இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

வாஸ்து சாஸ்திரம் பார்ப்பது சரியா?

மகரிஷி சீடன்


இன்று புதிய வீடு கட்டுவதாக இருந்தாலும் சரி, வாடகை வீட்டுக்குப் போவதாக இருந்தாலும் சரி, வாஸ்து பார்க்கும் வழக்கம் வந்து விட்டது. உண்மையில் இப்படி வாஸ்து பார்ப்பது சரியா? வாஸ்துப்படி வீடு இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமைந்து விடுமா?

வாஸ்து என்றால் என்ன?

வாஸ்து என்பது மனிதனைக் குறிக்கும் ஒரு சொல். இதனால்தான் வாஸ்துக்குரியவனை வாஸ்து புருஷன் என்கிறோம். வாஸ்து ஒரு இடத்தில் எப்படி செயல்படுகிறது என்பதை அர்த்த சாஸ்திரம் சொல்கிறது.

வாஸ்து சாஸ்திரம் ஒரு மனித சாஸ்திரம். இது மனிதனை மையமாகக் கொண்டு மனிதர் பழக்க வழக்கங்கள், அவர்கள் வாழக்கூடிய இடங்களைக் கொண்டு கணிப்பது. மனித சாஸ்திரத்தை வீடு கட்டுவதற்கும், வீட்டில் குடியிருப்பதற்கும் பார்ப்பது சரியல்ல. வீட்டிற்கும் வீட்டின் அமைப்பிற்கும் பொருத்தமானது மனை விதி சாஸ்திரம்தான்.

வாசகர்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். வாஸ்து சாஸ்திரம் வேறு, மனை விதி சாஸ்திரம் வேறு.

மனிதப் பிறப்பில் அவருடைய பாவ புண்ணியங்களுக்கேற்ப அவர் எடுத்த கர்மா (பிறப்பு)வின் படி அந்த மனிதனின் வாழ்க்கை அமையும். இதுபற்றிக் குறிப்பிடுவதுதான் வாஸ்து சாஸ்திரம். இதற்குத் துணையாக இருப்பது மனை விதி சாஸ்திரம்.

வாஸ்து புருஷ லட்சணம் என்பது மனிதனின் பாவ புண்ணியத்திற்கேற்ப கோள்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இதை வாஸ்து நிர்ணயிப்பதில்லை. இணை விதி நிர்ணயிப்பது இல்லை.

கோள்கள் வாஸ்துவை இயக்குகின்றன. கோள்கள் மனையை அமைத்துத் தருகின்றன. இப்படித்தான் வாழ வேண்டும் என பிறப்பின் போதே கோள்கள் நிர்ணயித்து விடுகின்றன. மனிதன் இதை விடுத்து வேற்றிடங்களில் வாழ முடியாது. வீட்டை மாற்றினால் கோள்கள் நிலை மாறுமா? ஏற்கனவே கோள்களின் நிலை நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதை மாற்றி விடலாம் என நினைப்பது மனிதனின் அறியாமை ஆகும்.

மனைக்குரிய விதிகள் வாஸ்துவுடன் ஒத்து வருமா? கோள்கள் மனிதனை எவ்வாறு இயக்குகின்றன? எப்படி வீடு வாய்ப்பு அமையும். எட்டு திசைகளை எப்படி பார்ப்பது? இந்த பிரபஞ்சம் உள்ளவரை என்றும் மாறாத திசைகள் பின்வரும் படத்தில் உள்ளது.


இதில் சந்திரன் - உடல், சூரியன் - ஆன்மா. இவர்கள் தெற்கு நோக்கி இருந்து மனிதர்களை இயக்குகிறார்கள்.

வடக்கு - சுபிட்சம், குபேரன் - தெற்கு என்பது மனிதர்கள். மனிதர்கள் தெற்கே தலை வைத்து வடக்கே கால் நீட்டிப் படுத்தால் சுபிட்சத்திற்குக் குறை இருக்காது. காரணம் என்ன? அங்கே நேர் எதிரே குபேரன் சுபராக இருந்து சுபதன்மை பெறுகிறார்கள்.

தெற்கு - எமதர்மராஜன்

உடல் - சந்திரன்

ஆன்மா - சூரியன்

இதில் எடுத்துச் செல்லும் ஆற்றல் எமதர்ம ராஜனுக்கு உண்டு. அதாவது தர்மத்தை நிலை நாட்டும் ஆற்றல் எமதர்மனுக்கே இருக்கிறது. மனிதர்களின் உள்ளே ஆன்மா புகுந்து கொண்டு எமதர்மரஜனை அதிகாரியாகக் கொண்டு விளையாடுகிறது.

வடக்கு குபேரன் (சனி பகவான் வீடு). இங்கு ஏன் சனியைக் கொடுத்தார்கள்?. நீ குபேரனாக வேண்டுமானால் சனியைப் போல் உழைக்க வேண்டும். அனைத்து நிலைகளிலும் முன்னேற்றமடைய சனி பகவான் போல் உழைக்க, கர்மா நன்றாக இருக்க வேண்டும்.

கிழக்கு= இந்திரன், மேற்கு = வருணன்

அதாவது மனிதர்களின் இருபுறமும் இந்திரன், வருணன். எதிரே குபேரன். நமக்கு மேலே அக்னி, நமக்குக் கீழே நிருதி


மேல் அக்கினி. கீழ் நிருதி.- நிருதி என்பது இருண்ட சூழ்நிலை (கர்ப்பத்தில் குழந்தை இருப்பது போல்). இந்த இடத்தில் ஆண்-பெண் உடல் உறவு கொள்ளக் கூடாது. இங்கு அக்கினியில் உடல் உறவு கொள்ளக் கூடாது.

தென்மேற்கு நிருதி - இங்கு கர்பாதானம் கூடாது. இருண்ட சூழ்நிலை. பிறக்கும் குழந்தைகளுக்குத் துன்பம் நேரிடும்.


1. கன்னி மூலை - இங்கு சப்த கன்னிகள் வாசம் செய்கிறார்கள். வீட்டின் கன்னி மூலையில் அடைப்பு வேண்டும். திறப்பு கூடாது. தப்பு மற்றும் துவேசம் ஏற்படும்.

2. நிருதி (மீனம்) - அசுத்தம் கூடாது. கழிவு சேமிப்புக் குழி (செப்டிக் டேங்க்) அமைக்கக் கூடாது. இங்கு வேம்பு மரம் வைத்தால் குடும்பத்தில் குற்றங்கள் எதுவும் நிகழாது.

3. வாயு (தனுசு) - இப்பகுதி திறந்து இருக்க வேண்டும். காற்று வந்து போக வேண்டும். கழிவுகளை வைக்க வேண்டும். தெற்கே தெய்வங்களை வைத்து வடக்கு முகமாக (சிவசக்தி சொரூபம்) வைத்து வணங்கி வந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.

4. வடக்கு (மகரம்- கும்பம்) - வடக்கும், கிழக்கும் எப்பொழுதும் சுமை இல்லாமல் இருக்க வேண்டும். கனமான பொருட்கள் இப்பகுதியில் இருந்தால் ஏதோ மன வருத்தம் இருந்து கொண்டே இருக்கும்.

5. அக்னி மூலை (மிதுனம்) - வாயுவிலிருந்து அக்னி மூலைக்கு காற்று போக வேண்டும். அதே போல கன்னியில் இருந்து ஈசானம் போக வேண்டும். இந்த அக்னி வாயு மூலை இணையுமிடத்தில் படுக்கை அறை இருக்க வேண்டும்.

6. வடமேற்கு (வாயு) [தனுசு] முதல் தென்மேற்கு (அக்னி) [மிதுனம்] - இங்கு காற்று தள்ள வேண்டும். காற்றின் வேகம் கர்ப்பாதானதிற்குத் தள்ள வேண்டும் விந்துவை.தவசு என்ற வில் மைதூனம் (மிதுனம்) என்ற ராசிக்குக் கடக்கிறது. தனுசு மன்மதன் அதில்தான் குருவைக் கொடுத்து இருக்கிறார்கள். தனுசு (குரு) முதல் மிதுனம் (புதன்) ஆகிறது. இது கற்பனையல்ல. பொதுவாக தனுசுவிலேதான் பூலோக நட்சத்திரம் மூலம் இருக்கிறது. தனுசுவில் 3 டிகிரி அதாவது பாலியை வீதிகளுக்கான புவியீர்ப்பு சக்தி இருக்கிறது. மூலம் இல்லையென்றால் ஒன்றுமில்லை. இது தனுசு ராசியின் அமைப்பு.

அக்னியில் அடுப்பு


அக்னியில் ஏன் அடுப்பு வைக்க வேண்டும் என்கிறோம்?

இந்திரன் எமதர்மராஜன் இரண்டுக்கும் நடுவில் அக்னி. ஏன்? இந்திரனுக்கு நேர் சமநிலையுடையவர்களுக்கு வருணன். வருணன் அனைத்து இடத்திலும் இவருடைய பங்களிப்பு தேவையாக உள்ளது. இந்த நிலைகள் எல்லாம் நிர்ந்தரமானது. இவைகளில் எக்காலத்திலும் மாறுதல்களில்லை.

வாஸ்து புருஷன்

வாஸ்து புருஷன் ஈசானத்தில் தலை வைத்து நிருதியில் கால் நீட்டி அக்னியில் இடது கையை வைத்து வாயுவில் வலது கையை வைத்துப் படுத்து இருக்கிறார்.

வாஸ்து புருஷன் தலை வைக்கும் இடத்தில் நாம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்கிறார்கள். ஏன்? ஈசானியம் என்பது முக்தியும் மோட்சமும் தரக்கூடிய இடம். அங்கு உன்னுடைய ஐம்புலன்களையும் அடகு வைக்க வேண்டும். எல்லாவிதமான முக்தி மோட்சத்திற்கும் இறை சிந்தனை வேண்டும்.

கன்னியில் கால் ஏன்? ஞானிகளையும், பெரியவர்களையும் கன்னியில் நிறுத்திப் பாத நமஸ்காரம் செய்ய வேண்டும்.

வலது கை வாயு - அக்னி வாயு

இடது கை அக்னி - வாயு அக்னி

இதனால்தான் இடது கை பலம் குறைகிறது. வலது கை (வாயு) காற்று பலம் அதிகம்.

எப்பொழுதும், எந்தச் சூழ்நிலையிலும் நாம் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்றால் வாயுவை வணங்க வேண்டும். அருனள் தன்மை வாயுவுக்கு மட்டுமே உண்டு.

சிரசு - ஈசான்யம்

வலது கை - வாயு மூலை

இடது கை - அக்னி மூலை

இந்தத் தகவல்கள் விக்கிரமாதித்தன் வாஸ்து சாஸ்திரச் சுவடியில் உள்ளது. இந்த சாஸ்திரப்படிதான் விக்கிரமாதித்த மன்னைன் தன் சிம்மாசனத்திற்குப் படிகளை அமைத்தான் என்று சொல்வதுண்டு.



வாஸ்து புருஷ லட்சணம் என்பது இதுதான். இதன்படி நாம் என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம். சில இடங்களில் சில பொருட்களை வைத்தால் அதற்கான தனி அதிர்வுகள் நிலை மாறும்.

அக்னி மூலை - இந்த மூலையில் விளக்கு எரிந்து கொண்டே இருதால் எவ்விதத் துன்பமும் துயரமும் வராது. தொழில் நிறுவனங்களில் இங்கு மின்சாதனப் பொருட்கள், இணைப்புகள் இருக்க வேண்டும்.

ஈசான்யம் - மண் பாத்திரத்தில் தண்ணீர் வைக்க வேண்டும். இதைத் தவிர்த்து மீன் தொட்டி வைக்கக் கூடாது. இனவிருத்திப் பொருட்களை இங்கு வைத்தல் சரியல்ல.

எமதர்மராஜன் - இங்கு மனிதன் தர்மம் உயர்ந்து மேலோங்க வேண்டும். தர்மம் அதிகரிக்க அதிகரிக்க குபேரன் (வடக்கு) தலை வணங்கிக் கொடுப்பார்.

மேற்கு உயர்வாகவும், கிழக்கு தாழ்வாகவும் வேண்டும் என்பார்கள் ஏன் தெரியுமா? வருணன் அருள் ஏற ஏற தானாகவே சில விஷயங்கள் கட்டுக்குள் வந்துவிடும். இப்படி அமைந்த வீடுகளில் நடைமுறையில் பார்வைக்கு ஆடம்பரம் இருக்காது. மாறி இருந்தால் எத்தனை லட்சங்கள் வந்தாலும் பற்றாக்குறை நிலவும். இதுபோல் பல ரகசியங்கள் இதில் உள்ளன.

திசை அமைவு கோள்கள் வழிமுறை


1. திசைகள் எந்தச் சூழ்நிலையிலும் பார்க்க கால புருஷத் தத்துவப்படி (ராசிப்படி) இது மாறாது.

2. திசையில் ஆட்சி செலுத்தும் கோள்கள் நிலைகள் கால புருஷத் தத்துவப்படி;

உதாரணமாக;

ஒருவரின் தர்மாதிபதி (9 ஆம் பாகத்தில்) கர்மத்தில் இருப்பின் தர்மத்தைக் காமத்தின் மூலமாக செயல்படுத்தி தனக்குத்தானே அழிவு ஏற்படுத்திக் கொள்வார். தர்ம காரியம் இவர் ஏதோ செய்ய என் பெயர் பெரிதாக இருக்க வேண்டும், புகைப்படம் பெரிய அளவில் வர வேண்டும், முதல் மரியாதை வேண்டும் என்கிறதான ஆசைகளுடன் செயல்படுகிறது. தர்மம் கர்மாவாக செயல்படுகிறது.

கர்மம் தர்மமாகச் செயல்படுதல்

இவரின் கர்மாதிபதி தர்மத்திக் இருந்தால் எந்த பேரும் வேண்டாம். பிரதிபலன் வேண்டாம். நல்லவிதமாக தர்ம காரியம் செய் என்பார். இப்படித்தான் பார்க்க வேண்டும். இதுபோலத்தான் நிலையாக இருக்கும் திசை அமைப்பு மனிதனின் பாவ புண்ணியங்களுக்கேற்ப மாறி செயல்படுகிறது. இருவரின் கர்மாதிபதி தர்மத்திலிருந்தால் எந்த பேரும் வேண்டாம், பிரதி பலன் வேண்டி நல்ல விதமாக தர்ம காரியம் செய் என்பர். கர்மம் தர்மமாக இருந்து செயல்படுகிறது.

இப்படித்தான் பார்க்க வேண்டு. இது போலத்தான் நிலையாக இருக்கும் திசை அமைப்பு மனிதனின் பாவ புண்ணியங்களுக்கேற்ப மாறி செயல்படுகிறது.

அக்னி பாகத்தில்தான் சமையலறை இருக்க வேண்டும். ஜாதகரின் கர்மாவிற்கு ஏற்றவாறு திசைகள் மாற்றமாகலாம். பிறப்பின் தன்மைக்கு ஏற்றபடியும் திஅசைகள் மாறுபட்டு செயல்படும்.


மேலே காணும் ஒருவருடைய ஜாதகத்தில் உதய லக்கினம் கன்னி. உதயம் என்றாலே கிழக்குதான். அஸ்தமனம் மேற்கில் ஏழாம் வீடு. இங்கு தென்மேற்கு திசை கிழக்காக மாறிச் செயல்படுகிறது. கிரகங்கள் ராசியில் எங்கு உள்ளார்களோ அங்கு அந்த ராசிப்படியான பலன்களைத் தருவார்கள். நம் பிறப்பிற்கேற்ப நம் இல்லத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த வீடு நம் பிறப்பிற்கேற்ப ஒத்திருந்தால் அந்த வீடு நம்மை ஏற்றுக் கொள்ளும்.

தாத்தா, மகன் நல்லபடியாக இருந்த வீட்டில் பேரன்கள் இருக்க முடியாமல் போய்விடுவதுண்டு. இது ஏன்? பிறப்பு லக்கினம் மாறி விட்டது. லக்கினம் மாறி விட்டால் வீடு கை மாறி விடும். இதுதான் மனைவிதி சாஸ்திரம். இதில்தான் ரகசியமும் உள்ளது.

இந்தக் கட்டுரையின் ஆசிரியரான எனக்கு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம்தான் சொந்த ஊர். இங்கு எங்கள் வீடு கட்டி சுமார் 110 ஆண்டுகள் ஆகின்றன. எங்கள் வீடு பெரிய வீடு. எங்கள் தாத்தாவிற்கு ஆறு குழந்தைகள். என் அப்பா என் தாத்தா வீட்டில் இரண்டாவது மகன். இந்த வீடு என் அப்பாவின் பாகத்திற்குப் பாகச் சொத்தாய் வந்தது. எங்கள் அப்பாவிற்கு என்னைச் சேர்த்து ஐந்து குழந்தைகள். எங்களுக்குத் திருமணம் முடிந்த பின்பு, எங்கள் அப்பா காலத்திற்குப் பிறகு எங்களின் குழந்தைகள் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. ஆனால் வீடு இன்றும் உள்ளது. , திருவிழா, திருமணம் போன்ற நிகழ்வுகளின் போது அதைப் பயன்படுத்திக் கொள்கிறோம். இந்த வீட்டில் வடகிழக்கு மூலையில்தான் சமையலறை இருக்கிறது. சமையலறை அகினியில்தானே இருக்க வேண்டும். இங்கு எவ்விதப் பிரச்சனையுமே இல்லையே...

இது கர்மாவிற்குத் தக்கபடி ஒரு மனிதனின் திசைகள் (ஜாதகப்படி மாறி) செயல்படுகிறது.

இதற்கான விளக்கத்தைப் பின் வரும் ஜாதகத்தின் வழியாகக் காண்போம்.


லக்கினம் என்பது கிழக்கு - உதயம்

ஏழாமிடம் என்பது மேற்கு - அஸ்தமனம்

இந்த ஜாதகப்படி இவருடைய திசைகள் மாறி விட்டன. இந்த ஜாதகருடைய கர்மாவுக்குத் தக்கபடி திசைகள் மாறி செயல்படும், பிறப்பின் தன்மைக்கேற்ப மேற்கு திசை கிழக்காக மாறி செயல்படுகிறது.

கும்பம் 4ஆம் வீடு இவர் தெற்கு பகுதியில் (தெற்கு முதல் வடக்காக) இறைவனை வைத்து வழிபடுவது சிறப்பைத் தரும் வடக்கு தெற்காக மாறிவிட்டது. இதுதான் இந்த மனையின் ரகசியம். இதுதான் மனை விதி சாஸ்திரம்.

சமையலறை தென்கிழக்குப் பகுதி வடமேற்கு பகுதி தென் கிழக்காக மாறி விட்டது. வடமேற்கில் சமையல் அறை இந்த ஜாதகருக்கு சிறப்பாக இருக்கும்.

இந்த ஜாதகருடைய 4 ஆம் வீட்டு அதிபதி சனி பகவான் கடகத்தில் இருக்கிறார். இதனால் தலைவாசல் வடக்கு பக்கம் இருக்க வேண்டும். நான்காமிடம் வண்டி, வாகனம் வடக்குப் பகுதி தலைவாசல் சிறப்பைத் தரும். திசைகள் மாறும் பொழ்து கிரகங்கள் எங்கிருக்கிறார்களோ அதன்படிதான் மனைவிதி சாஸ்திரம் செயல்படும். இதுதான் உண்மை.

வாடகை வீடு

வாடகை வீட்டின் சொந்தக்காரர் எப்படி இருக்கிறார்களோ அப்படித்தான் குடியிருப்பவர்களும் இருப்பார்கள். வீட்டின் உரிமையாளரைப் பொறுத்தே வாடகைக்கு இருப்பவர்களின் நிலையுமிருக்கும். அவர்கள் நன்றாக இருந்தால் இவர்களும் நன்றாக இருப்பார்கள்.

அபார்ட்மெண்ட்

பூமியிலிருந்து 40 அடிக்கு மேல் ஒரு கட்டிடம் இருந்தால் அங்கு எவ்வித வாஸ்து தோசமும் இல்லை. 10 அடிக்கு மேல் வாஸ்து தோசம் இல்லை.

குறிப்பு:

இந்தக் கட்டுரை குறித்து சில வாஸ்து நிபுணர்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பூமியில் மனிதன் பிறக்கும் போதே இறைவன் நமக்கு அனைத்தையும் கொடுத்து விட்டார். அவர் கொடுத்த நிலைகளை நாம் ஒவ்வொருவரும் அடைந்து கொள்கிறோம். அதை வாஸ்து சாஸ்திரமோ, பிற தந்திரங்களாலோ மாற்றிக் கொள்ளலாம் என எண்ணுதல் கூடாது.




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/general/p8.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License