இளைய தலைமுறையினரும் செல்ஃபி பயன்பாடும்
முனைவர் பா. பொன்னி
உதவிப்பேராசிரியா் மற்றும் தமிழ்த்துறைத் தலைவா்,
தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
சிவகாசி.
முன்னுரை
இன்று அறிவியல், வாழ்வின் உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது மனித சமூகத்திற்குத் தேவையானது என்பதும் கால மாற்றத்தில் தவிர்க்க இயலாதது என்பதும் மறுக்க இயலாதது. ஆயினும், இரவு - பகல், இன்பம் - துன்பம் என்பது போல அறிவியலினால் ஆக்கம் தோன்றும் அளவிற்கு, அவை பயன்படுத்தப்படும் முறைகளால் தீமைகளும் நேரிடும் என்பதும் மறுக்க இயலாத உண்மை. அவ்வகையில், இன்று தகவல் தொடா்பு சாதனங்களுள் ஒன்றான கைபேசி, தகவல் தொடா்பிற்குப் பயன்படும் அதே வேளையில், அதனால் பல வகைப்பட்ட இடையூறுகளும் ஏற்படுவது உண்மை. இன்று கைபேசியில் பல்வேறு வகையான வகைகளும், அறிவியல் பயன்பாடுகளும் புழக்கத்திற்கு வந்துள்ளன. அதனால், இன்று தன்னைத்தானேப் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் செல்ஃபி முறை பரவலாகக் காணப்படுகிறது. அதனால் நம் பண்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
தமிழா் பண்பாட்டில் புகைப்படம்
தமிழா்களின் கலை உணா்வு சிறப்புப் பெற்றது. கோவில்களில் காணப்படும் சிற்பங்களும், ஓவியங்களும் இதற்குச் சான்று பகா்கின்றன. ஒருவரைக் கண்டு உள்ளபடியே ஓவியம் தீட்டும் வழக்கம் தமிழரிடையே உண்டு. ஆனால், மேலைநாட்டவா் வரவால் புகைப்படம் எடுக்கும் கருவி பழக்கத்திற்கு வந்த போது புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறைந்து விடும் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் தமிழரிடம் நிலவியது. அதன் பின்னா், அது பழக்கமான ஒன்றாக மாறிப் போனது. திருமணத்திற்குப் பெண் பார்க்கும் நிலையிலும், பெண்ணின் புகைப்படத்தினை அளிப்பதற்குப் பெண் வீட்டார் தயங்குவா். திருமணமான ஆணோ, பெண்ணோ தன் துணையிடம் வேறு ஒருவருடைய புகைப்படம் இருப்பதனைக் கண்டால், அதன் விளைவாக அவா்களுக்குள் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டு விடுவதுண்டு. ஆனால் இன்று செல்ஃபியின் வருகையால் சமூகத்தில் பல்வேறு மாற்றங்கள் நிலவும் நிலையை நாம் கண்கூடாகக் காணமுடிகிறது.
செல்ஃபி
செல்பி யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறித்த தெளிவான விளக்கங்களைக் காண இயலவில்லை.1839 ஆம் ஆண்டு அமெரிக்கப் புகைப்படக்காரா் ஒருவா், தன் லென்ஸை சரி செய்யும் போது பதிவான புகைப்படம்தான் செல்ஃபியின் தொடக்கம் என்று குறிப்பிடுகின்றனா். (1) தன்னைத்தானேப் புகைப்படம் எடுத்துக் கொள்வதனை செல்ஃபி என்று குறிப்பிடுகின்றனா். இதன் அடிப்படை மனிதா்கள் தன்னைத்தானே விரும்புவதனைக் குறிப்பிடலாம். மனிதா்கள் அனைவருக்கும், தன்னைத்தானே விரும்புகின்ற மனப்போக்கு காணப்படும். இவ்வாறு விருப்பம் கொள்ளும் தன்மையை உளவியல் நோக்கில் ஆராய இயலுகின்றது.
நெறிபிறழ்வு (perversion)
நெறிபிறழ்வு என்பது இயல்பான பாலியல் செயற்பாடுகளுக்கு, பிறழ்வான செயற்பாடுகள் என்ற வகையில் வழங்கப்பட்டு வருகின்றது. இஃது உளவியல் நோக்கில் பாலியல் தொடர்பான வேட்கைகளைக் (sexual desires) குறிப்பதாகும். இதன் அடிப்படையிலேயே மோகத்திரிபுகள் (pervertions) ஏற்படுகின்றன என்பர். இவ்வாறான மோகம் என்பது பல நிலைகளில் அழைக்கப்பட்டு வருகின்றன. அவை, காட்சி மோகம் (exibitionism), பார்வை மோகம் (voyerism), சார்பொருள் மோகம் (fetishism), தன் மோகம் (narcissism) என்பனவாகும். பிறரைக் காமநோக்கில் பார்த்து இன்புறுவது பார்வை மோகம் எனப்படும். தன் அழகை, அங்கங்களைப் பிறருக்குக் காட்டுவது காட்சி மோகம். தன் காதலி, காதலன், பயன்படுத்திய பொருட்களைக் கண்டு காமுறுதல் சார்பொருள் மோகம். தன்னைத்தானேக் கண்டு தானேக் காமுறுதல், தன் அழகில் தானே மயங்குதல் தன் மோகம் எனப்படும். (2) இதில் தன்மோகம் மற்றும் காட்சி மோகம் ஆகிய இரண்டும் செல்ஃபியின் அடிப்படையாக அமைகிறது என்று குறிப்பிடலாம்.
தன் மோகம்
தன் மோகம் ஆங்கிலத்தில் நார்சிசம் என்று குறிப்பிடப்படுகிறது. கிரேக்கக் கடவுளான ஜீபிடர், தன் மனைவி ஜீனோவுடன் விளையாட எகோ என்ற பெண்ணைப் படைத்தார். ஜீனோ, எகோவுடன் விளையாடிக் கொண்டு இருக்கையில், ஜீபிடா் மற்ற பெண்களுடன் இன்புற்றிருந்தார். இதனை அறிந்த ஜீனோ கோபம் கொண்டு எகோவிற்கு, நீ இனி தனியாகப் பேசும் தன்மையை இழந்து விடுவாய். யார் என்ன பேசினாலும் இறுதிச் சொற்களையே ஒலிக்கக் கடவாய் என்று சாபமிட்டார். அதனாலேயே எதிரொலியை எகோ என்று அழைக்கும் வழக்கம் தோன்றியது.
எகோ நாசிஸ் என்ற இளைஞனைக் காதலித்தாள். அவன் அவள் இறுதி வார்த்தையையேப் பேசுவதால், அவளிடமிருந்து தப்பி ஓடினான். அவ்வாறு தப்பி ஓடுகையில் நதி ஒன்றில் தன் முகத்தினைக் கண்டான். அது வரையில், அவன் தன் முகத்தினைக் கண்டதில்லை. அதனால், தன் அழகைக் கண்டு வியந்து முத்தமிட முயன்று நதியில் விழுந்து இறந்தான். (3) ஆகவே, தன்னைத்தானே விரும்பும் தன்மையை அவன் பெயரால் நாசிச மனப்பான்மை என்று குறிப்பிட்டனா். இவ்வாறு தன்னைத்தானே மிகுதியும் விரும்பும் தன்மையை, செல்ஃபியை அதிக அளவில் பயன்படுத்தும் நபா்களிடம் காணமுடிகிறது.
செல்ஃபி அதிகரிக்கக் காரணங்கள்
தமிழா்களின் பாரம்பரியமான கூட்டுக் குடும்ப முறை அமைப்பு, தற்போது பெருமளவில் சிதைந்து விட்டது. பொருளாதாரச் சுமையால், ஆண், பெண் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. வேலைப்பளுவின் சுமை, ஆண், பெண் இருவரையும் பாதிக்கிறது. குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவதில் மட்டுமே தங்கள் பொறுப்புணா்வை பெற்றோர்கள் வெளிப்படுத்துகின்றனா். அவா்களின் செயல்பாடுகளைக் கவனிக்கத் தவறுகின்றனா். ஒருவருக்கொருவா் அன்பு செலுத்தக் கூட நேரம் இல்லாதவா்கள் போல் வாழ்க்கைப் பயணத்தில் பயணிக்கின்றனா்.
இத்தகையச் சூழலில் வளரும் பிள்ளைகள், தனக்கான ஒரு அங்கீகாரத்தை எதிர்பார்க்கின்றனா். தன்னைப் பற்றி, தன்னுடைய இருப்பைப் பற்றி, பிறா் என்ன நினைக்கின்றார்கள் என்பதனைத் தெரிந்து கொள்ள விரும்புகின்றனா். அதற்கு இத்தகைய அறிவியல் சாதனங்கள் அவா்களுக்குத் துணை புரிகின்றன. தன்னைத்தானே புகைப்படம் எடுத்து, அதனைப் பற்றிய மற்றவா்கள் கருத்துகளைக் கேட்பதிலான ஆா்வம் அவா்களிடம் அதிகரிக்கிறது. இத்தகைய உணா்வினால் பல்வேறு இடா்பாடுகள் தோன்றும் எனத் தெரிந்தாலும், வயதிற்கே உரிய ஆா்வத்தினால், அவா்கள் மேலும் மேலும் இச்செயல்களில் ஈடுபடுகின்றனா்.
செல்ஃபி யின் இடையூறுகள்
செல்ஃபி எடுக்கும் பழக்கம், பல்வேறு இடையூறுகளையும் அளிக்கிறது என்பதில் ஐயமில்லை. ஒகேனக்கல் நீா் வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்க முயன்று ஆறு போ் இறந்த பரிதாபம், ஓடும் ரெயில் முன்னால் நின்று செல்ஃபி எடுக்கும் எண்ணத்தில் ரெயிலில் அடிபட்டு இறந்தவா்கள், தூக்கு மாட்டிக் கொள்வது போல் செல்ஃபி எடுக்க முயன்று இறந்தவா்கள், நண்பனை துப்பாக்கியால் சுடுவது போல் செல்ஃபி எடுக்க முயன்று போலீசாரால் சுட்டுக் கொள்ளப்பட்டவா்கள் என்று இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இருப்பினும், செல்ஃபி எடுக்கும் மோகம் இன்றும் தீா்ந்தபாடில்லை.
ஆளுமைக் கோளாறு
செல்பி எடுத்தல் ஓா் அளவினைத் தாண்டிய நிலையினை அடையும் போது, அதனை உளவியலாளர் சுட்டுகின்ற ஆளுமைக்கோளாறு நடத்தையாகக் கொள்ள இடமுள்ளது. “தனிமனிதனின் சமூகச் செயல்களில் மிகுந்த அளவில் சிதைவினை ஏற்படுத்தும் நடத்தைக் கூறுகள் ஆளுமைக் கோளாறுகள் என்று கருதப்படுகின்றன” (4) என்பா்.
பண்டைக் காலங்களில், ஆளுமைக் கோளாறு உடையவர்கள் குற்றவாளிகளாகவோ, நிலை தடுமாறி நடப்பவர்களாகவோக் கருதப்பட்டனர். தனி மனிதனின் ஆளுமைக் கூறுகள், குழந்தைப் பருவத்திலிருந்தே அவன் பழக்க வழக்கங்களுடன் ஒன்றி வருபவையாகும். ஆனால், தனிமனிதனின் ஆளுமைக் கோளாறுகளுள் பல, அவனுடைய சமூகப் பொருத்தப்பாட்டிற்கு இடையூறு விளைவிப்பனவாக விளங்குகின்றன. செல்ஃபி மோகம் அதிகம் இருப்பவா்களாலும், சமூகத்திற்கு இடையூறு இருப்பதனைக் காணமுடிகிறது. ஆனால் இவர்கள் தம்மை இயல்பு நடத்தையினராக எண்ணுகின்றனர். ஆளுமைக் கோளாறுகளில் முதன்மையானவை,
“1. கருத்துத்திரிபு ஆளுமை
2. உளச்சிதைவு ஆளுமை
3. தவிர்ப்பு ஆளுமை
4. வரம்பு ஆளுமை
5. நடிப்பு ஆளுமை
6. தன் வழிபாட்டு ஆளுமை
7. சார்புநிலை ஆளுமை
8. கட்டாய ஆளுமை
9. பணிவு – தாக்குதல் ஆளுமை” (5)
ஆகியவை ஆகும் என்று குறிப்பிடுவா். இதில் உள்ள தன்வழிபாட்டு ஆளுமைத் தன்மை கொண்டவராக அதிக அளவில் செல்ஃபி எடுப்பவா்களை அடையாளப்படுத்தலாம்.
தன் வழிபாட்டு ஆளுமை
தன்வழிபாட்டு ஆளுமையினரைக் குறித்துக் குறிப்பிடும் போது, “இத்தகைய ஆளுமையினர் தன்னைப் பற்றி மிக உயர்ந்த கருத்துக் கொண்டிருப்பர். தன்வழிபாட்டு ஆளுமையினர் எப்போதும் தன்வயப்பட்டவராகவும், மற்றவர்கள் தம்மை எப்போதும் புகழ வேண்டும் என்றும் விரும்புவர். மற்றவர்கள் தம்மைக் குறை கூறுவதையோப் பொருட்படுத்தாமையையோ அணுவளவும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். மற்றவர்களின் மன உணர்ச்சிகளையும், விருப்பு வெறுப்புகளையும் பற்றிக் கவலைப்படமாட்டார்கள்” (6) என்று குறிப்பிடுவா். செல்ஃபி எடுப்பவா்களிடமும் தம்மை மற்றவா்கள் பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்ற எண்ணம் மிகுந்திருப்பதைக் காணலாம்.
மனநோய்
செல்ஃபி மோகத்தை, அமெரிக்காவின் மனநல அமைப்பு ஒன்று மனநோய்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. இந்த நோய்க்கு செல்ஃபிடிஸ் (Selfitis) என்று பெயரிட்டு, இந்த பாதிப்புள்ளவர்களை மூன்று பிரிவினராக பிரித்துள்ளது.
1. பார்டர்லைன் செல்ஃபிடிஸ் (Borderline selfitis)
இது ஆரம்பகட்ட பிரச்னை. இவர்கள் ஒருநாளில் குறைந்தது மூன்று முறை தங்களை செல்போனில் போட்டோ எடுத்துக் கொள்வார்கள். ஆனால், சமூகத்தளங்களில் வெளியிட மாட்டார்கள்.
2. அக்யூட் செல்ஃபிடிஸ் (Acute selfitis)
இவர்களுக்கு ஒரு நாளைக்கு தங்களைக் குறைந்தது 3 முறையாவது செல்போனில் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் போடவில்லை என்றால் தூக்கம் வராது.
3. க்ரோனிக் செல்ஃபிடிஸ் (Chronic selfitis)
நாள் முழுவதும் செல்போனில் தன்னைத்தானேப் படம் எடுப்பதும், சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும், அதற்கு வரும் வரவேற்பைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதும்தான் இவர்களின் வேலையே.
இவர்களுக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை தேவை. தகுந்த நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் பெரிய அபாயங்களில் சிக்கிக் கொள்வார்கள்.
இந்த செல்ஃபிடிஸ் நோயை ஓசிடி (Obsessive compulsive disorder) எனப்படும் எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோயாக அறிவிக்க வேண்டும் என்று மனநல மருத்துவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். (7)
இன்றைய இளம் தலைமுறையினரை, செல்ஃபி கட்டுப்பாட்டில் இருந்து மீட்டெடுக்க வேண்டியது நம்முடைய கடமையாகும். செல்ஃபி ஒருவருக்கொருவா் தமமுடைய உணா்வுகளைப் பகிர்ந்து கொள்ள உதவக்கூடியது என்பது போன்று கருத்துகளைத் தெரிவித்தாலும், நம்முடைய சமூகத்தில் செல்ஃபி எதிர்மறையான தாக்குதல்களை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க இயலாத உண்மை. இது குறித்த விழிப்புணா்வினை இளம் சமுதாயத்தினரிடையே ஏற்படுத்தினால் மட்டுமே ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்.
சான்றெண் விளக்கம்
1. https://thennadu.com/?p=214
2. https://ta.wikipedia.org/wiki
3. http://www.pichaikaaran.com/2011/01/blog-post_07.html
4. சு. சண்முகசுந்தரம், நாட்டுபுறவியலில் உளவியல் பார்வை, ப.9
5. பெ. தூரன், மனமும் அதன் விளக்கமும், ப.16
6. வாழ்வியற் களஞ்சியம், தொகுதி 2, ப.723
7. https://amarkkalam.forumta.net/t29340-topic
துணைநூற்பட்டியல்
1. சண்முக சுந்தரம், சு, நாட்டுபுறவியலில் உளவியல் பார்வை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 1990.
2. தூரன், பெ., மனமும் அதன் விளக்கமும், சந்தியா பதிப்பகம், சென்னை. 2008.
3. வாழ்வியல் களஞ்சியம், தொகுதி – 1, 2, 5, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். 1991.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.