இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Children - Parable
சிறுவர் பகுதி - குட்டிக்கதை

அஷ்டா வக்ரன்


வேதங்கள் எல்லாம் நன்கு கற்றவர் உத்தாலகர். அவருடைய பெண்ணின் பெயர் சுஜாதா. உத்தாலகருக்கு பல சீடர்கள். அதில் ககோளரும் ஒருவர். அவருக்கு மனப் பாடமும் வராது, திருத்தமாக சுலோகங்களைச் சொல்லவும் வராது. தப்பும் தவறுமாய்ச் சொல்லி உடன் பயிலும் சீடர்களின் நகைப்புக்கும் கேலிக்கும் ஆளாவது அவரது இயல்பு. ஆயின் குருவிடம் ஆத்மார்த்த அன்பும் மரியாதையும் பக்தியும் உடையவர். குருசேவையில் ஒழுக்கத்துடன் நியம நிஷ்டைகளைக் காலம் தவறாமல் செய்தவர். அதனால் மகிழ்ந்த உத்தாலகர் தன் மகள் சுஜாதாவை அவருக்கு திருமணம் செய்வித்தார். அவள் கருவுற்றாள்.

ககோளர் தப்பும் தவறுமாக சுலோகம் சொல்வதைக் கேட்டு தாயின் வயிற்றினுள் உள்ள குழந்தை உடலை முறுக்கிக் கொள்ளுமாம். அவ்வாறு எட்டு முறை நேர்ந்ததனால் குழந்தை எட்டு கோணல்களுடன் பிறந்தது. அதனால் அனைவரும் அக்குழந்தையை அஷ்டா வக்ரன் என்றே அழைக்கலாயினர். உடலில் தான் கோணலே தவிர மனதில் கோணல் இல்லாத உத்தமபுத்திரன் அவன். பன்னிரண்டு வயதுக்குள் அக்கால வழக்கப்படி வேத வேதாந்தங்களையும், புராண இதிகாசங்களையும் கற்று வித்துவப் புகழ் அடைந்தான்.

மிதிலை மகாமன்னர் ஜனகர் அரண்மனையில் அமர்ந்து தர்பாரில் அதிகாரிகளுடன் அரசாங்கப் பணியினைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது சோர்வின் காரணமாய் சற்றே கண்ணயர்ந்துவிட்டார். அப்போது ஒரு கனவு.

நாடு நகரம், மக்கள், உறவு, பொருட்கள் அனைத்தையும் ஒருசேர இழந்து, உண்ண உணவின்றி, உடுத்திய உடையுடன் பலரிடம் இரந்து, யாரோ கொடுத்த சிறிய ஒரு பதார்த்தை யார் கண்ணிலும் காட்டாது ஒதுக்கமாக நின்று கொண்டு உண்ன முயன்றாராம். எங்கிருந்தோ பறந்து வந்த வல்லூறு அதையும் தட்டிப் பறித்துச் சென்றது. கண்விழித்து தன் பகற்கனவைப் பிறரிடம் கூறி விளக்கம் கேட்டார். விடை கிடைக்கவில்லை.

*****



மிதிலையில் வந்தி என்னும் பெயருடைய கொடியகுணம் படைத்த வித்துவான்,தன்னை மிஞ்சி எவரும் மேலே வந்துவிடக் கூடாது என்ற நோக்கோடு வம்படியாக பிறரை வாதுக்கு அழைத்து, தோற்கடித்து சாகும் வரை கடலில் மூழ்கடித்துக் கொன்று விடுவான்.

உத்தாலகர் மறைந்த பின்னர் கோளகர் பொன் பொருளுக்கு ஆசைப்பட்டு வந்தியிடம் வாதிடச் சென்று இனிய உயிரை விட்டார்.

தந்தை இறந்த விவரத்தை தாயின் மூலம் அறிந்த அஷ்டா வக்ரன் தனது அக்காள் மகன் சுவேதகேதுவுடன் வந்தியை எதிர்நோக்கப் புறப்பட்டான்.

அப்போது மிதிலையில் ஜனகர் ஒரு பெரிய யாகம் நடத்திக் கொண்டிருந்தார். தினம் தினம் யாகம் முடிந்ததும் பண்டிதர்கள் வேதாந்தச் சர்ச்சை செய்வார்கள்.

அஷ்டாவக்ரன் காலைச் சாய்த்து மெதுவாக நடப்பான். மிதிலையை நெருங்கி விட்டனர் அப்போது ''பராக்.... பராக்... வழிவிடுங்கள் ராஜா வருகிறார்'' என்று கட்டியம் கூறிக் கொண்டு காவலர் முன்னே வந்தனர். அரசர் நெருங்கி வந்து விட்டதால் சிறுவனை அதட்டினர்.

அஷ்டாவக்ரன் பேசினான், "உடல் ஊனமுற்றவர்களுக்கும், கர்ப்பிணி, வயோதிகர்களுக்கும், சுமை தூக்கிக் கொண்டு செல்பவர்களுக்கும் வழிவிட்டு அரசனும் தாமதித்துச் செல்ல வேண்டும் என நீதி நூல்கள் சொல்கின்றன. இல்லறத் துறவி எனப் புகழ் பெற்றிருக்கும் உங்கள் ஜனக மகாராஜா இதைப் படித்ததில்லையா?" என்று கேட்டான்.

அருகில் இதைக் கேட்டுக் கொண்டே வந்த ஜனகர் "இந்தப் பையன் சொல்வது சரிதான், நெருப்பில் சிறியது பெரியது உண்டோ? இவன் வேதாந்தப் பொறி போலும்" என்றபடி வேறு வழியாய்ச் சென்று யாக சாலையை அடைந்தார்.

யாகசாலையிலும் அஷ்டா வக்ரனை உள்ளே விட மறுத்தனர் காவலர்.

"யாக சாலையில் நுழைய எதைத் தகுதி என்கிறீர்கள்? வயதையா, செல்வத்தையா அறிவையா, நற்குடிப் பிறப்பையா, கல்வியையா, நற்குணங்கள் கொண்டவ ரென்பதையா, பெரிய இடத்து சினே கத்தையா ?

எங்களுக்கு தலை நரைக்கவில்லை .. கண் பஞ்சடையவில்லை.. காது செவிடாகவில்லை.. பற்கள் விழவில்லை.. நாங்கள் செல்வந்தர் இல்லை.. உறவினர்கள் எங்களுக்கு இல்லை.. அரசாங்கத்தில் வேண்டியவரெவரும் பதவி வகிக்கவில்லை.

வேத விற்பன்னரான உத்தான பாதரின் பேரன்கள் நாங்கள்... அறிவை சோதித்து அறிந்துகொள்ளுங்கள். நற்குணங்களைப் பழகித்தான் அறிய முடியும். பெரிய தராசாகயிருக்கலாம். அது இரும்பைத் தான் எடை போடும். தங்கத்தை எடைபோட சிறிய தராசு போதும். கடப்பாரையால் மண்ணைத் தான் தோண்ட முடியும் . துணியைத் தைப்பதற்கு ஊசியால்தான் முடியும். வயதையும் தோற்றத்தையும் வைத்து ஒருவரையும் சிறியவன் என்று முடிவுகட்டக் கூடாது" என்றான் அஷ்டாவக்ரன்.

"நில்... நீ தற்புகழ்ச்சி பேசுகிறாய். இதற்குள் நீ வேத வேதாந்தங்களையும் உபநிடதங்களையும் கற்றிருப்பாய் என்பதை என்னால் நம்பமுடியவில்லை " என்றான் காவலாளி. "அகத்தியர் உருவில் சிறியவர்.. கடலையே உண்டு உமிழ்ந்தவர். உன்னால் அவ்வாறு செய்ய முடியுமா? இலவங்காய் பருத்து இருக்கும். உடைத்தால் மெத்து மெத்தென்று பஞ்சு பஞ்சாய் இருக்கும். ஒதிய மரங்கள் பருத்திருக்கும். ஆனால் உறுதியில்லாததால் மர வேலைக்கு எடுக்க மாட்டார்கள். யானைக்காலுள்ளவன் வேகமாக ஓட முடியாது. துருவன் ஐந்து மாதம் தவமிரூந்து திருமாலைத் தரிசித்து விண்ணில் ஒளிவெள்ளியாகி விட்டான். ஞானிகளும் தவசிகளும் காலங்காலமாய் தவம் செய்து காத்திருக்க, பிரகலாதன் பக்திக்காக அரை நிமிடத்தில் தூணிலிருந்து நரசிம்மமாக வெளிவந்தார் விஷ்ணு. வயதை வைத்து அறிவை எடை போட வேண்டாம்" என்றான் அஷ்டாவக்ரன்.

மறைவிலிருந்து இவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஜனகர் வந்தார்.

"பாதையிலூம் சரி, இங்கும் சரி உன் பேச்சில் அறிவு முதிர்ச்சியையும், திறமையையும் கண்டேன். யாக சாலையில் வேதாந்த விவாதம் நடக்கப் போகிறது. அதற்கு உன் பாண்டித்யம் போதாது. வெம்பிப் பழுக்காமல் விளைந்தபின் வெளிப்படுவது நல்லதல்லவா?" என்றார் அரசர்.



"அரசே மாங்காய் ஊறுகாய் போட நினைப்பவன் பழங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பது அறிவீனம். மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக இளநீர் குடிக்க நினைப்பவன் தேங்காய் முற்றட்டும் என்று மரத்தடியில் காத்திருப்பது அறிவுடைமையாகுமா? செடியில் மலரட்டும் என்று மல்லிகையை விட்டு வைத்தால் மாலையாகக் கட்டிக் கடவுளுக்குப் போட முடியுமா? நான் கறிகாய் வகையைச் சேர்ந்தவன். மலரும் தருணத்திலுள்ள மல்லிகை. நான் உங்கள் வித்துவான் வந்தியுடன் வாதப் போர் செய்யவே இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். அனுமதி தரவேண்டும்" என்று வணக்கத்துடன் கூறினான் அஷ்டாவக்ரன்.

"சிறுவனே! வித்துவான் வந்தி பல பண்டிதர்களை வாதத்தில் தோற்கடித்துக் கொன்றிருக்கிறான். இந்தச் சின்னஞ்சிறு வயதில் அறிவுக் களஞ்சியமாய் திகழும் உன்னை நாடு இழந்துவிடுமே." என்று அஞ்சிமனம் பதைக்கிறது. என்று மன்னர் தயங்க,

"ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? இல்லற ஞானியான ஜனக மகாமன்னர் தாட்சண்யத்திற்காக வந்தியின் செயலைப் பார்த்ததுக் கொண்டு சும்மா இருக்கிறார். இல்லையேல் இந்த அநியாயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பாரா! " என்று ஊர்ப்பழியைத் துடைக்கப் பரந்தாமனால் அனுப்பப்பட்ட தூதன் என்று எண்ணுங்கள்! கடலில் முத்தும், மீனும் பவளமும் கொட்டிக் கிடக்கின்றன. ஆழத்தில் சென்று தேடுபவன் கையில் முத்தும் பவளமும் கிடைக்கின்றன.

இதுவரை ஆடுகளோடு மோதி வெற்றி கண்டு வந்த வந்தி என்னும் நரி அகம்பாவத்தோடு ஊளையிடுகின்றது. வந்திருப்பது சிங்கக்குட்டி.. அஞ்சாதீர்கள்! பிதுர்க்கடன் தீர்க்க வந்த அஷ்டாவக்ரனுக்கு வித்தையிலும் வாக்கு வன்மையிலும் கோணல் இல்லை" என அழுத்தம் திருத்தமாக சொன்ன பிறகு மறுத்துக்கூற ஜனகரிடம் எந்த உபாயமும் இல்லை. அஷ்டாவக்கிறனும் வந்தியும் சொற்போற் நடத்தினர்.

வந்தியின் கேள்விகளுக்கெல்லாம் அஷ்டா வக்ரன் தெளிவாகப் "பளிச் பளிச்" சென்று பதில் சொல்ல, அஷ்டாவக்ரனின் முதற் கேள்விக்கே பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தான் வந்தி.

வந்தி தோற்றுப் போனதாக சபையோர் தீர்ப்பளித்தனர். அஷ்டாவக்ரனுக்கு ஏராளமான பரிசுகள் அளித்து பேரசர் ஜனகர் கௌரவித்தார். நத்தையின் வயிற்றிலும் சிப்பிக்குள்ளும் முத்து பிறக்கிறது. சேற்றில் செந்தாமரை வளர்கிறது.

அரசரின் கனவிற்கு ஆன பதிலாக அஷ்டாவக்ரன் கூறிய மொழிகளே "அஷ்டாவக்கிர கீதை" என்று போற்றப்படுகின்றது.

-வெ. சுப்பிரமணியன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/children/parable/p28.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License