இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுவர் பகுதி
கதை

கனவு மெய்ப்பட வேண்டும்!

ஜெயந்தி நாகராஜன்


திலகம் பத்திரிகைக்கு அடுத்த வாரம் அனுப்ப வேண்டிய சிறுகதையை மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது ‘அம்மா! உங்களுக்குப் போன்’ என்றபடி தொலைபேசியை என்னிடம் பணிப்பெண் கொடுத்தாள். மறுமுனையில் அண்ணா நகரில் மிகப் பிரபலமான பள்ளித் தலைமை ஆசிரியர் என்னை அவர்கள் பள்ளி விழாவிற்கு அழைக்கும் சேதியையும், தேதியையும் உறுதிப்படுத்தி எனக்கு நினைவூட்டினார்.

நானும் அப்பள்ளி விழாவில் கலந்து கொண்டு என் எழுத்துலக அனுபவங்கள் சிலவற்றை அவர்கள் முன் எடுத்து வைத்தேன். ‘’21ஆம் நூற்றாண்டில் நாம் இருக்கிறோம். இருந்தும் இன்னும் ஒரு காந்தியையோ, ஒரு விவேகானந்தரையோ நாம் பெறவில்லை என்ற என் ஆதங்கத்தைப் பெருத்த கரவொலியுடன் பதிவு செய்துவிட்டு அமர்ந்தேன்.

அப்போது ஒரு மாணவன் கூட்டத்திலிருந்து எழுந்து மெதுவாக என்னருகில் வந்தான். ‘அம்மா! உங்கள் கருத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன். என் கருத்தை அங்கிருந்தபடி உரத்த குரலில் கூறி எல்லோர் கவனத்தையும் என் பக்கம் திருப்பியிருக்க முடியும். ஆனால் அது உங்களைக் காயப்படுத்திவிடும்.’ என்று பேசிய அச்சிறுவனை வியப்புடன் பார்த்தேன். மேலும் அவன் பேசலானான். காந்தியைப் பெற்றெடுத்தவர் புத்லிபாய். விவேகானந்தரைப் பெற்றெடுத்த புண்ணியவதி புவனேஸ்வரி. இதனை இப்படியும் சொல்லலாம் அல்லவா? இன்னும் ஒரு புத்லிபாயோ, ஒரு புவனேஸ்வரியோ இன்று நம்மிடையே இல்லாததால் காந்தி, விவேகானந்தர் பிறக்கவில்லை அல்லவா?என்றான்.

அக்குழந்தையின் கேள்வி என்னை அசர வைத்தது. உடனே எழுந்து நின்றி அவன் கருத்தை அரங்கில் கூறி இதுதான் உண்மை. அப்பனுக்குப் பாடம் சொன்ன முருகன் போல் நிற்கும் அவனைப் பார்த்து, உன் பெயரென்ன என்று கேட்க விரும்பினேன். அதற்குள் அவனே தன் பெயர் ஆனந்தன் என்று சொன்னான். ஆனந்தனின் அறிவாற்றல் என்னைப் பிரமிக்க வைக்கிறது. ஆனந்தன் என் கண்களுக்கு விவேகனந்தராகவே தெரிகிறான் என்று பாராட்டி விடைபெற்றேன்.

அன்று முழுவதும் என்னை ஆனந்தனே ஆக்கிரமித்துக் கொண்டான். மறுநாள் அவன் பள்ளிக்கே சென்று அவனைப் பற்றிய விவரங்களை முதல்வரிடம் கேட்டறிந்தேன். உள்ளம் துடிதுடித்தேன். எமனின் பினாமியாய் வந்த சுனாமி அலை அவன் குடும்பத்தைச் சுருட்டிக் கொள்ள ஒற்றை ஆளாய் அவன் மட்டும் தப்பி இங்கே கரை சேர்ந்ததைக் கேட்டதும் அவனை வளர்க்கும் பொறுப்பை நான் ஏற்கிறேன். அவன் சம்மதத்தைக் கேட்டுச் சொல்லுங்கள் என்றேன்.



இதோ! இப்போது ஆனந்தன் என் பிள்ளை. அவனது ஒழுக்கம், பரந்துபட்ட சமுதாயப் பார்வை, அவனது தேடல் என அனைத்தையும் என்னால் முடிந்தவரை மேலும் மெருகேற்றி வருகிறேன். நான் பேசப்போகும் இடங்களுக்கு அவனும் வருகிறான். அன்று நான் ஒரு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்குச் சென்றிருந்தேன். இளம் சிறார்களைக் குற்றவாளிகளாகப் பார்க்கையில் என் இதயம் கனத்தது. இதற்கு யார் காரணம்? எனும் கேள்வி என்னைத் துளைத்தெடுத்தது.

அன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது ஆனந்தன், அம்மா ! நான் இவர்களுடன் பேச ஆசைப்படுகிறேன் ‘ என்றான். அதிகாரியின் சம்மதத்தைப் பெற்ற பிறகு அவன் அவர்களிடம் பேசலானான். மிகவும் இயல்பாக உரையாடி வந்தவன் திடீரென ஆசிரியரின் சிறப்புக்களைப் பற்றிப் பேசலானான்.

ஓர் ஆசிரியர் சொன்னார் என்பதற்காகத் தாடகை எனும் பெண்ணைக் கொன்றான் இராமன்; ஓர் ஆசிரியர் கேட்டுக் கொண்டார் என்பதால் தன் மகனைக் காட்டிற்கு அனுப்பினார் தசரதன்; தன் மானசீகக் குரு கேட்டதும் தன் கட்டை விரலைக் காணிக்கையாக்கினான் ஏகலைவன்; வண்டு துளைத்த போதும் ஆசானின் உறக்கம் கலையக் கூடாது என்பதற்காகத் தன் வலியை, வேதனையைப் பொறுத்துக் கொண்டவன் கர்ணன்; பார்த்து எழுதச் சொன்ன ஆசிரியர் மீதும் தான் கொண்ட மதிப்பினைக் கைவிடாது இறுதிவரை போற்றியவர் காந்திஅடிகள்; சரியான விடையினை அளித்த போதும் அதனைத் தவறான விடை என்று எண்ணி ஆசான் அடித்த போதும் அவரைத் தெய்வமாக எண்ணியவர் நரேந்திரன் ஆன விவேகானந்தர்; இன்றும் பழைய மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களைப் போற்றி வணங்குவதைப் பல பள்ளிகளில் பார்த்து வருகிறோம் என்று சொல்லிக் கொண்டே வந்த போது திடீரென ஒரு சிறுவன் கேவிக் கேவி அழத் தொடங்கினான். பின்னர் விசாரித்த போது ஒரு கண நேர வெறுப்பில் தன் ஆசியரைக் கத்தியால் கொன்று விட்டு இங்கே வந்துள்ளான் என்பதை அறிந்த என் இதயத் துடிப்பு ஒரு வினாடி நின்று மீண்டும் துடித்தது. இன்று தன் தவறை உணர்ந்து துடிக்கும் அச் சிறுவனை அணைத்து அவனை ஆசுவாசப்படுத்தினேன். ஆனந்தனின் பேச்சின் வீச்சினை அறிந்து வியந்தேன். நிச்சயம் இவன் பலவித மாற்றங்களை உருவாக்குவான் என உணர்ந்தேன்.

இதோ! ஆனந்தன் இன்று வாலிபனாகி விட்டான். அவன் பேச்சு பல பள்ளிகளில் இடம் பெற்று மாணவச் சமுதாயத்தை எழுச்சிப் பாதையில் சேர்த்திருக்கிறது. ஃபேஸ்புக்கிலும் இவனது கருத்துக்கள் பலரால் விரும்பப்படுகின்றது. அன்று விவேகானந்தர் நூறு இளைஞர்களைத் தாருங்கள் என்றார். இன்று ஒரு விவேகானந்தரை இவ்வுலகிற்குத் தந்த பேறு எனக்குக் கிட்டியது. நூறு இளைஞர்கட்கும் மேல் இவன் வசம் வந்தாயிற்று. இளம் மாணவர்கள் சரியான பாதையில் செல்ல ஆனந்தனை நான் ஒரு கருவியாக்கி விட்டேன். நானும் ஒரு புவனேஸ்வரியாகி விட்டேன் என்று மகிழ்ந்தேன்.



‘அம்மா! அம்மா! என்னம்மா! எவ்வளவு நேரமா கூப்பிடறேன். அப்படியே உட்கார்ந்தபடியே தூங்கிட்டீங்களே! என்று என்னை என் பணிப் பெண் உலுக்க... அட! அத்தனையும் கனவா? கனவு மெய்ப்பட வேண்டுமே பாரதி’ என்றபடி அன்றாடப் பணியைத் துவக்க மீண்டும் தொலைபேசி ஒலிக்கிறது. என் பணிப்பெண் அதனை என்னிடம் கொடுத்தாள். மறுமுனையில் அண்ணாநகரின் பிரபலப் பள்ளியின் முதல்வர்...!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/children/story/p6.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License