நவக்கிரகங்கள்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
கேது
1.தாமசன் என்னும் மனுவின் புத்ரன். 2.சண்முக சேநவீரன். 3.விப்பிரசித்திக்குச் சிம்மிகையிடத்துப் பிறந்த அசுரன். இவன் தவத்தால் கிரகபதம் பெற்றான், அக்நிக்கு விகேசியிடம் பிறந்தான் எனவுங் கூறுவர். இராகுவைக் காண்க. ஆறு குதிரைகள் பூட்டிய தேருடையான்.
ஞானம், கேவலம், தெய்வத் தியானம்.
தவம், மௌனம், வைராக்கியம், சன்னியாசம், நிதானம், திடசித்தம், மன வெறுப்பு, மயக்கம், வீடு இல்லாமை, மோட்சம் தாயைப் பெற்ற பாட்டன் வாழ்வு ஆகிய இவைகளுக்குக் காரகன் ஆகும்.
கதிர்ப்பகை, சிகி, செம்பாம்பு, மதிப்பகை, மதியுண்ணி, மற்றும் பாம்பின் பெயர்கள் எல்லாம் பொருந்தும். ஒரு கோள். மோட்ஷகாரகன்.
(நிறைவடைந்தது)

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.