இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

மலையாளி மக்களின் ஒப்பாரிப் பாடல்கள்

பா. பாலமுருகன்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), சேலம் - 636 007.


முன்னுரை

தொடக்கக் கால மனிதர்களின் உணர்ச்சி வெளிப்பாடுதான் பாடல்களாக உருவெடுத்து மக்களிடையே வெளிப்படுகின்றன. மனிதர்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் ஒரு நிகழ்வைச் சந்திக்கின்றனர். அவற்றில் நல்ல நிகழ்வு நடந்தால் மகிழ்சியாகவும், தீய நிகழ்வு நடந்தால் துயரத்தையும் மக்கள் சந்திக்கின்றனர். அக்கால கட்டத்தில் வெளிப்படும் உணர்ச்சி வெளிப்பாட்டை மக்கள் பாடல்களின் மூலம் வெளிப்படுத்துகின்றனர். அவ்வகையில் “மனிதனுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை பாடல்கள்தான்” மனிதன் பிறக்கும் பொழுது தாய் மற்றும் உறவினர்களின் மூலம் தாலட்டப்படுகிறார். இறக்கும் பொழுது துயரமடைகிறார்கள். அந்தத் துயரமிக்க உணர்ச்சி வெளிப்பாட்டை ஒப்பாரிப் பாடலாக மக்கள் வெளிப்படுத்துகின்றனர்.

இலக்கியங்களிலும் ஒப்பாரிப் பாடல்கள் காணப்படுகின்றன என்பதைக் குடவாயிற் கீர்த்தனாரின் கையறு நிலைப் பாடல்கள் மூலம் அறியலாம்.

“இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி யணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்த்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே” (புறம் - 242)

கணவரை இழந்த மனைவி வைக்கும் ஒப்பாரிப் பாடல்

மகிழ்ச்சியும் மலர்ச்சியும் நிறைந்த இந்தத் தம்பதியரின் வாழ்க்கையில் காலன் குறுக்கிடுகிறான். கணவரையேத் தன் உயிராகக் கொண்டு வாழ்ந்த அவள் அவரை இழக்கின்றாள். ஆற்றொணாத் துயரம் அவளை அலைக்கழிக்கின்றது. “கணவனை இழந்தோருக்குக் காட்டுவது இல்” என்பார் இளங்கோ. அது போல், இவள் துயரத்தை ஆற்றுவிக்க வழியில்லை. அவள் தன் கணவர் இறந்ததை ஜோதிட வித்துவான் கூடக் கணித்துச் சொல்லவில்லையே என்பதை ஒப்பாரிப் பாடலாகக் கூறுகிறாள்.

“வயக்காட்டு மண்ணெடுத்து
வகை வகையாய் தாளி செய்து
நான் வயதிலேயே அறுப்பேனென்று
அந்த வள்ளுவனும் சொல்லலியே”

“கட்டு புத்தகமாம் கன்னியம்மா சாதகமாம்
காசிக்கு கொண்டு போயி கண்குளிர பார்த்திருந்தா
கன்னி இடியமாட்டேன் கனந்தமல்லி வாட மாட்டேன்
கன்னியம்மா சாதகத்த கண்குளிர பார்க்காம
கன்னியிடியாரய்யா கனந்த மல்லி வாடரய்யா
மடிப்பு புத்தகமாம் மங்கையம்மா சாதகமாம்
மங்கையம்மா சாதகத்த மனங்குளிற பாக்காம
நான் மங்கா இடியாரய்யா”


சிறு வயதிலேயே கணவன் இறந்துவிடுவான் என்பதை ஜோதிட வித்துவான் மற்றும் உறவினர்கள் சொல்லலையே என்று பாடும் ஒப்பாரிப் பாடல்

“சின்ன கிளுகிளுப்பை
சிக்கெடுக்கும் கண்ணாடி - நான்
சிறுசிலே அறுப்பேனென்று
சேனை சனம் சொல்லலையே
வன்ன கிளுகிளுப்பை
வாக்கெடுக்கும் கண்ணாடி - நான்
வயசிலே அறுப்பேனென்று
வள்ளுவனும் சொல்லலியே
பத்து பைசா வாங்கி
பதக்கம் வச்சி தாளி செய்து
பத்து நாள் வாழ்வுக்கு - நான்
பந்தடியே சுத்தி வந்தேன்
அஞ்சி பவுனு வாங்கி
அரக்கு வச்சி தாளி செய்து
அஞ்சு நாள் வாழ்வுக்கு - நான்
அரண்மனையே சுத்தி வந்தேன்”

கணவன் இறந்துவிட்டால் மனைவி தன்னுடைய சகோதரனின் வீட்டிற்கு அடைக்கலம் போகையில் தன் அன்னிமார் செய்யும் கொடுமையை ஒப்பாரியாகப் பாடுதல்

“ஆத்துக்கு அந்தாண்ட ஒரு ஆரஞ்சு பழுத்திருக்கும்
அன்ன மடிகோலி நான் ஆரஞ்சு பார்க்கையிலே
அண்ணனுக்கு வந்தவ ஆரஞ்சு கொட்டென்பா
அன்ன மடியவுத்து ஆரஞ்சு கொட்டிவிட்டேன்
அந்த ஆத்தவிட்டு தாண்டிவிட்டேன்
அஞ்சாத என்பொறப்பே ஆனையை ரெண்டு தாரேன்
எனக்கு ஆனையும் ரெண்டு வேனா
எனக்கு அஞ்சி லட்சம் சீரும் வேனாம்
உன் அன்புள்ள வாய்திறந்து
அனுப்பிவிடு என் தேசம்
கொளத்துக்கு அந்தாண்ட கொய்யா பழுத்திருக்கும்
கொஞ்சி மடிகோலி கொய்யா பறிக்கயிலே
இந்த கோட்டைக்கு வந்தவ
கொய்யாவ கொட்டென்பா
கொழத்தவிட்டு தாண்டென்பா
கொஞ்சாத என் பொறப்பே
நான் குதிரையை ரெண்டு தாரேன்
குதிரையே ரெண்டு வேனா
கோடி பணமும் வேனா
குணமுள்ள வாய் திறந்து
கூப்பிட்டு விடு உன் தேசம்”


பிள்ளைகளை அன்பாக வளர்த்த தாய் இறந்து விட்டால், பிள்ளைகள் பாடும் ஒப்பாரிப் பாடல்

“இங்கு படிக்கு படி பூ பறிச்சி
பச்சைக் கிளியாய் நான் வளர்ந்தேன்
பால் கொடுத்த தாயார
பாதியிலே நான் மறந்தேன்”

“செடிக்குச் செடி பூ பறிச்சி
செல்லக் கிளியாய் நான் வளர்ந்தேன்
சீர் கொடுக்கும் தாயார
சிறுசிலே நான் மறந்தேன்”

தாத்தாவை இழந்த பேரப் பிள்ளைகள் பாடும் ஒப்பாரிப் பாடல்

“வடக்கத்து காரு வரும் தாத்தா உனக்கு
வாழ மரம் ஏற்றி வரும்
வளஞ்சி எடுத்த மால தாத்தா உனக்கு
வயதான மால இல்ல”

“தெக்கத்து காரு வரும் தாத்தா உனக்கு
தென்ன மரம் ஏற்றி வரும்
தேடி எடுத்த மால தாத்தா உனக்கு
தெடமான மால இல்ல”

“உளுத்தம் பருப்பு இருக்க தாத்தா
உள்ளூரு பேத்தி இருக்க - நான்
ஓடி வந்து மாரடிக்க
ஒரு மணி நேரம் செல்லும்

பாசி பயிறு இருக்க தாத்தா
பாப்பாத்தி நான் இருக்க
பறந்து வந்து மாரடிக்க
பத்து மணி நேரம் செல்லும்”


தன்னுடைய சகோதரியின் பிள்ளைகளை எண்ணித் தங்கை பாடும் ஒப்பாரிப் பாடல்

“மச்சி படியரிசி மருக்காம நெல்லரிசி - அக்கா
நீ மரிக்கி வடிச்சியிருந்தால்
நீ பெற்ற செல்லத்துக்கு - அக்கா
நீ மாலையிட்டு பார்த்திருப்ப
குத்துப் படியரிசி குவிக்காத நெல்லரிசி - அக்கா
நீ குவிச்சி வடிச்சிருந்தா
நீ பெற்ற செல்லத்துக்கு - அக்கா
நீ கூரையிட்டு பார்த்திருப்ப
நீ குவிச்சி வடிக்காம
நீ பெற்ற செல்லத்துக்கு - அக்கா
கூர பட்டு பார்க்கலியே”

தன் தாயை இழந்த மகள் தன்னுடைய மாற்றாந்தாயின் கொடுமையைப் பாடும் ஒப்பாரிப் பாடல்

“வடக்கத்து வெங்காயம்
வடநாட்டு பாப்பாத்தி
வருசம் ஒருநாலு
வக தப்பி போனாலாம்
வாசலுக்கு வந்தவ
வாச இடியுதென்பா
வட புறமா சாயுதென்பா
பெத்த தாயா இருந்திருந்தா
வாச இடிஞ்சா என்ன
வட புறமா சாஞ்சா என்ன
நான் வளர்த்த மகள் வந்தாள் போதுமென்பாள்

தெக்கத்து வெங்காயம்
தென்மதுரை பாப்பாத்தி
தேசம் ஒருநாளு
தெசதப்பி வந்தாளாம்
தின்ன இடியுதென்பா
தென்புறமா சாயுதென்பா
பெத்த தாயா இருந்திருந்தா
தின்ன இடிஞ்சா என்ன
தென் புறமா சாஞ்சா என்ன
செல்வி வந்தாள் போதுமென்பாள்”


மாற்றாந்தாயின் கொடுமையைத் தாங்காமல் விசமருந்தியவர் பாடும் ஒப்பாரிப் பாடல்

“குங்கும ஒடுவந்தள
கொடுமைக்கு நானும் தின்னேன்
கூட்டம் போட்டு அழாதிங்க
கோர்ட்டுக்கு தெரிஞ்சதனா
கொடும வந்து சேர்ந்துவிடும்
சந்தன ஒடுவந்தள
சளிப்புக்கு நானும் தின்னேன்
சர்க்காருக்கு தெரிஞ்சதனா
சண்ட வந்து சேர்ந்துவிடும்”

முடிவுரை

நாட்டுப்புறப் பாடல்களில், ஒப்பாரிப் பாடல் கிராம மக்களிடையேப் பரவி பெரும் பங்காற்றுகின்றன. இருப்பினும் தற்பொழுது சேலம் மாவட்ட மூத்த தலைமுறையினர்களிடம் மட்டுமே ஒப்பாரிப் பாடல் குறைந்த அளவில் காணப்படுகிறது. இளைய தலைமுறையினர்களிடம் ஒப்பாரி பாடுவதில் நாட்டம் குறைந்து காணப்படுகிறது. ஒப்பாரிப் பாடல்கள் சேலம் மாவட்ட மலையாளி மக்களின் பண்பாட்டையும் கலச்சாரத்தையும் பறைசாற்றுகின்றன. ஒப்பாரிப் பாடல்களை மென்மேலும் வளர்க்க வேண்டுமெனில், முதலில் நாட்டுப்புறக் கலைஞர்களை மதிக்க வேண்டும். அவர்களுக்கு அரசும், மக்களும் ஆக்கமும் ஊக்கமும் தர வேண்டும். மேலும், இளைய தலைமுறையினரிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், பல்கலைக்கழக நூல்களிலும், பாடநூல்களிலும் நாட்டுப்புறப் பாடல்கள் இடம்பெறுதல் வேண்டும்.

(குறிப்பு: இத்தகவல் சேலம் மாவட்ட மலையாளி மக்களிடம் மட்டுமே சேகரிக்கப்பட்டது)

கள ஆய்வு மூலம் விவரங்களை வழங்கியவர்கள்

1. நா. பொன்னுசாமி (வயது 58), தவளப்பட்டி.

2. பொ. கமலம் (வயது 53), தவளப்பட்டி.

3. நா. காசி (வயது 50), தவளப்பட்டி.

4. இரா. பாக்கியம் (வயது 48), காந்திபுரம், கூலமேடு.

5. சு. வசந்தா (எ) பாப்பா (வயது 50), தவளப்பட்டி.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p174.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License