இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

பாரதப்போரும் பழந்தமிழரும்

மு. கயல்விழி
உதவிப் பேராசிரியர் (தமிழ்),
பச்சையப்பன் மகளிர் கல்லூரி, காஞ்சிபுரம்.


முன்னுரை

உலகின் தலைசிறந்த காப்பியமாக மகாபாரதம் விளங்கி வருகின்றது. இது இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்ட சிறப்புடையது. இதன் கருப்பொருள் காலத்தை வென்ற சுவை கொண்டது என்பதால் இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவி உள்ளது. இக்கதை நடந்த களம் வட இந்தியாவைக் குறிப்பாக இன்றைய ஹரியானா (Haryana) மாநிலத்தைச் சார்ந்தது என்கின்றனர். இதன் நிகழ்வுகள் யாவும் வட இந்தியாவின் அரசு குலங்களை மையமாகக் கொண்டது. இப்போரில் பெரும்பான்மையான அரசு குலங்கள் கலந்து கொண்டன. ஆனால் தென்னிந்தியாவில் தமிழரைத் தவிர வேறு எவரும் இப்போரில் கலந்து கொள்ளவில்லை. தமிழகத்தின் முடியுடை வேந்தர் மூவருமே இப்போர் குறித்து மூன்று விதமான முடிவெடுத்தனர். அம்முடிவு யாது? என்பதும், பாரதப்போரில் பழந்தமிழரின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது? என்பதையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மகாபாரதப் போர்

மகாபாரதப் போர் ஆரிய இனத்தவரிடையே நடைபெற்ற பூசல்களை மையமாகக் கொண்டது. மத்திய ஆசியாவில் இருந்து கூட்டம் கூட்டமாக ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு போந்த ஆரியர்கள் கைபர், போலன், குர்ரம் போன்ற கணவாய்களின் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து வளமான கங்கைச் சமவெளியை அடைந்தனர். அங்கு அவர்கள் தம் நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு நிலையாகத் தங்கி விவசாயம் புரிந்தனர். பின்னர் அவர்கள் வடஇந்தியா முழுவதும் பரவித் தமக்கெனப் பல அரசுகளை ஏற்படுத்திக் கொண்டனர். காடுகளை அழித்து நிலங்களாக்கி நாட்டைப் பெருக்கினர். அங்கு ஏராளமான அரசுகள் புதியதாய்த் தோன்றின. அவை பதினாறு மகாஜனபதங்கள் (Sixteen Mahajanapathas) என்று அழைக்கப்பட்டன. காலப்போக்கில் இவ்வரசுகள் ஒன்றுடன் ஒன்று பூசலிடத் துவங்கின. போட்டியும், பொறாமையும் அங்கு மலிந்து காணப்பட்டன. அக்காலத்தில் தேவர்களும், முனிவர்களும், மந்திரத்தந்திரங்களும் அவர்களை ஆட்டிப்படைத்தன. இவ்வரசுகளின் பூசல்களே மகாபாரதப் போராக முடிவடைந்தது. குரு நாட்டில் நிகழ்ந்த அரசுரிமைப் போட்டியில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே மூண்ட போட்டி பெரும் போராக வெடித்தது.

போட்டியிலும், பொறாமையிலும் சிக்கித் தவித்த பல்வேறு அரசு குலங்கள் இப்போரில் எதிரெதிர் திசையில் நின்று போரிட்டன. குருக்ஷேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்ற 18 நாள் யுத்தத்தில் கௌரவர் தரப்பில் 12,02,285 காலட் படையினரும், 7,21,710 குதிரைப் படையினரும், 2,40,570 யானைப் படை வீரர்களும், ஆக மொத்தம் 21,64,565 வீரர்கள் போரிட்டனர். பாண்டவர் பக்கம் 7,65,450 காலாட் படையினரும், 4,59,270 குதிரைப் படையினரும், 1,53,090 யானைப் படையினரும், ஆக மொத்தம் 13,77,810 வீரர்கள் போரிட்டனர். போரின் முடிவில் ஒரு சிலர் மட்டுமே உயிர் பிழைத்தனர். போரில் பாண்டவர் வெற்றி பெற்றனர். கௌரவர் அனைவரும் அழிந்தனர். இப்போரில் கலந்து கொள்ளத் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து அரசு குலங்களுக்கும் இரு தரப்பினரும் அழைப்பு விடுத்தனர். தமிழர்கள் மட்டுமே இப்போரில் கலந்து கொண்டு சிறப்பு பெற்றனர்.


தமிழரும் வடஇந்தியாவும்

தமிழர்கள் வீரம் மிகுந்தவர்கள். அகத்தே காதலையும், புறத்தே வீரத்தையும் உயிரெனக் கொண்டவர்கள். பல தமிழ் மன்னர்கள் போக்குவரத்து வசதிகளற்ற அக்காலத்திலும் வடஇந்தியாவின் மீது படையெடுத்து அங்குள்ள ஆரிய மன்னர்களை வென்று இமயத்தில் தம் கொடியைப் பொறித்துவிட்டு வெற்றியுடன் திரும்பினர். சான்றாகச் சேரமன்னன் நெடுஞ்சேரலாதன் இமயப் படையெடுப்பை மேற்கொண்டு பெருவெற்றி பெற்று அங்குத் தன் இலச்சினையைப் பொறித்தான்.

“ஆரியது வன்றிய பேர் இசைஇமயம்
தேன் அம்குமரியோடு ஆயிடை
மன்மீக் கூறுநர்மறம் தபக் கடந்த” (பதிற்:11:23-25)

சேரன் செங்குட்டுவன் வடஇந்தியா வரை சென்று கனக, விசயரை வென்று இமயத்தில் சேரரின் விற்கொடியைப் பொறித்து வெற்றியுடன் திரும்பினான்.

“வடபுல இமயத்து வாங்குவிற் பொறித்த
எழு உறழ்தினி தோள் இயல் தோக் குட்டுவன்” (சிறுபா:48-49)

சோழ மன்னன் கரிகாலன் வடஇந்தியப் படையெடுப்பை மேற்கொண்டு அனைத்து அரசுகளையும் வென்று தன் புலிச் சின்னத்தை இமயத்தில் பொறித்தான்.

“என்று முள்ளவின் நகர் கலியுகத்து
லிலங்கு வேறுகரி காற்பெரு வளத்தோன்
வற்றி றற்புலி யிமயமால் வரைமேல்
வைக்க வெகுவோன் றன்க்கிதன் வளமை” (பெரிய புராணம்:திருக்குறிப்புத் தொண்டர் புராணம்:82)

இராசேந்திரச் சோழன் கங்கை படையெடுப்பை மேற்கொண்டு வடஇந்திய மன்னர்களை வென்று கங்கை நீரைக் கொண்டு வந்து “கங்கை கொண்ட சோழபுரம்” என்ற நகரை நிர்மாணித்தான்.(SII.Vol:5,No:124). இவ்வாறு தமிழ் மன்னர்கள் வடஇந்தியா மீது படையெடுத்துச் சென்று வெற்றி கொண்டனர். அவ்வாறே பாரதப் போரிலும் தென்னிந்திய அரசு குலங்கள் பங்கேற்காமல் ஒதுங்கிய போதிலும், முடியுடை வேந்தர்கள் மூவரும் வெவ்வேறு முடிவுகளை மேற்கொண்டனர்.


பாரதப் போரில் தமிழர் பங்களிப்பு

பாரதப் போரில் சந்திரக் குலத்தைச் சார்ந்த பாண்டியர்கள் படையுடன் கலந்து கொண்டு பாண்டவருக்கு ஆதரவாகப் போரிட்டனர். சூரியக் குலத்தைச் சார்ந்த சோழர்கள் இப்போரைப் புறக்கணித்தனர். எம்மரபையும் சாராத சேரர்கள் இப்போரில் நடுநிலை வகித்து இருவருக்கும் உதவினர். குரு வம்சத்தினர் சந்திரக் குலத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் குல அடிப்படையில் பாண்டியரும் பாண்டவரும் உறவினர் ஆவர். பாண்டவர்களில் ஒருவனான அர்ஜீனன் தன் தீர்த்த யாத்திரையின் பொழுது பாண்டிய இளவரசி ஒருத்தியை மணந்தது இதை உறுதி செய்யும். குரு வம்சத்திற்கு உறவினரான பாண்டிய மன்னர்கள் தம்மை “பஞ்சவன்” என்று பெயரைச் சூட்டிக் கொண்டனர். பஞ்சப் பாண்டவரை உறவினராகக் கொண்டதால் அவர்கள் இப்பெயர் பெற்றனர். இச்செய்தியை அவர்களின் சின்னமனூர் செப்பேடு;

“பராங்குசன் பஞ்சவன் தோன்றலும்”

என்ற அழகாக உரைக்கின்றது. இது தவிரப் பாண்டிய அரசர்கள் தங்களை “திங்கள் செல்வன்” என்று கூறிக்கொள்கின்றனர்.

பாண்டியர்கள் நீதி நெறி தவறாதவர்கள் என்பதால் அவர்கள் அதர்மிகளான கௌரவர்களுடன் சேராமல், பாண்டவர் பக்கம் படையுடன் சென்று போரிட்டுப் புகழ்பெற்றனர். பாண்டவரின் யானைப்படைக்குப் பாண்டியரே தலைமை தாங்கிப் போரிட்டனர். அத்துடன் போரில் வீரம் மிகுந்த அர்ஜீனனை நெருக்கடியான நேரத்தில் பாண்டிய மன்னன் உயிர் காத்தான் என்பதைத் தளவாய்புரச் செப்பேடும் குறிப்பிடுகின்றது.

“தார்தராஷ்டிரர் படை முழுவதும் களத்தவியப்
பாரதத்துப் பகடோட்டியும்
மடைம்குவேல் வானரத்வஜன் (அர்ஜீனன்)
வசுசாபம் அகல்வித்து”

இச்செய்தியை உறுதிசெய்யும் அவர்களின் சின்னமனூர் செப்பேடும்,

“விஜயனை வசுசாபம் நீக்கியும்”

என்றுரைக்கின்றது. அர்ஜீனன் தன் தீர்த்த யாத்திரையின் போது பாண்டிய இளவரசி ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டதால், அர்ஜூனனின் உயிரைக் காக்கும் முனைப்புடன் பாண்டிய மன்னர் செயல்பட்டனர். இவ்வாறு பஞ்சபாண்டவரின் வெற்றிக்குத் தமிழ் வேந்தரான பாண்டியர்கள் உறுதுணையாகத் திகழ்ந்தனர். அதே சமயம் 18 நாள் தர்ம யுத்தத்தில் பங்கேற்ற பாண்டவர் படைக்கும் கௌரவர் படைக்கும் சேரமன்னன் உதியன் சேரல் என்பவன் உணவளித்தான். இருதிறத்தாருக்கும் உணவளித்தால் அவன் “பெறுஞ் சோற்று உதியன்” என அழைக்கப்பட்டான்.

“அலங்கு உள்ள புரவி ஐவரோடு சினைஇ
நிலம் தலைகொண்ட பொலம் பூந்தும்பை
ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து எழிய
பெருஞ் சோற்று மிகப் பதம் வரையாது
கொடுத்தோய்” (புறம்:2:13-16)

இப்போரில் அவன் நடுநிலை வகித்து அன்னதானம் அளிக்க எண்ணி இருதிரத்தாற்கும் உணவளித்தான். அவ்வளவு பேருக்கும் உணவுப் பொருட்களைத் தமிழகத்திலிருந்து கொண்டு செல்வது இயலாத காரியம் என்பதால், பணத்தைக் கொண்டு சென்று தேவையான பொருளை அங்கேயே பெற்றுப் போர்க்களத்திலேயே உணவைத் தயாரித்து இருதிறத்தாருக்கும் அளித்திருத்தல் வேண்டும். இப்போரில் நேரடியாக யாருடனும் அவன் சேராததால் அவன் பெயர் மகாபாரதத்தில் குறிப்பிடப்படவில்லை. போரில் பாண்டியனும் வீர மரணம் எய்தியிருக்கக்கூடும். அதனால் தான் போரின் முடிவில் உயிர் பிழைத்த ஒரு சிலரில் பாண்டிய மன்னனின் பெயர் இடம் பெறவில்லை. சிறப்பாக உணவளித்ததன் மூலம் தமிழரின் தானமளிக்கும் சிறப்பை இப்போரின் மூலம் சேரமன்னன் நிலைநாட்டினான். வீரமுடன் போரிட்டுப் பாண்டியன் வீரமரணமடைந்ததால் தமிழரின் வீரப்பண்பும் இப்போரில் வெளிப்பட்டது. இவ்வாறு தமிழ் மன்னர்கள் பாரதப் போரில் வெவ்வேறு நிலையில் நின்று தம் பங்களிப்பைச் சிறப்பாக நல்கிப் புகழ் பெற்றனர்.


முடிவுரை

“உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே” என்பது பழமொழி. அன்னதானம் செய்வது என்பது தமிழர்களின் தர்ம நெறியாகும். இன்று கோயில்களிலும், மடங்களிலும், திருவிழாக்களிலும் அன்னதான நிகழ்வு இன்றியமையாததாக இடம் பெறுகின்றது. இதற்கு முன்னோடியாக மகாபாரதப் போரில் சேரமன்னன் அன்னதானம் அளித்துச் சிறப்பு பெற்றனர். நல்லவர், தீயவர் என்று பேதம் பாராமல் அனைவருக்கும் உணவளித்தல் அன்னதானத்தின் சிறப்பாகும். இதைச் செம்மையுடன் சேரமன்னன் செய்து முடித்தான். ஆனால், தர்மத்தை உயிர் போன்று போற்றிய பாண்டிய மன்னர்கள் வேறு விதமான நிலைப்பாட்டைக் கைகொண்டு, இப்போரில் கலந்து கொண்டு, பஞ்சபாண்டவர் பக்கம் நின்று அவர்கள் வெற்றிக்குத் துணை நின்றனர். குரு வம்சத்தவரான பாண்டவர், கௌரவர் இருவருமே அவர்களுக்கு உறவினர் என்றாலும் தர்மத்தின் பக்கம் நின்று போரிட்ட அவர்களின் திறன் போற்றுதலுக்குரியது. பாரதப் போரில் உணவளித்தான் மூலமும், பாண்டவர் பக்கம் நின்று வெற்றிக்கு உதவியதன் மூலமும் இரு வேறு நிலைப்பாட்டை எடுத்த தமிழ் மன்னர்கள் மதியூகம் சிறப்பிற்குரியது. இவ்வாறு இம்மாபெரும் போரில் பங்கேற்றுத் தமிழரின் சிறப்பைப் பாரதம் முழுவதும் இவ்விரு வேந்தர்களும் நிலைநிறுத்தினர்.

சுருக்கம் (Abbrevations)

1.SII-South Indian Inscriptions

பார்வை நூற்பட்டியல்

1. பரிமணம்.அ.மா. &பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007),புறநானூறு, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்.

2.பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007), பதிற்றுப் பத்து, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்.

3.பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007), சிறுபாணாற்றுப் படை, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்.

4. பெரிய புராணம்,(1970), ஸ்ரீ வைகுண்டம்: திருப்பனந்தாள் காசிமட வெளியீடு.

5. இராமன்.கே.வி, (1977), பாண்டியர் வரலாறு, சென்னை: தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.

6. துரைசாமிப் பிள்ளை. ஒளவை, (2002), சேர மன்னர் வரலாறு, சென்னை: வள்ளுவர் பண்ணை.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p214.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License