இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

சுப்ரதீபக் கவிராயரின் படைப்பாளுமை

முனைவர் ப. ஈஸ்வரி


“சுப்ரதீபன்” என்றால் “கீர்த்தி பெற்றோன்” என்று பொருள். இவ்வுலகில் உண்டு உறங்கிக்கொண்டு காலத்தைப் போக்கும் மனிதர்களிடையே தன் கவித்திறமையை வெளிப்படுத்துவோர் சிலரே! அக்கவிவேந்தர்களில் ஒருவராகத் திகழ்நதவர்தான் 17 - ஆம் நூற்றாண்டில் தோன்றிய சுப்ரதீபக் கவிராயர் ஆவார்.

இவர் சிவகங்கைப் பாளையப் பகுதி (ஜமீன்), பழையனூரை அடுத்த கொழுனை என்னும் ஊரில் பொற்கொல்லர் மரபில் பிறந்தவர். கவிராயர் வீரமாமுனிவருக்குத் தமிழ் கற்பித்ததன் காரணமாகக் கிறித்தவரானவர் என்ற கருத்து நிலவுகிறது. சிற்றிலக்கியம் படைத்தவர்களுள் சிறந்தவராக இவரும் கருத்தப்படுகிறார்.

கவிராயர் நிலக்கோட்டைக் கூளப்பநாயக்கர்களைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடிய “கூளப்ப நாயக்கன் காதலும்”, “கூளப்ப நாயக்கன் விறலிவிடு தூதும்” காமச்சுவை மிகுந்தனவாகும். இவை மட்டுமல்லாமல், தனிப்பாடல்கள் சிலவும் இவர் இயற்றியுள்ளார். இவரின் பாடல்களில் கருத்துச் செறிவும், நடையும் நுட்பமாக ஆராய்ந்து எழுதிய பாங்கும், வர்ணனைகளும் அதிகம்.

விறலி என்பவள் தூது செல்லும் இளங்குமரி. அவளைத் தூதாக விடுப்பது விறலிவிடு தூதாகும். கவிராயர் கூளப்பநாயக்கன் மீது பாடிய விறலிவிடு தூதினைப் பின்பற்றியே சிவகாமி சேதுபதி என்பவரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு “சதாவதானம்” என்ற நூலை “சரவண பெருமாட்கவிராயர்” என்பவரும் விறலிவிடு தூதை இயற்றினார்.

கூளப்ப நாயக்கன் காதல்

இந்நூல் கூளப்ப நாயக்கனின் நகர் சிறப்பு பற்றியும், அவர் வேட்டைக்குச் சென்றது பற்றியும், அங்கே சோலையில் “நவரத்தின மாலை”யைக் கண்டு அவள் அழகில் மயக்கம் கொண்டு காந்தர்வ மணம் புரிந்து இன்பம் துய்த்தது குறித்தும், இறுதியில் ஒன்று சேர்ந்து வாழ்வது குறித்தும் கூறப்பட்டுள்ளன. சொல் நயமும், சுவை நயமும் மிக்கன இவரின் வரிகள். கூளப்ப நாயக்கன் திருமலை நாயக்கரின் மைத்துனன் என்பதைக் கவிராயர்,



“சித்தசரா சேந்த்ரன் திருமலை கண்ட மன்னன் மைத்துனன் வேளாக வரும்பெரிய நாகேந்திரன்”

என்ற வரிகள் மெய்ப்பிக்கின்றன.

கூளப்ப நாயக்கன் வேட்டைக்குச் செல்கையில் வேட்டை நாய்களால் மான்கள் கவ்வப்பட்ட செய்தியை,

“ஒழுக்கமுள்ளவன் தாசியின் கைகளில் சிக்கியது போல மான்கள் நாய்களிடம் சிக்கின”

என்று கூறுவதில் உண்மை நயத்தினை அறிய முடிகிறது.

அத்தினி, சித்தினி, பத்தினி, சங்கினி என்ற நான்கு வகைப் பெண்களில் பத்தினிப் பெண்ணாக விளங்கக் கூடிய “நவரத்தினமாலை”யை வருணிக்கும் பொழுது, “சிற்பிகள் எவ்வளவோ முயன்றும் அவளைப் போன்றே ஒரு சிற்பத்தைச் செய்ய முடியவில்லை. அதனால் பிரம்மாவே அவளைப் பொற்பாவையாகச் செய்து அனுப்பினான்” என்கிறார்.

கூளப்ப நாயக்கனின் ஆட்சிமுறையைக் கூறும் போது மனுநீதி தவறாமல் ஆட்சி செய்கிறான் என்றும், அவன் ஆட்சியின் கீழ் வாழும் மக்கள் அவன் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடக்கக் கூடியவர்கள் என்பதும் அறியப்படுகின்றது. வேண்டுவோர்க்கு வாரி வழங்கும் தன்மையராம். கவிராயரின் இந்நூல் இவ்வாறு இருக்க, தனிப்பாடல்களோ மக்களுக்கு உகந்த கருத்துக்களை எடுத்தியம்புவனவாக உள்ளன.

தியாகராசப் பெருமான்

திருவாரூரில் வீற்றிருக்கும் தியாகராசப் பெருமானைப் பற்றி வேடிக்கையாக ஒரு பாடல் பாடியுள்ளார். அதில்,

“ஒரு மாடும் இல்லாமல் மைத்துனர்
உலகம் எலாம் உழுதே உண்டார்
நரைமாடேலா ஒன்றிருக்க, உழுது உண்ண
மாட்டாமல் நஞ்சை உண்டீர்!”

“இருநாழி நெல் இருக்க, இரண்டு பிள்ளை
தான்இருக்க இரந்தே உண்டீர்!
திருநாளும் உண்டாச்சே, செங்மகலைப்
பதிவாழும் தியாகனாரே”


என்கிறார்.



இப்பாடலில் தியாராசப் பெருமாளே! உம் மைத்துனரான திருமால் ஒரு மாட்டின் உதவியும் இல்லாமல் பன்றி அவதாரமெடுத்து உலகமெல்லாம் உழுது உண்டார். உமக்கு வெள்ளை நிறத்தையுடைய மாடு ஒன்றிருக்கவும் உழுது உண்ணாமல் நஞ்சை உண்டீர் என்றும், உம் மனைவியான உமையம்மையிடம் இருநாழி நெல் விதைப்பதற்கு இருக்கவும், விநாயகன், முருகன் என்று இரண்டு பிள்ளைகள் இருக்கவும், உழுது பயிர் செய்து வாழாமல் பிச்சை எடுத்து உண்டீர். இத்தகைய உனக்குத் திருவிழாவும் நடக்கப் போகிறது என்றால் வேடிக்கையாக இருக்கிறது என்று நகையாடுகிறார்.

அடுத்ததாக,

கனவால் உண்டான துன்பத்தை உரைப்பதாக சிவபெருமானைப் பற்றிக் கூறும்போது உயரத்தில் நிகரில்லாத கயிலாய மலையை உடைய சிவபெருமான் ஏழு ஆறுகளுள் ஒன்றான கங்கையைச் சடையில் கொண்டவன். அவன் “ஏழு நாட்களுள் ஒன்றான செவ்வாயைத் (சிவந்த இதழை) தா” எனக் கேட்டான். நான் “ஏழு நாட்களுள் ஒன்றான வியாழனைத் (பொன்னைத்) தருவாயாக” என்றேன். என்னிடம் “பொன்” இல்லை என்பது போல் நான் உணவை உண்பது “ஓட்டில்” என்றான். எல்லாக் காலத்திலும் புலவர்களுக்குக் கிடைக்கப் பெறுவது ஓடுதான் என்பதாக,

“ஏழில் ஒருகிரியான் ஏழிலே ஒன்று அணிவான்
ஏழிலே ஒன்று ஈ எனக் கேட்டான் ஏழிலே
ஒன்று ஈ என்றேன்
உண்பது ஓடு என்றான்”


என்று பாடினார்.

இல்லறத்தில் எழில் நலம்

இளமையும் எழிலும் இருக்கும்போது ஏறெடுத்துப் பார்க்கும் ஆடவர்கள் எழில் நலம் குறைந்த பிறகு அவர்களை ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லை என்பதை,

“கச்சிருக்கும் போது கரும்பானேன்
கைக்குழந்தை
வச்சிருக்கும்போது மருந்தானேன்
நச்சிருக்கும்
கண்ணார் கரும்பானார் காணவும்
நான் வேம்பானேன்”


என்ற பாடலில் திருமணமான புதிதில் ஒரு இளைஞன் தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு, கோயிலுக்குச் செல்கிறான். செல்லுகின்ற வழியிலே அவளுக்கு முள் குத்திவிட்டது. அவள் ‘ஆ’ என்று அலறியதும், இவன் ஓடோடிச்சென்று அவளது காலைப் பிடித்து மெதுவாக அந்த முள்ளை நீக்குகிறான். அடடா! சனியன் பிடித்த முள் குத்திவிட்டதே என்று அங்கலாய்க்கிறான்.



வரலாறு மீண்டும் திரும்புகிறது. அதே இளைஞன், அதே மனைவியுடன் ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னர் மகனையும், மகளையும் சேர்த்து அழைத்துக் கொண்டு, அதே போலக் கோயிலுக்குச் செல்கிறார்கள். இப்பொழுதும் அவளுக்கு முள் குத்திவிடுகிறது. அவளது அலறும் சத்தம் கேட்டதும், சனியனே! பார்த்து வரக்கூடாதா? முள்ளைக் குத்திக்கொண்டு தொல்லைப் படுத்துகிறாயே! என்று கடுகடுக்கிறான். எப்படியிருக்கிறது பார்த்தீர்களா?

இதைத்தான் நற்றிணையில் ஒரு பாடல், இளமையிருந்தாலும், முதுமையானாலும் இல்லறத்தில் வாழ்பவர்கள் ஒரே நிலையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

அதைப் போன்றே பெண் ஒருத்தியின் பேரழகையும் வியந்து பாராட்டுகிறார் கவிராயர். அதனை,

“ஏர் பெரிய
துன்னுவிழி நால் மூன்று! தூயதனம்
நாலிரண்டு
பன்னிரண்டு சிற்றிடையாம் பார்”


என்று பாடியுள்ளார்.



பாடலுக்கு இரங்குதல்

குன்னரங்க மன்னன் இறந்தபோது பாடிய பாடல் ஒன்றில்,

“தென்னரங்கன் அரங்கன் என்பார்
வாய்திறவான்
கண்விழியான், திரும்பிப் பாரான்
என் அரங்கன்? தூங்கு அரங்கன்
ஏழையர்பால்
கருணையுடன் இரங்கா ரங்கன்
மழவரங்கன்
அருளித்தரும் மைந்தனான
குன்னரங்கா
எனக்கு இரங்காய், கொண்டு
வந்த
தமிழுக்கு இரங்கிக் குழைந்து எழாயே”


என்று திருவரங்கத்தில் உள்ள திருமாலைச் சபையின் தலைவன் என்பர். அவன் வாய்திறக்க மாட்டான். அவன் கண்ணைத் திறந்து பார்க்க மாட்டான். திரும்பிப் பார்க்க மாட்டான். அவன் எத்தகைய அரங்கன் என்றால், தூங்குகின்ற அரங்கன். ஏழையரிடம் அருள் காட்டி இரங்காத அரங்கன். இப்படி இருக்கும் போது மன்னரைத் தனக்கு உறுப்பாகக் கொண்ட தமிழுக்குத் தலைவனான மழவரங்கன் என்பவனின் மகனான “குன்னரங்கன்” என்னும் பெயரை உடையவனே நீ எனக்கு இரங்க மாட்டாய் என்றாலும் நான் பாடிய பாடலுக்கு இரங்கி உயிர் பெற்று எழுவாயாக என்று பாடித் தமிழின் உயர்வைக் காட்டுகிறார்.

முடிவுரை

இப்படியாக சொல் நயமும், சுவை நயமும் மட்டுமல்லாமல் கவிராயரின் பாடல்களில் கருத்துச் செறிவும் மிகுந்துள்ளமை புலப்படுகிறது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p108.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License