இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Book Review
புத்தகப் பார்வை

மெல்லப் பதுங்கும் சாம்பல்நிறப் பூனை


ஆசிரியர் வதிலை பிரபா (ஆங்கிலத்தில்: அமரன்)
பிரிவு கவிதை
பக்கங்கள் 144
பதிப்பு அக்டோபர்’ 2016
ISBN -----
விலை ரூ.125/-
பதிப்பகம் ஓவியா பதிப்பகம்
முகவரி 17-13-11, காந்திநகர் மெயின்ரோடு, வத்தலக்குண்டு - 642 202, திண்டுக்கல் மாவட்டம்.
தொலைபேசி எண் 04543 - 262686
அலைபேசி எண் 7667557114, 9629652652.

புத்தகப் பார்வை:


வதிலை பிரபாவின் படைப்புகளைத் திறனாய்வு செய்யும் தகுதி எனக்கில்லை. பாராட்டும் அறிவு இருக்கிறது. வார்த்தை நாணயத்தோடு எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன். 'அவையஞ்சார் ஆகுலச்சொல்லாக அமையாது' என்ற நம்பிக்கையுடன்.

திரு. அமரன் அவர்கள் முன்னுரையில் குறிப்பிட்ட வகைப்பாடுகளுக்குள் என்னால் சிக்கிக்கொள்ள இயலாது. காரணம் "ச்சீ. காட்டுமிராண்டி" என்ற அண்ணன் அறிவுமதியின் ஒற்றை வரியில் ஒளிந்திருக்கும் அர்த்தங்களை வரம்பிட முடியாது. உணர்ச்சியோடுதான் அணுக முடியும். அவ்வித அணுகுமுறையே இதுவும்.

“உன்னிடத்திலுமா
இத்தனை நிறபேதங்கள்
வானவில்லே?”

என்கிற சமுதாயச்சாடல் அழகுணர்ச்சியில் இருந்து பிறந்திருப்பது அருமை.

”உலர்ந்த மணலில்
உறைந்து கிடக்கும் விதை.
விழுந்தது மழைத்துளி”

களவா, கற்பா, இயற்கையா இல்லை உங்கள் கவிதையா எனப் பல்வேறு காட்சிகளை மனம் திரையிட்டுப் பார்க்கிறது.

“ஆழிப்பேரலை
அள்ளிச்சென்றது
ஜாதி முட்களை”

அற்புதமான பதிவு இது. மனிதர்கள் ஜாதிகளை இழந்துவிடவேண்டும் என்பதற்காகவே இயற்கை அடிக்கடி கோபப்பட வேண்டும் என்று தோன்றுகின்றது.

“காற்றிலாடும்
ஒற்றை இறகு
வசப்படுமா வானம்?”

என்ற கேள்வியினூடே...

“காற்றில் அலையும்
உதிர்ந்த சிறகொன்றை
முந்தும் பறவை”

என்ற நம்பிக்கை விதையும் விதைக்கப்படுகிறது.

“யானைக்கூட்டம்
ஊருக்குள் நுழைந்தன.
காடு தேடுமோ?”

மனிதனின் ஆக்கிரமிப்பை வெளிப்படுத்தும் அருமையான உத்தி.

“ஆடம்பர விழா
சிதறிக்கிடந்தன பண்டங்கள்
மொய்க்கும் விழிகள்”

இது இந்தச் சமூகத்தின் ஒரு பக்கம்.

“தேநீர் குடிக்க
தேநீர்க் கடைக்காரன்
தேநீர் போடுகிறான்”

வாழ்க்கையை எளிமையாகப் புரியவைக்கும் வரிகள்.

“தொலைதூரப் பயணம்
இருக்கையில் உறைந்து கிடக்கும்
அலைகிற மனசு”

எப்படிப்பட்ட விடுதலை? உணர்ந்தும் பார்க்கலாம். தத்துவமாகவும் பார்க்கலாம்.

மிச்சமிருக்கிற காதலும், காற்றைப் புயலில் இருந்து பிரித்தெடுக்கும் புல்லாங்குழலும், "மியாவ்" பூனையும், ஓய்வெடுக்கும் துடுப்பும், இறந்து கிடந்த வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களும் வாழ்க்கையை சொல்லிக் கொண்டே போகின்றன. மொத்தத்தில் எல்லாக் கவிதைகளும் மூன்று வரியில் முப்பது வரி பாராட்டுக்குரியன.

வெவ்வேறு கருத்துக்களை உணர்த்தினாலும் சில உவமைகள் மீண்டும் மீண்டும் வருவதைத் தவிர்த்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது. மொத்தத்தில் சாம்பல் நிறப் பூனை, வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களோடு... மனமுவந்த பாராட்டுக்கள்.

ஆங்கிலம் அதிகம் அறிந்தவனில்லை நான்... எனினும், மூலத்தின் கவிதை நயமும், அழகும் மொழிபெயர்ப்பில் இல்லாதது போல் எனக்குத் தோன்றுகிறது. உதாரணமாக அண்ணன் அறிவுமதியின் "உண்டு உண்டு வட்டியும் முதலும் " என்பது வழக்குச் சொல். அது அப்படியே"Beware of principal with interest" என்று மொழிபெயர்க்கப்பட்டிருப்பது.

You will pay dearly for it. You will go to rock and ruin. Get your just deserts. You will have retribution. You will get your comeuppance. இப்படிப் பல வழக்குகள் ஆங்கிலத்தில் உண்டு.

அதைப் போலவே உங்கள் கவிதைகளின் மொழிபெயர்ப்பில் எனக்கு நிறைய உடன்பாடில்லை.



உதாரணமாக;

"மெல்ல அவிழும் விடியல்" இதில் அவிழும் என்பதில் உள்ள கவிதை அழகு "brightening dawn" ல் என்னால் உணர முடியவில்லை.

மியாவ் பூனை என்பதற்கும் The cat's "meow" தூரம் அதிகமாக இருப்பதுபோல் உணருகிறேன்.

ஊரும் எறும்புகள் - the slow ants

நினைவுக்கரு - embryo of memory

உப்புக்கரிக்கும் காதல் - love tasting salty

சொந்தம் தேடும் விழிகள் - developing relationship

- இப்படிக் கவிதையின் தனித்துவம் மொழிபெயர்ப்பில் காணவில்லையோ என்ற எண்ணம். நான் சரியா? என்பதை மற்றவர்கள்தான் எனக்குப் புரிய வைக்க வேண்டும்.

மற்றபடி உங்கள் சாம்பல்நிறப் பூனை என் புத்தகங்களோடு பதுங்கிக் கிடக்காது. சத்தமிட்டுக் கொண்டே இருக்கும்.

தோன்றியதை எழுதிவிட்டேன். நான் தவறுகளுக்கு அப்பாற்பட்டவன் அல்ல.

- அகத்தியன் (திரைப்பட இயக்குநர்)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/bookreview/p84.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License