விளம்பி வருடம் - வைகாசி மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
தை 30 அவிட்டம் 3, மாசி 4 வரை கும்பம்
சூரியன் - 1 - 10 கிருத்திகை, 11 - 24 ரோகிணி, 25 - 28 மிருக - ரிஷபம்.
சந்திரன் - பரணி - மிருக வரை.
செவ்- 12 வரை உத்திராடம், 13 - திருஓணம் - மகரம்.
புதன் - 3 வரை அசுவிணி, 4 -10 பரணி, 11 - 12 கிருத்திகை - மேஷம், 13 -16 கிரு - ரிஷ, 17 - 23 - ரோகிணி - 24 - 29 - மிருக - மிது, 30 - திருவா - மிது.
குரு - விசாகம் 1 துலாம். வக்ரம்.
சுக்கிரன் - 5 வரை மிருக - மிது, 6 - 16 திருவா - மிது, 17 - 24 - புனர் - மிது, 25 - 27 - புனர் - கடக, 28 - பூசம் - கடகம்.
சனி - மூலம் 4, தனுசு. வக்ரம்..
ராகு - பூசம் 4 கடகம்.
கேது - திருவோணம் 2 மகரம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தந்தையுடன், மனைவியுடன்; கருத்து மாறுபாடு, தந்தை வழி, சொத்து, கடன், வம்பு, வழக்கு, எதிரிகள் வகையில் பெரும் இடையூறுகள் அதிகமாய் ஏற்படல், உடல், மனநலம் பாதித்தல், மன உளைச்சல், தொழிலில் கடினமாக மேலும் உழைத்தல், பணியில் சில மாற்றம், மர்ம உறுப்புகள் பாதித்தல், குடும்பத்தில் புத்திரர் வகையினால் செலவினங்கள், குறைந்த இலாபங்கள், யாவும் இழுபறி ஆகியன ஏற்படும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழிலில் கடினமாக மேலும் உழைத்தல், தந்தையுடன் கருத்து மாறுபாடு, கடினப்பட்டதற்கான வளர்ச்சி, முன்னேற்றங்கள், ஆன்மீக, சுப பயணச் செலவினங்கள், நரம்புகள், மர்ம உறுப்புகள்; பாதித்தல், உடல் ஆயுள் கண்டப்பீடைகள், வர வேண்டிய இலாபத்தில் இழுபறி, சிலருக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஆகியன ஏற்படும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புத்திரர் வகையில் செலவினங்கள், இடையூறுகள், தந்தையுடன் கருத்து மாறுபாடு, தொழிலில், கடன், நோய், வம்பு வழக்கில், இலாபத்தில் சில இடையூறுகள், இளைய சகோதரர், சகோதரி வகையில் செலவினங்கள், அவர்களினால் வம்பு வழக்குகள் தோன்றுதல், குடும்பத்தில் குழப்பங்கள், பல்வலி, அம்மை, அக்கி முதலியன தோன்றுதல், அனைத்து வளர்ச்சி நிலையிலும் தடைகள் ஆகியன ஏற்படும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தில் சுப செலவினங்கள், இலாபங்கள், இளைய சகோதர வகை கரும காரியம் நிகழ்தல், கருத்து மாறுபாடு தோன்றுதல், வெளியூர் பயணங்கள், புத்திரர் வகையில் கல்வி, தொழில் செலவினங்கள், வழக்கினால் செலவினங்கள், வழக்கினில் தோல்வி, அபராதம் கட்டுதல், மன உளைச்சல், சிலருக்கு மனநலம் பாதித்தல் ஆகியன ஏற்படும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மனைவி, வளர்ச்சி முன்னேற்ற வகையில் சில தடைகள் ஏற்பட்டுச் சிறந்த இலாபம் அமைதல், நரம்புகள் பாதிப்பு, உறக்கமின்மை, அலைச்சல்கள், பெற்றோர் வகையில் உடல் சுகமின்மை, குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் அமைதல், ஆன்மீகப் பயணங்கள், மனைவி, குழந்தைகள் வகையில் கருத்து மாறுபாடு, பிணக்குகள் ஆகியன ஏற்படும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தாருடன், தந்தையுடன் கருத்து மாறுபாடு, சில இடையூறுகள் ஏற்படுவதால் தந்தைக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படல், குழந்தைகள் வகையில் செலவினங்கள், இரத்த அழுத்தப் பாதிப்பு சாதகருக்கு ஏற்படல், கடினப்பட்டதற்கான இலாபங்கள் அமைதல், குடும்பத்தில் செயலற்ற நிலை, இளைய சகோதிர வகை பிணக்குகள், கருமகாரியம் நிகழ்தல் ஆகியன ஏற்படும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கடன், வம்பு, வழக்கு, குடும்பம், குழந்தைகள் வகையில் கருத்து மாறுபாடுகள், மனக்குறைகள் ஏற்படுதல், கடினத்துடன் கூடிய இலாபங்கள் அமைதல், நீண்ட நாட்களாகத் திருமணம் தடைபெற்றவர்கட்குத் திருமணம் கை கூடி வரும். தொழிலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்..
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தில் மகிழ்வின்மை, மனக்குறைபாடுகள், மன உளைச்சல்கள், செலவினங்கள், இளைய வகை சகோதிரத்துடன் மனஸ்தாபங்கள், தந்தையினால் சிரமங்கள், வண்டி, வாகனத்தடைகள், தொழிலினால் நன்மை, தாய் வகையில் செலவினங்கள், நோய், கடன், வம்பு வழக்குகள் வலுவடைந்து பின் சுப முடிவு ஏற்படுதல், தொழிலில் பணவரவு கருதிய மாற்றங்கள் ஆகியன அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தாருடன், இளைய சகோதிரத்துடன் கருத்து பிணக்குகள், கடும் வாக்குவாதங்கள், தற்காலிகமான வெற்றி நிலைகள், வாழ்க்கையில் பற்றற்ற நிலை, சலித்துப் பேசுதல், வரவேண்டிய இலாபங்களில் சில தடைகள், தந்தையினால் கடன், செலவினங்கள் ஏற்படுதல், சிலருக்குத் திருமணம் கை கூடி வரும். அனைத்திலும் போராடுதல் ஆகியன ஏற்படும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வழக்கு இலாப ஆதாயத்துடன் முடிவுக்கு வந்து வெற்றி பெறுதல், நல்ல இலாபங்கள் அமைதல், விடுபட்ட அச்சுப்பணிகள் தொடர்தல், பணியில் சேர்தல், சில முன்னேற்றங்கள், விடப்பூச்சிகள் கடித்தல், ஆன்மீகம் வழி மிகுந்த நன்மை, கால்களில் சுளுக்கு முதலியன ஏற்பட்டுப் பின்னர் விலகுதல், இலாபம் கருதிய நல்ல சிந்தனைகள் தடைகள் விலகி வெற்றியாய் அமைதல், புத்திரர் வகையில் தொல்லைகள், பயணத்தில் சில தடைகள் ஏற்பட்டுப் பின்னர் நன்மையாய் முடியும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழில், இளைய சகோதிரர் வழி செலவினங்கள், பயணங்கள், இலாபத்தடைகள், குடும்பத்தில் குழப்பங்கள், தொழிலில் சிறிது முன்னேற்ற மாற்றங்கள், தொழில் தொடர்ந்த வெளியூர்ப் பயணங்கள், செயலற்ற நிலை, பெற்றோருக்குக் கண்டங்கள் ஏற்பட்டு விலகுதல், மனக்குழப்பங்கள் ஏற்படும். ஆன்மீக வெளியூர் பயணம் நன்மை தரும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழிலில் மந்தமான நிலை, முன்னேற்றத்தில் சில தடைகள், அவை தொடர்ந்த செலவினங்கள், இலாபத்தடைகள், மனைவி, வளர்ச்சி முன்னேற்ற நிலையில் மகிழ்வுகள், சிறந்த தைரியம், இளைய சகோதிர வகையில் செலவினங்கள், உடல் சுகவீனங்கள், புத்திரர் வகையில் தொல்லைகள் ஆகியன ஏற்படும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.