இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

இன்றையப் பெண்ணியப் படைப்பாளர்கள்

முனைவர் சு. தங்கமாரி


முன்னுரை

பழந்தமிழரின் தாய்வழி சமூகத்தின் எச்சங்கள் இன்றளவும் நம்மிடையே இருந்து வருகின்றன. இருப்பினும், சொத்துடைமை சமூகத்தினுடைய பிற்போக்கான சிந்தனையினால் நம் நாட்டினைப் பொருத்தமட்டில் பெண் அடிமைத்தனம் எனும் மோசமான கருத்தாக்கம் பல வழிகளிலும் நம்மைப் பிடித்துள்ளன. இப்பெண் அடிமைத்தனம் எனும் கொடிய சிந்தனையின் வெளிப்பாட்டுச் செயலாக்கமாகப் பெண்களுக்குக் கல்வி மறுத்தல், பால்ய மணம் செய்வித்தல், உடன் கட்டை ஏறுதல், கைம்மை மேற்கொள்ள வற்புறுத்துதல் போன்றவை இருந்து வந்தன. இதன் அடிப்படியில் ஆணுக்குப் பெண் அடிமை என்னும் மையத்தைக் கைக்கொண்டு சில பழமொழிகளையும் உருவாக்கத் தொடங்கினர். இதற்குப் பிற்கால அவ்வையாரின் ‘உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு’ என்ற கருத்தும் வலு சேர்த்தது. பின்பு ‘சாண்பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளை’. ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’, ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்பன போன்ற பழமொழிகளும் உருவாகின. இப்படி, ஓர் இருண்மை நிறைந்த கருத்தாக்கங்களைக் கொண்ட சமூகத்தில் ஒரு விடிவெள்ளியாக, புதுமையின் தொடக்கமாக, வெளிச்சத்தினைப் பாய்ச்சத் தொடங்கிய காலம் கி. பி. 20ஆம் நூற்றாண்டு ஆகும். இச்சிந்தனை மாற்றத்திற்குத் தொடக்கப் புள்ளியாக இருந்தவர்கள் இருவர். இவ்விருவருள் ஒருவர் தந்தைப் பெரியார்; பிறிதொருவர் மகாகவி பாரதியார். ஆயினும் தந்தைப் பெரியார் இலக்கியத் தளத்தில் நின்று இயங்கவில்லை. மகாகவி பாரதியாரோ புதிய இலக்கியத் தளத்தின் அனைத்துப் புள்ளிகளையும் தொட்டுத் தொடங்கிய பெருமைக்குரியவர்.

தொடக்க நிலை

எழுபதுகளில், மேலைநாட்டுப் பெண்ணிய இயக்கங்களின் தாக்கம் தமிழ் மண்ணில் தடம்பதிக்கத் தொடங்கியது. இக்காலக் கட்டத்தில் பெண் விடுதலை, பெண் முன்னேற்றம், பெண் சுதந்திரம் என்பன புதிய கண்ணோட்டத்தில் விளக்கம் பெறத் தொடங்கின. அந்தப் புதிய கண்ணோட்டமானது இலக்கியத் தளத்திலே கதைகளாகவும், கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும், நாடகங்களாவும் வெளிப்படத் தொடங்கின. நாளெல்லாம் சமையலறையில் அடைபட்டு, இல்லறக் கடமைகளில் மூழ்கி, தங்களுடைய சுயத்தினை அடையாளம் காணத் தெரியாது குழம்பிய பெண் சமூகமானது இத்தளத்தின் வாயிலாகப் புதிய பார்வையினைப் பெற முயன்றதும் முடிந்ததும் இக்காலக்கட்டத்திலே ஆகும். இவ்வாறு 20ஆம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை பெண்ணிய எழுத்துகள் சீர்பட்டும், வளர்ச்சி கண்டும், மரபினை உடைத்தும் புதிய தயத்தினைப் பதித்தது சிறப்புடையதாகும்.



பெண்ணியப் படைப்பாளர்கள்

புதிய பெண்ணியச் சிந்தனை மரபினை இலக்கியவாதிகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தங்கள் படைப்புகளில் பதிவு செய்து வந்தனர். மகாகவி பாரதி தொடங்கி புதுமைப்பித்தன், கு . ப. ராஜகோபாலன், அகிலன், ந. பார்த்தசாரதி, ஜெயகாந்தன், சமுத்திரம், பிரபஞ்சன் போன்ற ஆண் எழுத்தாளர்களும், லெட்சுமி, ராஜம்கிருஷ்ணன், அம்பை, உமாமகேஷ்வரி போன்ற பெண் எழுத்தாளர்களும், பெண்களின் பிரச்சனைகளை மையமிட்டே மிகச் சிறப்பான படைப்புகளைப் படைத்துள்ளனர். அப்படைப்புகள் சில நேரங்களில் பெண் பிரச்சனைகளை மட்டும் முன்வைப்பதாகவும், சில நேரங்களில் அப்பிரச்சனைகளுக்குத் தீர்வாகவும் சுட்டிக் காட்டியுள்ளன. மகாகவி பாரதியாருடைய படைப்புகளில் முதன்மையான தளம் புதுக்கவிதையாக நிருந்து வந்துள்ளது. இருப்பினும் சிறுகதையிலும், இவர் தம் வீச்சு இன்றியமையாத ஒன்றாகும். இவரது ‘கந்தாமணி’ சிறுகதை இதற்கு மிகச் சிறந்த சான்றாகும். காந்தாமணி ஓர் அழகிய இளம்பெண். அவள் இளம் வயதிலேயே 55 வயது கிழவனுக்கு மணம் செய்து வைக்கப்படுகின்றாள். ஆனால் கந்தாமணிக்கு அவ்வாழ்க்கையில் விருப்பமில்லை. எனவே, தான் சிறுவயதில் காதலித்த மலையாளத்து வாலிபனைத் திருமணம் செய்து கொள்கிறாள். இந்தக் கதையில் புரட்சிகரமான இரு திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுகின்றன. அன்றைய காலத்தில் இக்கதை மிகப்பெரிய புதுமை நோக்குதலைக் கொண்ட பிரச்னையை ¨மாயப்படுத்தியது ஆகும்.

கல்கி

கல்கி எனும் புனைப்பெயரில் எழுதிய ஆர்.கிருஷ்ணமூர்த்தி சமூகப் பிரச்னைகளைப் பற்றி தம் படைப்புகளைத் தரலானார். அவை நாவல், சிறுகதை, கட்டுரை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு என விரிந்து நின்றன. இச்சமூகப் பிரச்னைகளின் பிரச்னைகளாகப் பெண்ணியப் பிரச்னைகளை மையப்படுத்தி, இவர் எழுதிய எழுத்துக்கள் மிகவும் குறிப்பிடத்தகுந்தது ஆகும். இவரது ‘கடிதமும் கண்ணீரும்’ எனும் சிறுகதை குழந்தை மணம், குழந்தை கல்வியின்மை, மூட நம்பிக்கைகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணினத்தின் துன்பங்களை எடுத்துரைப்பனவாக அமைந்துள்ளது.



மணிக்கொடி காலம்

மணிக்கொடி எழுத்தாளர்களுள் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர் கு. ப. ரா. ஆவார். இவருடைய கதைகளில் பாலுறவை மையப்படுத்திய சிக்கல்கள் மிகத் துணிச்சலாக வெளிப்பட்டுள்ளன. இவருடைய ‘திரை’ எனும் சிறுகதை ஒரு விதவைப் பெண்ணின் இயல்பான அதேவேளையில் நியாயமான உணர்வுகளை வெளிக்காட்டும் எழுத்தாகும். ஓர் இளம் விதவைப் பெண், தன் தங்கை கணவரிடம் காட்டும் அன்பு - பண்பாட்டுச் சூழலில் சரியானது அன்று எனும் கருத்து நிலைப் பெற்றாலும் அவ்வுணர்வு இயற்கையானது என்பதை மிகத் தெளிவாகப் படைத்துக் காட்டியது சிறப்பு. பெண்ணடிமைப் பண்பாட்டினை மீறி சமூகத்தின் திரையினைக் கிழிக்கும் புரட்சிக் கதையாக இக்கதை அமையப் பெற்றுள்ளது.

தமிழ்ச் சிறுகதைகளை உலக அளவிற்கு எடுத்துச் சென்ற பெருமைக்குரிய எழுத்தாளர் புதுமைப்பித்தன் ஆவார். இவரது கட்டுடைப்புக் கதைகள் மிகவும் போற்றுதற்குரியவை. அதேவேளையில் சமூகப் பெண்ணடிமை போற்றும் பிற்போக்குச் சிந்தனையாளர்களின் விமரிசனசத்திற்கு ஆளானவை. புதுமைப்பித்தன் கதைகளில் ‘சாப விமோசனம்’, ‘பொன்னகரம்’ போன்றவை அதிகம் விமரிசனத்திற்கு ஆளானவை.இரண்டுமே, சமூகத்தில் நிலவும் பெண்ணடிமைத்தனத்தினைக் கேள்விக்கு உட்படுத்துவன. இவ்விரு கதைகளிலும் ஆணாதிக்க உலகை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருப்பார். மேலும், ‘கற்பு’ என்று கதைக்கப்படும் ஒரு பொய்யான உடலியல் புணர்வுகளைப் புறந்தள்ளிச் செல்வது சிறப்பிற்குரியது.

இவ்வழியிலே சிட்டியின் ‘கெளரவநாசம்’ என்னும் சிறுகதையும் இன்றியமையாத ஒரு கதையாகும். மேலும் விந்தனின் ‘மாட்டுத்தொழுவம்’, கலைஞரின் ‘நளாயினி’, அசோகமித்ரனின் ‘கணவன், மகள், மகன்’, ஜெயகாந்தனின் பெரும்பான்மை சிறுகதைகள், அய்க்கண்ணின் ‘ஓர் அகலிகையின் மகள்’, பிரபஞ்சனின், ’நேற்று மனிதர்கள்’, வண்ணநிலவனின் ‘இரண்டு பெண்கள்’ போன்றவை ஆண் எழுத்தாளர்களால் பேசப்பட்ட பெண்ணியச் சிந்தனைகள் ஆகும். இச்சிறுகதைகள் மிக அழகான விதையினைப் பதியம் போட்டுச் சென்றது.



பெண் பெண்ணியப் படைப்பாளர்கள்

தமிழ் எழுத்தாளர் உலகில் ஆண் எழுத்தாளர்களைப் போன்றே பெண் எழுத்தாளர்களும் காலந்தோறும் தம் எழுத்துகளின் வாயிலாகப் பெண்ணியச் சிந்தனை மரபினைத் தோற்றுவித்து வந்துள்ளனர். 20ஆம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை உள்ள காலக்கட்டத்தைப் பெண் எழுத்துகளைப் பெண்களே எழுதும் சூழலுடைய தளத்தில் நான்கு கட்டங்களாகப் பகுத்துக் காண இயலும்.

1. முதல் கட்டப் படைப்பாளர்கள்

கிருபை சத்தியநாதன், விசாலாட்சி அம்மாள், வை.மு.கோ., கு.ப.சேது அம்மாள், கிரிஜா தேவி, மூவலூர் இராமாமிர்தம், சகோதரி பாலம்மாள்.

2. இரண்டாம் கட்டப் படைப்பாளர்கள்

குமுதினி , குகப்பிரியை, வசுமதி ராமசாமி, அநுத்தம்மா, குயிலி ராஜேஸ்வரி, ஜெயலட்சுமி, கோமதி சுப்பிரமணியம்.

3. மூன்றாம் கட்டப் படைப்பாளர்கள்

இராஜம் கிருஷ்ணன், கிருத்திகா, ஹெப்சிபா ஜேசுதாசன், ஜோதிர்லதா கிரிஜா, சிவசங்கரி, வாசந்தி, இந்துமதி, உஷா சுப்ரமணியம், லட்சுமி சுப்ரமணியம், லட்சுமி இராஜரத்தினம்.

4. நான்காம் கட்டப் படைப்பாளர்கள்

அம்பை, காவேரி, சிவகாமி, தமயந்தி, பாமா, ஆண்டாள் பிரியதர்ஷினி, உமா மகேஸ்வரி, அனுராதா, அனாமிகா, அமரந்தா.

5. புலம்பெயர் எழுத்தாளர்கள்

ராஜேஸ்வரி பாலசுப்ரமணியன், காஞ்சனா தாமோதரன், சுமதி ரூபன், லதா உதயன்.

எழுத்துகளை வாசிப்பவர்கள் எனும் தளத்தினைத் தாண்டி படைப்பாளர்களாகத் தங்களை முன்னிருத்திக் கொண்டு எழுதுவதற்கு இத்தனைப் பெண் படைப்பாளர்கள் படைப்புத் தளத்தில் களமாடத் தொடங்கியுள்ளது வரவேற்கத் தகுந்ததாகும்.



பெண்ணியத் தளத்தில் பெண்

திரிபுர சுந்தரி எனும் இயற்பெயர் கொண்ட லட்சுமி ‘தகுந்த தண்டனை’ எனும் பெயரில் முதல் கதையினை எழுதினார். இவரது ‘ஏன் இந்த வேகம்’ என்ற சிறுகதை குறிப்பிடத்தகுந்த பெண்ணியச் சிந்தனை சிறுகதை ஆகும். வாஸந்தியின் ‘நஞ்சு’ எனும் சிறுகதை பெண் சிசுக் கொலை கொடுமையினை மிகத் துடிப்பாகக் காட்டியுள்ளது. ஜோதிலதா கிரிஜாவின் ‘நான் ஒன்றும் நளாயினி இல்லை’ எனும் சிறுகதை பெண்ணியப் பிரச்னையின் சிக்கலுக்கான தீர்வினைச் சொல்லும் மிக அழகான படைப்பாகும்.

அம்பையின் ‘வீட்டின் மூளையில் ஒரு சமையலறை’ என்ற கதை, இல்லத்திற்குள் ஒரு சிறு மூலையில் நாளெல்லாம் அடைந்து கொண்டு, தங்களின் சுய விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் தராமல்,குடுப்பத்தினர் நலனுக்காக உழைத்துச் சாகும் சாமானியப் பெண்ணினத்தின் உரிமைக் குரலை முன் வைக்கிறது. சிவசங்கரியின் ‘ஒரு வார்த்தை’ என்ற கதை, மிருக உணர்வுடைய கணவன் இனி, தனக்கு வேண்டாம் என்று ஒதுக்கும் இளம் பெண்ணின் நிலைப்பாட்டைப் பேசுகிறது. இன்றைய துடிப்புமிக்க பெண்ணியப் படைப்பாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் திலகவதி ஆவார். இவரது ‘போன்சாய்ப் பெண்கள்’ எனும் சிறுகதை மிக எதார்த்தமான உருவகத் தன்மை கொண்ட கதை ஆகும். அழகு என்ற பார்வையில் வளர்ச்சியினைத் தடை செய்யும் மிகக் குறுகிய எண்ணம் கொண்ட ஆண்வர்க்கத்தின் அடிமனதினை மிகத் தெளிவாக இந்தச் சிறுகதை படம்பிடித்துக் காட்டும் படைப்பாகும். சிவகாமியின் ‘யுகசந்தி’ பெண் விடுதலையின் நவீன சிந்தனைப் போக்கை அடையாளம் காட்டும் கதை ஆகும். பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் ஒரு பெண்ணின் மன உறுதி ஆணாதிக்கதிற்கு எதிரான போர்க்குரலாக வெளிப்படுகின்றது. உமா மகேஸ்வரியின் ‘கரு’ போன்ற கதைகளும், சமூகத்தில் குடும்பச் சூழலில் அகப்பட்டுக் கொண்ட பெண்களின் மனப் போராட்டங்களை மிக அழகாகப் பதிவு செய்யும் விதம் சிறப்புடையது ஆகும்.

முடிவுரை

பெண் எழுத்தாளர்கள் எழுதிய கதைகளில் வரதட்சணை எதிர்ப்பு, மணவிலக்கு, மறுமணம், ஆண்பெண் நட்பு, சுயமரியாதை, சமூக விழிப்புணர்வு போன்றவை மிக அழகாகக் கதையின் கருவாக்கப்பட்டுள்ளன. ஆண்கள் எழுத்தை விட பெண்கள் எழுத்தில் தீவிரக் குரல் வெளிப்படுகின்றது. ஆண் எழுத்தில் பெண்களை அடிமைப்படுத்திய ஆண்கள் மீதான கோபம் வெளிப்படவில்லை. அதனிடத்தில் அடங்கிப் போன பெண்கள் மீதான அக்கறை மட்டுமே வெளிப்பட்டுள்ளது. இன்றைய காலச்சூழலில் புதுமைப் பெண்ணின் புரட்சி எழுத்துகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இருப்பினும் இதன் ஆழமும் வீச்சும் இன்னும் வேகமாக இருக்க வேண்டும். பெரியா வழிச் சொல்ல வேண்டுமாயின் கருப்பையினை அறுத்தெறிந்து வரும் பெண்மையைத் தேர்ந்தெடுத்து எழுத வேண்டிய காலச்சூழலினை தோற்றுவித்துக் கொள்ள முற்படுவோம்.

துணை நூல்கள்

1. தமிழ் இலக்கிய வரலாறு - சு. பாலசுப்ரமணியன்

2. பெண் மையச் சிறுகதைகள் - இரா. பிரேமா(தொ.ஆ)

3. பெண் ஏன் அடிமையானாள் - தந்தைப் பெரியார்

4. சிவசங்கரன் கதை - மகாகவி பாரதியார்

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p105.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License