Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Children - Parable
சிறுவர் பகுதி - குட்டிக்கதை

ஆந்தை நாணயம்


ஒரு அழகான கிராமத்தில், ஏழை வியாபாரி ஒருவர் வாழ்ந்து வந்தார். தனது வீட்டில் தின்பண்டங்களைச் செய்து அதை ஒரு மிதிவண்டியில் வைத்துக்கொண்டு தெருத்தெருவாகச் சென்று விற்று வருவது தான் அவருடைய தொழில்.

அவர் என்னதான் உற்சாகமாகவும், நேர்மையாகவும் அந்தத் தொழிலைச் செய்தாலும், அவருக்கு அதன் மூலமாகப் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை. பல நேரங்களில், முதல் போட்டு தின்பண்டங்கள் செய்வதற்குக் கூட, அவரிடம் பணம் இருக்காது.

இப்படியிருக்க, ஒரு நாள் இரவு நேரத்தில், அவர் வியாபாரம் முடிந்து வந்து கொண்டிருக்கும் போது, வழியில் யாரோ இருவர் ரகசியம் பேசிக்கொள்வது, அவர் காதில் கேட்டது.

பொதுவாகவே, நம்மில் பலருக்கு ரகசியத்தை ஒட்டுக் கேட்கும் ஆர்வம் உண்டல்லவா? அது மாதிரியே அந்த வியாபாரிக்கும் ஒரு ஆர்வம்.

அதனால், 'அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் ?' என்பதைக் கவனித்துக் கேட்டார்.

"நம்ம கிராமத்துல, யாரோ ஒருத்தர் கிட்ட ஆந்தை நாணயம்னு ஒண்ணு இருக்கு" என்றார் ஒருவர்.

"ஆந்தை நாணயமா? அப்படியென்றால் என்ன?", என்றார் மற்றவர்.

ஆக மொத்தத்தில், வியாபாரியின் காதில் ஒன்று மட்டும் தெளிவாக விழுந்தது. அதாவது, அந்த ஊரில் யாரிடமோ ‘ஆந்தைத் தலை’ பதிக்கப்பட்ட நாணயம் ஒன்று இருக்கிறது. அந்த நாணயத்தை பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் சென்று காட்டி, நிலா தேவதையிடம் ஏதாவது கஷ்டத்தைக் கூறினால், நிலா தேவதை இறங்கி வந்து ஒரு பொக்கிஷத்தைத் தருவாள். இது மட்டும் அந்த வியாபாரிக்கு நன்றாகப் புரிந்தது.

இப்படி அந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்ட பின்னர், அவருக்கு ஒரு நப்பாசை. 'ஒருவேளை இதெல்லாம் உண்மையாக இருந்து, தனக்கு அந்த நாணயம் கிடைத்தால், தனது கஷ்டமெல்லாம் தீர்ந்து விடுமே!' என்று அவருக்குள் ஒரு எண்ணம்.

ஆதலால், அடுத்த நாளிலிருந்து, தனக்குக் கிடைக்கும் எல்லா நாணயங்களையும் பரிசோதனை செய்ய ஆரம்பித்தார். ஆனால், அவர் நேரமோ, என்னவோ, அந்த ஆந்தை நாணயம் அவரது கைகளில் கிடைக்கவே இல்லை.

இப்படியே நாட்கள் கடந்து செல்ல, அந்த வியாபாரியின் பொருளாதார நிலைமை சிறிது சிறிதாகச் சரிய ஆரம்பித்தது. அவர் கொண்டு சென்ற தின்பண்டங்கள் வியாபாரமாகவில்லை. அதனால், மீண்டும் முதல் போட்டு தின்பண்டங்களைச் செய்ய முடியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருநாள் பயங்கரமான மழைக்கு மத்தியில், அவர் தனது மிதிவண்டியிலிருந்து கீழே விழுந்து விட்டார். பதறிப்போனார் அந்த வியாபாரி. தின்பண்டங்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்துவிட்டன. ஜாடிகள் உடைந்துவிட்டன. மிதிவண்டியும் பழுதாகிவிட்டது.


இனி இவற்றையெல்லாம் சீர் செய்யாமல், வியாபாரத்தை எப்படித் தொடர முடியும் ? சீராக்க வேண்டுமென்றால், அவரிடம் ஏது காசு?

"ஐயோ, கடவுளே! எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனைகள்? இப்படி அடுக்கடுக்காகப் பிரச்சனைகள் தொடர்ந்து வந்தால், நான் என்னதான் செய்வேன்?" என்று மனமுடைந்து அழுதார்.

பின்னர், அந்த உடைந்த மிதிவண்டி, நொறுங்கிய ஜாடிகள், பிற பொருள்கள் என எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, உடைந்த மனதுடன் தனது வீட்டுக்குச் சென்றார்.

வீட்டிலோ மனைவி, குழந்தைகள் அனைவரும் பசியோடு உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

அவர்களிடம் வியாபாரி, நடந்த எல்லாவற்றையும் கூறி, இதற்கு மேல் தனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லையென்று அழுதார்.

அப்போது, அவற்றையெல்லாம் கேட்ட அவரது சிறிய மகன் அடுப்பங்கரைக்கு சென்று ஒரு சிறிய மண் உண்டியலை எடுத்து வந்தான்.

"அப்பா, எதுவுமே இல்லைன்னு நினைக்காதீங்க... இதோ, இதுல நான் கொஞ்சம் காசு சேர்த்து வச்சிருக்கேன். விளையாடுறதுக்கு பொம்ம வாங்கணும்னு நெனச்சேன். ஆனா பரவாயில்லை, இத நீங்களே வச்சிக்கோங்க. இத வச்சி எதாவது செய்யுங்க..." என்று அன்போடு கூறி அந்த உண்டியலைக் கொடுத்தான்.

கண்ணீருடன் அந்த மண் உண்டியலைப் பெற்றுக்கொண்ட வியாபாரி, அதை உடைக்கத் தயங்கினார்.

ஆனால், அவருக்கு வேறு வழியே கிடையாது. அதனால், மனதை மிகவும் கல்லாக்கிக் கொண்டு அந்த உண்டியலை உடைத்தார்.

உண்டியலும் உடைக்கப்பட்டது. அதிலிருந்த சில்லறைகள் எல்லாம் சிதறின.

"ஆந்தை நாணயம், ஆந்தை நாணயம்" என்று கத்தினான் அவர் மகன்.

“ஆம், அத்தனை நாள் அவர் தேடிக்கொண்டிருந்த ஆந்தை நாணயம், அவரது வீட்டிலேயே இருந்த சிறிய மண் உண்டியலில்தான் இருந்தது”


அவர் உடனே அந்த ஆந்தை நாணயத்தை எடுத்துக் கொண்டு தேவதையை வரவழைத்தார். தன் கஷ்டத்தைச் சொல்லி அதனை நீக்கிப் பெரும் செல்வத்தைப் பெற்றுக் கொண்டார்.

அந்த வியாபாரிக்கு அடுக்கடுக்காக சில பிரச்சனைகள் வரவில்லையென்றால், நிச்சயமாக அந்த மண் உண்டியல் அவர் கண் முன்னே உடைக்கப்பட்டிருக்காது. நாணயமும் அவர் கண்ணுக்குத் தெரிந்திருக்காது. வேண்டுமென்றால், அந்தச் சிறுவன் தானாகவே அதை உடைத்து, விளையாட்டுப் பொம்மைகள் வாங்கியிருப்பான்... அவ்வளவுதான்.

அதுபோல்தான், நமக்கு வரும் இந்தப் பிரச்சனைகளும், நாம் சந்திக்கும் சவால்களும் இல்லையென்றால், நமது பலத்தையே நம்மால் அறிய இயலாது போய்விடும்.

அதனால், இன்னொரு முறை "எனக்கு மட்டும் ஏன் இப்படி?" என்று கேட்கும் முன்னர், நாம் அடுத்த கட்டத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உங்கள் மனதில் பதிய வைத்தால் போதும். பிரச்சனைகள் சவால்களாகத் தெரியும். நீங்கள் முன்னேறி விடுவீர்கள்...!

- பா. காருண்யா

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/children/parable/p146.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License