இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Children - Parable
சிறுவர் பகுதி - குட்டிக்கதை

காரைக்கால் அம்மையார்


இறைவன் சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார்.

சிவனடியாரான இவர் இறைவனைக் காண கைலாயத்திற்கு பேய் உருவில் தலை கீழாக நடந்து சென்றார். பார்வதி தேவி இந்த காட்சியை பார்த்து புருவங்கள் விரித்தார்.

"சுவாமி, இந்தக் கோலத்தில் வரும் இந்த பெண் யார்?" என்று சிவபெருமானை பார்த்துக் கேட்கிறார்.

"பார்வதி... உனக்கும், எனக்கும் அம்மை வருகிறாள்" என்கிறார் சிவபெருமான்.

இறைவன் தன்னை "அம்மையே..." என்று அழைத்ததால் தனது ஆனந்த கண்ணீர் வழிந்தோடு இறைவனை தரிசித்தார்.

"அம்மா... உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று வலிய கேட்ட இறைவனிடம், "மீண்டும் பிறவாமை வேண்டும்; மீறிப் பிறந்தால் உம்மை மறவாமை வேண்டும்" என்று கேட்டு, இறைவனையே மெய்சிலிர்க்க வைத்த பெருமைக்குரியவர் இந்த காரைக்கால் அம்மையார்.

இல்லற வாழ்க்கையில் ஆனந்தமாய் ஈடுபட்ட இந்த அம்மையார் எப்படி சிவனடியார் ஆனார்? கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் நடந்த அந்த வரலாற்றை புரட்டிப் பார்ப்போம்.

சோழ நாட்டில் உள்ள கடற்கரைத் துறைமுகப் பட்டிணமான காரைக்காலில் தனதத்தன் என்ற செல்வந்த வணிகனுக்கு ஒரே மகளாய் பிறந்தார். பெற்றோர் சூட்டிய பெயர் புனிதவதி. சிறு வயது முதலே சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். வளர்ந்து பருவ வயதை அடைந்ததும் புனிதவதிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடந்தது.



காரைக்கால் அருகே உள்ள மற்றொரு துறைமுகப் பட்டிணமான நாகப்பட்டினத்தில் வாழ்ந்த நிதிபதி என்ற செல்வந்த செட்டியாரின் மகனான பரமதத்தனுக்கு புனிதவதியை திருமணம் செய்து வைத்தனர்.

புதுமணத் தம்பதியர் காரைக்காலில் புதிய மாளிகை ஒன்றில் குடியேறினர். இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டாலும் புனிதவதியிடம் இருந்த சிவபக்தி சற்றும் குறையவில்லை. இதனால், அவரை சிவனாடியார்கள் பலர் தேடி வருவது உண்டு. அவ்வாறு வரும் அடியார்களுக்கு தலை வாழை இலையில் உணவு படைப்பார்.

ஒரு நாள் கணவன் பரமதத்தன் வியாபாரத்திற்கு புறப்பட்டு விட்டான். வீட்டில் புனிதவதி மட்டும் இருந்தார். அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

அன்று காலையில் நண்பர் ஒருவர் கொடுத்த 2 மாங்கனிகளை பணியாள் மூலம் வீட்டிற்கு கொடுத்து அனுப்பினான் பரமதத்தன். அதை பெற்றுக் கொண்ட புனிதவதி, வீட்டிற்கு அன்று வந்த சிவனடியார் ஒருவருக்கு இரண்டு பழங்களில் ஒன்றை உண்ணக் கொடுத்து விட்டார்.

மதியம் வீட்டிற்குச் சாப்பிட வந்த பரமதத்தனுக்கு சாப்பாட்டுடன் மீதம் இருந்த ஒரு மாங்கனியை வைத்தார். அதை உண்ட பரமதத்தனுக்கு போதும் என்ற திருப்தி வரவில்லை. மற்றொரு மாம்பழத்தைக் கொண்டு வர மனைவியை பணித்தான்.

வீட்டு அறைக்குள் சென்ற புனிதவதி என்ன செய்வது என்று தெரியாது இறைவனை வேண்ட, அவரது கையில் இறைவன் அருளால் ஒரு மாங்கனி வந்து சேர்ந்தது. அந்தப் பழத்தை கணவனிடம் உண்ணக் கொடுத்தார்.

அதை உண்ட பரமதத்தன் முகத்தில் திடீர் மாற்றம். "நான் கொடுத்த இரண்டு மாங்கனியும் ஒரே மாதிரியானவை தான். ஆனால், நீ கொடுத்த இரண்டாவது மாங்கனி மட்டும் தேவாமிர்தம் போல் இருக்கிறதே; என்ன காரணம்?" என்று கேட்டான்.

புனிதவதிக்கு பொய் சொல்ல மனமில்லை.

சிவனடியாருக்கு ஒரு பழத்தைக் கொடுத்ததையும், இறைவன் அருளால் மற்றொரு பழம் வந்ததையும் கூறினார். நம்பாத பரமதத்தன், "இரண்டாவது மாங்கனி கொடுத்த அதே இறைவனிடம் கேட்டு மற்றொரு மாங்கனியை வாங்கு பர்க்கலாம்" என்றான்.

"தாலி கட்டிய கணவனே இப்படி சோதனை செய்கிறானே" என்று எண்ணிய புனிதவதி, மனம் உருகி இறைவனை வேண்ட அவரது கையில் மேலும் ஒரு மாங்கனி தோன்றியது.



அதைக் கணவனிடம் கொடுத்தார்.

அந்த மாங்கனியை பரமதத்தன் உண்ண முற்பட்டபோது அது தானாகவே மறைந்தது. அதிசயித்துப் போய்விட்டான் பரமதத்தன்.

புனிதவதி தனது மனைவி என்பதை மறைந்து அவரைக் கையெடுத்து கும்பிட்டான். அவரைத் தெய்வமாகவே தொழுதான். நெருங்க மறுத்தான், விலகினான்.

வணிகம் செய்யும் பொருட்டு கப்பல் ஏறிச் சென்ற பரமதத்தன், பாண்டிய நாட்டில் ஒரு வணிகர் மகளை திருமணம் செய்து கொண்டு, ஒரு பெண் குழந்தைக்கும் தந்தையானான். அந்தக் குழந்தைக்கு புனிதவதி என்றே பெயர் சூட்டினான். இதையறிந்த புனிதவதி பாண்டிய நாடு வந்தார்.

பரமதத்தன் தனது இரண்டாவது மனைவி, மகளுடன் அவரைப் பார்க்க சென்றான். புனிதவதியை பார்த்த மாத்திரத்தில், அவரது காலில் இரண்டாவது மனைவி, மகளுடன் விழுந்து தெய்வமாக வணங்கினான்.

கணவனுக்கு உரிய இந்த உடம்பு இப்போது அவனுக்குத் தேவையில்லை என்று ஆகிவிட்டதை உணர்ந்த புனிதவதி இறைவனை வேண்டிப் பேய் வடிவம் பெற்றார். அந்தப் பேய் வடிவத்துடன் தான், தலை கீழாக நடந்து சென்று இறைவனை தரிசித்தார். இறுதியில் தொண்டை நாட்டில் உள்ள திருவாலங்காட்டில் முக்தி பெற்றார்.

மாறாத சிவ பக்தியால் இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட புனிதவதி, புனிதவதியார் என்றும், காரைக்காலில் பிறந்ததால் காரைக்கால் அம்மையார் என்றும் அழைக்கப்படுகிறார்.

- நெல்லை விவேகநந்தா.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/children/parable/p34.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License