இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

ஒப்பீட்டு நோக்கில் தமிழ் - மலையாள மொழிகளில் ஏவல் வினைகள்

முனைவர். விஜயராஜேஸ்வரி
விரிவுரையாளர், தமிழ்த்துறை, கேரளப் பல்கலைக்கழகம்,
காரியவட்டம், திருவனந்தபுரம், கேரளா.


தமிழ் மொழியின் சொற்களை இலக்கணவியலாளர்கள் பலவகைகளாகப் பிரிப்பர். அவற்றுள் வினைச்சொற்கள் மிக முக்கியமானதொரு சொல் வகையாகும். தொல்காப்பியர் இதனை,

”வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங்காலை காலமொடு தோன்றும்” (தொல்.சொல். 683)

என்பார்.

தமிழ் வினைச்சொற்கள் வேற்றுமை உருபுகளை ஏற்காமல்; காலங்காட்டும் இடைநிலைகளை ஏற்றுவரும் என்பது தொல்காப்பியனாரின் கருத்து. கால இடைநிலைகளை ஏற்கவல்லதாயும்; பாலிட விகுதிகளை ஏற்க வல்லதாயும் அமையும் கிளவிகள் வினைச்சொற்கள் என்று கொள்ளப்படும் என்பார் பேரா. பொன். கோதண்டராமன். ( இக்காலத் தமிழ் இலக்கணம், 2002, பக்-44)

வினைச்சொல் வகைப்பாடுகள்

தமிழ் வினைச்சொற்களைப் பல்வேறு அடிப்படைகளில் பலவகைப்பாடுகளுக்கு இலக்கணவியலார்கள் உட்படுத்தி உள்ளனர். இதன் பயனாகப் பல்வேறுபட்ட வினை வகைப்பாடுகள் காணப்படுகின்றன. இவற்றுள் மெல்வினை, வல்வினை என்பது ஒரு வகை.

வினைச்சொற்கள் ஏற்கும் காலம் காட்டும் உருபுகளை அடிப்படையாக வைத்துக் கிரால் என்பவர் பன்னிரண்டு வகைகளாகப் பிரிப்பார்.

ஆர்டன் என்பவர் ஏழு வகைகளாகப் பிரிப்பார்.

பேரா. பொன் கோதண்டராமன் அவர்கள் வினைச்சொற்கள் ஏற்கும் காலங்காட்டும் உருபுகளை அடிப்படையாகக் கொண்டு ஆறுவகைகளாகவும்; ஒழுங்கில்லா வினைகளையும் சேர்த்து மொத்தம் ஏழாகவும் வகைப்படுத்தியுள்ளார்.

வினையடிகளை அடிப்படையாக வைத்துத் தனிவினை, கூட்டுவினை எனப் பிரிப்பர். வினைச்சொற்களின் பொருட்பண்புகளை அடிப்படையாக வைத்து; செயல்வினை, நிலைவினை, இயங்குவினை என்றும் பிரிப்பர்.

தன்வினை பிறவினை என்பது மற்றுமொரு வகைப்பாடு. தெரிநிலை வினை குறிப்பு வினை என்பது மரபிலக்கணங்கள் கூறும் வகைப்பாட்டு முறை. செய்வினை, செயப்பாட்டுவினை என்பதொரு முறை. முற்று, எச்சம் என்பது மற்றுமொரு வகை. வினைச்சொல்லுடன் பிற வினைகள் இணைவதனை வைத்து முதல்வினை, துணைவினை என்ற பகுப்பையும் காணலாம். இவ்வாறு தமிழ் வினைச்சொற்கள் பல வகைகளான பகுப்புகளைக் கொண்டுள்ளன.



மலையாளத்தில் வினைச்சொற்களின் பாகுபாடு

கேரள பாணினியம் என்ற மலையாள இலக்கண நூலின் ஆசிரியரான ஏ. ஆர். இராஜஇராஜவர்மா அவர்கள் மலையாள மொழியின் வினைச்சொற்களை வினைமுற்று, வினையெச்சம் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றார்.

தற்கால மலையாள மொழிக்கு இலக்கணம் வகுத்த ஆர். இ. ஆசர் அவர்கள் வினைச்சொற்களை வினைமுற்று, வினையெச்சம் என்ற இரு பிரிவுகளாகவேப் பிரித்துள்ளார்.

தற்கால மலையாள வினைச்சொற்களைக் குறித்து ஆய்ந்த ஏலியாஸ் என்பவர் வினைகளை வினைமுற்று, வினையெச்சம் என்றே பிரித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

மலையாள மொழியின் வினைச்சொற்களை பேரா. சூரநாடுகுஞ்ஞன் பிள்ளை அவர்கள் பதினாறு பிரிவுகளாகப் பிரித்துள்ளார். இறந்தகால இடைநிலைகளின் அடிப்படையில் இந்த வினைப்பகுப்பு அமைந்துள்ளது. மலையாளப் பேரகராதியிலும் இராமசரிதம், கன்னச இராமாயணம், இராம கதாப்பாட்டு, பாரதமாலை போன்ற மலையாள நூல்களின் விளக்கவியல் இலக்கணங்களிலும் இம்முறையே பின்பற்றப்பட்டுள்ளது.

திராவிட மொழிகளைக் குறித்து ஆராய்ந்த பேரா. ஜான்சாமுவேல் அவர்கள் அவற்றின் வகைப்பாடுகளைக் குறித்து கீழ்க்கண்டவாறு விளக்குவார்.

”திராவிட மொழிகளின் வினைச்சொற்களில் தன்வினை, பிறவினை, இயக்குவினை என்ற மூவகையான வினைவகைகளையும், ஏவல் வினை, நிபந்தனை வினை, வியங்கோள் வினை என்னும் பல்வேறு வினைப்பொருள்களையும் (Moods) காணலாம். வினைச்சொற்களின் பொருளைச் சிறப்பிக்க ஐரோப்பிய மொழிகளில் முன்னொட்டுக்கள் (Prepositions) பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், திராவிடமொழிகளில் துணைவினைகளும் எச்சமாக அடுக்கும் வினைகளும் (Particles and Infinitives) பயன்படுத்தப்படுகின்றன. இம்மொழிகளின் வினைச்சொற்களைக் காலங்காட்டும் முறை, வினையின் தன்மை, பால் காட்டும் முறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கூறுபடுத்தலாம்” (பேரா. ஜான்சாமுவேல், திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ஓர்அறிமுகம், 2008, பக், 176)

எனவே தமிழிலும் மலையாளத்திலும் பல அடிப்படையிலான வினைச்சொற்களின் வகைப்பாடுகள் காணப்படினும், இவற்றுள் எந்த அடிப்படையிலான பகுப்பு தமிழ் மலையாள வினைச்சொற்களைத் தெளிவாக விளக்கப் பயன்படுமோ அப்பகுப்பே சிறப்பானதாகக் கருதப்படுகிறது. தமிழ் - மலையாள கணினி வழி மொழிபெயர்ப்பிற்கு வினைச்சொற்கள் குறித்த தெளிவினை அளிக்க இப்பகுப்பு முறைகள் இன்றியமையாததாகும். இங்ஙனம் அமைந்துள்ள பல பகுப்பு முறைகளில் வினைமுற்று, வினையெச்சம் என்ற பகுப்பு முறை தமிழ் - மலையாள மொழிகளில் நவீன இலக்கண ஆசிரியர்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.



தமிழ் மலையாள இலக்கணங்களில் முற்றும் எச்சமும்

தமிழில் முற்றுவினை எச்சவினை என்பதைக் குறித்து பேரா. இரா. சீனிவாசன் அவர்கள் குறிப்பிடுவதாவது,

”தமிழ்வினைகள் முற்று, எச்சம் என இருவகைப்படும். முற்று வினை வாக்கியத்தில் பயனிலையில் முடியும். எச்சவினைகள் பெயரையோ, வினையையோ எஞ்சி நிற்கும். சொல்நிலையில் முற்று வினைகள் பால் ஈறுகள்பெற்றோ, பெறாமலோ வரும். எச்ச வினைகள் பால் ஈறுகள் பெறுவதேஇல்லை” (இரா. சீனிவாசன், மொழியியல், 2009, பக்- 146)

மலையாள மொழியின் இலக்கண நூலான கேரள பாணினியம், அம்மொழியின் வினைச் சொற்களை,

1) முற்றுவினா (வினைமுற்று)

2) பற்றுவினா (வினையெச்சம்)

என்ற இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறது. (கேரளபாணினியம், அறிமுகம்)

முற்று வினா முடிவுற்ற பொருளைக் கொண்டும், ஒரு தொடரின் இறுதியிலும் அமையும். பற்று வினா பொருள் முடிவுறாமலும் முற்று வினையின் முன்பாகவும் அமையும். எனவே தமிழ் மற்றும் மலையாள வினைச்சொற்கள் வினைமுற்று, வினையெச்சம் என்ற இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன; இவ்விரு வினைகளின் பண்புகளும் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டுஅமைகின்றன.

தமிழில் வினைமுற்று

தமிழ் மொழியில் பொருள் நிறைவுற்று / முற்றுப் பெற்று வரும் வினைகள் வினைமுற்று என்ற வகையில் அடங்கும். இவ்வினைகள் வினையடி, கால இடைநிலை, பால், இட விகுதி என்ற அமைப்பில் அமையும்.

மலையாள மொழியில் வினைமுற்று, பிற திராவிட மொழிகளிலிருந்தும் வேறுபட்ட அமைப்பினைக் கொண்டுள்ளது. இவ்வினைமுற்றுக்களில் எழுவாய்க்கும் வினைமுற்றுக்கும் எவ்வித இயைபும் கிடையாது. அதாவது பால், எண், இட விகுதிகள் மலையாள வினைமுற்றுக்களில் காணப்படுவது இல்லை.

வினைமுற்று வகைகள்

வினைப் பொருண்மையின்அடிப்படையில்மூன்றுவகையானவினைமுற்றுவகைகள்தமிழிலும்மலையாளத்திலும்அமைந்துள்ளன. அவையாவன,

1) ஏவல் வினைமுற்று (Imperative Mood)

2) கூற்று அல்லது செயல் வினைமுற்று (Indicative Mood)

3) வியங்கோள் வினைமுற்று (Optative Mood)



ஏவல் வினைமுற்று( Imperative Mood)

தமிழில் பெரும்பாலான வினைகளும் ஒருமை ஏவலாகச் செயலாற்றும். (இசுராயேல், வினைச்சொற்களின்இலக்கணம்)

ஏவல் வினை முன்னிலையில் உள்ளவருக்கு இடும் வேண்டுகோளாகவோ, கட்டளையாகவோஅமையும். (பேரா. இரா.சீனிவாசன்)

தமிழ் ஏவல் வினைச்சொற்களில் ஒருமையும் பன்மையும் உண்டு. இவ்விரு வகையிலும் உடன்பாடும், எதிர்மறையும் உண்டு.


ஏவல் வினை அமைப்பு

தமிழில் ஏவல் வினை அமைப்பு

[வினையடி + (பன்மைவிகுதி)]

எ.கா:

வா (நீவா) - ஒருமை
வாருங்கள் (நீங்கள் வாருங்கள்) - பன்மை

மலையாளத்தில் ஏவல் வினைமுற்று முன்னிலையிடத்தில் வழங்கி, ஒருமையும் பன்மையும் கொண்டு அமைந்துள்ளது.

மலையாளத்தில் ஏவல் வினை அமைப்பு

[வினையடி + (பன்மைவிகுதி)]

எ.கா:

வா (நீ வா) - ஒருமை
வரூ ( நிங்ஙள் வரூ) - பன்மை

உடன்பாட்டு ஏவல் வினை முற்று

தமிழில் உடன்பாட்டு ஏவல் வினைமுற்று வினையடியை ஒத்தது. இதற்கு உருபு எதுவும் கிடையாது. அதாவது,

ஏவல் காட்டவும் முன்னிலை குறிக்கவும் தனி உருபன் எதுவும் கிடையாது. ”வெற்றுருபன்” (Zero Morpheme) மூலம் இவ்வுருபன்கள் குறிக்கப்படுகின்றன.

எ.கா:

(நீ) வா = வா
(நீ) சொல் = சொல்

மலையாளத்திலும் உடன்பாட்டு ஏவல் வினைமுற்று; வினையடியை மட்டுமே எடுத்து வரும். ஏவலையும் முன்னிலையையும் சுட்ட தனி உருபன் எதுவும் கிடையாது. அவை தமிழைப் போலவே வெற்றுருபன் மூலம் குறிக்கப்படுகின்றன.

எ.கா:

(நீ) வா = வா
(நீ) பரா = பரா

தமிழிலும் மலையாளத்திலும் ஏவல் ஒருமை அமைவதில் வேறுபாடு எதுவும் அமைவதில்லை என்பது இதன் மூலம் புலனாகிறது.


எதிர்மறை ஏவல் வினைமுற்று

தமிழில் எதிர்மறை சுட்டும் ஏவல் ஒருமை வினைமுற்று, வினையடியுடன், எதிர்மறை காட்டும் உருபான “-ஆத்” தையும் ஒலி இசைவு ஒட்டான “-ஏ” வையும் எடுத்து வரும்.

இதன் அமைப்பு,

[வினையடி + “-ஆத்” + “-ஏ”]

எ.கா:

வராதே
போகாதே

தமிழில் வினையடியுடன் ”கூடாது” என்ற சொல் இணைந்தும் எதிர்மறை ஏவல் உருவாக்கப்படுகின்றது.

[வினையடி + கூடாது]

எ.கா:

வரக்கூடாது, செய்யக்கூடாது.

மலையாளத்தில் எதிர்மறை ஏவல் ஒருமை வினைமுற்று பல வகையான எதிர்மறை சுட்டும் சொற்களின் மூலம் குறிக்கப்படுகின்றது. இச்சொற்கள் வினையடியுடன் இணைந்து எதிர்மறை ஏவல் வினைமுற்றை அமைக்கும். இந்த எதிர்மறை சுட்டும் சொற்கள் ஆவன,

1) அருது
2) அண்டா
3) பாடில்லா

4) கூடா
5) என்னில்லா(ஆசர், மலையாளம், பக் - 308)

என்பன.

எ.கா:

தமிழ்:

வராதே சொல்லாதே

மலையாளம்:

வரருது பரயருது
வரண்டா பரயண்டா
வரான் பாடில்லா பரயான் பாடில்லா
வண்ணு கூடா பரஞ்ஞு கூடா

இங்கு தமிழில் எதிர்மறை ஒட்டான “-ஆதே” வருமிடத்தில் ”அருது” எனும் முழுச்சொல் இடம் பெற்று, எதிர்மறைப் பொருளை உணர்த்துகின்றது.

இயலாமைப் பொருளுணர்த்தும் கூடாது என்னும் சொல் விலக்குப் பொருளில் வருவது போன்றே அரிது என்னும் பொருளிலும் வரும்.

சான்றாக,

காண்பதற்கு அரிது, செய்வதற்கு அரிது என்பதில் வரும் சொல் ”அருது” எனத் திரிந்து மலையாளத்தில் வழங்குவதாக தேவநேயப்பாவாணர் குறிப்பிடுவார். மழயத்து போகருதே, வெயிலத்து நடக்கருதே என்பவை மழையிற் போகாதே, வெயிலில் நடவாதே என்று பொருள் தரும் என்றும், இவை சேரநாட்டு / மலைநாட்டு வழக்கம் என்றும் இவர் குறிப்பிடுவார். (மொழி வரலாறு , தேவநேயப்பாவாணார் பக்.50)

தற்கால மலையாளத்தில் “அல்லே” எனும் சொல்லும் வினையடியுடன் எதிர்மறை சுட்டப் பயன்படுகிறது.

எ.கா:

பர - அல்லே - பரயல்லே

செய- அல்லே- செய்யல்லே



ஏவற் பன்மை (Plural Imperatives )

தமிழிலும் மலையாளத்திலும் ஏவற் பன்மை உண்டு. ஏவற் பன்மையில் உடன்பாடும் எதிர்மறையும் உண்டு. இரு மொழிகளிலும் இவ்விடத்தில் முன்னிலைப் பன்மை காட்டும் உருபன் வெற்றுருபன் ஆகும்.

உடன்பாட்டு ஏவற்பன்மை

தமிழில் இதன் அமைப்பு

[வினையடி + உங்கள்]

என அமையும். இங்கு பன்மை ஒட்டு “உங்கள்” (- யுங்கள்) என்பதாகும். இது மரியாதை ஒருமைக்கும் உரிய விகுதியாக உள்ளது. எனவே இந்த ஏவற் பன்மை அமைப்பு ஒருமையில் ஒருவரை மரியாதை கருதி அழைப்பதற்கும், பன்மையைக் குறிப்பதற்கும் என இரு வகைகளில் பயன்படுகிறது.

எ.கா:

சொல் - லுங்கள் ( சொல் - உங்கள் ) ஏ. பன் & ம. ஒரு.

அமர் - ருங்கள் ( அமர் - உங்கள் ) ஏ. பன் & ம. ஒரு

கேளு - ளுங்கள் ( கேள் - உங்கள் ) ஏ. பன் & ம. ஒரு

மலையாளத்தில் ஏவற் பன்மை; வினையடியையும் “-ஊ” என்னும் ஏவற் பன்மை உருபையும் எடுத்து வரும். இந்த “-ஊ”என்னும் உருபு ஏவற் பன்மையையும் மரியாதை ஒருமையையும் சுட்ட உதவும்.

மலையாளத்தில் இதன் அமைப்பு

[வினையடி + ஊ]

எ. கா:

( நிங்ஙள்) வரூ - ஏவற் பன்மை

(நிங்ஙள்) வரூ - மரியாதை ஒருமை

இங்கே உடன்பாட்டு ஏவற் பன்மைஅமைவதில்; அமைப்பு அடிப்படையில்; இரு மொழிகளும் வேறுபடுதல் காணப்படுகிறது.

[ உங்கள் = ஊ ]

எதிர்மறை ஏவற் பன்மை

தமிழில் எதிர்மறை ஏவற் பன்மை அமைப்பு எதிர்மறை ஒட்டு “-ஆத்” தையும், முன்னிலை காட்டும் உருபு “-ஈர்கள்” ஐயும் கொண்டு அமைகின்றது. முன்னிலைப் பன்மைக்கும், மரியாதை ஒருமைக்கும் இதே உருபே பயன்படுகின்றது.

இதன் அமைப்பு,

[வினையடி + “-ஆத் ” + “ -ஈர்கள் ” ]

எ.கா:

சொல் -ஆத் - ஈர்கள் = சொல்லாதீர்கள்

கேள் - ஆத் - ஈர்கள் = கேளாதீர்கள்

மலையாளத்தில் எதிர்மறை காட்டும் அருது, அண்டா, பாடில்லா, கூடா, அல்லே, என்னில்லா எனும் சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் எதிர்மறை ஏவற் பன்மை பெறப்படுகிறது. தமிழில் பன்மை காட்ட “ஈர்கள்” என்னும் ஒட்டு இருப்பது போல் இங்கே தனியுருபு எதுவும் இல்லை. ஏவல் எதிர்மறை ஒருமை சுட்டும் சொற்களே ஏவல் எதிர்மறைப் பன்மை காட்டவும் பயன்படுகின்றன. இது தமிழ் - மலையாள மொழிகளில் இடையே நிலவும் ஒரு முக்கிய வேறுபாடு ஆகும்.

இதன்அமைப்பு,

[(நிங்ஙள்) வினையடி + “-அருது”… ]

எ.கா:

(நிங்ஙள்) பரயருது
(நிங்ஙள்) பரயண்டா
(நிங்ஙள்) பரயான் பாடில்லா
(நிங்ஙள்) பரஞ்ஞு கூடா

இவை தவிர “அல்லே” என்னும் சொல்லும் ஏவல் எதிர்மறை ஒருமையில் போலவே பன்மைக்கும் பயன்படுத்தப்படுகிறது.

எ.கா:

(நிங்ஙள்) பரயல்லே
(நிங்ஙள்) கேள்க்கல்லே

ஆனால் மரியாதை ஒருமைக்கு தமிழில் இவ்விடம் ”சொல்லாதீர்கள்” (பரயருது) பயன்படுத்தப்படுவது போல் இங்கே பயன்படுத்த இயலாது. தமிழில் மரியாதையை வெளிப்படுத்தும் பன்மைக்கான உருபு வினையடியுடன் சேர்ந்து வருகின்றது. இதற்குப் பதிலாக; மலையாளத்தில்; மரியாதைஏவலில்; முன்னிலைப் பதிலிடு பெயரான “நிங்ஙள்” அல்லது ”தாங்கள்” சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.

இதன் அமைப்பு,

[நிங்ஙள் / தாங்கள் + வினையடி + “-அருது”….. ]

எ.கா:

நிங்ஙள் / தாங்கள் பரயருது
நிங்ஙள் / தாங்கள் கேள்க்கண்டா
நிங்ஙள் / தாங்கள் செய்யான் பாடில்லா
நிங்ஙள் / தாங்கள் பரஞ்ஞு கூடா
நிங்ஙள் / தாங்கள் கேள்க்கல்லே


என அமைகின்றன.

மலையாளத்தில் இம்மாதிரியாக முன்னிலையிடத்தில் இருப்பவரைப் பதிலிடு பெயரால் சுட்டுவதற்குப் பதில் அவரை மரியாதையுடன் அழைத்தே பெரும்பாலும் மரியாதை ஏவல் வெளிப்படுத்தப்படுகின்றது.

எ.கா:

சார், தாங்கள் பரயருது
சார், தாங்கள் கேள்க்கருது
தமிழ்: சொல்லாதீர்கள்

மலையாளம் : சார்பரயருது /சார்தாங்கள்பரயருது

[முன்னிலை மரியாதை அமைப்பு = முன்னிலைப் பதிலிடு பெயர் + வினையடி + எதிர்மறை காட்டும் சொல்]

இங்குள்ள மற்றுமொரு குறிப்பிடத்தக்க வேறுபாடு, தமிழில் எதிர்மறை ஏவலொருமைக்கும் எதிர்மறை ஏவற் பன்மைக்கும் வெவ்வேறு உருபுகள் அமைய, மலையாளத்தில் ஒரு சொல்லே இவ்விரு செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

எ.கா:

தமிழ் : (நீ) வராதே

மலையாளம் : (நீ) வரருது, (நீங்கள்) வராதீர்கள், (நிங்ஙள்) வரருது



விருப்பேவல் (Optional Imperative)

தற்காலத்தில் வழங்கும் தமிழில் ஏவலொருமை அல்லது ஏவற் பன்மையோடு ”ஏன்” என்னும் உருபு சேர்வதனால் விருப்பேவல் தோன்றுகிறது. விருப்பேவல் என்பது ஏவப்படுகின்றவன் விரும்பினால் அந்த ஏவலைச் செய்யலாம் என்பதாகும். ( கு.பரமசிவம், 230 )

இவ்வகை விருப்பேவலில் ஒருமையும் பன்மையும் மரியாதை ஒருமையும் உண்டு. மலையாளத்திலும் இவ்வகையான விருப்பேவல் அமைந்து காணப்படுகிறது.

எகா:

தமிழ்:

வாயேன் - ஒருமை.
வாருங்களேன் - பன்மை.
வாருங்களேன் - ம. ஒரு.

மலையாளம்:

வராமோ / வருமோ - ஒருமை.
வராமோ/ வருமோ - பன்மை.
(தாங்கள்) வராமோ மரி. ஒருமை

தமிழில் விருப்பேவலைத் தெரிவிக்க “ஏன்” என்னும் உருபு சேர்க்கப்படுகிறது. மலையாளத்தில் ”ஆமோ” அல்லது ”ஓ” எனும் ஒட்டு சேர்க்கப்படுகிறது. விருப்பேவலில் தமிழுக்கும் மலையாளத்திற்கும் இடையே அமையும் வேறுபாடாக இது அமைகின்றது.

[ஏன் = ஓ]

மேலும் தமிழில் ஏவலொருமைக்கும் மரியதை ஒருமைக்கும் ஒருவித அமைப்பும், பன்மைக்கு மற்றுமொரு அமைப்பு என, இருவேறு அமைப்புகள் உள்ளன. ஆனால் மலையாளத்தில் ஒருமைக்கும் பன்மைக்கும் ஒன்று போல் அமைப்பே உள்ளதை அறிய முடிகின்றது.

தமிழ்:

வாயேன் - ஒருமை.
வாருங்களேன் - பன்மை.

மலையாளம்:

வராமோ/ வருமோ - ஒருமை.
வராமோ/ வருமோ - பன்மை.



உறவுமுறைப் பெயர்கள்

தற்காலத் தமிழில் சில ஏவல் வினைகள் உறவுமுறைப் பெயர்களையும் ஒட்டுக்களாக இணைத்து வருகின்றன.

அப்போது முன்னிலை இடத்தில் தன்னை விட வயதில் இளையவராக இருந்தால் ஏவல் வினையுடன் டா, டீ பயன்படுத்தப்படுகிறது. மலையாளத்திலும் இதே முறை வழக்கில் உள்ளது.

எ.கா

தமிழ்:

வா - டா - முன்.ஒரு.
வா - டீ - முன்.ஒரு.
மலையாளம்:

வா-டா - முன்.ஒரு.
வா-டீ - முன்.ஒரு.

மலையாளத்தில் உறவுமுறை விருப்பேவல்களில் இரு பாலுக்கும் பொதுவாக அமையும் ஒட்டு உள்ளது.

எ.கா

மலையாளம்:

வாடே - முன்.ஒரு.

தற்காலத்தில் வழங்கும் தமிழ் மற்றும் மலையாள மொழிகள் அமைப்பு அடிப்படையில், அதன் இலக்கண அமைப்பில் நுணுக்கமாக வேறுபடுகின்றன. தமிழ்மொழி மலையாளமாகத் திரிந்தமைக்கான காராணங்கள் இவ்வாறு அறிவதன் மூலம் புலப்படும். தமிழுக்கும் மலையாளத்திற்குமான வேறுபாடுகளை இங்ஙனம் அனைத்து இலக்கண அமைப்பிலும் அறிவது தமிழ் - மலையாள கணினி வழி மொழி பெயர்ப்பு அமைப்பிற்கும், தமிழ், மலையாள மொழிகளை இரண்டாம் மொழியாகக் கற்றுக் கொள்பவர்களுக்கும் மிகவும் பயன்பாடுடையதாக அமையும்.

துணை நூற்பட்டியல்

1. Thomas Lehmann. - A Grammar of Modern Tamil

2. R. E. Asher - Malayalam

3. Ravishankar . S. Nair - A Grammar of Malayalam

4. ஏ. ஆர். இராஜ இராஜ வர்மா - கேரள பாணிணியம்

5. K. N. Ezhuthaccan - Grammatical Theories in Malayalam

6. தேவநேயப்பாவாணர் - மொழி மரபு

7. பரமசிவம். கு - இக்காலத்தமிழ் மரபு

8. அகத்தியலிங்கம். ச - தமிழ் மொழி அமைப்பியல்

9. பேரா. ஜான்சாமுவேல் -திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ஓர்அறிமுகம்.

10. கால்டுவெல் - திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்

11. நன்றி: பேரா. நடுவட்டம் கோபாலகிருட்டினன் - திராவிட மொழியியல் கழகம், திருவனந்தபுரம்.

12. நன்றி: பேரா. இரவிசங்கர் எஸ்.நாயர் - மொழியியல் துறை, காசர்கோடு மத்தியப்பல்கலைக்கழகம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p111.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License