இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

ச. ஆறுமுகம் மொழிபெயர்ப்புக் கதைகளில் மனிதஉள அடையாளங்கள்
(ஹாருகி முரகாமி ஜப்பான் சிறுகதைகளை முன்வைத்து)

முனைவர் சு. தங்கமாரி
உதவிப்பேராசிரியர், முதுகலைத்தமிழ்,
வி. இ. நா. செ. நா. கல்லூரி (தன்னாட்சி), விருதுநகர்.


முன்னுரை

ஆறுமுகம் பிள்ளை என்று அழைக்கப்படும் ச.ஆறுமுகம் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றும் தன்னுடைய தனியாத இலக்கியத் தாகத்தினையும் மொழிபெயர்ப்பு அனுபவத்தினையும் மிகச் செம்மையாகப் பதிவு செய்து வருபவர். இவரது மொழிபெயர்ப்புப் பணி ‘ஜப்பானிய தேவதைக் கதைகள்’ என்னும் புத்தகத்திலிருந்து தொடங்குகின்றது. பாபநாசப்பெருமாள் என்னும் புனைப்பெயரில் சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வருகின்றார். ‘போஸ்ட்மார்டம்’, ‘நயினார் நோன்பு’ போன்ற சிறுகதைகள் வனம் பத்திரிகையில் வெளிவந்துள்ளன. மேலும் இரண்டு கதைகள் காளான், நந்தவனம் இதழ்களில் வந்துள்ளன. கணையாழி உள்ளிட்ட சில பத்திரிகைகளிலும் கவிதைகள் பல வெளிவந்துள்ளன. இவ்வாறு அறியப்பட்ட இவ்வாளுமையின் மொழிபெயர்ப்புக் கதைகளில் ஹாருகி முரகாமியின் இரண்டு கதைகளை முன்வைத்து இக்கட்டுரை அமையப் பெறுகின்றது.

ஹாருகி முரகாமி

12-01-1949 இல் ஜப்பானில் பிறந்த ஹாருகி முரகாமி அங்குள்ள படைப்பாளர்களுள் மிக முக்கியமான ஆளுமையாளராக அறியப்படுபவர். ஏனெனில் மொழிபெயர்ப்புப் பணியிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். அவரது புனைவுகள் மற்றும் புனைவுகளற்ற படைப்புகள் அனைத்தும் திறனாய்வாளர்களின் பாராட்டுதல்களையும் குறிப்பிடத்தக்க பரிசுகளான செக் நாட்டின் ப்ரான்ஸ் காப்*கா பரிசு மற்றும் இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் பரிசு ஆகியவற்றோடு மற்றும் பல விருதுகளையும் பெற்றுத்தந்தன. செப்தம்பர் 2007இல் லீக் பல்கலைக்கழகமும், சூன் 2008இல் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகமும் அவருக்குக் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. இதுவரை இவரது 12 நாவல்களும், 50 கதைகள் அடங்கிய மூன்று சிறுகதைத் தொகுப்புகளும், கட்டுரை மற்றும் புனைவுகளற்ற படைப்புகளாக 6 நூல்களும் ஜப்பானிய மொழியில் வெளியாகி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவரது கதைகளில் ‘Hunting Knife’ என்ற கதையும், ‘Birthday Girl’ என்ற கதையும் ஜே ரூபின் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு New Yarker இதழில் வெளியாகியதைத் தமிழில் ச. ஆறுமுகம் ‘வேட்டைக்கத்தி’ என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். இந்த இரண்டு கதைகளிலும் வெளிப்படும் மனித உள அடையாளங்களை மொழிபெயர்ப்பாளர் வெளிப்படுத்தும் தன்மை சிறப்பு வாய்ந்தது ஆகும். ஏனெனில் தாய்மொழியில் எழுதும் படைப்பாளனுக்கும், பிறமொழி படைப்பினைத் தாய்மொழியில் பெயர்க்கும் படைப்பாளனுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. ஒரு சில பெயர்ப்புகளில் பெயர்ப்பு மொழியின் படைப்பாளன் நீக்கமற நிறைந்திருப்பான். ஆனால் மூலம் சிதைக்கப்பட்டிருக்கும். ஓரோர் வேளைகளில் மூலமே இல்லாதிருக்கும். ஓவியனாகத் தன்னை நினைத்துக் கொண்டு வரையத் தெரியாத ஒருவன் யானை வரைய முற்பட்டு அது எலியான கதையாகத் தான் முடிவு பெறும். அதேவேளை, யானையைப் பற்றியே அறிந்திருக்காத ஊரில் யானையைத் தத்துருவமாகக் கொண்டு வருகின்றேன் என்று வரைந்தால் காண்பவனுக்குப் புதிதாக வேண்டுமானால் தோன்றலாம், ஆனால் படைப்பின் உயிர்ப்பினை அவனால் உணரமுடியாது. இத்தன்மையிலிருந்து மாறுபட்டுக் கூரிய தூரிகையைக் கையில் கொண்ட தனித்துவப் படைப்பாளனாக ச. ஆறுமுகம் வெளிப்படுகின்றார்.


தேர்ந்த கதை சொல்லி

தேர்ந்த கதை சொல்லியாக இருப்பது மட்டுமல்லாது, தனித்துவமாகத் தனிமனித உள்ளங்களின் காயங்களையும் தழும்புகளையும் அடையாளப்படுத்துவதில் கைதேர்ந்த கலைஞனாகக் காட்சிப்படுவது இன்னும் சிறப்பு. அப்படியான கதைகளையேத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துத் தருகின்றார். ‘வேட்டைக்கத்தி’ என்னும் சிறுகதையில் மாற்றுத் திறனாளி ஒருவனின் உளப்போராட்டத்தைத் தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மிக அழகாகப் பெயர்த்திருப்பதை அறியலாம். தனிமனித நடத்தைகளைத் தனித்து இருந்து பார்த்து அதனை அழகுற வெளிப்படுத்துவது சிறப்பு. படைப்பாளனே கதையின் பாத்திரமாகக் கதை நடுவே ஊடாடி பார்வையாளனாகப் பாத்திரங்களை விளக்கியும் அவர்களின் வலியினைப் படம்பிடித்துக் காட்டியும் செல்கின்ற ஹாருகி முரகாமியின் சாயலினை அப்படியே தமிழ் வாசகனை உணரச் செய்வதில் தேர்ந்த நுட்பமான கலை இக்கதையை வாசிக்கும் வாசகனுக்குக் கிடைப்பது உறுதி.

வேட்டைக்கத்தி

இவ்வுலகில் எல்லா வகையிலும் நிறைவு பெற்றவர்கள் என்று யாரையும் சொல்ல முடியாது. மனித மனம் ஏதோவொன்றின் வழி தன் குறையைத் தேடிக்கொண்டே இருக்கின்றது. நிறையைத் தேடுகின்ற மனம் என்பதை மிக எளிதாகத் தெய்வமனம் என்று சொல்லுகின்றோம். ஆனால் தெய்வமனத்துடன் தான் அனைவரும் இருக்க வேண்டும் என்று கருதிக் கொள்கின்றோமே அன்றி, அதனைச் செயல்படுத்த அம்மனம் இடம் கொடுப்பதில்லை. ஹாருகி முரகாமி படைப்பிலும் மனித உள அடையாளங்கள் எதையோ தேடுவதாயும், அத்தேடலில் வேட்டைக்கத்தி செங்குத்தாகக் குத்தி வழிமறிக்கின்றது என்றும் ச. ஆறுமுகம் மொழிபெயர்ப்பின் வழி அறிய முடிகின்றது. இக்கதையில் ‘நான்’ என்று கதை ஓட்டம் முழுவதையும் நகர்த்திச் செல்கின்ற ஒரு பாத்திரம், கதையின் அத்தனை மூலங்களிலும் தன் பரப்புகளை விரித்துச் செல்கின்றதை அறிய முடிகின்றது. அந்த ‘நான்’ என்னும் படைப்பாளன் பிரதிபலிப்பு, தன்னையும் சேர்த்து நான்கு வகையான பாத்திரக் கூறுகளைப் படையலிடுகின்றது.

· * நான் (படைப்பாளன்)

* மாற்றுத்திறனாளி

* மாற்றுத் திறனாளியின் தாய்

* உடல் பருமனுள்ள பெண்

இங்கு வேட்டைக் கத்தியினைக் கையில் வைத்திருப்பதான அந்த மாற்றுத்திறனாளி தன் சமூக, பொருளாதாரப் பின்புலத்தினை இச்சமூகத்தின் வேட்டைக் கூறுகளைக் கொண்டதாகச் சித்திரிப்பது. மாற்றுத்திறனாளி தாய் செயல்பாடுகள் இல்லாத எந்திரத் தன்மையிலான வாழ்வியல் கூறுகளைச் சித்திரிப்பது. இவ்வுலகில் எழுந்து நின்று வேட்டைக்குச் செல்ல முடியாத ஒரு மனிதனின் உச்ச எல்லை விருப்பமாக அந்த மாற்றுத்திறனாளி கையிலே பயனில்லாப் பொருளாக இருப்பதும் சமூகத்தில் பயனில்லா ஆசைகளைக் கொண்ட மனித உள அடையாளங்களின் வெளிப்பாடு என்பதை உற்றுணர முடியும்.


‘நான்’ என்ற பாத்திரத்தில் கிடைக்கப் பெற்ற அந்த வேட்டைக் கத்தியினைக் கொண்டு வெட்டுங்கள் என்று மாற்றுத்திறனாளி சொல்லிய பொழுது அவன் வெட்டிய பொருள்களை எல்லாம் பார்க்கும் பொழுது சமூகத்தின் தீமைகளை வெட்டி வீழ்த்த விரும்பி கடைசியில் ஏமாந்து செல்லும் எளிய மனித உள அடையாளங்கள் வெளிப்படும். “என் கைகளில் அகப்பட்டவற்றை, தரையில் உதிர்ந்து கிடந்த தேங்காய்கள், குரும்பைகள், வெப்பமண்டலத் தாவரம் ஒன்றின் அடர்ந்து தழைத்திருந்த இலைகள், மதுக்கூட வாயிலில் வைத்திருந்த பட்டியல் பலகை என எல்லாவற்றையும் வெட்டிச் சீவினேன். கடற்கரையில் ஒதுங்கிக் கிடந்த மரத்துண்டுகளையுங்கூட அரிந்து தள்ளினேன். வெட்டுவதற்கு எதுவும் கிடைக்காத போது மெதுவான அசைவில் தொடங்கி, பின்னர் வெளிப்படிஅயாகவே டாய்ச்சீ செய்வதைப் போல இரவுக் காற்றினூடே அமைதியாக வெட்டினேன். என் வழியின் குறுக்கே எதுவும் இல்லை. இரவு ஆழ்ந்த அமைதியில் கிடந்தது. காலம் இணக்கமாக, இசைவாக இருந்தது. முழுநிலவின் தண்ணொளி வேறு, அந்த அமைதியோடும் இசைவோடும் இணைந்து கொண்டது.

அப்படியாக நான் காற்றைக் கிழித்துக் கொண்டிருந்த போது, யுனைடெட் ஏர்லைன்ஸின் முன்னாள் பெண் பணியாளரான அந்தத் தடிமனான பெண்ணைத் திடீரென நினைத்தேன். அவரது வெளிறிய, உப்பிய தசை, உருவமற்று, மூடிபனியைப் போல என்னைச் சுற்றிச் சூழ்ந்திருப்பதை என்னால் காண முடிந்தது. அந்த மூடுபனிக்குள் தெப்பங்கள், கடல், வானம், ஹெலிகாப்டர்கள், விமானிகள் என எல்லாமே இருந்தன. நான் அவற்றை இரண்டு துண்டுகளாக வெட்டித் தள்ள முயன்றேன். ஆனால், உருக்காட்சிக்கு அகன்று எல்லாமே என் கத்திமுனைக்கு எட்டாத தொலைவில் தள்ளி நின்றன. இது ஒரு பொய்த் தோற்றமா? அல்லது நான் தான் பொய்த் தோற்றமா? அது ஒரு விஷயமாக இல்லாமலிருக்கலாம் தான். வருகின்ற அடுத்த நாளில் நான் இங்கே இருக்கப் போவதில்லை”

இங்கு சமூகச் செயல்பாட்டில் ஏதிலியாக இருந்து வேடிக்கை மட்டுமே பார்க்கும் ஒரு மீஇருண்மையாளனின் கோபம் அதைச் செயல்படுத்த முயல்வதும், அது தமக்குத் தேவையற்றது என்றும் தனக்குள் போராடும் ஒரு உள அடையாளம் வெளிப்படுகின்றது.

அதேவேளையில், “சக்கர நாற்காலி இளைஞன், “சில நேரங்களில் இப்படி ஒரு கனவைக் காண்கின்றேன்” என்றான். ஏதோ, மலைக் குகைத் துளையிலிருந்து எழுவதைப் போல, அவன் குரலில் வழக்கமற்ற ஒரு எதிரொலி கேட்டது.” என்பதன் வாயிலாக மாற்றுத்திறனாளியின் மனப் போராட்டமும் இங்கே பதிவு செய்யப்படுவதைக் காண முடிகின்றது. இங்கே செயல்படாத பாத்திரமாகவும் மனப் போராட்டங்களில் தோற்றோடிய கையறு பாத்திரமாகவும் மாற்றுத்திறனாளியின் தாய் பாத்திரம் கட்டமைக்கப்பட்டுள்ளது.


இருபதாவது பிறந்தநாளில் அவள்

சப்பான் தேசத்தில் மிக முக்கியமான பிறந்த நாளாகக் கருதப்படுகின்ற இருபதாவது பிறந்த நாளில் ஒரு பெண்ணுக்கு ஏற்படுகின்ற உள மாறுதல்களை மிகத் தெளிவாகக் காட்சிப்படுத்துவது இக்கதை ஆகும். ஒரு மனிதனுக்கு தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளும் ஏதோ ஒரு நிகழ்வு மறக்க முடியாத அனுபவமாக இருக்கப்படுமாயின் அது அவனது வாழ்நாள் பொன் எழுத்துகளில் பதிக்கப்படக் கூடியதாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் நாள்தோறும் ஏதாவது ஒரு நிகழ்வு நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. அந்த நிகழும் நிகழ்வு பிறந்த நாளாய் மாறிவிடுவதாலேயே அவனது மனம் அதைனைப் பெரிதுபடுத்துகின்றது.

“உங்கள் இருபதாவது வயது பூர்த்தியான நாளில் (அல்லது இருபத்தொன்று, பல நாடுகளிலும் மிக முக்கியமான பிறந்தநாளாயிற்றே) நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்களென்று உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? என்னுடைய இருபதாவது பிறந்த நாளை நான் நன்கு ஞாபகம் வைத்திருக்கின்றேன். ஜனவரி, 12, 1969 டோக்கியோவில் (இப்போது அதை நம்ப முடியாவிட்டாலும்) இலேசான மேகமூட்டத்தோடு கூடிய பசுமையான ஒரு நாள். கல்லூரி விரிவுரைகள் கேட்டு முடித்தபின், உணவு விடுதியின் பரிமாறும் பணியாளனாக மேஜைகளின் முன்பு காத்து நின்றேன். நான் அன்று விடுமுறையை விரும்பினேன். ஆனால் என் பணியைச் செய்யப் பதிலிநபர் எவரையும் கண்டுபிடிக்க இயலவில்லை. அந்த நாளில் கைகூடும் மகிழ்ச்சி, வரப்போகின்ற ஆண்டுகளுக்கு நல்ல சகுனமாகக் (அந்தக் காலத்தில்) கருதப்பட்ட போதிலும், அந்த நாள் முடிகிறவரையிலும் கூட எனக்கு மகிழ்ச்சியாக எதுவுமே நடக்கவில்லை. என்னைப் போலவே இந்தக் கதையின் பிறந்தநாள் மங்கையும், இருபதாவது பிறந்த நாளைப் போலன்றித் தனிமையாக விடப்படுவது போலத் தோன்றுகிறாள். கதிரவன் சாய்கின்றான்; மழை வேறு, பெய்யத் தொடங்கிவிட்டது. கிடேஸ் பாலீ சொல்வதைப் போல் “கடைசி நிமிடப் பெரும் மாற்றம்” ஏதேனும் அவளுக்காகக் காத்திருக்கிறதா?”


இப்படிக் கதையைத் தொடங்கும் முரகாமியின் தொடக்கப் பீடிகையே கதை முடிவினைச் சொல்லிவிடினும் கதை நகர்வு மனித உள அடையாளங்களின் அச்சாகச் செயல்படுவதை உணரலாம். இக்கதையில் ஏதும் இல்லாத பெண்ணிற்கும், அனைத்தும் இருந்தும் இல்லாத உணர்ச்சி உடைய வயோதிகருக்குமான மனப் போராட்டங்கள் பதிவு செய்யப்படுகின்றன. பிறந்த நாளில் உண்டான நிகழ்வும், அவளது தேவையும், தேவைக்கான புரிதலைக் கொண்ட வயோதிகரின் இயலாமையும் பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும், அவ்வயதுடையோரின் ஏக்கம் ஆகியவைகள் இரு பெண்ணின் உரையாடல் வழி வெளிப்படுத்தப்படுகின்றன.

“அவள் காகிதத் தட்டைக் கீழே வைத்துவிட்டு, தூரத்தில் தெரியும் எதையோ கூர்ந்து நோக்குவது போல் கண்களைச் சுருக்கினாள். ‘என்ன வேண்டிக் கொண்டோம் என்பதை யாரிடமும் சொல்லக் கூடாதென்று உங்களுக்குத் தெரிந்திருக்குமே, இல்லையா?”

“நான் ஒன்றும் கிண்டிக் கிளறி அதை வெளியே இழுத்துவிடப் போவதில்லை. இருந்தாலும் அது உண்மையில் நிறைவேறியதா என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். அவ்வளவுதான். அதுமட்டுமல்ல, உங்கள் வேண்டுதல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அப்படி ஒரு வேண்டுதலைச் செய்து கொண்டதற்காக பின்னால் எப்போதாவது வருத்தம் கொண்டீர்களா, இல்லையா? வேறு எதையாவது வேண்டிக் கொண்டிருக்கலாமே என்று எப்போதாவது வருத்தப்பட்டீர்களா?” என்றேன் நான்” இறுதியில் ஊகித்துச் சொல்லும் மனம் இதனை ஏற்புடையதாக வாசகனைக் கொண்டு செல்வதும் கவனத்திற்குரியது.

முடிவுரை

மேற்கண்ட இரண்டு குறும் புதினங்களின் மொழிபெயர்ப்பினைக் கவனித்தவேளையில் சில முடிபுகள் கிடைக்கப்பெறும்.

* பெயர்ப்பில் தம்முடைய முழு ஆளுமையை ச. ஆறுமுகம் வெளிப்படுத்தியுள்ளதை அறியலாம்.

* மூல படைப்பாளன் வெளிப்படுத்தும் மனித உளப் பதிவுகளைச் சாரம் மாறாமல் வெளிப்படுத்துவதையும் உணரலாம்.

* இப்படைப்புகளின் வாயிலாகப் பொருளாதார ஏற்றம் இருக்கின்ற மனிதர்களின் வெளிதெரியாத நிகழ்வுகள் ‘வேட்டைக்கத்தி’ புதினத்தில் ஊடாடுவதை அறிய முடிகின்றது.

* ஏக்கம் மட்டுமே இடைநிலையாக உள்ள பிறந்தநாளைக் கொண்டாட துடிக்கும் மனநிலைகளை ‘இருபதாவது பிறந்தநாளில் அவள்’ கதை வழியாக அறியலாம்.

துணை நூல்

1. வேட்டைக்கத்தி, ச. ஆறுமுகம்(தமிழில்), ஆதி பதிப்பகம்,15, மாரியம்மன் கோவில் தெரு, பவித்திரம், திருவண்ணாமலை-606806

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p171.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License