இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
சமூகம்

இருளர்களின் சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள்

சு. சத்யா


முன்னுரை

உலகில் மனித இனம் தோன்றிய தொடக்க காலத்தில் வாழ்ந்தவர்களைத் தொல்குடிகள் என்றும், பழங்குடிகள் என்றும் சமூக வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். ஒரு மனிதன் உயிர் வாழ உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை மிக அவசியமாகும். ஒரு தனிமனிதனின் இந்த அடிப்படைத் தேவைகள் அவனுடைய வாழ்க்கைத் தரத்தைப் பிரதிபலிக்கின்றன. மனிதச் சமூகத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இச்சமூகப் பிரிவில் ஒன்றான இருளர் இனம் காட்டும் பண்பாடு, பழக்க வழக்கம், உணவு, உடை, இருப்பிடம், தொழில், பொருளீட்டுதல் போன்ற நிலைகள் சற்று வளர்ச்சியடைந்துள்ளன. மேலும் இருளர்களின் நம்பிக்கைகளையும், சடங்கு முறைகளைப் பற்றியும் இக்கட்டுரையின் வழி பின்வருமாறு விளக்கப்படுகிறது.

இருளர் பெயர்க்காரணம்

மக்கள் வாழும் பொதுப்பகுதிகளில் வாழாமல் இருண்ட, அடர்ந்த காட்டுக்குள் சென்று வாழ முற்பட்ட மக்கள் ‘இருளர்கள்’ என்றழைக்கபட்டனர். இருளர் மக்களுக்குத் தமிழ் நிலம் வழங்கிய பெயர் ‘வேடர்’ என்பதாகும்.

இருளர் வாழும் பகுதிகள்

தமிழ்நாட்டில் வாழும் மிகத்தொன்மையான பழங்குடிகளுள் ‘இருளர்’ என்ற இனக்குழு மக்களும் அடங்குவர். இம்மக்கள் நீலகிரி, கோவை, திருச்சி, சேலம், போன்ற மாவட்டங்களில் மிகுந்த எண்ணிக்கையிலும், செங்கற்பட்டு, கருநாடக மாநிலங்களிலும், கேரளாவில் பாலக்காடு பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகின்றனர். இருளர்களை ‘அரைநாடோடிகள்’ என்று கூறலாம். இவர்கள் தங்கள் குடியிருப்புகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பார்கள். காரணம் உணவு சரிவரக் கிடைக்காத நிலையில் இருப்பிடத்தை மாற்றுவார்கள். மேலும் மூலிகை கிடைக்காவிட்டாலும் இடப்பெயர்ச்சி செய்வார்கள்.

நம்பிக்கைகள், சடங்குகள் - ஓர் விளக்கம்

நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்பட்டு அம்மக்கள் சமுதாயத்தால் பாதுகாக்கப்படுகின்றன. மனிதன் தன் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளுக்கு காரண காரியத்தின் மூலம் விளக்கிப் பொருள் கூற, முடியுமாயின் அதை நம்பிக்கை என்றும், கற்பிக்க இயலாத நிகழ்வுகளை மூட நம்பிக்கை என்றும் கூறலாம். இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என முன்னோர்கள் கூறியதை அப்படியே தலைமுறை தலைமுறையாகக் கடைபிடிப்பதுதான் ‘சடங்குகள்’ ஆகும். புனிதப் பொருட்களின் முன்னால் மனிதன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனக் கூறும் ஒழுக்க விதிகளே சடங்குகள் என்கிறார் “அறிஞர் டூர் கைம்”.



இருளர்கள் - இயற்கை மீது கொண்ட நம்பிக்கைகள்

இருளர்கள் காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்து வந்த காரணத்தால் மூலிகைச் செடிகள், விலங்குகள் மீது நம்பிக்கை வைத்து வழிபட ஆரம்பித்தனர். இவர்கள் ‘அவுரி’எனும் இலையைப் பறித்து நல்லபாம்புக் கடிக்கு மருந்தாய்ப் பயன்படுத்தினர். ‘பெரிய நங்கை’ என்ற மூலிகையைப் பாம்பின் விசம் முறிக்கும் தன்மையுடையது என நம்பிப் பயன்படுத்தினர்.

இருளர்களின் தெய்வ வழிபாடு

இருளர்கள் கன்னி தெய்வத்தை வழிபடுகின்றனர். இத்தெய்வத்தை வழிபட்டால் தனக்கு நேரிடும் துன்பங்கள் அனைத்தும் போகும் என்பது இக்குழு மக்களிடம் உள்ள பொதுவான நம்பிக்கை ஆகும்;. “கன்னி தெய்வத்தை வழிபட்டால் விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு, தேவைப்படும் உணவுப் பொருட்கள், உடல் ஆரோக்கியம், நல்ல மழை, நல்ல விளைச்சல் போன்ற அனைத்துக் காரியங்களும் நிறைவேறி விடும் என நம்புகின்றனர்.

இருளர்களின் வழிபாட்டு முறைகள்

ஒவ்வொரு வருடமும் தமிழகத்தின் பல பகுதிகளில் வாழும் இருளர்கள் மாசி மகத்திற்கு முன் மூன்று நாட்கள் மாமல்லபுரக் கடற்கரையில் கூடித் தங்கள் குல தெய்வமான கன்னியம்மாவிற்குப் பூஜை செய்து வழிபடுகின்றனர். கன்னியம்மாவை ‘ஆயம்மா’ என்றும், சிலர் குறிப்பிடுகின்றனர். கன்னியம்மாவின் தங்கைகளான மாரி, செல்லி, நீலி போன்ற தெய்வங்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் வழிபடுகின்றனர். எனவே இருளர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் தொடர்பு இருக்கும் எனக் கருதப்படுகிறது. கிராமச்சிறு தெய்வங்கள் மனிதர்களுடன் மனிதராய் வாழ்ந்து அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்காகப் போராடி உயிர் நீத்தது போல, இருளர்களின் தெய்வமான கன்னியம்மாவும் இருளர் இனப் பெண்ணாக இருந்து, இவர்களுக்காகப் போராடி இறந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

இருளர்களின் மாரியம்மன் கோவில்

‘முட்டத்து வயல்’ என்ற கிராமத்தில் இருளர்கள் வழிபடும் பெண் தெய்வங்களுள் மாரியம்மனும் ஒரு தெய்வம் ஆகும். யாருக்குப் பேய் பிடித்திருந்தாலும் செவ்வாய்க்கிழமை அன்று அதை ஓட்டி விடும் வழக்கத்தை இங்கு கடைப்பிடிக்கின்றனர். இந்தப் பேய் ஓட்டுவதற்கு ‘பறைக்குளித்தல்’ என்று பெயர். பறைக்குளிக்க வரும்போது கடலை, பொறி, வெற்றிலை, பாக்கு, வெல்லம், தேங்காய், பழம் மற்றும் ஒன்றேகால் ரூபாய் காணிக்கையாய்ப் படைக்க வேண்டும் என்கிற நடைமுறையும் இருக்கிறது.

இருளர்களின் கோயில் அமைப்பு

இருளர்கள் தங்களுக்கெனத் தனித்த கோயில்களைக் கட்டி வழிபட்டனர். பிற கோயில்களுக்குச் சென்றால் தீட்டு என்ற காரணத்தினால் இவர்கள் தனியாகக் கோயில் அமைப்புகள் சாஸ்திரங்களில் கூறப்பட்டது போல இல்லாமல் செங்கல், மரம், கருங்கற்களைக் கொண்டு எளிய முறையில் அமைத்திருக்கின்றனர். மருதமலையில் உள்ள வனத்திற்குள் ஓர் அழகிய தியானலிங்கம் வைத்து இருளர்கள் வணங்கி வருகின்றனர். இவர்கள் பிறரால் தீண்டாமை, தீட்டு போன்ற காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். ஆனால் இவர்கள் வழிபடும் கோயிலுக்குப் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.



சடங்குகள்

மனித சமூகத்தில் முன்னோர்கள் தம் வாழ்வியல் அனுபவங்களின் வாயிலாகக் கண்ட முடிவுகளை, இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கூறிய முறைப்படி அப்படியே தொன்று தொட்டு செய்துவருவது தான் சடங்குகள் எனப்படுகின்றன. மேலும் சடங்குகள் மனிதர்களுக்கிடையிலான சமூக உறவுகளை ஆழப்படுத்துவனவாகவும் அமைகின்றன.

குழந்தைப் பிறப்பு குறித்த சடங்குகள்

மனித வாழ்வு பிறப்பிலிருந்து தொடங்குகின்றது எனலாம். குழந்தை பிறப்பு, பிறந்த குழந்தையைப் பேணுதல், குழந்தைக்கு பெயர் வைத்தல், காது குத்தல் முதலிய பல சடங்குகளைச் செய்கின்றனர். குழந்கைகளுக்காகச் சடங்குகளை ஒவ்வொரு சமூகத்தினரும் ஒவ்வொரு விதமாகச் செய்கின்றனர். குழந்தை பிறந்தவுடன் இருளர்கள் தனிமையான குடில் ஒன்றை ஏற்பாடு செய்து தாயையும், சேயையும் உள்ளே வைத்துப் பாதுகாப்பார்கள். குழந்தை பிறந்த ஏழாம் நாள் அத்தை வந்து நீர் தெளித்து தாயையும், சேயையும் வீட்டுக்குள் அழைத்துக் கொள்வார். குழந்தைக்கு அத்தைதான் பெயர் சூட்டுகிறாள்.

பூப்படைதல் - சடங்கு முறை

பெண்கள் பூப்படைந்தவுடன் தாய்மாமன் சீர் செய்யும் முறை என்பது பொதுவானது. இருளர்கள் சமூகம் இதற்கு விதிவிலக்கல்ல. இருளப்பெண் பூப்பெய்திய ஏழாம் நாள் விழா கொண்டாடுவர். அந்த விழாவை இருளர் தாய்மொழியில் ‘நேரே அப்ப’ என அழைக்கின்றனர். தாய்மாமன் அல்லது தமக்கையின் கணவர்தான் குடிசைக் கட்டுவர். ஏழாம் நாள் இந்தக் குடிசை எரிக்கப்படுகிறது. குடிசையில் வேப்பிலை அல்லது வேறு இலைகளைச் சொருகி வைப்பது வழக்கமாக உள்ளது. பின்பு ஏழு நாள் சென்றவுடன் ஆற்றில் சென்று நீராடிவிட்டு தாய்மாமன் எடுத்து வந்த புதுத்துணியை உடுத்தச் சொல்வார்கள். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட வயதிற்குமேல் பெண்கள் தாவணி, சேலை போன்ற உடைகளையே உடுத்தினர் என்ற செய்தியின் மூலம் இருளர்களின் உடைப்பண்பாட்டினை அறிய முடிகிறது.

திருமணச் சடங்குமுறை

திருமண நிகழ்வு என்பது ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் நடைபெறும் இன்றியமையாத ஒன்றாகும். திருமண நிகழ்வு நடந்த பின்பு தம்பதிகள் எந்தக் குறையும் இல்லாமல் எல்லா வளங்களும் பெற்று இனிமையாய் வாழ வேண்டும் எனப் பெரியோர்கள் பல சடங்கு முறைகளைச் செய்து திருமணத்தை நடத்திக் வைக்கின்றனர். இருளர்களின் திருமணத்தில் ஆண்கள் விருப்பத்தை விட, பெண்களின் விருப்பங்களும், உணர்வுகளும் உயர்வாய் மதிக்கப்படுகின்றது. மணமகன் வீட்டார், பெண் வீட்டிற்குத் திங்கள் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் பெண் கேட்டுச் செல்வர். அவ்வாறு பெண் கேட்டுச் செல்லும்பொது, கையில் ஒரு இரும்புத்தடி அல்லது மரத்தடியைக் கொண்டு செல்ல வேண்டும். இருளர்களின் திருமணம் மிக எளிமையான நிகழ்ச்சியாகும். திருமணத்தில் செம்மறியாடு வெட்டி விருந்தளிப்பர். திருமணத்திற்கு வரும் உறவினர்கள் தங்களால் இயன்ற அளவு பரிசைக் கொடுத்துவிட்டுச் செல்வர்.

இருளர்களின் திருமண முறை

திருமணம் செய்யும் மணமகன், மணமகள் வீடுகள் ஒரு சிறிய குடில்போலத்தான் இருக்கும். எனவே திருமண விருந்து என்பது பொதுவாக மரத்தடியில்தான் நிகழ்கிறது. மூப்பன் தாலி எடுத்துத்தர, மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுகிறான். இந்த தாலி முறை தற்போது ஏற்பட்ட நவீன நாகரீகத்தின் அடையாளம் ஆகும். பண்டையக்கால இருளர்கள் கருப்புப் பாசிகளைத்தான் திருமணத்தின் போது பயன்படுத்தினர். திருமணம் நிச்சயமான பின் ஒரு வருடத்திற்கு மணமாகாமலே சேர்ந்து வாழ்கின்றனர். பின் அவர்களுக்குள் பிடிக்கவில்லை அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் வேறு நபரைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமை உள்ளது. விபச்சாரம் என்ற சொல் இருளர் மத்தியில் இல்லை. இருளர்கள் பெற்றோர் முன்னிலையிலும், உடன்போக்கின் மூலமும் திருமணம் செய்து கொள்கின்றனர். இருளர் சமூகத்தில் விதவைப்பெண்கள் இல்லை. விதவைப் பெண்கள் தாங்கள் விரும்பும் யாரை வேண்டுமானாலும் திருமணம் அல்லது மறுமணம் செய்து கொள்ளும் உரிமை அளிக்கப்படுகிறது.



இருளர்களின் இறப்புச் சடங்குகள்

இருளர்களின் இறப்புச் சடங்குகள் தனித்துவமானவை. இருளர் இனத்தின் உட்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் தனித்தனியாகச் சமாதிகள் உள்ளன. சமாதி ‘கொப்பே’ என்று அழைக்கப்படுகிறது. இழவு வீட்டிற்கு வரும்போது கையில் குச்சியுடன் வருவது இருளர்களின் மரபாகும். வயதானவர் இறந்தால் காய்ந்த குச்சியும், இளவயதினர் இறந்தால் பச்சைக்குச்சியும் கொண்டுவர வேண்டும். இல்லையெனில் அது குற்றத்திற்கு நிகரானதாகக் கருதப்படுகிறது. இவர்கள் இறந்தவர்களை எரிக்கவோ, புதைக்கவோ செய்கிறார்கள். இறந்தவரைப் புதைத்தப்பின் இறந்தவரொன் மகன் தலைமுடி எடுக்கப்படுகிறது. தலைமுடி எடுத்தபிறகு அவனுடைய தலையில் புதுத்துணியால் முக்காடு போட்டு உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.

முடிவுரை

இயற்கையைக் கண்டு அஞ்சி அதனால் இயற்கையை வணங்கிய மனிதன் தம் வாழ்வில் உயர்வும், தாழ்வும் இயற்கையாகவே நிகழ்கிறது என்று நம்பினான். காடுகளில் வாழ்ந்த காரணத்தால் மூலிகைச் செடிகள் மற்றும் விலங்குகள் மீது நம்பிக்கை வைத்து வழிபட்டான். இருளர்கள் தெய்வ நம்பிக்கை உடையவர்களாகவும், பிற சமூகத்தினரோடு இணைந்து பொதுவழிபாடு செய்பவர்களாகவும் இருக்கின்றனர். இவ்வாறு இருளர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள சடங்கு முறைகளும், நம்பிக்கைகளும் தனித்துவமாக இருப்பதை இக்கட்டுரையின் வழி விளக்கப்பட்டுள்ளது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/community/p12.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License