கரும்பாம்பு. இராகுவும் தலையும் ஒரே பொருளைக் குறிப்பன. நவகிரகங்களுள் ஒன்று. (செ.ப.அக.) கிரகபதம் அடைந்தவர்களில் ஒருவன். இவன் தந்தை விப்ரசித்தி. தாய் சிம்மிகை. தம்பி கேது. இவன் தந்தை விப்ரசித்தி. தாய் சிம்மிகை. தம்பி கேது. இவர்களிருவரும் கச்யபருக்குப் பேரன்மார். விஷ்ணுமூர்த்தி சகன் மோகினி உருக்கொண்டு தேவர்களுக்கு அமுது பகுத்தளித்தக் காலத்தில், இராகு தேவவுருக் கொண்டு சூரிய சந்திரர் இருவருக்கும் இடையில் இருந்து வாங்கிப் புசித்தனன். இவ்விருவரும் இராகுவை விஷ்ணு மூர்த்திக்குக் குறிப்பித்தனர். மோகினி உருக் கொண்ட விஷ்ணு, இராகுவைத் தலையிற் சட்டுவத்தால் அடித்தார். பிரிந்த சிரம் இராகுவென்றும் மற்ற தேகம் கேதுவென்றும் பெயருற்றுச் சூரியச் சந்திரர் தங்களைக் குறிப்பித்த காரணத்தால், அவர்கள் மேற் பகைமை கொண்டு தவ வன்மையால் மறைப்பர் என்பர். இவர்கள் தவத்தால் கிரக பதம் அடைந்தனர். இவர்கள் விஷ்ணுவை எண்ணித் தவமியற்றிக் கரும்பாம்பு செம்பாம்பின் உருவாயினர். சூரியனுக்கு 13000 விஸ்தார யோசனை உள்ள மண்டலத்தில் இருப்பவர்கள். இவன் தேர் 8 குதிரைகள் பூட்டிச் செல்லும். இந்த இராகு, கேதுக்கள் முறைப்படி கிரகங்கள் அல்ல. இந்துக்கள் அவற்றைச் சாயாகிரகம் என்பர;. ஆயினும் இவை சூரியனை ஒரு முறை சுற்றி வர பதினெட்டரை வரு‘ங்கள் ஆகின்றன என்பர். (இலக்.கொத்.வேற்றுமை 28 உரை.) இராகு திருமாலின் சக்கரத்தால் வெட்டுண்டது. (கோடீச். கோவை 215 வரை). முழு மதிப்பை கரும்பாம்பு ---- இராகுவின் பெயர். (சுகர்நாடி ப.114.) இராகு கேது சேர்ந்த நவக்கிரகங்கள் (நீடுர்.பு.ஆலால.18.) எழுமதியுண்ணும் இராகுவென (கேதுபு. தேவிபுர.563 சங். அக.) சந்திரன். அம்புலி திங்கள் ---- இராக்கதிர் (திவா..நி.56.) உலவிய பசுங்கதிர் பனிக்கதிர் இராக்கதிர் (திவா.நி.25.) இராக்கதிரில் பாய்ந்த இல் இரா (தேம்பா. 2,2,111.) (சுகர்நாடி ப.112.)
பாம்பு
அரவு, ஆயிலிய நாள், இராகு, கேது, ஆயில்ய நாள், இராகு கேதுக்களின் பொதுப்பெயர்.
இராகு
கரும்பாம்பு, தமம், மதிப்பகை, மதியுணி. சாயாக் கிரகங்களில் ஒன்று, கோமேதகம். கரும்பாம்பு நவகிரகங்களில் ஒன்று.