இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

நட்சத்திரங்கள் குறித்த பழமொழிகள்

முனைவர் ஸ்ரீவாலாம்பிகை


அசுவிணி முதல் ரேவதி முடிய உள்ள நட்சத்திரங்கள் இருபத்தேழு. இவை மட்டும் அல்லாது வேறு சிலவும் உள்ளன. இவை குறித்த பழமொழி பற்றிக் காண்போம்.

ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகி விடாது. ஆயிரம் நட்சத்திரம் ஒன்று கூடினாலும் அது பூரண சந்திரன் ஆகுமா? (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.29.)

“ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரனுக்கு ஈடாகாது.” ஆயிரம் ஆயிரம் முட்டாள்கள் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தாலும் ஒரே ஒரு அறிவாளி தரும் முடிவிற்கு ஈடு இணையாகாது என்பதனை உணர்த்துவதே அறிவாளி சந்திரனைப் போன்று மிகுந்த பிரகாசம் உடையவன் என்பது என்று ம. தஜோ குறிப்படுகின்றார். (சமுதாய கிராமப் பழமொழிகள், ம. தஜோ, 28.)

நட்சத்திரங்கள்; கூச்சலிடுவதில்லை, (எஸ்,லீலா, பு.பெ.உ.ப.மொ, அயர்லாந்து, ப.24)

நட்சத்திரத்தை எண்ணி விட முடியாது. நாய் வாலை நிமிர்த்த முடியாது. (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.154.)

அழகு - வான் - தாரகை:

வானின் அழகு தாரகைகளில் உள்ளது. பெண்ணின் அழகு கூந்தலிலுள்ளது - இத்தாலி (ப.ரா,உ.ப, ப.183.)

வானத்தின் அழகு நட்சத்திரங்கள். பெண்ணின் அழகு அவருடைய கூந்தலில் உள்ளது - இத்தாலி (எஸ். லீலா, பெ.உ.ப.எ.1, ப.44.)

எண்ணற்ற நட்சத்திரங்கள்:

ஆற்றுமணலையும் ஆகாசத்து நட்சத்திரத்தையும் அளக்க முடியுமா? (துர், த.நா, ப.43)

ஆற்று மணலையும், ஆகாயத்து நட்சத்திரங்களையும் அளவிட முடியுமா? (மேலது, ப.31.)

புராணக் கூறுகள்:

அர்ச்சுனன் மனைவிமாரையும் ஆகாசத்து நட்சத்திரங்களையும் எண்ண முடியாது. (மு. சரளா, பெ.ப.ப.மொ, ப.122.)

நட்சத்திரத்தை எண்ண முடியாது. நாய்வாலை நிமிர்த்த முடியாது. (மேலது, ப.97.)

இருட்டு - இருள்:

ஒரு சின்ன நட்சத்திரத்திங் கூட இருட்டில் மின்னுகிறது - ஃபின்னிஷ் பழமொழி (சு.ல, உ.ப, ப.47.)

இரவு :

பகலில் மின்னாதது, இரவில் மின்னும் - ஸ்விஸ் பழமொழி. (மேலது,ப.47.)

நட்சத்திரங்கள் ஓசையிடுவதேயில்லை - ஐரிஷ் பழமொழி.

நட்சத்திரங்கள் உலகை ஆள்கின்றன. ஆனால் நட்சத்திரங்களைக் கடவுள் கட்டுப்படுத்துகிறார் - இலத்தீன் பழமொழி. (மேலது, ப.273.)


நாள் நட்சத்திரம்:

செய்யும் காரியம் நன்மையாக முடிய வேண்டும் என்பதற்காகப் பார்க்கும் நல்ல நேரம்.

அவர் நாள் நட்சத்திரம் பார்க்காமல் எந்தக் காரியத்தையுமே செய்ய மாட்டார்.

கல்யாணத்திற்கு நாளும் நட்சத்திரமும் மட்டும் பார்த்தால் போதுமா? பணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டாமா? உம் இடைச் சொல்லுடன். (பே.வி.எஸ்.சே, த.த.ம.தொ.அ, ப.223.)

விண்மீன்கள்:

வானத்தின் கவிதை விண்மீன்கள் என்றால் வையத்தின் கவிதை பெண்கள் (ஹார்கிரெவ், முனைவர். சரளா இராசகோபாலன், பெண்களைப் பற்றிய பொன்மொழிகள், ப.107)

இராஜயோகம் தரும் நட்சத்திரங்கள்:

ஆதிரை, பரணி, சோதி, அத்தநாள், உத்திராடம் மேதினி பிறந்தோர்க்கெல்லாம் விளம்பலாம் இராஜயோகம்

அசுவனி - கார்த்திகை:

எஸ்.லீலா எழுதிய புகழ் பெற்ற உலகப் பழமொழிகள் 2300க்கும் அதிகமான பழமொழிகள் எனும் நுாலில்,

அசுவினி கார்த்திகையில் இடி இடித்தால் ஆறு கார்த்திகைக்கு மழை இல்லை. (எண்.24, ப.43)

பரணி :

பரணி அடுப்புப் பாழ் போகாது (எஸ்.து.த.நா.ப, ப.203.)

பரணி அடுப்புப் பாழ் போகாது (பரணி நட்சத்திரத்தில் சனி மூலையில் அடுப்புப் போட்டால் குடி உயரும்.) (போ.ப.மு, பு.நோ.ப, ப.64.)

பரணி தரணியாளும். பரணியில் பிறந்தவன் தரணியாள்வான்.

பரணியில் பிறந்தால் தரணியாள்வான் (அ) பரணி தரணி ஆளும். (பேச்சு வழக்கு)

பரணி மழை தரணியெல்லாம் பெய்யும். (எஸ்.லீலா, பு.பெ.உ.ப, எண்.41, ப.7.)

பரணி மழை தரணியெல்லாம் பொழியும். (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.174.)


திருவாதிரை:

திருவாதிரைக்களி தினமும் அகப்படுமா? (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.144).

மிளகுப் பொடியோட திருவாதிரை! (துர், த.நா.ப, ப.241.)

அவன் தில்லு முல்லு; திருவாதிரை. (பிரம்ம புத்திரன், தன்னிகரில்லா தமிழகத்துப் பழமொழிகள், ப.19.)

சந்தேகமின்றி உலகத்துள்ளோர் வணங்குவதற்கு ஒரு மணியைப் போல, பிரகாசிக்கப் பெற்ற திருவாதிரை நட்சத்திரம் என்பது பொருள். சிவப்பெருந்தகையார் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தமையால் “ஐயம் அற உலகு தொழ” என்று கூறினார். “ஆதிரை ஒரு மணி ஆயிழை ஒன்றரை” என்ற வசனப்படி திருவாதிரை நட்சத்திரம் ஒரு மணியைப் போல் தனியே பிரகாசித்து வானவெளியில் விளங்கும் நட்சத்திரமாதல் பற்றி ‘ஒரு மணி’ எனக் கூறினார் என்க. (ப.228.)

ஐயம் அற உலகு தொழு ஒரு மணியாய் விளங்கிய ஆதிரையின் ஆனே (நடராசர், சா.அ, செ.எ.104, ப.227.)

ஆயில்யம்:

மாமியார் - மருமகள் எனும் தலைப்பில், “ஆயில்யத்தில், மாமியார் ஆசந்தியிலே (மு. சரளா, பெ.ப.ப.மொ, ப.44.)

ஆயில்யத்தில் மாமியார் ஆசந்தியிலே. (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.29.)

மகம்:

மகத்துப் பிள்ளை ஜெகத்திலே கிடைக்காது.

மகத்துப் பெண் ஜகத்தில் கிட்டாது.

மகத்தில் பிள்ளை ஜகத்தில் இல்லை. (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.197.)

”மகத்தில் மங்கை; பூரத்தில் புருடன்.
மகத்துப் பெண் பூரத்துப் புருடன்.
மகத்துத் தகப்பன் முகத்தில் விழியான்.
மகத்துப் பெண், முகத்துக்கு ஆகாது.
மகத்துப் பெண் வசத்திலே கிடையாது” (மு. சரளா, பெ.ப.ப.மொ மேலது, ப.63.)

திதி கொடுக்கத் தவறியவர்கள் மகத்தில் தருவது சிறப்பாய் கருதப் பெறுகின்றது.

மறந்த திதியை மகத்தில் கொடு. (மேலது, ப.201.)

மு. சரளா, பெ.ப.ப.மொ , மகப்பேறு தலைப்பில், ‘மகம் ஜெகத்தை ஆளும்’ (தினந்தந்தி - ஆவணி தமிழ் மாத ஜோதிடம் 17-8-2012 ப.6)


பூரம்:

பூரத்திற்கு தாரத்தால் தொல்லை (தினத்தந்தி - ஆவணி தமிழ் மாத ஜோதிடம் 17.8.2012 ப.6)

உத்திரம்:

உத்திரத்தில் பிள்ளையும், ஊர் ஓரத்து நிலமும் (பே.ப.மு, பு.நோ.ப, ப.65)

உத்திரத்தில் ஒரு பிள்ளையும், ஊர் ஓரத்தில் ஒரு காணியும். (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.45.)

உத்திரத்தில் ஒரு பிள்ளை; உறவுக்கெல்லாம் ஒரு தொல்லை. (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.44.)

அஸ்தம்:

அஸ்த நட்சத்திரத்தில் ஒரு சேயும் ஆற்றோரத்தில் நிலமும். (மேலது, ப.65)

உழவியல்: அத்தத்தில் நாற்று விடு. (எஸ். லீலா, பழங்கால தமிழப் பழமொழிகள்;, ப.23).

அத்தத்தில் நாற்று நடு.

சித்திரை:

சித்திரை அப்பன் தெருவிலே (பேச்சு வழக்கு)

சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்.


சுவாதி:

சுவாதியில் வில் போட்டில் சொன்ன படி மழை பெய்யும். (மேலது, ப.126.)

சுவாதி சுக்கிரன் ஓயாமழை.

கேட்டை:

கெட்ட நாளுக்கு ஒரு கேட்டை பிறந்தது. (புதன் நலம் காலம் வந்தது.)

கேட்டையில் பிறந்தால் எட்டுச் சேவகன் உண்டு.

கேட்டையில் பிறந்தவன் கோட்டைக் கட்டி ஆள்வான்.

கேட்டை(புதன்) மூட்டை (மூலம்) செவ்வாய். (மேலது, ப.65.)

கேட்டை மூட்டை செவ்வாய்க் கிழமை.

கேட்டை நட்சத்திரம் ஜேஷ்டனுக்கு (மூத்தவனுக்கு) ஆகாது. (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.106.)

கெட்ட குடிக்கு ஒரு கேட்டை பிறந்தது. (மேலது, ப.116.)

கேட்டை மூட்டை செவ்வாய்க்கிழமை. (மேலது, ப.118.)

கேட்டை மூட்டை செவ்வாய்க் கிழமை கேட்க முடியாத கடன் மரியாதை - தமிழ்நாடு. (எஸ்.லீலா, பு.பெ.உ.ப, எ.407, ப.121.)

மூலம்:

நோயா? நட்சத்திரமா?, மாமியார் - மருமகள்

மூலத்துப் பெண் மாமியார் மூலையிலே (டா.சரளா, பெ.ப.ப.மொ, ப.48)

மூலத்துப் பெண்ணைக் கொண்டால் மாமியார் மூலையிலே. (மேலது, ப.210.)

ஆண் மூலம் தரணியாளும்; பெண்மூலம் நிர்மூலம். (மு. சரளா, பெ.ப.ப.மொ, மகப்பேறு, ப.59)

மூலத்தான் போகிற இடம் போக்கற்றுப் போகும். (பே.ப.மு,பு.நோ.ப, ப.65)

மூலத்தில் பிறந்தவன் காலத்தில் வாழ்வான்.

வைத்தியப் பழமொழி - மூலம் நட்சத்திரம் குறித்தப் பழமொழி அல்ல.

ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம். (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.27.)

மூலம் என்றால் வேர், கிழங்கு, அடிப்பாகம் என்று பொருள். இது வைத்தியப் பழமொழி. சோதிடப்பழமொழி அன்று. ஆண் மரத்தின் வேர் மிகுந்த மூலிகைத் தன்மை வாய்ந்தது. நோய் வாய்ப்பட்டவனை வலிமை உடையவனாக ஆக்கும் தன்மை உடையது. பெண் மரத்தின் வேர்கள் அழிக்கும் தன்மை உடையன என்பதையே இப்பழமொழி மெய்ப்பிக்கின்றது. எனவே இங்கே இந்த சோதிட விதி பொருந்தாது.


பூராடம்:

பூராடக் காரனோடு போராட முடியாது. (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.187.)

பூராடகாரனோடு சண்டை போடாதே.

பூராடக்காரனோடு சண்டை போட்டு மீள முடியாது. (மேலது, ப.65)

அகதி பெறுவது பெண் பிள்ளை, அதிலும் வௌ்ளிப் பூராடம். (எப்போதும் சண்டை) (மேலது, ப.65)

ஆண்டிச்சி பெறுவது பெண்பிள்ளை; அதுவும் வௌ்ளிப் பூராடம். (மு. சரளா, பெ.ப.ப.மொ, மகப்பேறு, ப.59)

பூராடக்காரனோடு போராட முடியாது. (துர்.த.நா.ப, ப.219.)

அகதி பெறுவது பெண் பிள்ளை; அதுவும் வௌ்ளி பூராடம். (பிரம்ம புத்திரன், தன்னிகரில்லா தமிழகத்துப் பழமொழிகள், ப.6.)

உத்திராடம்:

உத்திராடத்தில் பிள்ளையும் ஊர் வாரியில் ஒரு நிலமும். (மேலது,ப.59)

உத்திராடம் ஒரு பிள்ளையும் ஊர் வாரியில் ஒரு நிலமும். (மேலது, ப.55.)

கடுக்காய்க்கு அகனி நஞ்சு; சுக்கிற்குப் பரணி நஞ்சு (மேலது, ப.78.)

திருஓணம்:

திருவோணத்திற்கு எதிர் ஓணம் இல்லை.

திருவோணத்திற்கு எதிர் ஓணம் கிடையாது.

திருவோணத்தான் உலகாள்வான்.

திருவோணத்தானை வெற்றி கொள்ள இயலாது.

அவிட்டம்:

அவிட்டத்திலே பெண் பிறந்தால் தவிட்டுப் பானையிலும் பொன். (மு. சரளா, பெ.ப.ப.மொ, மகப்பேறு தலைப்பு, ப.58)

அவிட்டம் தொட்டதெல்லாம் பொன்.

அவிட்டம் தவிட்டுப் பானையும் பொன். (மேலது,ப.65.)

அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டுப் பானையிலும் பொன். (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.19)

பெண்களைப் பற்றிய பழமொழிகள் நூலில், பெண்ணின் உறவு நிலைகள் அக்காள், தங்கை.

“அவிட்டத்தில் பிறந்த தங்கச்சி அந்நியத்தில் கொடுக்கக் கூடாது” என்கின்றது. (மு. சரளா, பெ.ப.பமொ, ப.24)

அவிட்டம் தவிட்டுப் பானையிலே பணம்.

அவிட்டம் தவிட்டுப் பானை எல்லாம் பொன்.


சதயம்:

சதயத்திற்கு சொல் புத்தியும் கிடையாது; சுய புத்தியும் கிடையாது.

சுயபுத்தி இல்லையென்றாலும் சொற்புத்தி வேண்டாமா? (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.125.)

கற்கடக நட்சத்திரம்:

காவரி ஆற்றை மறைப்பாய் கார்த்திகை மாதத்துக் கற்கடக நட்சத்திரத்தை மறைப்பாயா? (மேலது, ப.100.)

கிழமைகள் பிறந்த நட்சத்திரங்கள் குழந்தை பிறந்தால் ஆகாது.

சோதிட பழம் பாடல் ஞாயிற்றுக் கிழமையில் பரணி நட்சத்திரத்திலும், திங்கட் கிழமையில் சித்திரை நட்சத்திரத்திலும், செவ்வாய்க் கிழமையில் உத்திராட நட்சத்திரத்திலும், புதன் கிழமையில் அவிட்ட நட்சத்திரத்திலும், வியாழக் கிழமையில் கேட்டை நட்சத்திரத்திலும் வௌ்ளிக்கிழமை பூராட நட்சத்திரத்திலும், சனிக் கிழமை இரேவதி நட்சத்திரத்திலும், குழந்தை பிறந்தால் அதிக துக்கத்தை உண்டாக்கும்.

“ஆயசித் திரையில் திங்கள் அணிகுசன் உத்திராடம்
ஞாயிறு பரணி கேட்டை நற்குரு வாரம் ஆகும்
ஏயறு புதன் அவிட்டம் இரேவதி சனியே ஆகும்
தூயபூ ராடம் வௌ்ளி இதில் சன்மம் துயரம் செய்யும்.” (சா.அ.) - செ.74, ப.197.)

“வந்திக்குங் கதிர்க்குங் கங்குல் மதிக்குச்சித் திரைசேய் தரடி
புந்திக்கு விட்டம் ஆகும் பொன்னுக்குக் கேட்டை ஆகும்
சந்திக்கும் புகர்பூ ராடம் சனிதோணிப் பிறந்த நாள்ஆம்
சிந்திக்குங் கருமம் எல்லாம் தீமையாய் விளையும் மாதே.”

என்று சூடாமணி உள்ளமுடையான் தெரிவிக்கின்றது.

கிழமைகள் பிறந்த நட்சத்திரங்கள் குழந்தை பிறந்தால் ஆகாது, இவ்வாறு அமைந்த தினங்களில் சுபக்கருமங்கள் செய்யக் கூடாது. (மேலது, ப.197.)

பழங்காலம் முதல் சோதிட வழக்கினில் வரும் பழமொழிகளாக இவை விளங்கி வருகின்றன.

*****




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/general/p65.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License