இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Children - Parable
சிறுவர் பகுதி - குட்டிக்கதை

தந்தையிடம் கற்றது!

உ. தாமரைச்செல்வி


பெற்றோரைப் பார்த்துத்தான் குழந்தை பலவற்றையும் கற்றுக்கொள்கிறது! பெற்றோர்கள் நல்ல பழக்கங்களைக் கொண்டிருந்தால், குழந்தையும் நல்லதையே கற்கும்.

பெற்றோரிடமிருந்து கற்க வேண்டியதைக் கற்ற மகனும், கற்கக் கூடாததைக் கற்றவனும்தான் எவ்வளவு வேறுபடுகின்றனர்!

தந்தையிடம் இருந்த நற்பழக்கங்களைக் கண்டு நல்லவற்றைக் கற்ற மகனின் கடிதம் இது!

அன்புள்ள அப்பாவிற்கு, வணக்கம்.

* சாலையில் யாரோ ஒருவருக்கு நீங்கள் உதவியபோது, பிறருக்கு உதவுவதை உங்களிடமிருந்து கற்றேன்.

* ஆறு வயதில் நான் வரைந்த முதல் ஓவியத்தை எனக்குத் தெரியாமல், பிரிட்ஜின் மேல் நீங்கள் ஒட்டியது அடுத்த படம் வரையும் ஆவலை என்னுள் தூண்டியது.

* தினமும் காலையில் அமைதியாக, நீங்கள் பூஜை செய்து விட்டு, பெரிய எழுத்துகள் கொண்ட ஒரு புத்தகத்தைப் படிப்பதைப் பார்ப்பேன். அதன் மூலம் பிரார்த்தனையுடன் ஒவ்வொரு நாளையும் துவக்க வேண்டும்; கடவுள் நம்முடன் பேச என்றும் தயார்; அவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் என அறிந்தேன்.

* தம்பிக்கு நீங்களே ஒரு டம்ளர் நீர் கொண்டு வந்து கொடுத்தபோது, ஒவ்வொருவரும் எந்தச் சிறு வேலையையும் மகிழ்வுடன் செய்ய வேண்டும் என்று கற்றேன்.

* குளிரால் நடுங்கிய எனக்கு நீங்கள் போர்வையைப் போர்த்தினீர்கள். நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள்; உங்கள் பாதுகாப்பில் நான் உள்ளேன் என அப்போது உணர்ந்தேன்.


* உங்கள் நண்பர் நோயுற்றபோது நீங்களே உணவெடுத்துச் சென்றீர்கள். பிறர் நலனில் அக்கறை கொண்டு ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.

* உங்கள் நேரம், பணம் இவற்றை ஏழைகளுக்குச் செலவிட்டீர்கள். இருப்பவர் இல்லாதவருக்குத் தந்து உதவ வேண்டும் என்று அறிந்தேன்.

* என் நண்பனை நீங்கள் பாராட்டினீர்கள். பிறரை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கற்றேன்.

* உடைந்த நாற்காலியை நீங்கள் சரி செய்தீர்கள். எதில் குறை இருந்தாலும் அதைச் சீர்செய்ய வேண்டும் என்று புரிந்தது.

* அமைதியான உங்கள் கண்களில் சில நேரங்களில் கண்ணீரைக் காண்பேன். அழுதால் மனம் லேசாகும் என்று புரிந்தது.

* என் ரொட்டிக்கு வெண்ணெய் வாங்க நீங்களே கடைக்குச் சென்றபோது, எந்தவொரு சிறு வேலையையும் ஆர்வத்துடன் செய்ய வேண்டும் என்பதைக் கற்றேன்.

* நம் வீட்டு வேலைக்காரி இறந்த சமயம், அவளது மகனைத் தேற்றினீர்கள். கௌரவம் பார்க்காமல் பிறரது துயரங்களை நம்முடையதாக உணர வேண்டும் என்று உங்களிடமிருந்து கற்றேன்.

* கிராமத்திலுள்ள கோயிலுக்குச் செல்ல கட்டணத்துக்கு மேல் அதிகப் பணம் தர மறுத்தீர்கள். நல்ல வழியில்தான் பணம் செலவழிக்க வேண்டும் என்று புரிந்தது.

* அன்று மாலை களைப்பாக வீடு திரும்பினீர்கள். ஆனாலும் ஜுரத்தில் படுத்திருந்த தம்பியை மருத்துவரிடம் கூட்டிச் சென்றீர்கள். தன் நலத்தை விட பிறர் நலனில் அக்கறை கொள்ள வேண்டும் என்று கற்றேன்.

* என் விருப்பப்படி பட்டப்படிப்பினை நான் விரும்பிய கல்லூரியிலேயே படிக்க அனுமதித்தீர்கள். உங்கள் எண்ணம் வேறாக இருந்தும்கூட நீங்கள் பெருந்தன்மையாக இருந்தீர்கள். நானும் அப்படி இருப்பேன்.

* எதிர்பாராமல் விருந்தாளிகள் வந்தபோதும் இன்முகத்துடன் அவர்களை வரவேற்றீர்கள். நாம் எந்த மனநிலையில் இருந்தாலும் அடுத்தவரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றல்லவா எனக்கு உணர்த்தினீர்கள்.

அப்பா! இப்படி நீங்கள் எப்போதும் பல வழிகளில் எனக்கு வழிகாட்டி வருகிறீர்கள். நன்றி.


தந்தையிடமிருந்து கற்கக் கூடாததைக் கற்ற ஒரு மகன் கூறுகிறான்:

அப்பா, என்னைப் பெற்றவரே!

* தாமதமாக வந்த செய்தித்தாள் வினியோகிப்பவனிடம் நீங்கள் கத்திய போதுதான் பிறரிடம் கோபத்துடன் கத்தலாம் என்பதைக் கற்றேன்.

* உங்களுக்கு போன் வந்தபோது ‘அப்பா வீட்டில் இல்லை’ என்று கூறுமாறு தங்கையிடம் சொன்னீர்கள். தேவைப்பட்டால் பொய் கூறலாம் என்று அன்றுதான் கற்றேன்.

*குப்பைக்கூளமான பத்திரிகையை நீங்கள் படிப்பதைப் பார்த்துத்தான் நல்ல நூல்களைப் படிக்கத் தேவையில்லை என்று கற்றேன்.

* ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி வரை தூங்குவீர்கள். விடுமுறை நாட்களில் தாமதமாக எழலாம்; வேலை நாட்களையும் விடுமுறை நாளாக கருதலாம் என்று அன்று கற்றேன்.

* ஒரு விருந்துக்கு நாம் போனபோது நீங்கள் மது குடித்ததைப் பார்த்தேன். நானும் அதைக் கற்றுக் கொண்டேன்.

* இரவு திரைப்படம் பார்த்துவிட்டு, காலையில் தாமதமாக எழுந்திருப்பீர்கள். மறுநாள் பரபரப்பாகி எல்லா வேலைகளையும் தவறாகச் செய்வீர்கள். நானும் அதையே செய்கிறேன்.

* நீங்கள் தெருவில் துப்புவீர்கள். நானும் துப்புகிறேன்.


* வாழைப்பழத் தோலை நடுவீதியில் வீசுவீர்கள். பிறர் கஷ்டப்படுவார்களே என்று நானும் கவலைப்படுவதில்லை.

* நீங்களும் அம்மாவும் உரத்த வாக்குவாதம் செய்யும்போது, பிரச்சனை வந்தால் இப்படிச் சண்டை போடலாம், ஒருவரையொருவர் வசைபாடலாம் என்று கற்றேன்.

* உருளைக்கிழங்கும், வெங்காயமும் விலையேறியதும் அதற்கும் கோபப்பட்டீர்கள். இப்படி ஒரு சிறு விஷயம் கூட என்னையும் இன்று கோபப்படுத்துகிறது.

* நம் குடும்ப நிகழ்ச்சிக்கு வராமல் ஒரு பார்ட்டிக்குப் போனீர்கள். நானும் வீட்டைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கக் கற்றுக் கொண்டது அன்றுதான்.

* பக்கத்து வீட்டுக்காரரிடம் நீங்கள் கடுமையாகப் பேசியபோது..., நானும் பிறரிடம் கடுமையாகப் பேச ஆரம்பித்தேன்.

* ஒரு சிறு வியாபாரிக்கு நீங்கள் பணம் குறைவாகக் கொடுத்தீர்கள். எளியவர்களையும் சாதாரணமானவர்களையும் நாம் ஏமாற்றலாம் என்று கற்றேன்.

ஐயோ அப்பா, நான் எப்படி இருக்கிறேனோ, அதை உங்களிடமிருந்துதான் கற்றேன். பின் என்னை ஏன் பொல்லாதவன் என்று கூறுகிறார்கள்?

நான் தடம் மாறியதற்கு நீங்கள் சென்ற பாதையில் தடம் பதித்ததுதான் மூலகாரணம்.

நல்லதைக் கற்றவன் நல்லவனானான். அதே வேளையில் கெட்டதைக் கற்றவன் கெட்டவனாகிப் போனான்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/children/parable/p215.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License