இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Book Review
புத்தகப் பார்வை

ஒவ்வொரு கணமும்


ஆசிரியர் சுகதேவ்
பிரிவு புதுக்கவிதை
பக்கங்கள் 142
பதிப்பு 2019
ISBN 978-1-64546-513-3
விலை ரூ.170/-
பதிப்பகம் Notion Press
முகவரி old No. 38, New No.6, McNicholos Road, Chetpet, Chennai - 600031
தொலைபேசி எண் 044-42524252
அலைபேசி எண் -----

புத்தகப் பார்வை:


“எல்லாம் நமதே; எப்போதும் நமதே” எனும் நினைப்பில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்க, தனது வாழ்க்கையை ‘ஒவ்வொரு கணமும்’ நினைத்துப் பார்த்து வாழ்பவர்கள் மிகச் சிலரே...! அவர்களுள் ஒருவராக சுகதேவ், இன்றைய சமூகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு செயல்களை விவரித்தும், விமர்சித்தும் பல கவிதைகளை எழுதி, ‘ஒவ்வொரு கணமும்’ எனும் தலைப்பில் நூலாக்கம் செய்திருக்கிறார். தமிழ் இதழியல் பரப்பில், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கட்டுரைகள், இலக்கிய நேர்காணல்கள் வழியாக அறியப்பட்ட சுகதேவ், இந்தக் கவிதைத் தொகுப்பின் வழியாகக் கவிஞராகவும் புதுத்தோற்றம் பெற்றிருக்கிறார்.

இந்நூலில் இடம் பெற்றிருக்கும், ‘இன்பம்’ என்று தலைப்பிடப்பட்ட ஒரு கவிதை இது.

“கடலை மிட்டாய்
கருத்துச் சுதந்திரம்
கடித்துச் சுவைக்க சுவைக்க
இரண்டுமே இன்பம்”

கருத்துச் சுதந்திரத்தைக் கடலை மிட்டாயுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கும் கவிஞர், சாலையோரங்களில் நடந்து செல்ல முடிவதில்லை என்று குறைப்பட்டுக் கொள்கிறார். உண்மைதான், உள்ளூரில் உலா வரும் வாகனங்களில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்க, அதன் வழியாகச் சந்திக்கும் சாலை விபத்துகளுக்கும் குறைவில்லை. சாலையில் அவ்வப்போது ஆம்புலன்ஸ் வாகனங்கள் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக விரைந்து கொண்டேதான் இருக்கின்றன. இதையெல்லாம் கவனித்த கவிஞர்,

“அந்த ஆம்புலன்ஸ்
கடக்கும் போது
அவன்
சிவாயநம சொல்கிறான்
சாலையோரம்
மரண பயத்தின்
நடமாட்டம் அதிகம்”

என்கிறார். கடந்து செல்லும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுபவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவன் ‘சிவாயநம’ என்று உச்சரிக்கின்றானா? இல்லை, சாலையோரம் நடந்து செல்லும் நமக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் ‘சிவாயநம’ என்று உச்சரிக்கின்றானா? என்று இந்தக் கவிதையின் வழியாக நம்மைச் சிந்திக்க வைக்கிறார்.

தற்போதெல்லாம் தமிழ்நாட்டில் போராட்டங்களுக்குப் பஞ்சமில்லை. எதையாவது ஒன்றை முன் வைத்துப் போராட்டங்கள் நடத்தப் பெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களெல்லாம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுகின்றதோ இல்லையோ, சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதாகவே அமைந்திருக்கின்றன. இதையெல்லாம் பார்த்த கவிஞர், நம்மை ‘பார்’ என்று அறிவுறுத்துகிறார். எப்படி?

“என்ன
எதற்கெடுத்தாலும்
போராட்டம்
போ... போ... போய்
தேரோட்டம் பார்”

என்கிறார். போராட்டங்களைக் கைவிட்டுக் கோயில்களில் நடத்தப்பெறும் தேரோட்டங்களைப் போய்ப் பார்க்க வேண்டும் என்கிறார். ஆண்டு முழுவதும் கோயிலுக்குள் சென்று பார்த்து வந்த இறைவன், ஆண்டுக்கொரு முறையாவது அவர்களைத் தேடிக் கோயிலை விட்டு வெளியில், ஊரைச் சுற்றித் தேரில் வலம் வந்து மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறார். இறைவனே, நம்மைத் தேடி வருகிறான் என்று மனம் ஆனந்தம் கொள்கிறது. இறைவன் மீதான நம்பிக்கையும் அதிகமாகிறது. ஆண்டவன் வெளியில் வருவது போல், ஆண்டு கொண்டிருப்பவர்களும், தாங்களிருக்கும் இடத்தை விட்டுச் சிறிது கீழிறங்கி வந்து மக்களைச் சந்தித்தாலே போதும்... பல்வேறு போராட்டங்கள் தேவையில்லாமல் போய்விடும் என்கிற உட்கருத்தை மிக எளிமையாகச் சொல்லிவிட்டார்.


எந்தவொரு விலங்கினங்களையும் துன்புறுத்தக் கூடாது என்கிற சட்டம் கடுமையாக்கப்பட்டுவிட்டதால், தெருக்களில் திரியும் நாய்களின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டன. தெரு நாய்களைக் கட்டுக்குள் வைத்திருந்த உள்ளாட்சி அமைப்புகள், தற்போது இதனைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டன. இதனால், பல இடங்களில் தெரு நாய்களால் மக்களுக்கான தொல்லையும் அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றன. இந்த நிலையை எப்படிச் சொல்வது? என்பதை மறைமுகமாகத் தனது ‘யார் துரத்துவது?’ எனும் கவிதையின் வழியாகச் சொல்கிறார்;

“முன்னிரவில் வீடு திரும்புவதற்கே
அச்சமாக இருக்கிறது
வீதிகளில்
நிறைய நாய்கள் திரிகின்றன
எனக்கும் அந்த நாய்களுக்கும்
முன்பகை இல்லை
பெரிதும் அமைதி காத்துதான்
என்னைக் கடக்க விடுகின்றன
எப்போதாவது குரைக்கின்றன
என் தோற்றத்தைப் பார்த்தோ
தோளில் தொங்கும் பை பார்த்தோ
அப்படிக் குரைப்பதும்
என்பொருடா என்றும்
உறுதியாகத் தெரியவில்லை
ஆனாலும் அச்சத்துடனே
வேகமாக நடக்கிறேன்
இப்படித்தான்
இல்லாத அச்சம்
வாழ்க்கை நெடுகிலும்
நம்மைத் துரத்துகிறது”

இதன் மூலம் வாழ்க்கையிலும் சில தெருநாய்களால், நமக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படலாம், அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் வாழ்க்கையில் நாம் முன்னோக்கிப் பயணித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று முடிவில் வழிகாட்டுவதும் நன்றாகத்தான் இருக்கிறது.

மனிதன், தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் உணவைத் தேடி உழைத்துக் கொண்டிருக்கிறான். அந்த உழைப்பைச் சுரண்டிப் பலர் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பிழைப்பில் அவர்களுக்கு உணவை விடப் பணம் எனும் காகிதமே மேலானதாக இருக்கிறது. காகிதக் கட்டுகளைச் சேர்க்க விரும்பும் அவர்களிடம் மனிதர்களுக்குத் தேவையான எதையும் காண முடிவதில்லை. அந்தக் காகிதங்களைச் சேர்ப்பதில் அவர்களுக்கு அரசியல்வாதிகளேப் பெருந்துணையாக இருப்பதால், ஏற்றத்தாழ்வுகள் ஏராளமாக நிறைந்து கிடக்கின்றன. இதனால், ஓரிடத்தில் உணவு மிகுதியும், மற்றொரு இடத்தில் உணவுப் பற்றாக்குறையும் இருந்து கொண்டேயிருக்கின்றன. இதனை நீக்க, ஒரு வேளை உணவாவது முழுமையாகக் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்பதை ‘உணவும் உணர்வும்’ எனும் கவிதை வெளிப்படுத்துகிறது. அந்தக் கவிதை;

“அடுத்த வேளை உணவின்றி
எண்ணற்றோர்
போதுமான உணவின்றி
எண்ணற்றோர்
உரிய உணவின்றி
எண்ணற்றோர்
கிடைத்தை உண்போர்
எண்ணற்றோர்
அவர்களிடம்
உணவு நெறிமுறைகளை
திணிப்பது
எந்த அண்ட நியாயம்?
குறைந்தபட்சம்
ஒரு வேளையாவது
அவர்களுக்கு வழங்குங்கள்
தேவாமிர்தம்”


நெகிழிப்பைகளின் வரவால் காகிதப் பைகளும், துணிப்பைகளும் காணாமல் போய்விட்டன. மஞ்சள் நிறத்திலான துணிப்பை பயன்பாடு முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டது. அதனால், மஞ்சள் பை வைத்திருப்பது ஏழ்மையின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. நெகிழிப்பைக்கு அழிவில்லை என்பதால் அது சாலை, நீர்நிலை, செடிகொடிகள் என்று புவியின் மேற்பரப்பிலிருந்த அனைத்தையும் ஆக்கிரமித்தது. அது புவியினுள்ளேப் புதைந்து போனாலும் நீர் சேமிப்பிற்கு அச்சுறுத்தலாகிப் போனது. அதனைத் தொடர்ந்து அரசு, நெகிழிப்பையை மட்டுமின்றி நெகிழிப் பயன்பாட்டையே முற்றிலுமாகத் தடுத்தது. அதனைத் தொடர்ந்து, மீண்டும் காகிதப் பைகளும், துணிப்பைகளும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இன்று மஞ்சப்பை இயற்கையின் நண்பணாக மீண்டும் அனைவரது கையிலும் இருப்பதைப் பார்த்த கவிஞர்;

“மஞ்சப்பை
கடைக்கோடி மனிதர்களின்
அடையாளமாக
ஏழ்மையின் சித்திரமாக
இயலாமையின் முன்னறிவிப்பாக
பார்க்கப்பட்டது
அதுபோன்ற துணிப்பைகளுடன்
நடமாடியவர்களை
கேலிக்கும் கேள்விக்கும்
உள்ளாக்கியது சமூகம்
இன்று,
எல்லோர் கைகளில்
துணிப்பை
மஞ்சப்பை 2.0
இயற்கை நின்று நிகழ்த்தும்”

என்று இயற்கையின் தேவையை உணர்ந்து கொள்ளச் செய்திருப்பது பாராட்டுக்குரியது.

வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வேலையில்லாமலிருக்கும் மகன்களைப் பெற்றோர்கள், மகன்களை ஒன்றுக்கும் உதவாதவனாகவே நினைக்கின்றனர். அவர்களை நாயை விடக் கீழானவர்களாகவேக் கருதுகின்றனர். அதனைப் பெற்றோர்களின் புலம்பல்கள் உறுதிப்படுத்துகின்றன என்பதைக் கவிஞர் தனது ‘அவதூறு’ கவிதையின் மூலம்

“அந்த நாய்
எப்போதும் இப்படித்தான்
குமுறினார் நண்பர்
வீட்டில் வளர்க்கிறீர்களா என்றேன்
பெற்றுத் தொலைத்தேன் என்றார்
மனம் வலித்தது
இல்லாத வீடுகளில் கூட
நாய்களின் பெயரால்
நடத்தப்படும்
அவதூறுகளை நினைத்து”

வருத்தப்பட்டிருக்கிறார். இந்த வருத்தம் அவரது பார்வையில் சரியாகத் தோன்றினாலும், மகன் விரும்பியபடியெல்லாம் படிக்க வைத்த பெற்றோர், அந்தப் படிப்பெல்லாம் வீணாகப் போய்விடுமோ என்கிற அச்சத்திலிருப்பதையும், மகனின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்கிற வருத்தத்திலிருப்பதையும் கவிஞர் கவனத்தில் கொள்ள வேண்டும்.


கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீர்ப்பரப்பாக இருக்கும் கடலின் பெரும்பகுதியைக் அதன் கரைகளே அடையாளப்படுத்துகின்றன என்று ‘இங்கே நின்று பார்’ எனும் கவிதை மூலம் நம்மைப் பார்க்கச் சொல்கிறார்.

“கடலின்
பிரம்மாண்டத்தை
பிரகடனம் செய்கிறது
கரை”

கடலின் பெரும்பகுதி பிரம்மாண்டமாக இருந்த போதிலும், அதிலிருந்து ஆர்ப்பரித்து எழும் அலைகள் பெரும் வேகத்துடன் புதிய இடத்தைத் தேடி வரும் போது, அவற்றைக் கரைகளே அமைதிப்படுத்தி மீண்டும் கடலுக்குள் திருப்பி அனுப்பி வைக்கின்றன. மனித வாழ்வில் அவ்வப்போது எழும் துயரங்கள் மனதை வருத்திக் கவலைக்குள்ளாக்கும் போது, அவர்களுக்கு மன ஆறுதல் தருமிடங்களாக இந்தக் கடலும் கரையும்தான் இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

காலமாற்றம் பல வரலாறுகளை மாற்றிப் போட்டிருக்கிறது. வாழ்க்கையில் எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலும், காலச்சுழற்சியில் அனைத்தும் மாறிப்போய்விடுகிறது. இதனை நம் கவனத்திற்குக் கொண்டு வரும் கவிஞர்,

“காலம்
நிழலற்றது
யாரும்
ஒதுங்கமுடியாது”

என்று சொல்லி, வாழ்வில் வரும் அனைத்து இன்ப துன்பங்களையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகிறார்.

‘ஒவ்வொரு கணமும்’எனும் தலைப்பிலான இந்நூல் கட்டுரையாளரான சுகதேவை, ஒவ்வொரு கணமும் நம் முன் கவிஞராகவும் நினைவில் கொண்டு வரும் என்பது மட்டும் உண்மை.

- மு. சு. முத்துக்கமலம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/bookreview/p107.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License