இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Children - Parable
சிறுவர் பகுதி - குட்டிக்கதை

சிறிய அறிவுரைக்கு நூறு பொற்காசுகளா?


ஒரு மன்னர் இருந்தார். அவர் ஒரு நாள் தன் அமைச்சரை அழைத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றார்.

அங்கே ஒரு முனிவர். அவர் முன்னால் அரசர் போய் நின்று, "சுவாமி... என்னை ஆசீர்வதியுங்கள். எனக்கு ஏதாவது அறிவுரை சொல்லுங்கள்!” என்று கேட்டுக் கொண்டார்.

முனிவர் அரசனை ஆசீர்வதித்தார். பிறகு கூறினார்:

"மகனே! நீ எந்தக் காரியத்தைச் செய்தாலும், அதைச் செய்வதற்கு முன்னால் ஒரு தடவை அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை நன்றாக யோசித்துப் பார். உன் மனதுக்கு 'அது சரி!' என்று தெரிந்தால் மட்டும் அதை நீ செய்ய வேண்டும்!” என்றார்.

அரசர், முனிவர் சொன்னதை அப்படியே மனதில் வாங்கிக் கொண்டார்.

அவர் முனிவர் காலடியில் விழுந்து வணங்கினார்; நூறு பொற்காசுகளை முனிவர் காலடியில் வைத்துவிட்டுத் திரும்பினார்.

அரசரின் செயலை அமைச்சர் கவனித்தார்.

அவர், 'என்ன இது! நமது அரசர் இவ்வளவு ஏமாளியாக இருக்கிறாரே... இந்த ஒரு சாதாரண யோசனை சொன்னதற்காக மன்னர் முனிவருக்கு நூறு பொற்காசுகள் கொடுத்து விட்டாரே!' என்று நினைத்தார்.

அமைச்சர் இப்படி நினைப்பது அவர் முகத்தைப் பார்த்ததுமே அரசருக்குப் புரிந்தது. இருந்தாலும் அதைப் பற்றி அமைச்சரிடம் அரசர் ஒன்றும் கேட்கவில்லை!


இரண்டு பேரும் அரண்மனைக்குத் திரும்பி வந்து சேர்ந்தார்கள்.

அதற்குப் பிறகு அரசர் என்ன செய்தார் தெரியுமா?

காட்டில் முனிவர் சொன்ன அந்தப் புத்திமதியை ஒரு கல்லில் கல்வெட்டாகச் செதுக்கினார். அதைத் தன் அறையில் எல்லோருடைய கண்ணிலும் படும் வகையில் பதித்து வைத்தார்.

இப்போதும் அரசரின் செயலைக் கவனித்த அமைச்சர், 'என்ன இது? நம் மன்னரின் அறியாமையைப் புரிந்து கொள்ளவே முடியவில்லையே! இதைப் போய் கல்லில் செதுக்கி வைக்க வேண்டுமா?' என்று நினைத்துக் கொண்டார்.

சில நாட்கள் கடந்தன.

ஒரு நாள் அந்த மன்னருக்குக் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது.

உடனே அவர் அரண்மனை வைத்தியரைக் கூப்பிட்டார்.

வைத்தியர் வந்து சேர்ந்தார். அவர் மன்னரைச் சோதித்துப் பார்த்துவிட்டு, “சிறிது நேரம் இப்படியே படுத்திருங்கள்... நான் எங்கள் வீட்டுக்குப் போய் இந்த நோய் நீங்குவதற்குரிய ஒரு மருந்தைத் தயார் செய்து கொண்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு விரைந்து சென்றார்.

வைத்தியர் வீட்டிலிருந்து மருந்து எடுத்துக் கொண்டு வந்த சமயத்தில் மன்னர் ஒரு கட்டிலில் கண்மூடிப் படுத்திருந்தார். அருகில் அப்போது யாரும் இல்லை.

வைத்தியர் வந்தார். ஒரு சிறிய கோப்பையில் கொஞ்சம் மருந்தை ஊற்றினார். சுற்றும் முற்றும் பார்த்தார். ஏதோ ஒரு பொடியை மருந்தில் கலந்தார்... கலந்து எடுத்துக் கொண்டு மன்னரை நெருங்கினார். கொஞ்சம் யோசித்தார். பிறகு திரும்பிப் போனார். கையிலிருந்த மருந்தைக் கீழே கொட்டிவிட்டு வந்தார். அந்தக் கோப்பையை நன்றாகச் சுத்தம் செய்துவிட்டு மறுபடியும் சிறிது மருந்தை ஊற்றி எடுத்துக் கொண்டு வந்து, "மன்னா!” என்று மெதுவாகக் கூப்பிட்டார்.

மன்னர் எழுந்தார்! “வைத்தியரே... நான் கண்களை மூடிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது நீங்கள் செய்ததைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். முதலில் எதையோ கலந்தீர்கள்... பிறகு அதைக் கொட்டிவிட்டு இப்போது வேறு கொண்டு வருகிறீர்கள். என்ன விஷயம்? உண்மையைச் சொல்லுங்கள்!” என்று மிரட்டினார்.

வைத்தியர் பயந்து போய்விட்டார்.


அப்படியே மன்னரின் காலில் பொத்தென்று விழுந்தார். உண்மையைச் சொன்னார்:

“மகாராஜா... உங்களுடைய படைத்தளபதி உங்களைக் கொல்ல சதி செய்தார். அவர் என்னிடம் விஷம் கலந்து உங்களுக்குக் கொடுக்கச் சொன்னார். அதன் பொருட்டு அவர் எனக்கு நிறைய வெகுமதி தருவதாகக் கூறினார். நானும் அதற்கு ஒப்புக்கொண்டு இங்கே வந்தேன். அவர் கொடுத்த விஷப்பொடியை மருந்தில் கலந்தேன்... அதை எடுத்துக் கொண்டு உங்களிடம் வந்த போது எதிரில் நீங்கள் வைத்திருக்கும், 'நீ எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதைச் செய்வதற்கு முன்னால் ஒரு முறை, அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை நன்றாக யோசித்துப் பார். உன் மனதுக்கு 'அது சரி' என்று தெரிந்தால் மட்டும் அதை நீ செய்ய வேண்டும்!' என்ற வாசகம் என் கண்ணில்பட்டது. அது என்னை யோசிக்க வைத்தது. நான் செய்யும் செயலால் என் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டேன். உடனே திரும்பிப் போய் விஷத்தைக் கொட்டி, கழுவிவிட்டு வேறு மருந்து ஊற்றிக் கொண்டு வருகிறேன்!” என்று தெரிவித்தார்.

இப்போது அந்த மன்னர் அமைச்சரைக் கூப்பிட்டு, “பார்த்தீர்களா... இந்தப் புத்திமதியை அன்றைக்கு நீங்கள் அலட்சியமாக நினைத்தீர்கள். இன்றைக்கு அதுதான் என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது!” என்றார்.

அமைச்சர் தலையைக் குனிந்து கொண்டார்.

எனவே, பெரியவர்கள் நமக்குச் சொல்லும் அறிவுரை ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் தெரியும்! அதற்காக நாம் அதை அலட்சியம் செய்யக்கூடாது.

- சித்ரகலா செந்தில்குமார்

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/children/parable/p192.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License