப்போது தான் வீட்டில் பணப்புழக்கம் அதாவது பணம் இருந்துகொண்டே இருக்கும்.

*தெற்குப் பக்கம் கிணறு துர்மரணத்தை உண்டாக்கும்.

*மேற்குப் பக்கம் கிணறு குடும்ப கெளரவத்தைப் பாதிக்கும்.

*கன்னிமூலை கிணறு உடல் நலனைப் பாதிக்கும்.

*தண்ணீர் தொட்டியின் மேல் நடக்கக் கூடாது.

*வீட்டிற்கு அருகில் கோவில்கள் 150 அடிக்கு மேல் இருந்தால், தோஷங்கள் இல்லை. கோபுரத்தின் நிழல் வீட்டின் மேல் விழக்கூடாது.

*மனையில் கிழக்கு, வடக்கு பக்க காலி இடத்தில் உயரமாக வளரக் கூடிய மரங்களை வளர்க்கக் கூடாது. சுற்றுச்சுவரின் உயரத்திற்கு மேல் செடிகள் இருக்கக் கூடாது.

*வீட்டின் அருகில் வளர்க்க வேண்டிய மரங்கள், மாமரம், வாழை, வேப்பமரம், எலுமிச்சை, மல்லிகைப் பூச்செடி, போன்றவை, இவை மனதிற்கு உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும், விஷக் காற்றுகளைத் தடுத்து உதவி செய்யும்.

*வில்வமரம், அகத்திச் செடி, மிளகு, இலுப்பை மரம், அவுரி, பனைமரம், எருக்கு, எட்டிமரம் போன்றவை வளர்க்கக் கூடாது. லட்சுமி கடாட்சத்தைக் குறைத்துவிடும்.

*மனையில் மேற்கு, தெற்குப் பக்க காலி இடத்தில் உயரமாக வளரக்கூடிய மரங்களை வளர்க்கலாம்.

*தெற்குப் பக்கம் அதிக காலி இடம் பொருளாதார நெருக்கடியை உண்டாக்கும்.

*மேற்குப் பக்கம் அதிக காலியிடம் குடும்ப கெளரவத்தைப் பாதிக்கும்.

*வீட்டிற்கு மேற்கு, தெற்கில் காலியிடம் அதிகம் இருந்தால், கடன் தொல்லைகள் அதிகமேற்படும். அதே போன்று கிழக்கும், வடக்கும் மற்ற திசைகளைவிட உயரமாக இருந்தாலும், கடன் தொல்லை குழந்தைகள் பிரச்சினை, தொழிலில் முடக்கம் உண்டாகும்.

*கிழக்குப் பக்கம் அதிக காலி இடம் விட வேண்டும். கிழக்குப் பக்கம் காலி இடம் விடாமல் எல்லையை ஒட்டி மேற்கு சரிவான கூரை அமைத்துக் கட்டிடம் கட்டினால், அந்த வீட்டிலுள்ள பெண்கள் இளம் வயதில் விதவையாவார்கள். தொழிற்கூடமானால், தொழில் பாதிக்கப்பட்டு, தொழிற்சாலை மூடப்படும்.

*வடக்குப் பக்கம் அதிக காலியிடம் விட வேண்டும். வடக்குப் பக்கம் காலி இடம் விடாமல், எல்லையை ஒட்டித் தெற்கு சரிவான கூரை அமைத்துக் கட்டிடம் கட்டினால், அந்த வீடு பெண்கள் பலம் மிகவும் குறைந்து, விளக்கு ஏற்றும் பெண் இல்லாத வீடாக அமையும். தொழிற்கூடமானால், தொழிலாளர், நிர்வாகி உறவு கெட்டு, தொழில் நஷ்டமடையும்.

*கன்னி மூலையில் கட்டிடம் கட்டினால், தெற்கு மேற்குப் பக்க காலி இடத்தின் தீய தன்மையைக் குறைக்கும்.

*மனையின் ஈசானிய மூலையில் எந்தவிதமான கட்டிடமும் இருக்கக் கூடாது. ஈசானியம் மூடப்பட்டுவிடும்.

*ஈசான்ய திசையில் உள்ள காம்பவுண்ட் சுவரினை எக்காரணம் கொண்டும் வளைக்கக் கூடாது. அது குழந்தைகளுக்குக் கண்டத்தை உண்டாக்கும். தலைவனின் வளர்ச்சியைப் பாதிக்கும்.

*வெளிப்பக்கச் சமையலறை, அக்கினி, வாயு மூலையில் இருக்கலாம்.

*சுற்றுச் சுவரில், ஒரு பக்கத்தில் மூன்று வாசல் வைக்கக்கூடாது.

*மனை எந்தப் பக்கம் பார்க்கிறதோ, அந்தப் பக்கம் தான் தலைவாயிலை வைக்க வேண்டும்.

*மனையின் கிழக்கு அல்லது வடக்குப் பக்கம் கூடுதல் இடம் சேர்க்கலாம்.

*தெற்கு, மேற்குப் பக்கம் கூடுதல் இடம் சேர்த்தால் தீமையுண்டாகும்.

*ஆற்றின் தென்புறம் வீடு இருந்தால் அமோக வாழ்வு உண்டாகும்.

*வடக்கு, கிழக்குப் பக்க முன்பகுதி கூரையைவிடத் தாழ்வாக இருக்க வேண்டும்.

*கிழக்கு, வடக்குப் பக்கம் அதிகளவு சன்னல்கள் வைக்க வேண்டும்.

*மேற்கு, தெற்குப் பக்கம் குறைந்த அளவு சன்னல்கள் மட்டும் இருந்தால் போதும்.



*கன்னி மூலையில் சன்னல்கள் வைக்கக் கூடாது. எந்த அறையிலும் கன்னிமூலையிலிருந்து 3 அடி தள்ளி சன்னல் வைக்க வேண்டும்.

*கதவு, சன்னல்களின் எண்ணிக்கை மொத்தம் இரட்டைப்படையில் இருக்க வேண்டும்.

*கான்கிரீட் தூண்கள், உத்திரங்கள் இரட்டைப் படையில் இருக்க வேண்டும்.

*ஈசானிய அறையில் வடக்கு அல்லது கிழக்குப் பக்கம் அவசியம் கதவு வைக்க வேண்டும்.

*பூசையறை வீட்டின் பிரம்மஸ்தானத்தில் இருப்பது மிகவும் நல்லது.

*பூசை அறையின் மேல் மாடியில் கழிவறை இருக்கக் கூடாது.

*மாடிக் கட்டிடத்தில், தரை தளத்தில்தான் பூசை அறை இருக்க வேண்டும்.

*படுக்கையறை வழியாக பூசையறைக்குச் செல்லக் கூடாது.

*படுக்கையறை வீட்டின் தெற்கு, மேற்கு, கன்னிமூலை இருக்க வேண்டும்.

*தெற்குப் பக்கம் படுக்கையறை நல்ல உடல்நலத்தைக் கொடுக்கும்.

*கன்னிமூலையில் படுக்கையறை பெரியவர்களுக்கு ஏற்றது.

*மேற்குப் பக்கம் படுக்கையறை நன்மக்கட்பேறை உண்டாக்கும்.

*வாயுவியத்தில் படுக்கையறை மன சஞ்சலத்தை உண்டாக்கும்.

*ஈசானியத்தில் படுக்கையறை ஊனமுற்ற குழந்தைகளை உருவாக்கும்.

*கிழக்குப் பக்கம் படுக்கையறை பெண்குழந்தைகளை உருவாக்கும்.

*அக்கினியில் படுக்கையறை பெண்களின் உடல்நலனைப் பாதிக்கும்.

*படுக்கையறையில் தெற்கு, மேற்கு சார்ந்தாற் போல கட்டில்களைப் போட வேண்டும்.

*வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது.

*கூரை உத்திரத்துக்குக் கீழ் படுக்கக் கூடாது.

*வீட்டின் அக்கினி, வாயு மூலையில் கழிவறை அமைத்துக் கொள்ளலாம்.

*ஈசானியம், கன்னிமூலை கண்டிப்பாக கழிவறை இருக்கக் கூடாது.

*கழிவறையில் தெற்கு அல்லது வடக்குப் பார்த்து அமர்ந்து தான் உபயோகப்படுத்த வேண்டும்.

*கழிவறையில் கிழக்குப் பார்த்து அமர்ந்தால் கடவுள் நிந்தனை உண்டாகும்.

*குளியலறையில் கிழக்குப் பார்த்துத் தான் குளிக்க வேண்டும்.

*சமையல் அறை அக்கினியில்தான் இருக்க வேண்டும்.

*கிழக்கு, தெற்குப் பார்த்த வீட்டில் வாயுவியத்தில் சமையல் அறை இருக்கலாம்.

*சமைக்கும்போது, கிழக்குப் பார்த்துத்தான் சமைக்க வேண்டும்.

*சமையலறையில் பாத்திரம் கழுவும் தொட்டி, ஈசானிய மூலையில் வைக்க வேண்டும்.

*கன்னிமூலையில் துளசிச் செடி பெண்கள் வாழ்வை வசந்தமாக்கும்.



*சமையல் அறையில் அலமாரி மேற்கு, தெற்கு சுவர்களை ஒட்டி அமைக்க வேண்டும்.

*சமையலறை கதவுக்கு நேர் எதிரில் அடுப்பு வைக்கக் கூடாது.

*தெற்குப் பார்த்து சமையல் செய்வது தற்கொலை உணர்வைத் தூண்டும்.

*மேற்குப் பார்த்து சமையல் செய்வது தீ விபத்தை உண்டாக்கும்.

*வடக்குப் பார்த்து சமையல் செய்வது துர்மரணத்தை உண்டாக்கும்.

*படிப்பறை கிழக்குப் பக்கம் இருக்க வேண்டும்.

*அலமாரி கிழக்கு அல்லது வடக்குப் பார்த்து இருக்க வேண்டும்.

*பூசையறையில் அலமாரி பணம் வருவதும் போவதுமாக இருக்கும். பணம் தங்காது.

*அக்கினியில் அலமாரி பணம் அக்கினியில் கரைவதைப் போல செலவாகும்.

*வாயுவியத்தில் அலமாரி அமைத்தால், வரவுக்கு அதிகமான செலவை உண்டாக்கும்.

*மேல்நிலைத் தண்ணீர் தொட்டி மேற்கு, தெற்கு சார்ந்தாற்போல் இருக்க வேண்டும்.

*ஈசானியத்தில் கண்டிப்பாக மேல்நிலைத் தண்ணீர்த் தொட்டி அமைக்கக் கூடாது.குடும்ப கெளரவத்தைக் கெடுக்கும்.

*பிரம்மஸ்தானத்தில் மாடிப்படி மற்றும் மேல்நிலைத் தண்ணீர்த்தொட்டி குடும்ப கெளரவத்தைப் பாதிக்கும்.

*கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வீட்டின் தரையைவிடத் தாழ்வாக இருக்க வேண்டும்.

*ஈசானியத்தில் மாடிப்படிகளை அமைக்கக் கூடாது.

*மாடிப்படிக்குக் கீழ் கடவுள் படங்களை வைத்து வழிபடக்கூடாது.

*தந்தையின் வீட்டைப் பாகப் பிரிவினை செய்யும்போது, மூத்தவர்களுக்கு மேற்குப் பாகத்தையோ, அல்லது தெற்குப் பகுதியையோ கொடுக்க வேண்டும். இளையவர்களுக்குக் கிழக்கு அல்லது வடக்குப் பகுதிகளில் கொடுக்க வேண்டும்.

*மேற்குத் திக்கிலுள்ள சுவர் வெடிக்குமானால் வர்த்தகத்தில் நஷ்டமடைவான். உட்பக்கமாகக் கட்டடச் சுவர் விழுமானால் வீட்டுச் சொந்தக்காரன் நாசமடைவான்.

*வாசம் செய்யும் வீட்டில் திடீரென்று கிழக்குச் சுவரில் வெடிப்பு உண்டானால், அந்த வீட்டில் வசிப்பவர்கள் தரித்திரமடைவார்கள்.

*தெற்கில் உள்ள சுவர்களில் வெடிப்புக் கண்டால் அந்த வீட்டில் யாராவது மரணமடைவார்கள்.

*வடக்கில் உள்ள சுவரில் வெடிப்பு உண்டானால் திடீர் விரயங்கள் உண்டாகும்.

*வீடுகளுக்குத் தாழ்வாரம் ஐந்தரை அடிக்குக் குறையாமல் அமைக்க வேண்டும்.

*குடியிருப்பதற்காகக் கருங்கல்லில் கட்டடங்கள், வீடுகள் கட்டக்கூடாது. அது குடும்பத்தில் பல பிரச்சனைகளைக் கொடுத்துக் குடும்பத்தில் நிம்மதியைக் குலைத்துவிடும்.

*ஏற்கனவே இடம் அல்லது வீடு வைத்திருப்பவர்கள் தங்கள் வீட்டை ஒட்டியோ அல்லது இடத்தை ஒட்டியோ உள்ள வடக்கு அல்லது கிழக்கில் உள்ள வீடு, மனை வாங்கலாம். தெற்கு, மேற்கு கூடாது.

*வீடுகள், எந்தத் திசையில் வாசல் இருந்தாலும், வெளியில் இருக்கும் தெரு மட்டத்தை விட வீட்டுத் தளம் உயரமாக இருக்க வேண்டும்.

*பிரதான வாசல்களை விட மற்ற உள்வாசல் கால்கள் கொஞ்சம் சிறிதாக உள்ளடக்கமாக இருக்க வேண்டும்.

*வீட்டின் கழிவு நீர் ஈசான்யத்தில் வெளியேற வேண்டும். இல்லையெனில், கழிவுநீர் ஈசான்யத்தில் ஒரு சின்னத் தொட்டியில் விழுமாறு செய்து, பின்பு அங்கிருந்து தனியே வாட்டம் கொடுத்து மற்ற திசைகளில் கொண்டு செல்ல வேண்டும்..

- வயல்பட்டி கண்ணன்.




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/general/p11.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License