இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Children - Parable
சிறுவர் பகுதி - குட்டிக்கதை

சிறந்த சீடன்


ஓர் ஊரில் ஒரு குருகுலம் இருந்தது. அங்கு பயின்று வந்த சீடர்கள் அனைவருமே பெரும் திறமைசாலிகள் என்று அனைவராலும் பேசப்பட்டும் வந்தது. அந்தக் குருகுலத்தில் வருடாவருடம் சிறந்த சீடன் யார்? என்று தேர்ந்தெடுத்து, அவர்களுக்குச் சிறந்த சீடன் என்ற பட்டமும் வழங்கப்படும். இந்த வருடமும் யார் சிறந்த சீடன்? என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்தது. குருகுலத்தின் தலைமைக் குருவும், யார் சிறந்த சீடன்? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ஆலோசனையில் இறங்கினார்.

குருகுலத்தில் உள்ள அனைத்துக் குருக்களையும் அழைத்தார். அவர்களிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர்களை யார் சிறந்த மாணவன்? என்று தேர்ந்தெடுக்கத் தகுதியுடையவர்களைப் பரிந்துரை செய்யச் சொன்னார். அவர்கள் அனைத்துச் சீடர்களிடமிருந்து, மூன்று சீடர்களை மட்டும் தேர்ந்தெடுத்தனர். ஆனால் சிறந்த சீடன் என்ற பட்டம் ஏதேனும் ஒரு சீடனுக்குத்தான் சென்று சேர வேண்டும் என்பது குருகுலத்தில் விதிகளில் ஒன்று. ஆனால், இந்த மூன்று மாணவர்களும் ஒருவருக்கொருவர் எதிலும் விட்டுக்கொடுத்தவர்கள் இல்லை. கல்வி, வீரம் மற்ற கலைகள் என எல்லாவற்றிலும் சமமான மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

சரி இந்த மூவரில் யார் சிறந்தவர் என்று கண்டுபிடிப்பது? என்று கண்டறிய இயலாத குருக்கள் அனைவரும் தலைமை குருவிடம் சென்றனர்.

தலைமைக் குரு, அவர்கள் மூவரில் ஒருவரைச் சரியாகத் தேர்வு செய்யும் பணியினை ஏற்றுக்கொண்டார்.

அதன் பிறகு, தலைமைக் குரு அவர்கள் மூவரில் ஒருவரை எப்படித் தேர்வு செய்வது என்று மிகவும் யோசித்து கொண்டிருந்தார்.

என்ன செய்யலாம்? எப்படி இவர்களில் சிறந்தவரைக் கண்டுபிடிப்பது? இதில் பாரபட்சம் பார்க்காமல் செயல்பட வேண்டுமே... என்று குரு தீவீரமாக யோசித்தார்.

மிகுந்த யோசனைக்கு பிறகு ஒரு போட்டியின் மூலம் மூவரில் யார் சிறந்தவர்? என்று கண்டுபிடிக்கலாம் என்ற முடிவிற்கு வந்தார்.

அதன் பிறகு, அந்த மூன்று சீடர்களையும் தன்னுடைய அறைக்கு வரும்படி அழைத்தார்.

அந்த மூன்று மாணவர்களும் தலைமைக் குருவின் அறைக்கு வந்து சேர்ந்தனர்.

“கூறுங்கள் குருவே...” என்று மூவரும் ஒரே நேரத்தில் கூறினார்கள்.

“இதில் கூட இவர்களிடம் இவ்வளவு ஒற்றுமையா?” என்று வியந்தார் குரு.

“வாருங்கள் சீடர்களே... உங்களுக்கு ஒரு வேலை சொல்வதற்காகத்தான் உங்களை இங்கு அழைத்தேன். அதை நீங்கள் மறுத்து விடக் கூடாது என்றார்.

சீடர்களும், “நாங்கள் நிச்சயம், நீங்கள் சொல்லும் வேலையைச் செய்து முடிப்போம். குருவே கூறுங்கள்” என்றனர்.

“நான் ஆசை ஆசையாக ஒரு கிளி ஒன்றை கூண்டில் வைத்து வளர்த்து வந்தேன். அதற்கு உணவு அளிப்பதற்காக, இன்று காலை கூண்டைத் திறந்தேன். அந்த நேரத்தில், அந்தக் கிளி கூண்டை விட்டு வெளியே வந்து, பறந்து சென்றுவிட்டது. எனக்கு அந்தக் கிளியென்றால் மிகவும் பிரியம். எனக்காக அந்தக் கிளியை நீங்கள் கண்டுபிடித்துத் தர வேண்டும்”‌ என்றார்.

சீடர்களும் ஆர்வ மிகுதியால், “நிச்சயம் நாங்கள் கண்டுபிடித்து தருகிறோம். குருவே, அந்தக் கிளி எந்த வழியாகப் பறந்து போனது? என்று எங்களுக்கு காட்டுங்கள்” என்றனர்.


குருவும் தன் சீடர்களைப் பின்பகுதியிலிருந்த ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு நீண்ட மற்றும் அகலமான ஆறு ஒன்று தெரிந்தது. அதை தாண்டி ஒரு சிறு தீவு தெரிந்தது.

“என் கிளி இந்த ஆற்றைக் கடந்து அந்தத் தீவுக்குத்தான் சென்றது” என்றார் குரு.

உடனே மூவரும் ஆற்றில் குதித்து ஆற்றைக் கடக்கத் தயாரானார்கள். ஆற்றில் குதிக்கச் சென்ற சீடர்களை குரு தடுத்தார்.

“என்ன சீடர்களே அவசரத்தில் அறிவிழந்தீர்களா?இந்த ஆற்றில் முதலைகள் இருப்பதை மறந்துவிட்டீர்களா?” என்று கேட்டார்.

தங்கள் அவசர புத்தியை உணர்ந்த சீடர்கள். அந்த தீவுக்கு செல்ல வேறு வழி ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தனர்.

அப்பொழுது அங்கு பழுதடைந்த நீண்ட பாலம் ஒன்று இருந்தது. அதன் வழியாக அந்த ஆற்றைக் கடக்கலாம். ஆனால், அந்தப் பாலத்தின் வழியாக ஒரு நேரத்தில் ஒரு சீடர் மட்டும்தான் செல்ல முடியும்.

முதலாவதாக இருந்த அந்தச் சீடர், தான் அந்த பாலத்தைக் கடந்து கிளியைக் கொண்டு வருவதாகக் கூறி, பாலத்தில் ஏறி நடக்க ஆரம்பித்தார். இந்த சீடர் நடக்க நடக்கப் பாலம் ஆடிக்கொண்டே இருந்தது. எப்படியாவது கிளியைப் பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னேறி நடந்தான். ஆனால், தீடீரென பாலத்தின் நடுவேச் சிறிது தூரம் எந்த ஒரு கட்டைகளும் இல்லாமல் பாலம் சிதைந்து இருந்தது. இந்த இடைவெளியை எப்படிக் கடப்பது? என்று யோசித்துக் கொண்டிருந்த மாணவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. பாலத்தின் ஒரு பக்கத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டே இந்த இடைவெளியைக் கடந்து விடலாம் என்று யோசித்தான். அவ்வாறேப் பிடித்துத் தொங்கிக் கொண்டே நகர்ந்தான். பாதி தூரம் சென்றதும், கை வலி பின்னியது. பாலத்திலிருந்து கீழே உள்ள ஆற்றில் விழுந்தான். ஆற்றில் முதலைகள் இருப்பதை அறிந்து, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வேகமாக நீச்சல் அடித்துக் கரைக்குத் திரும்பினான்.

அடுத்ததாக, இரண்டாவது சீடனும் முயற்ச்சித்தான். அதே போல், அந்த உடைந்த இடத்தைக் கடக்கும் பொழுது அதே போல் ஆற்றில் விழுந்தான்.

மூன்றாவது சீடனும் வந்தான். நானும் முயற்சித்துப் பார்க்கிறேன் குருவே என்றான்.

சரி என்று குரு சொல்ல, வேகவேகமாகப் பாலத்தை கடக்க முயன்றான். ஆனால் அந்தச் சீடனும், அந்த உடைந்த இடைவெளியைக் கடக்க முடியாமல் ஆற்றில் விழுந்தான்.

இப்படி மூவரும் ஆற்றில் விழுந்து, நம்மால் இந்தப் பாலத்தைக் கடக்கவே முடியது என்ற மனநிலையைத் தங்களுடைய முகத்தில் சுமந்து கொண்டு சோகமாக ஒரு மரத்தடியில் உட்கார்ந்தனர்.

குரு அவர்கள் மூவரையும் பார்த்தார்.

சிறந்த சீடனுக்கான தகுதி இவர்களிடத்தில் இல்லை என்று அங்கிருந்து கிளம்ப முயற்ச்சித்தார்.

அப்பொழுது அங்கு இருந்த மூன்றாவது சீடன் எழுந்து வந்தான்.

“குருவே எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு தாருங்கள்...” என்று கேட்டான்.

குரு அவனைப் பார்த்தார்.

“நான் மீண்டும் முயற்சிக்க விரும்புகிறேன்” என்று கூறினான்.

அதன் பிறகு அந்தக் குரு, சீடனைத் தட்டிக் கொடுத்து, அவனைச் சிறந்த சீடனாகத் தேர்வு செய்தார்.


அந்த குருவிற்குத் தெரியும். இல்லாத பறவையை யாராலும் கொண்டு வர முடியாது என்று. எனினும், தன்னுடைய சீடர்களின் மனநிலையைத் தெரிந்து கொண்டு அவர்களில் யார் திடத்தன்மை வாய்ந்தவர்கள். மனதளவில் சக்தி வாய்ந்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்கவே இப்படி ஒரு போட்டியை வைத்தார். அதில், மூன்றாவது சீடன் மற்ற இருவரை விட, மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனாக இருந்ததால், அவனைச் சிறந்த சீடன் என்று அங்கிகரித்துத் தேர்வு செய்தார்.

முயற்சி செய்தால் மட்டும் அல்ல, முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கூட நீங்கள் மதிக்கப்படுவீர்கள்.

- பா. காருண்யா

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/children/parable/p150.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License