இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
தொடர்

ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்!

முனைவர் தி. கல்பனாதேவி


12. யோகங்கள் தொடர்ச்சி - 3


பருவத யோகம்

ஒரு நல்ல யோகம்.

1. இலக்கின அதிபன், ஏழுக்கு உடையவன் ஆகியவர்கள் கேந்திர திரிகோணங்களில் ஆட்சி உச்சம் பெற்று நின்றாலும்,

2. இலக்கின அதிபன், விரையாதிபன் ஆகிய இவர்கள் நட்பு வீட்டில் கேந்திரம் பெற்று, நட்புக்கிரகங்களால் பார்வை பெற்று நின்றாலும்,

3. தன அதிபன், இலாப அதிபன் ஆகியவர்கள் உச்சம் பெற்று நின்றாலும்,

4. ஏழில் சுபக்கிரகம் இருக்க, எட்டில் பாவக்கிரகம் இருக்க, இலாப அதிபன் பாபருடனே கூடி நின்றாலும் இந்த யோகமாகும்.

பாச யோகம்

ஒரு நல்ல யோகம்.

அது மூன்றாம் அதிபன் ஒன்பதாம் இடத்திலும் எட்டாம் இடத்தில் சுக்கிரனும், ஆறாம் இடத்தில் சுபக் கிரகமும் இருந்தாலும், ஐந்து ராசியில் இராகு, கேது, நீங்கிய சூரியனாதி எழுவர் நின்றாலும் இந்த யோகம் ஆகும்.

பாதாள யோகம்

ஒரு நல்ல யோகம். சுக்கிரன் வியாழனோடு கூட விரையாதிபன் உச்சனாகி பாக்கிய அதிபனுடன் கூடி நிற்றலாகும்.

பின் மாலிகா யோகம்

ஒரு நல்ல யோகம். அது ஐந்தாம் இடம் முதல் பதினோராம் இடம் வரை இராகு கேதுக்கள் நீங்கிய ஏழு கிரகங்கள் நிற்பது.

புட்கல யோகம்

புட்கல யோகம், புஷ்கள யோகம், புஷ்கல யோகம் என்பர். ஒரு நல்ல யோகம். அது சந்திரன் இருந்த வீட்டிற்கு உடையவனும் ஒன்றாய்க் கூடி கேந்திரம் அல்லது நட்பு வீட்டில் இருப்பதாகும். அமாவாசையானது, திங்கள், செவ்வாய், வியாழன் இக்கிழமைகளில் கூடி வருவது.

புத்திர யோகம்

ஒரு சுப யோகம். அது இலக்கினம், கேந்திரம், மூலத்திரி கோணம் உச்சம் ஆகிய இவ்விடங்களில் புதன் நிற்பதாகும்.

புஷ்கல யோகம்

அமாவாசை, திங்கட் கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமைகளில் கூடி வருவது.

பூப யோகம்

ஒரு நல்ல யோகம். அது சந்திரன் ஐந்தில் நிற்க, ஐந்தோன் உச்சம் பெற பாக்கிய அதிபன் குடும்பம் ஏறி நிற்பதாகும். இலக்கினம் முதல் நான்காம் ராசி வரை இரு பாம்புகள் நீங்கிய ஏழு கிரகங்கள் நிற்பதாகும்.


பேரிகை யோகம்

ஒரு விசேஷ நல்ல யோகம்.

1. அது இரண்டு, ஏழு, பன்னிரண்டு ஆகிய இந்த இடங்களில் கிரகங்கள் இருந்து, பத்தாம் அதிபன் பலத்து நின்றாலும்,

2. வியாழன், சுக்கிரன், இலக்கின அதிபன் இவர்களோடு கூடி, கேந்திரத்தில் நிற்க, பாக்கிய அதிபதி பலத்து நின்றாலும்,

3. செவ்வாய்க்கு கேந்திர திரிகோணத்தில் சுக்கிரன், வியாழன் ஆகிய இவர்கள் இருக்க இலாப அதிபதி பலத்து நின்றாலும்,

4. இலாப அதிபதிக்கு சுக்கிரன் கேந்திர திரிகோணம் பெற்று நின்றாலும்,

5. சனிக்கு ஆறு, எட்டு, இவைகளில் செவ்வாய் இருக்க, செவ்வாய்க்கு ஆறு, எட்டு இவைகளில் வியாழன் இருக்க, வியாழனுக்கு ஆறு எட்டு இவைகளில் சூரியன் நின்றாலும்,

6. ஐந்து ஒன்பதில் பாபக்கோள் இருக்க, கேந்திரத்தில் சுபக் கோள் இருக்க, சூரியன் பலத்து நின்றாலும்,

7.வியாழனுக்கு மூன்று, ஐந்து, ஏழு, இவைகளில் புதன் இருக்க, புதனுக்குப் பத்தில் குரு இருந்தாலும்,

8. இலக்கின அதிபதி, குரு செவ்வாய் இவர்கள் மூன்றில் நிற்க, அல்லது பார்க்க, இரண்டு ஒன்பதில் பாபக் கோள் இருந்தாலும்,

9. இலாப அதிபதி உச்சனாகி, இலாப ஸ்தானத்தைக் குரு பார்க்க, சுக்கிரன் கேந்திர கோணத்தில் இருந்தாலும்,

10. ஒன்பது, பன்னிரண்டில் புதன் இருக்க, ஒன்று, ஐந்து இவைகளில் குரு இருக்க, அஷ்டம அதிபன் பலத்து நின்றாலும்,

11. நாலோனும், குருவும் பாக்கியத்தைப் பார்த்தாலும், இருந்தாலும், குரு உச்சம் பெற்றாலும், வௌ்ளியும், குருவும் ஒன்றுக்கு ஒன்று நட்பாய்ப் பார்த்தாலும், வௌ்ளி உச்சம் பெற்று நின்றாலும்,

12. குரு, புதன் இலக்கினத்தைப் பார்க்க, இலக்கின அதிபதி உச்சம் பெற்று நின்றாலும், 13.இராகு, இருந்த இராசி அதிபதி உச்ச கேந்திர திரிகோணத்தில் இருக்க, இராகு சுப வீடேறி சுப வர்க்கம் பெற்றாலும், பேரிகை யோகமாகும்.

போக போக்கிய யோகம்

ஒரு நல்ல யோகம். அது ஒன்பதுக்கு உடையவன் நின்ற திரேக்காண ராசியில் ஐந்தாம் அதிபன் இருக்க, ஐந்தில் குரு இருப்பதாகும்.


மகா யோகம்

பரிவர்த்தன யோகம்,

1. அது இலக்கின அதிபன் இரண்டு, நான்கு ஐந்து, ஏழு, ஒன்பது, பத்து, பதினொன்று ஆகிய இவைகளில் இருக்க, அவ்வீட்டதிபர் இலக்கினத்தில் நிற்பது,

2. இரண்டுக்கு உடையவன் நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது, பத்து ஆகிய இவைகளில் இருக்க, அவ்வீட்டதிபர் இரண்டில் நிற்பது,

3. நாலுக்கு உடையவன் ஐந்து, ஏழு, ஒன்பது, பத்து, பதினொன்று ஆகிய இவைகளில் இருக்க, அவ்வீட்டு அதிபர் நாலில் நிற்பது,

4. ஐந்துக்கு உடையவன் ஏழு, ஒன்பது, பத்து, பதினொன்று ஆகிய இவைகளில் இருக்க, அவ்வீட்டதிபர் ஐந்தில் நிற்பது,

5. ஏழுக்கு உடையவன் ஒன்பது, பத்து, பதினொன்று ஆகிய இவைகளில் இருக்க, அவ்வீட்டதிபர் ஏழில் நிற்பது,

6. பாக்கிய அதிபன் பத்து, பதினொன்று ஆகிய இவைகளில் இருக்க, அவ்வீட்டதிபர் பாக்கியத்தில் இருப்பது,

7. பத்தோன் பதினொன்றில் இருக்க, பதினொன்றோன் பத்தில் நிற்பது.

குறிப்பு: மேற் காட்டியுள்ள ஏழு பிரிவுகளில் முதலாவது பிரிவில் கண்டவை ஏழு வகையாய்க் கிரகங்கள் மாறி நிற்கும். இரண்டாவதில் ஆறு வகையாய் மாறி நிற்கும். மூன்றாவதில் ஐந்து வகையாய் மாறி நிற்கும். நான்காவதில் நான்கு வகையாய் மாறி நிற்கும். ஐந்தாவதில் மூன்று வகையாய் மாறி நிற்கும். ஆறாவதில் இரண்டு வகையாய் மாறி நிற்கும். ஆறாவதில் இரண்டு வகையாய் மாறி நிற்கும். ஏழாவதில் ஒரே வகையாய் நிற்கும். இவைகள் இருபத்தெட்டு வகையாய் மாறி நிற்கும். இவை விசேஷ நல்ல யோகமாகும்.

மகுட யோகம்

ஒரு நல்ல யோகம். அது ஐந்தில் குரு இருக்க, ஐந்தோன் ஒன்பதில் இருக்க, பத்தில் சனி நிற்பதாகும்.

மச்ச யோகம்

ஒரு நல்ல யோகம். அது ஒன்று, ஒன்பது இவைகளில் பாவர் இருக்க, நாலில் பாவிகள் இருந்தாலும், சர ராசி இலக்கினமாக இலக்கினத்தைச் சுபர் நோக்க, சரத்தில் குரு இருக்க, கேந்திரத்தில் சுபர் இருக்க, இலக்கின அங்கிச கேந்திர கோணத்தை ஐந்தாம் அதிபன் பார்த்தாலும், ஸ்திர ராசியில் குரு சுக்கிரன் இருக்க, திரிகோணத்தில் கிரகங்கள் இருக்க, இலக்கினத்தில் கிரகங்கள் வலுவுற்று இருந்தாலும், மூன்றுக்கு உடையவனுடைய அங்கிச அதிபதி, உச்சம் பெற்றிருக்க, சுபக்கிரகம் பார்த்தாலும், பாக்கிய அதிபன் இருந்த அங்கிச அதிபதி குரு சுக்கிரனாக கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும், இலக்கின அதிபதி, சுப அங்கிசம் பெற்று தேவலோக அங்கிசமுமாகி, பாக்கிய அதிபதி, சிங்க அங்கிசம் பெற அல்லது கேந்திரம் இருக்க சரராசி இலக்கினமானாலும், மச்ச யோகமாகும்.

மந்தாகினி யோகம்

ஒரு நல்ல யோகம். அது அஷ்டமத்தில் குரு, சுக்கிரன் இருக்க, சரராசி இலக்கினமாகி அதில் புதன் இருக்க, ஐந்து, ஏழு பதினொன்றில் சூரியன், சந்திரன், சனி இவர்கள் இருப்பதாகும்.

மரண யோகம்

நாச யோகம். ஒரு கெட்ட யோகம். அது நாலாம் ராசி முதல் ஏழாம் ராசி வரை ஏழு கிரகங்கள் நிற்பது. விவரம் அமிர்தாதி யோகத்தில் காண்க.

மாலிகா யோகம்

ஒரு விசேஷ நல்ல யோகம். அது இலக்கினம் முதல் ஏழு ராசி வரையில் இராகு கேது நீங்கிய ஏழு கிரகங்கள் நிற்பதாகும். நாலாம் இடம் முதல் பத்தாம் இடம் வரை இராகு கேது நீங்கிய ஏழு கிரகங்கள் நிற்பதாகும்.

மாளவ யோகம்

1. இரு பாம்பு, மதி, இரவி ஆகியவர்கள் நீங்கிய பஞ்சக் கிரகங்கள், ஆட்சி, உச்சம் இவைகளில் கேந்திரித்து நிற்பதாகும்.

2. சுக்கிரன், மூலத் திரிகோணம், ஆட்சி, உச்சம், கேந்திரம், உதயம் இவைகளில் நிற்பதாகும்.

மிருக யோகம்

ஒரு நல்ல யோகம். அது எட்டோன் நின்ற அங்கிச அதிபன் சுபக் கோளோடு பாக்கியத்தில் இருக்க, பாக்கிய அதிபதி உச்சம் பெற்று நின்றாலும், விரையாதிபன் ஆட்சி பெற அஷ்டம அதிபன் நான்கு, பன்னிரண்டு இவைகளில் இருக்க, பாக்கிய அதிபன் பார்வை பெற்று நின்றாலும் இந்த யோகமாகும்.


மிருதங்க யோகம்

ஒரு நல்ல யோகம்.

1. அது இலக்கின அதிபதியின் அங்கிச அதிபதி எந்த அமிசையில் அமிசை பெற்றிருக்கின்றானோ அதற்கு உடையவன் உச்ச கேந்திர கோணத்தில் சுபக்கிரகத்துடன் கூடி நின்றாலும்,

2. செவ்வாய் ஆட்சி பெற்று, அமிசையில் உச்சாங்கி‘ம் பெற்று நிற்க, வியாழன் ஏழாம் நோக்குப் பெற்று நின்றாலும்,

3. ஐந்தோன் நின்ற அங்கிச அதிபன் கேந்திர கோணத்திலாவது, அல்லது உச்சாங்கிசத்திலாவது நின்றாலும்,

4. சூரியன், செவ்வாய் ஆகிய இவர;கள் ஆறு, எட்டில் நிற்க, சூரியன் நின்ற அங்கிசத்துக்கு, சனி கேந்திர கோணத்தில் இருந்தாலும்,

5. இலாப அதிபன் உச்சமாய் சுக்கிரனோடு நிற்க, இவர்கள் இருந்த இராசி அதிபர் கேந்திரத்தில் நின்றாலும் இந்த யோகமாகும்.

மீன யோகம்

இலாப அதிபனுடன் வௌ்ளி கூடி உச்சம் பெற்றும், இலக்கின அதிபன் கேந்திரம் பெற்றும் நிற்பதாகும்.

முசல யோகம்

ஒரு நல்ல யோகம். பத்தில் பாம்பு இருக்க, பத்தாம் அதிபனும் உச்சம் பெற்று, சனி பார்வையோடு இருந்தாலும், இராகு, கேது நீங்கிய ஏழு கிரகங்கள் ஸ்திர ராசியில் நின்றாலும் இந்த யோகமாகும்.

மேக யோகம்

ஒரு நல்ல யோகம். அது வியாழனுக்கு மூன்றில் வௌ்ளியும், வௌ்ளிக்கு ஒன்பதில் சூரியனும், பத்துக்கு உடையவன் நாலிலும் இருப்பதாகும்.

மேதினி யோகம்

ஒரு சம யோகம். அது ஐந்து, ஒன்பது, ஏழு, பத்து இவைகளில் சுபர்கள் இருக்க, பாவர் நோக்கு இல்லாது இருப்பதாகும்.

யுக யோகம்

இராகு, கேது நீங்கிய சூரியனாதி எழுவரும், இரண்டு இராசியில் நிற்பதாகும். இது ஒரு கெட்ட யோகம்.

யூப யோகம்

ஒரு நல்ல யோகம். அது இலக்கினம் முதல் நான்காம் ராசி வரை இராகு, கேது நீங்கிய சூரியாதி எழுவர் நிற்பதாகும்.

யோகம்

1. அதிர்ஷ்டம், பலம், பொருத்தம்,

2. அமிர்தாதி யோகம் முதலியன,

3. ஆனந்தாதி யோகம் முதலியன,

4. சாதக யோகம் முதலியன

இது உத்தமம், மத்திமம், அதமம், என்னும் மூன்று வகை உள்ளது. இதன் ஒவ்வொன்றுள்ளும் பல பிரிவுகள் உள்ளது,

5. பஞ்சாங்க உறுப்பில் ஒன்று. இது விஷ்கம்பம், பிரீதி, ஆயுஷ்மான், சௌபாக்கியம், சோபனம், அதிகண்டம், சுகர்மம், திருதி, சூலம், கண்டம், விருத்தி, துருவம், வியாகாதம், அரிஷ்ணம், வச்சிரம், சித்தி, விதிபாதம், வரியான், பரிகம், சிவம், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரம், பிரமம், ஐந்திரம், வைதிருதி என்பன வட மொழிப்பெயர். இவைகட்கு முறையே கம்பம், பிரியம், வாழ்நாள், புண்ணியம், நலம், மாகண்டம், அறம், துணை, சூலம், கண்டம், ஆக்கம், நிலை, அரவு, எக்களிப்பு, வேல், வல்லமை, கொலை, காயம், தாழ்வு, காட்சி, திறம், புகழ், காவல், தெளிவு, பிரமா, இந்திரன், பேய் என்பதாக தென் மொழிப் பெயராகும். இவற்றுள் கம்பம், கண்டம், அதிகண்டம், சூலம், வியாகாதம், வச்சிரம், விதிபாதம், பரீகம், வைதிருதி இந்த ஒன்பது நீங்கிய மற்றவை நல்லனவாகும். இவற்றுள்ளும் கம்பத்தில் மூன்றும் சூலத்தில் ஐந்தும், கண்டத்திலும், அதி கண்டத்திலும் ஆறும், வியாகாதத்தில் ஒன்பதும் கழித்து நின்ற நாழிகையே ஆகாதது ஆகும்.

6. அட்டாங்க யோகம் முதலியனவாகும்.


யோக வகை - 4

மரண யோகம், சித்த யோகம், அமிர்த சித்த யோகம், அமிர்த யோகம்.

வசுமத்யோகம்

சந்திரனுக்காவது, இலக்கினத்திற்காவது உப செய ஸ்தானத்தில் எல்லாச் சுப கிரகங்களும் நிற்பது. இதன் பலன் திரவிய விருத்தி.

வச்சிரயோகம்

ஒரு நல்ல யோகம். அது நாலு, பத்து ஆகிய இடங்களில் பாபக்கிரகங்கள் இருக்க மற்ற இடங்களில் சுபர்கள் இருப்பதாகும்.

வல்லகி யோகம்

வீணை யோகம் பார்க்க.


வாசி யோகம்

ஒரு சுப யோகம்.

அது 1. சூரியனுக்கு முன்னே சுக்கிரன் நின்றாலும்,

2. சூரியனுக்கு முன்னே சனி நின்றாலும்,

3. சூரியனுக்குப் பின் எல்லாக் கிரகங்களும் நின்றாலும்,

4. சூரியனுக்குப் பின் சனி, செவ்வாய் நின்றாலும்,

5. சூரியனுக்குப் பின் புதன் நின்றாலும்,

6. சூரியனுக்குப் பின் குரு, சுக்கிரன் கூடி நின்றாலும், இந்த யோகமாகும்.

7. சுபம் அல்லாத யோகம், சூரியனுக்குப் பின் சனி நின்றாலும்,

8. சூரியனுக்கு விரையத்தில் சந்திரன் நீங்கிய சுபக்கிரகங்கள் நின்றாலும் இந்த யோகமாகும்.

விகக யோகம்

ஒரு மத்திம யோகம். அது சூரியாதி எழுவர் நாலாம், பத்தாம் இடங்களில் இருப்பதாகும்.

விகட யோகம்

ஒரு தீய பலன். அது நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து இந்த ஸ்தானங்களில் ஏழு கிரகங்கள் கூடி நிற்பது.

விசய மாலிகா யோகம்

ஒரு நல்ல யோகம். அது பதினோராம் இடம் முதல், ஐந்தாம் இடம் வரை இரு பாம்பு நீங்கிய ஏழு கிரகங்கள் நிற்பது.

விட்ணு யோகம், விஷ்ணு யோகம்

ஒரு நல்ல யோகம். அது கரும அதிபதி பாக்கியாங்கிசம் ஏறி, பாக்கிய ஸ்தானத்தில் பாக்கிய அதிபனோடு கூடி நிற்பது.

விரிஞ்சி யோகம்

ஒரு நல்ல யோகம். அது இலக்கின அதிபன், குரு, சனி ஆகிய இவர்கள் கேந்திர கோணங்களில் ஆட்சி, உச்சம், நட்பு இவைகள் பெற்று நிற்பதாகும்.

விருட்டுணு யோகம்

விட்டுணு யோகம் பார்க்க.

மேலும் பல யோகங்கள் காணப்பெறுகின்றன.

(கற்பித்தல் தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/serial/p12.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License