இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

இளையராஜாவின் ‘வெண்பா நன்மாலை’

முனைவர் ம. தேவகி
தமிழ்த்துறைத் தலைவர்,
நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேனி.


முன்னுரை

இசைஞானி இளையராஜா ‘வெண்பா நன்மாலை’ என்ற பெயரில் சிவனின் பெருமையை வெண்பாவில் எழுதி நூலாக வெளியிட்டுள்ளார். “2000 -ஆம் ஆண்டு தொடக்கத்தில் ‘வெண்பா’ எழுதிப் பார்க்கும் எண்ணம் தோன்றியது, தொடங்கினேன். சிந்தனையை எழுதி விட்டுப் படித்துப் பார்த்தால் தளை தட்டியது. தலையில் ஒரு குட்டு. தளையைச் சரி செய்தால் அமைகின்ற சொற்றொடர் எனக்குப் பிடிக்கவில்லை. இப்படியே சிந்தனைக்கும், தளைக்கும் மாறிமாறி நின்று, சலித்துப்போய்த் தூக்கிப் போட்டு விட்டேன். மூன்று மாதம் கழித்துத் திடீரென்று இந்த வெண்பா என்றால் என்னவென்று பார்த்தே ஆக வேண்டுமென்று திட்டவட்டமாக முடிவெடுத்து அதே வெண்பாவைச் சரி செய்தேன். தளையும், சிந்தனையும் சண்டை சச்சரவெல்லாம் சமரசமாகி விட்டன” (1) என்கிறார் இளையராஜா. இளையராஜா எழுதியுள்ள இந்நூலில் 122 வெண்பாக்கள் இருக்கின்றன.

வெண்பா நன்மாலை - வெண்பாவிற்குரிய சீர்

‘வெண்பா நன்மாலை’யில் பின்வரும் பாடலில் இயற்சீர் மட்டும் அமைந்துள்ளது.

“பிழைக்கப் பிழைக்க உயிர்க்கும் பிறப்பே
பிழைப்பார் பிழைப்பு பிழையின் பிழைப்பே
பிழைக்கா திருத்தல் பிறப்பை யறுத்தல்
பிழையா பெறுவாய் பிறந்து?” (2)

மேற்கூறிய பா தவிர ஏனைய பாக்களில் வெண்பாவிற்கு உரிய இயற்சீரும், வெண்சீரும் விரவியுள்ளன.

“யார்க்கு விதித்தானோ காண்பார் அவர்மட்டும்
யார்க்குத் திறப்பானோ சேர்வார் அவர்மட்டும்
பார்க்கும் இடமெல்லாம் பரந்த பொருளறிதல்
யார்க்கும் எளிதோ இயம்பு” (3)

ஐகாரத்தைக் குறுக்கமாக அலகிடல்

‘வெண்பா நன்மாலை’யில் பின்வரும் அடிகளில் உள்ள ஐகாரத்தைக் குறுக்கமாக அலகிட்டால் மட்டுமே வெண்பாவிற்கு உரிய சீராக்க இயலும்.

“வேண்டியது தந்தேன்; விருப்பமே இல் லையெ னில்” (4)

- நேர் நிரை நேர் கூவிளங்காய்

“ஒன்றுமிலா மா யையெ னில் ஒன்றவைத்தல் நன்றாமோ?” (5)

- நேர் நிரை நேர் கூவிளங்காய்

“நம்நெஞ்சுக் கொன்றுமற்றால் நன்றாமோ? நன் மைவ ர” (6)

- நேர் நிரை நேர் கூவிளங்காய்

இவை மட்டுமின்றி மேலும் நான்கு அடிகளில் உள்ள ஐகாரத்தைக் குறுக்கமாக்கினால் மட்டுமே வெண்பாவிற்கு உரிய சீர்களாக மாற்ற இயலும்.


ஈற்றடியின் இறுதிச்சீர்

‘வெண்பா நன்மாலை’யின் 122 பாக்களுள் 48 பாக்கள் நேரசையிலும், எட்டுப் பாக்கள் நிரையசையிலும், 41 பாக்கள் நேர்பு அசையிலும், 23 பாக்கள் நிரைபு அசையிலும் முடிவடைகின்றன. நேர்பு, நிரைபு அசையில் முடியும் பாக்களில் பின்வரும் பாக்கள் முற்றியலுகர ஈற்றினைக் கொண்டுள்ளன:

“அறிந்தோர் தொடர்தல் அறிவு” (7)

“அறிவை இழத்தல் அறிவு” (8)

“நன்றோது நாறாது நாவு!” (9)

பேச்சுவழக்குப் போல நாட்டுப்புறப் பாடல் வடிவில் அமைந்துள்ள பாவின் இறுதிச்சீர் ஒலித்துணை உகரம் போல முற்றியலுகர ஈற்றினைக் கொண்டு முடிவடைந்துள்ளது.

“பாக்கப் படிக்கிறதப் பாரு” (10)

“கல்லல்லே நம்மனசு காணு” (11)

இதில் பார், காண் என்றாலும் இச்சொல்லின் பொருள் வேறுபடாது.

ஈற்றடியின் இறுதிச்சீர்ப் பிறழ்ச்சி

‘வெண்பா நன்மாலை’யில் பின்வரும் அடி மட்டும் வெண்பாவிற்குரிய இறுதிச் சீராக அமையவில்லை:

“சாராம்சம் ஒண்ணுதான் சாமி” (12)

‘வெண்பா நன்மாலை’- வெண்பாவின் தளையும், ஓசையும்

‘வெண்பா நன்மாலை’யில் 118 ஆம் பாடலில் இயற்சீர் மட்டும் உள்ளதால் இயற்சீர் வெண்டளை பயின்று வருகிறது. ஆகவே தூங்கிசைச் செப்பலோசை பயின்று வருகின்றது. மேற்கூறிய பா தவிர ஏனைய பாக்களில் வெண்பாவிற்கு உரிய இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் விரவியுள்ளன. ஆகவே ஒழுகிசைச் செப்பலோசை பயின்று வருகின்றது.

“உலகத்தை என்மனம் ஒப்பவில்லை பாழும்
உலகென்னை ஒப்பவில்லை ஓர்வாய் - உலகுடையாய்
ஒப்பா இருபொருளை ஒன்றிணைத்தாய் இஃதினைநீ
எப்படித்தான் ஒப்புவையோ செப்பு!” (13)


வெண்பா அடி

‘வெண்பா நன்மாலை’யில் அனைத்துப் பாக்களிலும் வெண்பாவிற்குஉரிய அளவடியும், சிந்தடியும் அமைந்துள்ளன.

“அடியவர் உள்ளத் தவதரிக்கும் உன்னை
அடியார் பிறவாதான் என்பர் - அடியவர்
உள்ளத்தே நீபிறக்க உள்ளம் இறக்குமெனில்
உள்ளத் துறைதலென்கொல் லோ?” (14)

வெண்பா வகை

‘வெண்பா நன்மாலை’யில் நேரிசை மற்றும் இன்னிசை வெண்பாக்கள் அமைந்துள்ளன.

நேரிசை வெண்பா

1. வெண்பா நன்மாலையில் 6 பாக்கள் ஒரு விகற்ப நேரிசை வெண்பா வடிவில் அமைந்துள்ளன. 23 பாக்கள் இரு விகற்ப நேரிசை வெண்பா வடிவில் அமைந்துள்ளன. பின்வரும் பா மட்டும் பல விகற்ப நேரிசை வெண்பா வடிவில் அமைந்துள்ளது.

“புகழ்தொழுது போகின்ற செல்வம் தொழுது
வகையின்றி வாழ்நாள் தொழுது - இகமேல்
உனைத்தொழநீ தந்த ஒருபிறப்பு வீணே
தனைத்தொழுது தான்கிடப்ப தா?” (15)

இன்னிசை வெண்பா

வெண்பா நன்மாலையில் 77 பாக்கள் ஒரு விகற்ப இன்னிசை வெண்பா வடிவிலும் 11 பாக்கள் இரு விகற்ப இன்னிசை வெண்பாவடிவிலும் நான்கு பாக்கள் பல விகற்ப இன்னிசை வெண்பா வடிவிலும் அமைந்துள்ளன.

“தொடங்குமிடம் நீயென்று தொன்னூல் உரைக்கும்
அடங்குமிடம் அன்பர் மனமென் றுரைப்பர்!
இடங்காலம் சொல்கடந்து நிற்கும் பொருளோ
அடங்கும் அடங்கா மனத்து?” (16)

வெண்பா நன்மாலையில் 11 பாக்கள் இரு விகற்ப இன்னிசை வெண்பாவடிவிலும் நான்கு பாக்கள் பல விகற்ப இன்னிசை வெண்பா வடிவில் அமைந்துள்ளன.


அடிக்குறிப்புகள்

1. இளையராஜா, வெண்பா நன்மாலை முன்னுரை.

2. இளையராஜா, வெண்பா நன்மாலை-99, ப.118.

3. மேலது-21, ப.27.

4. மேலது-48, ப.35.

5. மேலது-57, ப.71.

6. மேலது-83, ப.71.

7. மேலது-20, ப.26.

8. மேலது-22, ப.29.

9. மேலது-119, ப.142.

10. மேலது-116, ப.139.

11. மேலது-118, ப.141.

12. மேலது-113, ப.135.

13. மேலது-67, ப.81.

14. மேலது-89, ப.10.

15. மேலது-15, ப.20.

16. மேலது-95, ப.114.

வெண்பா நண்மாலை - வெண்பாச்சீர்

ஐகாரக்குறுக்கம் - (57-1), (83-3), (86-3), (108-3).

வெண்பா நண்மாலை-ஈற்றடியின்இறுதிச்சீர்

நேரசை - 2, 3, 5, 8, 10, 11, 12, 13, 14, 15, 17, 18, 23, 24, 28, 37, 39, 40, 43, 44, 46, 52, 53, 55, 56, 57, 60, 61, 62, 63,65, 71, 73, 74, 79, 80, 81, 84, 87, 88, 89, 92, 96, 97, 102, 114, 115, 121.

நிரையசை - 6, 19, 33, 51, 64, 66, 72, 93.

நேர்பு அசை - 1, 9, 16, 25, 29, 30, 31, 32, 38, 41, 45, 47, 49, 50, 54, 58, 59, 67, 68, 69, 70, 75, 76, 77, 78, 83, 85, 86, 94, 98, 101,104, 105,107, 108, 109, 111, 112, 116, 118, 119.

நிரைபு அசை - 4, 7, 20, 21, 22, 26, 27, 34, 35, 36, 42, 48, 82, 90, 91, 95, 99,100,103,106,110,117,120.

வெண்பா நண்மாலை - வெண்பா வகை - நேரிசை வெண்பா

ஒரு விகற்பம் - 4,18, 63, 68, 87, 114.

இரு விகற்பம் - 12, 13, 17, 24, 25, 31, 33, 35, 36, 38, 39, 43, 52, 59, 65, 66, 67, 77, 84, 92, 103, 106, 115.

வெண்பா நண்மாலை - வெண்பா வகை - இன்னிசை வெண்பா

ஒரு விகற்பம் - 1, 2, 3, 5, 6, 8, 9, 10, 11, 14, 16, 19, 20, 21, 22, 23, 26, 27, 28, 29, 30, 37, 40, 41, 42, 45, 46, 7, 48, 49, 50, 51, 53, 54, 55, 56, 57, 60, 61, 62, 64, 69, 70, 71, 72, 73, 74, 75, 78, 79, 80, 81, 82, 83, 85, 86, 88, 89, 90, 91, 93, 95, 97, 98, 99, 101, 104, 105, 107, 108, 112, 116, 117, 118, 119, 120, 121.

இரு விகற்பம் - 7, 32, 34, 58, 76, 96, 100, 102, 109, 111,113.

பல விகற்பம் - 44, 94,100,122.

துணைநூற் பட்டியல்

1. இளையராஜா, வெண்பா நன்மாலை, அரும்பு பதிப்பகம், 49, டெய்லர்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 (2011)

2. குழந்தை, யாப்பதிகாரம், சாரதா பதிப்பகம், பு-4, சாந்தி அடுக்ககம், 2/3 ஸ்ரீகிருஷ்ணாபுரம் தெரு, இராயப்பேட்டை, சென்னை-14.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p157.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License