இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுவர் பகுதி
தகவல்

இந்திய ரூபாய் வரிசைகள்


இந்தியாவின் நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயை வெளியிடுகிறது. INR என்பது இந்திய ரூபாயின் ஐஎஸ்ஓ 4217 குறியீடாக இருக்கிறது.

பாணினி (கிமு 6 முதல் 4 ஆம் நூற்றாண்டு) ரூப்யா என்ற வார்த்தையைக் குறிப்பிடுகிறார். முதல் மௌரியப் பேரரசர் சந்திரகுப்த மௌரியர் (கி.மு. 340 - 290) காலத்தில் சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரம் வெள்ளி நாணயங்களை, ரூப்யா எனக் குறிப்பிடுகிறது. ரூபாய் என்கிற பதம் சமஸ்கிருத வார்த்தையான "ரூப்யா" என்கிற வார்த்தையிலிருந்து வந்தது. ரூபாயின் உடனடி முன்னோடியான ரூபியா 178 தானியங்கள் எடையுள்ள வெள்ளி நாணயங்களாக, வட இந்தியாவில் ஷேர் ஷா சூரியால் 1540 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டது. இது பின்னர் முகலாயப் பேரரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தற்போது ரிசர்வ் வங்கியால் 5, 10, 20, 50, 100, 500 வரையிலான ரூபாய் தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன. ஒரு ரூபாய் தாள்கள் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையிலான நாணயங்களை வெளியிடும் அதிகாரம் இந்திய அரசுக்கு மட்டுமே உண்டு. 1, 2, 5, 10 மற்றும் 20 ரூபாய் மதிப்புகளில் உலோக நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. ரூபாய் 20-க்கு அதிகமான மதிப்புடைய நாணயங்கள் புகழ் வாய்ந்த நபர்களையோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வையோக் குறிப்பிடும் வகையில் நினைவு நாணயங்களாக வெளியிடப்படுகின்றன. 50 பைசாவுக்குக் குறைவான பைசா நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை.


நாணயங்களையும், ஒரு ரூபாய் நோட்டையும் அச்சடிக்க இந்திய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது. நாணயங்கள் அச்சடிக்கும் உரிமை 1906 ஆம் ஆண்டு நாணயச் சட்டத்தின்படி இந்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மதிப்புகளில் நாணயங்களை வடிவமைத்து அச்சிடுவதும் இந்திய அரசின் பொறுப்பாகும். மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் நொய்டா ஆகிய நான்கு இடங்களில் நாணயங்கள் அச்சிடப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 அடிப்படையில் ரிசர்வ் வங்கி மூலம் மட்டுமே நாணயங்கள் புழக்கத்திற்கு வெளியிடப்படுகின்றன. இந்தியப் பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகம் நான்கு அச்சகங்களை கொண்டுள்ளது.

பணத்தாள் அச்சிடும் அச்சக ஆலை, 1928 ஆம் ஆண்டில் நாசிக்கில் நிறுவப்பட்டது. முதல் பணத்தாள் அச்சிடும் அச்சகம் நாசிக்கில் நிறுவப்பட்டது. தேவாஸ், மைசூர் மற்றும் சல்போனியிலும் காகிதப் பணத்தை அச்சிடும் அச்சகங்கள் உள்ளன.


அசோக ஸ்தூபி வரிசை

1950 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ரூபாய் தாள்கள் ஆங்கிலேயே ரூபாயின் அம்சங்களுடன், ஜார்ஜ் IV படத்திற்குப் பதிலாக ‘அசோக ஸ்தூபி’ சின்னத்தை நீர்க்குறியாக கொண்டிருந்தன. சுதந்திர இந்திய அரசாங்கம் தன்னுடைய இலட்சனையாக நான்கு சிங்கங்கள் உள்ள அசோகரின் தூணை ஏற்றுக் கொண்டது. அந்த தூணில் நான்கு சிங்கங்கள் நான்கு திசையை நோக்கியவாறு அமைந்திருக்கும். சின்னத்தில் நடுநிலையாக ஒரு சிங்கம் நேராக பார்க்கும்படியும், மற்ற இரு சிங்கங்கள் அதன் இரு புறமும் வேறு திசையை நோக்கியவாறும் அமைந்திருக்கும். நான்காவது சிங்கம் பின்புறமாக இருப்பதால் இலட்சனையில் அச்சிங்கம் தெரியாது. இந்தச் சிங்க அமைப்பின் கீழே அசோக சக்கரமும், சக்கரத்தின் வலது புறம் ஓடும் குதிரையும், இடதுபுறம் ஓடும் காளையும் அமைந்திருக்கும்.

அதன் பின்னர், தொழில்நுட்ப வளர்ச்சியால், இந்தியக் கலை வடிவங்களைக் கொண்ட படங்கள் ரூபாய் தாள்களில் இடம் பெற்றன. 1980 ஆம் ஆண்டில் “வாய்மையே வெல்லும்” என்று தேசிய சின்னத்தில் பொறிக்கப்பட்டது. இந்த ரூபாய் தாள்கள் யாவும் ‘அசோக ஸ்தூபி’ வரிசை எனப்பட்டன. இவ்வரிசை சிங்க வரிசை (Lion Capital Series) என்ற பெயரிலும் அழைக்கப்பட்டன.

மகாத்மா காந்தி வரிசை

மகாத்மா காந்தி வரிசை (Gandhi Series) என்பது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட இந்திய ரூபாய் பணத்தாள்கள் ஆகும். இந்தப் பணத் தாள்களில் முதன்மையாக மகாத்மா காந்தியின் உருவம் இடம் பெற்றதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. 1996 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, இந்த வரிசை, 1996 ஆம் ஆண்டுக்கு முன்பாக வழக்கிலிருந்த அனைத்துப் பணத்தாள்களின் வடிவத்தையும் மாற்றி இந்த வரிசை இடம் பிடித்தது. இந்திய ரிசர்வ் வங்கி 1996 ஆம் ஆண்டில் தொடங்கி 10 மற்றும் 500 ரூபாய் தாள்களை இந்த வரிசையில் அறிமுகப்படுத்தியது. 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாளன்று இந்த வரிசையில் உள்ள 500 மற்றும் 1000 பணத்தாள்களின் மதிப்பு நீக்கப்பட்டது.


மகாத்மா காந்தி புதிய வரிசை

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாளன்று புதியதாக 500 மற்றும் 2000 மதிப்பிலான மகாத்மா காந்தி புதிய வரிசைத் தாள்கள் வெளியிடப்பட்டன. 2016 ஆம் ஆண்டில் நவம்பர் 10 அன்று, இந்திய ரிசர்வ் வங்கியால் 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தாள்கள் மக்கள் பயன்பாட்டிற்குப் புதிதாக வெளியிடப்பட்டது. இத்தாள்களின் முகப்பில் மகாத்மா காந்தி படமும், மறுபக்கத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் சின்னமும் இடம் பெற்றிருக்கின்றன. பாதுகாப்பு நடவடிக்கையாக, புதிய இந்திய ரூபாய் நோட்டுத் தொடரில் பல்வேறு இடங்களில் நுண் அச்சுக்கள் இடம் பெற்றுள்ளன.

* பத்து ரூபாய் தாளானது 123 x 63 மி.மீ எனும் அளவில் சாக்கலேட் பழுப்பு நிறத்தில் முன்பகுதியில் மகாத்மா காந்தி படமும், பின்பகுதியில் கொனார்க் சூரியக் கோயில் படத்துடன் 2018 ஆம் ஆண்டு, ஜனவரி 5 அன்று வெளியிடப்பட்டது.

* இருபது ரூபாய் தாளானது 129 x 63 மி.மீ எனும் அளவில் பசும் மஞ்சள் நிறத்தில் முன்பகுதியில் மகாத்மா காந்தி படமும், பின்பகுதியில் எல்லோராக் குகைகள் படத்துடன் 2019 ஆம் ஆண்டு, ஏப்ரல் 26 அன்று வெளியிடப்பட்டது.

* ஐம்பது ரூபாய் தாளானது 135 x 66 மி.மீ எனும் அளவில் உடனொளிர் நீல நிறத்தில் முன்பகுதியில் மகாத்மா காந்தி படமும், பின்பகுதியில் ஹம்பியின் கல்ரதம் படத்துடன் 2017 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 18 அன்று வெளியிடப்பட்டது.

* நூறு ரூபாய் தாளானது 142 x 66 மி.மீ எனும் அளவில் லாவெண்டர் நிறத்தில் முன்பகுதியில் மகாத்மா காந்தி படமும், பின்பகுதியில் குஜராத்திலுள்ள மகாராணியின் கிணறு படத்துடன் 2018 ஆம் ஆண்டு, ஜூலை 19 அன்று வெளியிடப்பட்டது.

* இருநூறு ரூபாய் தாளானது 146 x 66 மி.மீ எனும் அளவில் ஒளிர் மஞ்சள் நிறத்தில் முன்பகுதியில் மகாத்மா காந்தி படமும், பின்பகுதியில் சாஞ்சி தூபி படத்துடன் 2017 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 25 அன்று வெளியிடப்பட்டது.

* ஐநூறு ரூபாய் தாளானது 150 x 66 மி.மீ எனும் அளவில் கற்சாம்பல் நிறத்தில் முன்பகுதியில் மகாத்மா காந்தி படமும், பின்பகுதியில் செங்கோட்டை படத்துடன் 2016 ஆம் ஆண்டு, நவம்பர் 10 அன்று வெளியிடப்பட்டது.

* இரண்டாயிரம் ரூபாய் தாளானது 166 x 66 மி.மீ எனும் அளவில் ஒண்சிவப்பு நிறத்தில் முன்பகுதியில் மகாத்மா காந்தி படமும், பின்பகுதியில் மங்கள்யாண் படத்துடன் 2016 ஆம் ஆண்டு, நவம்பர் 10 அன்று வெளியிடப்பட்டது.

தற்போது இரண்டாயிரம் ரூபாய் தாள் புழக்கத்தில் இல்லை.

- மு. சு. முத்துக்கமலம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/children/tidbits/p29.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License