இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

தமிழ் - மலையாளத்தில் முக்காலங்கள் ஓர் ஆய்வு

முனைவர் நா. இளையராஜா
தமிழ்த்துறை,
கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் 695 581.


முன்னுரை

தமிழ் மொழியும் மலையாள மொழியும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையன.இவை மூல திராவிட மொழியிலிருந்து உருவானது என்றும் தமிழிலிருந்து பிரிந்த மலையாளம் வடமொழித் தாக்கத்தால் தனிமொழியாக உருப்பெற்றது என்ற இருவேறு கருத்துக்கள் ஆய்வுலகில் நிலவுகின்றன. இக்கட்டுரை நன்னூல் வியாகரணமித்ரம் கூறும் காலத்தை ஆராய்வதாக அமைகின்றது.

காலம்

"காலந்தாமேமூன்றெனமொழிப" (தொல்.சொல்.199)

"இறப்பின்நிகழ்வின்எதிர்வின்என்றா
அம்முக்காலமும்குறிப்பொடுங்கொள்ளும் " (தொல்.சொல்.200)

எனத் தொல்காப்பியம் காலம் மூன்றென்கிறது.

தொல்காப்பியர் காலத்தை மூன்றாகக் கூறியதைப் பின்பற்றிப் பிற்காலத்தில் தோன்றிய இலக்கண ஆசிரியர்களும் மூவகைக் காலத்தைக் குறிப்பிடுகின்றனர்.

செயலில் வரும் காலங்காட்டும் வினைவடிவம் காலம் என்கிறது வியாகரணமித்ரம்.

இந்நூல் காலத்திற்கான வரையறைகளையும் மூன்று காலத்தையும் காலம் காட்டும் விகுதிகளையும் கூறுகிறது.

நன்னூல் காலத்திற்கு வரையறைக் கூறாமல் மூன்று காலத்தையும் கால இடைநிலைகளையும் காலங்காட்டும் விகுதிகளையும் பகுதிகளையும் விளக்கிச் செல்கிறது.

நன்னூல் இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் எனk காலம் மூன்றென்கிறது.

நிகழ்காலச் சொல் மற்றைய காலங்களுக்கும் உரியதாகும் தன்மையைக் கருதி அதனை இறுதியில் வைத்தனர் என்கின்றனர் உரையாசிரியர்கள்.

இவ்வாறு வியாகரணமித்ரம் காலங்களின் வரிசை அமைப்பு முறையைக் கூறவில்லையாயினும் நன்னூலைப் போன்று பூதகாலம் (இறப்பு), பாவிகாலம் (எதிர்), வர்த்தமானகாலம் (நிகழ்) என வரிசை அமைப்பு முறையைப் பின்பற்றுகிறது.


வியாகரணமித்ரம் கால இடைநிலைகளைக் குறிப்பிடவில்லை. நன்னூல் இறந்தகால இடைநிலைகளாக த், ட், ற், இன் ஆகியன நான்கும், நிகழ்கால இடைநிலைகளாக ஆநின்று, கின்று, கிறு ஆகியன மூன்றும், எதிர்கால இடைநிலைகளாக ப், வ் ஆகியன இரண்டும் வரும் என்கிறது.

(எ.டு)

இறந்தகால இடைநிலைகள்

நடந்தான் - த்

உண்டான் - ட்

சென்றான் - ற்

உறங்கினான் - இன்

நிகழ்கால இடைநிலைகள்

நடவாநின்றான் - ஆநின்று

நடக்கின்றான் - கின்று

நடக்கிறான் - கிறு

எதிர்காலஇடைநிலைகள்

நடப்பான் - ப்

வருவான் - வ்

நன்னூல் கூறும் காலம் காட்டும் விகுதிகள்

இறப்பு எதிர்வு நிகழ்வு
று - சென்று (சென்றேன்)
றும் - சென்றும் (சென்றோம்)
து - வந்து (வந்தேன்)
தும் - வந்தும் (வந்தோம்)
டு - உண்டு (உண்டேன்)
டும் - உண்டும் (உண்டோம்)
ப - உண்ப (உண்டார்)
று - சேறு (செல்வேன்)
றும் - சேறும் (செல்வோம்)
து - வருது (வருவேன்)
தும் - வருதும்(வருவோம்)
கு- உண்கு (உண்பேன்)
கும் - உண்கும் (உண்போம்)
மின் - உண்மின்
ஏவல் - உண்ணீர்
வியங்கோள் - வாழ்க
இகரம்- சேறி (செல்வாய்)
மார்- உண்மார் (உண்பார்)
ப- உண்ப (உண்பார்)

எதிர்மறை ஆகார விகுதி மூன்று காலங்களையும் ஏற்றுவரும்.


(எ.டு) உண்ணா

உண்டேன்’ என்பது இன்றைய மலையாள மொழியில் ‘உண்டு’ என வழங்கி வருகிறது. நன்னூலார் காலத்திலேயே ‘உண்டு’ என்பது தமிழில் வழங்கி வருவதால் மலையாளம் தமிழ் மொழியிலிருந்து பிறந்தது என எண்ணத் தோன்றுகிறது.

இடைநிலைகள், விகுதிகள்அல்லாமல் பகுதிகளும் காலம் காட்டும் என்று கூறும் ஆசிரியர் அதற்கான விளக்கம் தரவில்லை. உரையாசிரியரே விளக்கிச் செல்கிறார். கு, டு, று என்னும் மூன்று உயிர்மெய்யீற்றுச் சில பகுதிகள் தம் ஒற்று இரட்டி இறந்த காலம் காட்டும்.

(எ.டு) புகு- புக்கான்

போடு - போட்டான்

உறு- உற்றான்

வியாகரணமித்ரம் கூறும் காலம் காட்டும் விகுதிகள்

இறப்பு எதிர்வு நிகழ்வு
இ - போயி
து- செய்து
உம் - போகும் 1ம் எதிர்
ஊ- போகூ 2ம் எதிர்
உந்நு - போகுந்நு

இறந்த காலத்தைக் குறிப்பிடும் ‘து’ விகுதி மலையாள மொழியில் இன்று பல மாற்றங்களைப் பெற்றுள்ளது.

(எ.டு) அறியித்து (இராம. ச) - அறியிச்சு

அறிந்து (இராம. ச) - அறிஞ்ஞு

வீழ்ந்து - வீணு

வே+ந்து = வெந்து,

நோ+ந்து=நொந்து.

‘ந்து’ விகுதியை இறுதியாகக் கொண்ட இந்த இரண்டு சொற்கள் மட்டுமே மலையாள மொழிப் பயன்பாட்டில் உள்ளன என்று வியாகரணமித்ரத்தார் கூறுகிறார்.

ஒற்றுமை

1. காலம் மூன்றென நன்னூலும் வியாகரணமித்ரமும் கூறுகின்றன. அவை;

இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் என்பவைகளாகும்.

2. காலங்களின் வரிசை அமைப்பு (இறப்பு, எதிர்வு, நிகழ்வு) நன்னூலிலும் வியாகரணமித்ரத்திலும் ஒன்றுபோல் அமைந்து வருகின்றன.

3. இரண்டும் காலங்காட்டும் விகுதிகளைக் கூறுகின்றன.

4. கு, டு, று என்னும் குற்றியலுகரங்கள் வினையடிச் சொற்களின் ஈற்றில் வந்தால் இரட்டித்த நிலையில் அமைந்து காலத்தைக் காட்டுவதாக நன்னூலும் வியாகரணமித்ரமும் கூறுகின்றன.

(எ.டு) புகு - புக்கான் (நன்)

புகு - புக்கு (வியா.மி)


வேற்றுமை

1. நன்னூல் காலம் மூன்றெனவும் அவை இறப்பு, எதிர்வு, நிகழ்வு எனச் சொல்லதிகாரத்திலும் காலங்காட்டும் இடைநிலைகள், விகுதிகள், பகுதிகள் என எழுத்ததிகாரத்திலும் கூறுகின்றது. வியாகரணமித்ரம் காலத்தைக் குறித்தச் செய்தியினைச் சொல்லதிகாரத்தில் மட்டுமே கூறிச் செல்வதாக அமைந்துள்ளது.

2. வியாகரணமித்ரம் எதிர்காலத்தைக் கூறுகையில் ஒன்றாம் எதிர்காலம் இரண்டாம் எதிர்காலம் என்கிறது. நன்னூல் எதிர்காலம் இரண்டு எனக் கூறாமல் மொத்தத்தில் எதிர்காலம் எனக் கூறிச் செல்கிறது.

3. வியாகரணமித்ரம் காலம் காட்டும் விகுதிகளை மட்டும் குறிப்பிடுகிறது. நன்னூல் காலங்காட்டும் இடைநிலைகள், விகுதிகள், பகுதிகள் எனக் கூறுகின்றது. இவ்வேறுபாட்டிற்குக் காரணம் வினையீற்றில் காணப்படும் பால் விகுதியினாலாகும்.

4. வியாகரணமித்ரம் காலம் காட்டும் விகுதிகளைக் கூறுவதல்லாமல் விகுதிகளில் ஏற்படும் மாற்றத்தினையும் விளக்கிச் செல்கிறது. நன்னூல் காலம் காட்டும் விகுதிகளை மட்டும் விளக்கிச் செல்கிறது.

முடிவுரை

கேரளப் பாணினீயத்தில் ஏ. ஆர். இராஜராஜவர்மா காலத்தைக் குறித்துக் கூறுகையில் காலம் காட்டும் பிரத்யங்கள் என விளக்குகிறார். அதனை (பிரத்யங்கள்) தமிழில் மொழிபெயர்ப்பு செய்த முனைவர். இளையபெருமாள் அவர்களும், முனைவர் கி. நாச்சிமுத்து அவர்களும் விகுதிகள் என்கிறார்கள். நன்னூலார் இறந்த காலத்தின் விகுதிகளாக உ, உம் ஆகிய இரண்டையும் கூறுகிறார்.

(எ.டு) வந்து, வந்தும். இதன்பொருளாக முறையே வந்தேன், வந்தோம் என்கிறார். எனவே நன்னூலார் கூறும் கருத்தின் அடிப்படையிலேயே இவ்வாய்வில் வியாகரணமித்ரம் கூறும் பிரத்யம் என்பதற்கு இணையாக விகுதிகள் என மொழிபெயர்க்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

நன்னூலார் குறிப்பிடும் சில சொற்கள் இன்று நடைமுறையில் இல்லை. எடுத்துக்காட்டாக, உண்ணீர், உண்மின் போன்றவைகள். தமிழில் வினையீற்றில் பால் கூறப்படுகிறது. மலையாளத்தில் அவ்வாறு காணப்படுவதில்லை.

இவ்வேறுபாட்டின் காரணமாகவே காலத்தை விளக்கும் போது நன்னூலிலும் வியாகரணமித்ரத்திலும் மாற்றம் தோன்றுகிறது என எண்ணத் தோன்றுகிறது.

செய்யுள்களிள் காலம் காட்டும் இடைநிலைகள் வருவதாகக் கேரளப்பாணினீயத்தில் ஏ. ஆர். இராஜராஜவர்மா குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக செய்து + ஏன் = செய்தேன். ஞான் செய்து என இடவிகுதியைப் பின்னரேச் சேர்த்திருக்க வேண்டும். மலையாளத்தில் இடவிகுதிகள் உரைநடையில் இன்றும் வழக்கில் இல்லை.

சேஷகிரி பிரபு கால விகுதிகளைக் கூறும் பொழுது விகுதி அடையும் மாற்றத்தினையும் கூறுகிறார்.

சான்றாக, ந்து - ஞ்ஞு (வளைந்து-வளஞ்ஞு).

தமிழ் மலையாள வேறுபாடுகளைக் குறித்துக் கேரளப் பாணினீயத்தில் ஏ. ஆர். இராஜராஜவர்மா கூறுவது போன்று ‘ஐகாரம்’ அகரமாகத் திரிதல் கூறப்படுகிறது. இது தமிழிலிருந்து மலையாளம் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை அறிவுறுத்துகிறது.

வியாகரணமித்ரம் காலத்தைக் குறித்து விளக்கும் போது பழைய வடிவம் மாற்றம் பெற்ற நிலையைக் கூறுகின்றது.

இப்பழைய வடிவம் தமிழ் வடிவமாக இருப்பதால் மலையாளம் தமிழிலிருந்து பிரிந்தது என எண்ணத் தோன்றுகிறது.

சேஷகிரிபிரபு இத்தலைப்பின் கீழ் புணர்ச்சி இலக்கணத்தையும் கையாண்டுள்ளார்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p165.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License