இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

புதுக்கவிதைகளில் அறிவியல் மற்றும் சமுதாயச் சிந்தனைகள்

முனைவர் மா. சியாமளாதேசி


முன்னுரை

அறிவியல் என்பது வெறும் விஞ்ஞானத்தைப் பற்றி மட்டும் குறிப்பதன்று. அது வாழ்க்கையை வளப்படுத்த, மனிதன் மேற்கொள்ளும் முற்போக்குச் செயல்பாடுகளின் முன்னேற்றத்தையும் குறிப்பிடுகின்றது. சமுதாயம் என்பது மனித உறவுகளின் சிக்கலான அமைப்பாகும். தனி மனிதனையும் சமுதாயத்தையும் பற்றிப் படைக்கப்பட்ட சமூக நோக்குடைய படைப்புகளே காலத்தை வென்று நிலைத்து நிற்கும் ஆற்றல் உடையன. தற்கால இலக்கியங்களுள் புதுக்கவிதைகள் அறிவியல் மற்றும் சமுதாயச் சிந்தனைகளை எடுத்துரைப்பதில் சிறப்பிடம் பெறுகின்றன. அவற்றைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அறிவியல் சிந்தனைகள்

“அறிவற்று வாழ்ந்த காலம்
அநாகரிக காலம்
இது இறந்த காலம்
அறிவோடு வாழும் காலம்
அரை நாகரிக காலம்
அது நிகழ்காலம்
இனி நிகழ் காலம் என்பது
அறிவியல் வழிவாழும் காலம்
அதுவே எதிர்காலம்”


என்ற கவிதை, அறிவியல் காலமே முழு நாகரிக காலம் என்று உணர்த்துகிறது.



‘விஞ்ஞானி’ எனும் கவிதையில் கடவுளின் படைப்பின் பழமையைக் கண்டு சலித்துப் பேசும் ஒரு விஞ்ஞானியைப் படைத்துள்ளார். ந.பிச்சமூர்த்தி, கடவுளின் படைப்பில் விளைந்த குறைபாடுகள் பலவும் விஞ்ஞானியாகிய தன்னால்தான் நீக்கப்பட்டன என்ற பெருமிதப் பேச்சைக் கவிதை புலப்படுத்துகின்றது.

“புல்லைச் செய்வார்
மேயவென்று மாட்டைச் செய்வார்
பொங்கும் நுரைப்
பாலைச் செய்வார்
ஊட்ட வென்று
கன்றைச் செய்வார்”


இவ்வாறு படைத்தவற்றையே மீண்டும், மீண்டும் படைக்கின்ற புளித்துப் போன படைப்புத்தான் கடவுளின் படைப்புக்கள் ஆனால் விஞ்ஞானிகளோ ஒன்றுக்குப் பதிலாக ஒன்றை, ஒன்றிலிருந்து ஒன்றை, கடவுளறியாத பல விந்தைப் பொருட்களை உருவாக்கும் திறமை பெற்றுள்ளனர்.

வாழும் உயிர்களோடு தண்ணீர்ருக்குள்ள தொடர்பைக் கூற வந்த கவிஞர் வைரமுத்து,

“வாழும் உயிர்களை வடிவமைத்தது 70 சதம் தண்ணீர் யானை 65 சதம் தண்ணீர் மனிதன்... உடம்பில் ஓடுவது 7.2 லிட்டர் உப்புத் தண்ணீர்” என்று தனது தண்ணீர் தேசம் நூலில் விஞ்ஞானத்தை கூறுகிறார்.

காலைப்பொழுதில் கதிரவனின் வருகையைச் ‘சூரிய விளக்கு’ எனும் தலைப்பில் கவிஞர் பொன்.செல்வகணபதி,

“ஒளிவலை பின்னும்
நெருப்புச் சிலந்தி
சுடர் விளைகின்ற
சூரிய நிலம்
சூடு ததும்பும்
சூரியப் பொய்கை
காலமுணர்த்தும்
கடிகாரப்பாட்டன்
பனித்துளி பருகும்
பகலவப் பறவை”


என்று எடுத்துரைக்கின்றார். ஒளியை வலையாகவும், சூரியனை நெருப்புச் சிலந்தியாகவும் உருவகித்துப் பல்வேறு விதமான சிந்தனைகளைத் தூண்டும் விதத்தில் கவிதை அமைந்துள்ளது.

அப்துல் ரகுமானின் புதுக்கவிதைத் தொகுதியான பால்வீதியில் மின்னல் என்ற இயற்கைக் காட்சிப் பொருள்,

“வான உற்சவத்தின்
வான வேடிக்கை
முகிற்புற்று கக்கும்
நெருப்புப் பாம்புகள்
கடுப்பு உதட்டின்
வெளிச்ச உளறல்
இடிச் சொற்பொழிவின்
சுருக்கெழுத்து”


என்று அடுக்கடுக்கான படிமங்களால் அமைந்துள்ளது.



சமுதாயச் சிந்தனைகள்

இருபதாம் நூற்றாண்டில் பலவிதமான மாற்றங்கள் சமுதாயத்தில் ஏற்பட்டாலும் சாதி என்ற உணர்வு மக்களிடையே ஆழமாக வேரூன்றிவிட்ட ஒன்று. அது மனிதனைக் கத்தரிக்கோலாகப் பிரிக்கின்றது.

இன்று வறுமையை விட சாதிக்கொடுமை பெரும் போராட்டங்களை விளைவிக்கின்றது. இதனைக் கவிஞர் மு.மேத்தா,

“சாதி என்பது
மெலிந்து காட்சி தரும்
ஊசியல்ல
தலையெல்லாம்
கனத்துக் கொழுத்த
கத்தரிக்கோல்”


என எடுத்துரைக்கின்றார்.

இன்றைய திருமணத்தின் மொத்த உருவமாக விளங்குவது வரதட்சணை. அதற்குக் காரணம் இன்றைய சமுதாயத்தில் மேலோங்கி விளங்குவது பணமும் போலி அந்தஸ்துமே. இதில் பலியாவது வறுமை நிலையிலிருக்கும் பெண்களே. வயதாகியும் திருமணமாகாது இருக்கும் பெண்களே முதிர் கண்ணிகள் என்கின்றனர். இச்சொல்லைப் பெண்ணியவாதிகள் எதிர்க்கின்றனர். இவர்களின் நிலையை;


“கனல் பூக்கள் கண்ணீர்ப் புயல்கள்
கல்யாணச் சந்தையிலே
விலைபோகா வேதனைகள்
விதி வசத்தால் வீணைகளும்
விறகாகும் வேதனைகள்”


என்று வரதட்சணையால் திருமணமாகாது நிற்கும் பெண்களின் பிரச்சனைகளை தனது கவிதைகளில் எடுத்துரைக்கின்றான் கவிஞர் பாரதி கண்ணம்மா. ஏழை மக்கள் செய்கின்ற தொழிலோடு அவர்களின் மன வேதனையும் சேர்த்துத் தன் கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர் யுகபாரதி. பலூன் வியாபாரி என்கிற கவிதையில் இடைவிடாமல் இவன் ஊதி எடுத்து வரும் ரூபாயில்தான் பட்டினியாய்க் கிடக்கும் குடும்பம் அடுப்பூதத் தொடங்கும் என தன் மனவேதனையை,

“மாதக் கடைசியில்லை
மாதமெல்லாம் கடைசி என்று
ஊதிப் பெருக்குகிறான்
உள்ளிருக்கும் வேதனையை”


என்ற வரிகளில் எடுத்துரைக்கின்றார்.



சமுதாயத்தோடு நெருங்கிய உறவுடையது அரசியல். சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் தோல்விக்கும் தலையாய காரணமாகிறது. அரசியல் வாதிகள் சுயநலமும் வஞ்சகமும் ஏமாற்று வித்தையும் நிறைந்தவர்கள். வாக்களிக்கும் வாக்காளர்களை அரசியல்வாதிகள் எவ்வாறெல்லாம் பயன்படுத்துகின்றனர் என்பதை,

“மலர்கள் கசங்கி
உதிர்ந்த பின்னர்
நார் மட்டும்
அடுத்த மாலை கட்ட
மீண்டும் தேவைப்பட்டது”


என்று வாக்காளர்களின் வாக்குகளை மட்டும் பயன்படுத்திக்கொண்டு அவர்களை மீண்டும் மாலை கட்டும் நார்களாகவே பயன்படுத்துகின்றனர் என்று தன் கவிதை வரிகள் மூலம் சமுதாயச் சிந்தனையை வெளிப்படுத்துகின்றார் கவிஞர் இறையன்பு.

முடிவுரை

இலக்கியம் வாழ்வின் ஆக்கத்தை மட்டுமே செய்ய முடியும். ஆனால், அறிவியலுக்கு ஆக்கவும் தெரியும்; அழிக்கவும் தெரியும்; இன்றைய மனித வாழ்வுக்கு இலக்கியமும் அறிவியலும் தேவைப்படுகின்றன. புதுக்கவிதைகள் அழகுணர்ச்சியை மட்டும் எடுத்து வைக்காது. இன்றைய சமுதாயக் கட்டமைப்பை வெறிப்படுத்துவதோடு தனி மனித உணர்வுகளையும் செயல்பாடுகளையும் அவற்றின் நிறைகுறைகளையும் சுட்டிக் காட்டுகின்றன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p100.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017



வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License